மழை-4:
அவள் தன்னோடு சேர்த்து அணைத்திருந்ததில் திகைத்திருந்தவன்.. அவள் தன்னை "மாமா" என்கவும் மேலும் அதிர்ந்தான். அந்த அவள் இருவரையும் நோக்கி "ஹலோ..! அதான் உன் பாப்பா வந்தாச்சுல்ல கிளம்பு.. கிளம்பு.. என்கவும் ஐஷூ அவன் கையைப் பிடித்திழுக்க அவளிழுப்பிற்கு இவனும் சென்றான்.
பைக்கில் ஏறியமர்ந்து ஸ்டார்ட் செய்தவன் அவள் அவனை பார்த்தவாறு நின்றிருக்க அவளிடம் "ஏறு பாப்பா" என்கவும் "ஏது இன்னும் பாப்பாவா..?" என்று அவள் வதனம் அஷ்டக்கோணளாகியது. "இரு டா உன்னை என்ன பண்றேன் பாரு..?" என்று மனதுள் கருவியவள்.. சட்டென அவன் பின்னால் ஏறியவள்.. அவன் இடையூடு கையிட்டு வயிற்றை இருக்கைகளால் இறுக்கி வளைத்தவள்.. தன் பஞ்சு பொதிகள் அவன் முதுகில் அழுந்துமாறு அழுத்தமாகக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்.
அவள் செயலில் திகைத்தவன் "ஏய் பாப்பா..! என்ன பண்ற..?" என்று துள்ளினான். "மாமா இப்போ எதுக் பிரேக் டான்ஸ் ஆடுறீங்க..? சீக்கிரம் வண்டி எடுங்க.. எனக்கு பசிக்கிது.." என்று இன்னும் அழுத்தமாக அவனோடு ஒட்டிக்கொண்டவள்.. அவன் பரந்து விரிந்த முதுகில் தன் கன்னம் அழுத்தி சாய்ந்துக் கொண்டாள்.
பின்னால் அழுந்த பதிந்த மென்மைகள் ஏற்படுத்தும் உணர்ச்சிகளையும்.. வயிற்றில் கோர்த்திருந்த அவள் கைகளின் உராய்வில் கிச்சு கிச்சு மூட்டுவது போலிருக்க.. "பாப்பா கொஞ்சம் பின்னாடி தள்ளி உட்காரு..! எதுக்கு இப்படி ஒட்டிட்டு உட்காந்திருக்க..?".
(டேய் விட்டா உன் தலைமேல் ஏறி மாவாட்டவே செய்வா.. நீ இதுக்கே இப்படி சடைச்சுக்குற..)
"இப்படி உட்கார்ந்த நான் எப்படி வண்டி ஓட்டுறது..?"
(நீ வண்டியை ஓட்டுறதுக்கா அவ இப்படி இடிச்சிக்கிட்டு உட்காந்திருக்கா)
"மாமா பின்னாடி தள்ளி உட்கார்ந்தா நான் கீழே விழுந்துடுவேன்.." என்று முகத்தை பாவம் போல் வைத்துக் கொண்டு கூறினாள். அப்பொழுது தான் ஓரடி மேலே இருந்த பேக் சீட்டை கவனித்தான்.. ஏன்டா இந்த வண்டியை எடுத்துட்டு வந்தோமென்று மனதுக்குள் நொந்தவாறு வண்டியை கிளப்பினான்.
அவன் ஸ்டார்ட் செய்து கிளம்பவும்.. அந்த வேகத்தில் இன்னும் அவன் முதுகில் நச்சென்று மோத.. "ஐயோ சீக்கிரம் வீட்டுக்கு போகணும்.. இந்த பைக்கில் டேங் இவ்வளவு பெருசாவா வைக்கணும்.." என்று கண்டுப் பிடித்தவனை சபித்தவாறு ஓட்ட பின்னாடி அமர்ந்திருந்தவளோ.. அவனுடனான அப்பயணத்தை வெகுவாக ரசித்துக் கொண்டே வந்தாள்.
சற்று தூரம் சென்றதும் ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் வரவே.. அதை கண்டு உள்ளுக்குள் குதூகலித்தவள் "மாமா.. மாமா.. நிறுத்துங்க.. நிறுத்துங்க.." என்று அவன் தோளை பிடித்து உலுக்க.. என்னவோ ஏதோவென்று பயந்தவன்.. சட்டென்று சாலையின் ஓரமாக நிறுத்தியவன் "என்ன பாப்பா..? என்ன ஆச்சு..?" என்று பதட்டமாக கேட்க அவளோ அவன் தோளை பிடித்துக்கொண்டு வண்டியிலிருந்து இறங்கியவள்.. கூலாக "மாமா பசிக்குது.. சாப்பாடு வாங்கி தாங்க.." என்று தன் வயிற்றை தடவியவாறு பாவமாகக் கூறினாள்.
அவள் அப்படி கூறியதும் அவள் பால் இரக்கம் கொண்டவன்.. சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே இறங்கியவன்.. தாங்கள் நிற்கும் இடத்திற்கு எதிரே ஹோட்டல் இருக்கவே.. அதனை கண்டவன் "சரி வா பாப்பா.. அங்க ஹோட்டல் இருக்கு சாப்பிட்டுப் போகலாம்.." என்று அழைக்கவும் "ஹிம்ம்" என்றவாறு முன்னே சென்றவனின் கையை பிடித்து தன் கையோடு பிணைத்துக்கொண்டு அவனோடு அந்த சாலையை கடந்தாள். (ஆயுளுக்கும் பிணைக்கைதி ஆவதற்கான சிக்னல் தானிது)
தன் கையை இறுக்கி பற்றியதில் அவளை பார்த்தவன்.. அப்பொழுது தான் அவளை கீழிருந்து மேல் வரை பார்த்தான். சிறுவயதில் பார்த்தது போலவே துருதுரு கோலி குண்டு கண்கள்.. கூரான நாசி.. சிவந்த தேனூறும் செப்பு இதழ்கள்.. பட்டுப்போன்ற மிருதுவான கன்னங்கள்.. ஊதா நிற குர்த்தாவும் கருப்பு நிற ஜீன்ஸ் அணிந்து இந்த காலத்தின் நவநாகரீக மங்கையாய் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் அழகியாக இருந்தாள்.
'இவள் எப்படி நம்மை விரும்புறா..? எவ்ளோ அழகா இருக்கா..?' (அப்பாடா ஜொல்லு விட்டுட்டான்) என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டே வந்தவன் "மாமா.. மாமா.." என்று அவள் அழைக்கவும் என்னவென்று கண்களால் கேட்க அவளும் கண்களாலேயே அங்கு சாலையோரத்தில் நின்றுக்கொண்டிருந்த ஐஸ்கிரீம் வண்டியைக் காட்டினாள்.
(கண்ணாலேயே பேசுறாங்களாம்.. அப்போ வாய்க்கு வேற வேலை வரப்போகுது.. நான் சாப்பிட போறதை தான் சொன்னேன் ஹி ஹி)
"ஐஸ்கிரீம் வேணுமா..?" என்று கேட்க அவள் ஆமென தலையாட்ட "என்ன பிளேவர் வேணும்..?" என்கவும் "சாக்லேட்" என்று கூறவும் அவன் திரும்பி "அண்ணா.. சாக்லேட் பிளேவர் ஐஸ்கிரீம் ஒன்னு.." என்று அவரிடம் சொல்லிவிட்டு "ஒன்னு போதுமா பாப்பா..?" என்று ஐஷூவிடம் கேட்டான்.
(பாப்பா பாப்பான்னே பட்டா போட்டுட்டான்..)
"வெண்ணிலா ஒன்னு வேண்டும்.." என்கவும் அவரிடம் திரும்பி சொல்லிவிட்டு வாங்கி அவளிடம் இரண்டையும் கொடுக்க சாக்லேட் பிளேவரை வாங்கியவள் "அது உங்களுக்கு தான் மாமா" என்று அவன் இடது கையூடு தன் கையை விட்டுக்கொண்டு தன்னோடு அணைத்தவாறு நடக்க.. "பாப்பா கொஞ்சம் நகர்ந்து வா.. எல்லாரும் பார்ப்பாங்க.." என்கவும் "யாரு பார்த்தா எனக்கென்ன மாமா..! நான் என் மாமாக்கூட தானே இப்படி இருக்கேன்.." என்றவள் அவனிலிருந்து பிரியாமல் 'வாங்க' என்றவாறு அந்த ஹோட்டலுக்குள் தன் ஐஸ்கிரீமை சுவைத்தவாறு அவனுடன் நுழைந்தாள்.
உள்ளே சென்று கைகழுவி விட்டு வந்து இருவரும் இருக்கையில் எதிரெதிரே அமர.. அவன் ஐஸ்கிரீமை இன்னும் சாப்பிடாமல் வைத்திருக்க "சாப்பிடுங்க மாமா" என்றவள் அவனிடம் "சாக்லேட் பிளேவர் டேஸ்ட் பண்ணி பாருங்க.. செமையா இருக்கும்.." என்று அவளதில் ஒரு ஸ்பூன் எடுத்து அவன் ஏதோ பேச வரவும் ஊட்டி விட்டாள்..
"எப்படி இருக்கு..? சூப்பரா இருக்குல்ல.." என்று குண்டு கன்னம் ஒதுங்க சிரித்தவள் அவள் ஐஸ்கிரீம் சாப்பிட்டு பிரீஸ் ஆகி அமர்ந்திருந்தவனை கண்டுகொள்ளாமல் தன் ஐஸ்கிரீமை கர்மசிரத்தையாக சப்புக்கொட்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
(பிரீஸாகிட்டானா..? நான் வேணும்னா தீக்குச்சி எடுத்துட்டு வரவா..? உருகிடுவான்)
அவனோ அவள் ஐஸ்கிரீம் ஊட்டி விடுவாளென்று கனவா கண்டான்.. அவள் செயலில் திகைத்து விழித்தவன் தொண்டையில் அவள் ஊட்டிய ஐஸ்கிரீம் அமிர்தமாய் இறங்கியது.. "அவள் எச்சில் பட்டதால் இப்படி இனிக்குதோ..?" என்று அவன் மனதில் நினைக்க அதிர்ந்தான்.
"என்ன இப்படி யோசிக்கிறேன்..? அந்த பொண்ணு மனசுல என்ன இருக்குன்னு தெரியாம.. நீயா எதாவது ஆசையை வளர்த்துக்காதடா.." என்று தனக்கு தானே கூறிக்கொள்ள "அவ மனசுல நீ இல்லாம தான் பொசுக்கு பொசுக்குண்ணு உன் கையை பிடுச்சுக்குறாளா..! இப்போ கூட உனக்கு ஊட்டி விட்டாளே..! அவ ஏன் உனக்கு ஊட்டி விடணும்..?" என்று அவன் மனசாட்சி கேள்விக்கேட்க "ஆமா..! ஏன் ஊட்டி விட்டா..?" என்று இவன் பதில் கேள்வி கேட்க அதில் காண்டான மனசாட்சி "போடா மரமண்டை..! உன் மண்டைல ஒன்னும் இல்லைன்னு தெரிஞ்சும்.. உன்கிட்ட கேள்வி கேட்டேன் பாரு.. என்னை சொல்லனும்.." என்று தன்னை தானே திட்டுக்கொண்டு "நான் மட்டும் எப்படி இருப்பேன்..! உன் மனசாட்சி தானே.. நானும் மரமண்டை தான்.." என்று சலித்துக்கொண்டது.
"அவ மனசுல ஒன்னும் இல்லாமத்தான்.. உனக்கு ஊட்டி விட்டாளா..? அதும் இத்தனை பேரு இருக்குற இடத்துல.." என்று அவன் மனசாட்சி கூற யோசித்தான். "அப்போ என்னை அவளுக்கு பிடிச்சிருக்கு.. அதான் என்கிட்ட உரிமையா பழகுறா.. மாமா மாமான்னு கூப்பிடுறா.." என்று நினைக்கவும் "அப்பாடி உன்னை கோமாவுல இருந்து எழுப்ப எவ்வளவு பாடுப்பட வேண்டியதா இருக்கு.." என்ற மனசாட்சி "அவ உன் ஆளுதான் கரெக்ட் பண்ணிக்கோ.. இல்லைன்னா உனக்கு ஐஸ்வர்யா கிடைக்காது.. ஆண்டிப்பட்டி அனிதா தான் இப்போவே சொல்லிட்டேன்.." என்று ஓடி ஒளிந்துகொண்டது.
இவன் ஏதோ பேச வரவும் பேரர் வரவும் சரியாக இருந்தது..
(சகுனம் சரியில்லையோ..? சகுனி வருகிற வரைக்கும் சகுனம் நல்லாத்தான் இருக்கும்)
"மாமா உங்களுக்கு என்ன வேணும்..? இந்தாங்க மெனு ஆர்டர் பண்ணுங்க.." என்று அவன் புறம் மெனு கார்டை நீட்டினாள். "எனக்கு பசியில்லை நீ ஆர்டர் பண்ணு.." என்கவும் சிக்கன் ப்ரைடு ரைஸ் ஒன்னும் லாலிபாப்பும் ஆர்டர் செய்தாள்.
"சாப்பாடு வரதுக்கு இன்னும் பத்து நிமிஷம் ஆகும் மாமா.. நீங்க ஐஸ்கிரீம் சாப்பிடுங்க.." என்கவும் அதனை பிரித்தான்.
(இன்னுமா சாப்பிடல.. உருகி ஊத்திருக்கும்..)
அவன் சாப்பிடவும் அதனை பார்த்துக்கொண்டே எழ "ஏன் பாப்பா..? என்னாச்சு..?" என்று கேட்க 'ஒன்னுமில்லை' என்று தலையாட்டியவள் அவன் பக்கத்தில் அவனை உரசிக்கொண்டு அமர அவனுடலில் ஆயிரம் மத்தாப்பூக்கள் வெடித்து சிதறியது.
அவன் அதிர்ந்து அவளை தன் சிறிய கண்கள் விரியப் பார்த்துக்கொண்டிருக்க.. அவளோ சவதானமாக அமர்ந்து அவன் சாப்பிட்டு கொண்டிருந்த ஸ்பூனை வாங்கி சாப்பிட்டாள்.. "பாப்பா" என்று ஏதோ பேச வர "அதென்ன பாப்பா..? என்னை பார்த்தா பாப்பா மாதிரியா இருக்கு..? அதென்ன வந்ததிலிருந்து பாப்பா பாப்பான்னுட்டு ஒழுங்கா வேற பேரு சொல்லி கூப்பிடுங்க.. இல்லை கடிச்சுடுவேன்.." என்று கடிப்பது போல் செய்கை செய்தாள்.
அவன் பேச வர (வெயிட் பண்ணுப்பா) பேரர் வந்து உணவை வைத்து விட்டு செல்ல "வாங்க மாமா சாப்பிடலாம்" என்று அவனுக்கு தட்டெடுத்து தாராளமாகவே பரிமாறி.. தனக்கும் கொஞ்சம் வைத்துக்கொண்டு "சாப்பிடுங்க மாமா" என்றவாறு தன்னதைக் கொறிக்க தொடங்கினாள்.
அவள் கைகளை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் அவன் தொடையில் மேலும் கீழுமாய் கோடிழுத்து விளையாடிக்கொண்டே சாப்பிட்டாள். அவனோ அவள் கைப்பட்ட இடம் மிகுந்த அவஸ்தையை கொடுக்க நெளிந்துக் கொண்டிருந்தான்.. அப்பொழுது பேரர் பில் எடுத்துவர அதை வாங்கி பார்த்துவிட்டு அவன் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த பர்ஸை சரக்கென்று உருவியவள் அதிலிருந்து பணம் எடுத்துக் கொடுத்தாள்.
பின் இருவரும் சாப்பிட்டு வெளியே வரும்பொழுது ஏதோ இவள் இவனை பார்த்து மாமாவென்று பேச வர எதிரே வந்த ஆடவர்களை கவனிக்கவில்லை. அவர்களும் இடிப்பது போலவே வர அவர்களை முறைத்தவாறு அவளை தன்னோடு சேர்த்து அனைத்தவாறு செல்ல.. அவளெங்கு இங்கு இருந்தாள்.. அவள் தான் தன்னவனின் முதலணைப்பில் மெய் சிலிர்த்து பரவசமடைந்தாள்.
தான் அணைத்ததில் அவளுடல் சிலிர்ப்பதை அவனும் உணர்ந்தான். பின் இருவரும் வெளியே வந்து சாலையைக் கடந்து அவன் பைக்கை ஸ்டார்ட் செய்து அவளை அமருமாறு கூறினான். அவள் முன்பு போலவே அவனை அணைத்துக் கொண்டு போகுமாறு சொல்ல சிரித்துக்கொண்டே வண்டியைக் கிளப்பினான்.
முன்பிருந்த மனநிலைக்கும்.. இப்பொழுது இருக்கும் மனநிலைக்கும்.. நிறைய வேறுபாடு இருந்தது.. அவளின் ஒவ்வொரு செயலிலும் அவன் கவரப்பட அவளே விட்டாலும் நான் இனி விட மாட்டேன் என்ற நிலைக்கு வந்திருந்தான்.
அவள் வீட்டுக்கு சென்றதும் தன்னறைக்கு அழைத்தாள்..
(வேண்டாம் டா போகாத கிட்னி பிடுங்க கூப்பிடுறா.. கிட்னி பத்திரம்)
தன்னறைக்கு வந்தவனிடம் "மாமா கொஞ்ச நேரம் முன்னாடி செய்ததை உங்களுக்கு உங்கக்கூடவே இருந்து காலத்துக்கும் உங்க மனைவியா செய்யனும்" என்று கன் மனதை அவளி
டம் கூறினாள்.
அவள் கூறியது வேறு.. அவன் நினைத்தது வேறு..
மழை பொழியும்...
0 Comments