மழை - 3 :
சரியாக இரண்டு வருடத்திற்கு முன்பு..
விஜயனும் ஜெயாவும்.. சாணு வீட்டிற்கு சென்றே அவன் தாய் விமலாவிடம்.. ஐஷூ சாணக்கியனை விரும்புவதாக கூறி.. தன் தங்கை மகனுக்கு தன் பெண்ணை கொடுப்பதில் எந்த வித ஆட்சேபனையும் இல்லையென்று திருமணத்திற்கு தன் விருப்பத்தை தெரிவித்தார்.
ஆம்..! விஜயனின் தங்கை விமலாவின் மகன் தான் சாணக்கியன்.. விமலாவிற்கு மகன் மட்டுமல்ல.. செளமியா, சாஹித்யா என இரு மகள்களும் உண்டு.
விஜயன் நேராக தன் மருமகனிடம் சென்று அவனை தனியாக அழைத்து சென்று "சாணு..! ஐஷூவை பற்றி உனக்கு தெரியாதது எதுவுமில்லை..! உனக்கு பிடிச்சா தான் இந்த கல்யாணம் நடக்கும்.. வந்து அவக்கிட்ட பேசு.. ரெண்டு பேரும் சேர்ந்து பேசி.. நல்ல முடிவா சொல்லுங்க..!" என்று அவன் தோளில் தட்டியவாரு உள்ளே சென்றார்.
"ஐஷூக்கும் எனக்கும் எப்படி ஒத்து போகும்.. அவள் எம்.பி.ஏ படிக்கிறதா சொன்னாங்களே..! அப்புறம் எப்படி என்னை விரும்புறா..?" என்று யோசித்தவனுக்கு குழப்பம் மட்டுமே மிஞ்சியது.
அவன் இவ்வாறு யோசிப்பதற்கும் காரணம் இருந்தது.. சாணக்கியன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து விட்டு வேலைக்கு செல்ல முயலும் போது.. விமலா தன் மகனிடம் வந்து "யப்பா தம்பி எனக்கிருக்கிறது ஒத்த ஆம்பிளை பிள்ளை.. உன்னை தினமும் வெளியே அனுப்பிட்டு.. உனக்கு என்னாச்சோ..? ஏதாச்சோன்னு..? பதறி கிட்டு இருக்கணும்ப்பா.. இந்த அம்மா கண்ணுல படுற மாதிரி ஏன் கூடவே நம்ம கழனியைப் பார்த்துட்டு இருப்பா.." என்று தன் மகனிடம் காலில் விழாத குறையாக கெஞ்சினார்.
தன் தாய் கெஞ்சுவது பிடிக்காமல் "சரிம்மா.. நான் உன்னை விட்டு எங்கேயும் போகலை ம்மா.." என்றவன் அன்றிலிருந்து தன் தந்தையின் நாற்பது ஏக்கர் நிலத்தைத் தன் தாயுடன் சேர்ந்து பார்த்துக்கொண்டான்.
விமலாவின் கணவர் சுந்தரம் பத்து வருடத்திற்கு முன்பு.. சென்னை சென்று வரும் வழியில்.. நடந்த கோர விபத்தில்.. சம்பவ இடத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. அதை நினைத்து தான் தன் மகனும் தனக்கில்லாமல் போய் விடுவானோ..! என்ற பயத்தில் அவனை எங்கும் அனுப்ப மாட்டார்.
"அந்த பொண்ணுக்கும் நமக்கும் எப்படி செட்டாகும்..?" (நான் செட் பண்ணி விடுறேன் ராசா கவலைப்படாதா.. ஹி..ஹி.. நீங்க காரித்துப்புறது இங்க வரைக்கும் தெறிக்குது) என்று மனதில் குழப்பத்துடன் சுற்றிக் கொண்டிருந்தவனை கண்ட விமலா "தம்பி போய் அந்த பிள்ளைக்கிட்ட என்னன்னு பேசிட்டு வந்துட்டா சட்டுபுட்டுன்னு கல்யாண வேலையை பார்க்கலாமில்லையா.. போப்பா.. போய் பேசிட்டு நல்ல முடிவா சொல்லுங்க.." என்று கண்களில் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் கூறினார்.
அவருக்கு தன் அண்ணனின் அழகு மகளை தன் மகனுக்கு திருமணம் முடித்து அழகு பார்க்க வேண்டும் என்ற ஆசை..! அன்று தன் அண்ணன் அண்ணி வீடு தேடி வந்து பேசியதிலிருந்து.. எப்படியாவது இந்த கல்யாணம் நடக்க வேண்டுமென்று ஆவலாக இருக்கிறார்.
தாய் சொல்லை தட்டாத புத்திரனோ தன் மாமன் மகளை பார்த்து பேசிவிட்டால்.. தன் குழப்பமும் தீரும்.. இந்த கல்யாண விவகாரத்திற்கு தீர்வும் கிடைத்து விடுமென்ற நம்பிக்கையில் சென்னை நோக்கி பயணம் செய்தான்.
சென்னை வந்தவன் தன் மாமனின் வீட்டிற்குத்தான் முதலில் சென்றான்.. தன் அத்தையிடம் "மாமா எங்கே..?" என்று கேட்க அவர் அலுவலகம் சென்றிருப்பதாக சொல்லவே தான் வந்த காரணத்தை தன் அத்தையிடம் எப்படி சொல்வதென்று தெரியாமல் உள்ளுக்குள் தவித்துக் கொண்டிருந்தான்.
"என்ன சாணு..? ஏதோ சொல்ல வருவதும் பின் தயங்குற மாதிரியும் இருக்கு..! என்னாச்சு..?" என்று தன் மருமகனிடம் கேட்க "அது.. அது வந்து அத்தை.." என்று தன் கைகளை பிசைந்தவாறு திணறினான்.
(என்ன டா நீ அத்தைக்கிட்ட பேசவே இப்படி திணறுற.. அதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்டப் போலையே)
அவனாக இப்பொழுது சொல்ல மாட்டான் என்று அவன் செய்கையிலே தெரிந்து கொண்ட ஜெயா தானாகவே ஊகித்து ஒருவேளை தன் மகளிடம் பேசத்தான் இந்த விஜயமோ என்று நினைத்தவர் பின் இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வரட்டும் என்று அவனிடம் திரும்பி "சாணு.. இப்போ ஐஷூக்கு காலேஜ் முடியுற டைம்.. நீ போய் அழைச்சிட்டு வரியாப்பா..?" என்று கேட்டவர் தொடர்ந்து "டிரைவரை ஒரு வேலையா வெளியே அனுப்பிருக்கேன்.. இன்னும் வரலை போல.." என்று கூற "சரி அத்தை.. நான் அழைச்சிட்டு வரேன்" என்று கூறினான்.
தன் அத்தையிடம் எந்த கல்லூரி என்று கேட்டுக் கொண்டவன் வெளியே செல்ல "சாணு கரேஜ்ஜில் வீரோட பைக் நிக்கும் பாருப்பா.. அதை எடுத்துட்டுப்போ.." என்று அதன் சாவியை அவனிடம் தந்தார். அதை வாங்கியவன் "சரி அத்தை நான் போயிட்டு அழைச்சிட்டு வரேன்" என்று கூறியவன் கரேஜ்ஜில் நின்ற கே.டி.எம் பைக்கை எடுத்தவன் அந்த பிரபலக் கல்லூரியை நோக்கி பறந்தான்.
கல்லூரிக்கு வெளியே நின்றவனுக்கு அப்பொழுது தான் நினைவு வந்தது.. ஐஷூவை அவன் சிறுவயதில் பார்த்ததோடு சரி அவள் இப்பொழுது எப்படி இருப்பாள் என்று கேட்டால் அவனுக்கு தெரியாது.. (விளங்கிடும்) சிறு வயதில் நெற்றியில் புரளும் கருகரு முடியுடன் குண்டு கன்னங்களுடன் இருந்த கியூட் குட்டி தான் அவனுக்கு நியாபகம் வந்தாள்..
(போடா..போ..உனக்கு கனிமொழி தேன்மொழின்னு வாய்க்கால் வரப்புல எவளாவது திரிவா.. இந்த ஐஸ்வர்யா செட்டாவ மாட்டா.. இப்போ வந்து டிம்பிள் சின்.. சஃப்பி சீக்ஸ்.. ரோஸி லிப்ஸ்னு வந்துட்டான்.. முகமே தெரியாதாம் இதுல கே.டி.எம்.டியூக் வேற..)
"ஐயோ..! இப்போ என்ன பண்றது..?" என்று யோசித்து கொண்டிருந்தவனை கல்லூரி முடிந்ததும் வெளியில் வந்த அனைவரும் தங்களுக்குள் பேசி சென்ற சத்தம் கலைத்தது. அவனும் தன்னால் இயன்ற வரை முயன்றான் வெளியில் வரும் பெண்களின் முகங்களைப் பார்த்தான்.. ஆனால் பாவம் அவன் கண்ணிற்கு தான் அவள் தென்படவேயில்லை.
பத்து நிமிடங்களாகியும் அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை.. இவனை நோக்கியும் எந்த பெண்ணும் வரவில்லை.. சற்று நேரம் பொறுத்து பார்த்தவன் கல்லூரியிலிருந்து அனைவரும் வந்திருக்க வெறிச்சோடி காணவே தன் அத்தைக்கு போன் போட்டான்.
தன் அத்தை அழைப்பை எடுத்ததும் "க்ளாஸ் முடிஞ்சி எல்லாம் வந்துட்டாங்க அத்தை.. இன்னும் பாப்பாவை மட்டும் காணோம்.." என்கவும் "சரிப்பா நான் அவ நம்பருக்கு கால் பண்றேன்" என்று விட்டு அணைத்தார்.
(ஏது பாப்பாவா..? அப்போ நீ போடமாட்ட தாப்பா)
இவ்வளவு நேரம் தன் தோழிகளுடன் அவன் நின்றிருக்கும் இடத்திற்கருகே இருந்த பேருந்து நிலையத்தில் நின்றுக்கொண்டு தன் மாமன் தன்னை காணாமல் தேடுவதை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தவள்.. தன்னை கண்டுப்பிடிக்க முடியாமல் அல்லாடுவதை பார்த்து.. அவன் என்னதான் செய்கிறான் என்று அவனையே வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு தெரியும்.. இப்பொழுது தான் எப்படி இருப்போம்..? என்று தன் மாமனுக்கு தெரிய வாய்ப்பில்லை என்று.. முதலில் கல்லூரியை விட்டு தன் தோழிகள் பட்டாளத்துடன் வெளியே வந்தவள்.. என்றும் தன் வீட்டின் கார் நிற்கும் இடத்தை பார்க்க.. அது காலியாக இருக்கவே திரும்பி பார்த்தவள்.. தான் பார்த்தது உண்மைதானா..! "தன் சோட்டு தானா அது..?" என்று உற்று பார்த்தாள்.
இருபத்தாறு வயதாக இருந்தாலும் அதிகமும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் அளவான உடல்வாகுடன் ஆறடி உயரத்தில் நின்றவன்.. யாரையோ தேடி அலைபாய்ந்த கண்களைக் கண்டவள்.. யார இப்படி தேடுறான்..? என்று நினைத்தவள் ஒருவேளை தன்னை அழைத்துப் போக வந்திருப்பானென்று நினைத்தவள்.. அவன் முன் கண்ணில் படுமாறு அவனை கடந்து சென்றவளுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
பின்பு தான் யோசித்தாள்.. அவன் தன்னை சிறுவயதில் பார்த்ததோடு சரி.. அதன் பிறகு பார்க்கவில்லையென்று.. பின்பு தான் தன் தோழிகளுடன் பேருந்து நிலையத்திற்கு சென்று அவனை பார்க்க ஏதுவான இடத்தில் நின்றுக்கொண்டு தன் பேராழிக் கண்களால் அவனை கபளீகரம் செய்துக் கொண்டிருந்தாள்.
பின்பு தன் அன்னைக்கு அழைத்தது முதல் தன்னை பாப்பா என்று கூறியது வரை கேட்டவள் அவன் கடைசியில் உதிர்த்த அந்த 'பாப்பா'வில் "ஏது பாப்பாவா.?" என்று அதிர்ந்தவள் "இரு டி வரேன்" என்று மனதில் கருவியவள்.. தன் அன்னைக்கு அழைத்து தான் அவனை பார்த்துவிட்டதாகவும்.. அவனுடம் சிறிது நேரம் வெளியே சென்று வருவதாகவும் கூறி வைத்துவிட்டு.. தன் தோழிகளில் ஒருத்தியிடம் ஏதோ கூற.. அந்த அவள் ஐஷூவிடம் "டன்" என்று கட்டை விரல் உயர்த்தி காட்டியவள் சாணுவை நெருங்கினாள்.
இவன் அவளை தேடி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருக்க.. அவன் பின்னாலிருந்து தோளை தட்டி "ஏய் தம்பி.. இங்கென்ன பண்ணிட்டுருக்க..? யாரு நீ..? பொண்ணுங்க இருக்குற இடத்துல உனக்கென்ன வேலை..?" என்று தன் கட்டை குரலில் மிரட்டும் தொணியில் கேட்க "என் பாப்பாக்காக வெயிட் பண்றேன்.. இன்னும் வரலை.. அதான் இங்க நிக்கிறேன்.. நீங்க யாரு..?" என்று தான் நிற்பதற்கு விளக்கம் கொடுத்தவன் அவளிடம் யாரென கேட்க..
அவன் பாப்பா என்றதில் சிரிப்பு வந்தாலும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு "ஏய் நான் கேட்டதுக்கு தான் நீ பதில் சொல்லனும்.. திரும்ப கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது.."
(ஏனா திரும்பி கேள்வி கேட்டா பதில் தெரியாது)
"இப்படி பாப்பாக்கு வெயிட் பண்றேன்னு சொல்லி எவளையாவது கரெக்ட் பண்ணி பாப்பா குடுத்திட்டு போயிடுவீங்க.." என்று எகத்தாளமாக பேச "ஹலோ மிஸ்..! மைண்ட் யுவர் வேர்ட்ஸ்.. என்ன விட்டா பேசிட்டே போறீங்க.." என்று எகிறியவனிடம் "ஏய் என்னா லந்தா.. இந்த எரியா போலீஸ்கிட்டயே குரலை உசத்தி பேசுற.. என்ன முட்டிக்கு முட்டி தட்டணுமா..?" என்கவும் போலீஸ் என்றதும் "சாரி மேம் நான் என் அத்தை பொண்ணுக்கு வெயிட் பண்றேன்.. வேற நீங்க சொன்னது போல எதும் இல்லை.." என்றவனிடம் "அப்போ எங்கே அந்த பொண்ணு.?" என்று நம்பாத தொணியில் கேட்டாள்.
அவன் முகம் மாறவும் இதுவரை அமைதியா பார்த்துக் கொண்டிருந்த ஐஷூ ஓடி வந்து அவன் கை சந்தில் கைவிட்டு தன்னை சேர்த்தணைத்தவாறு "மாமா எப்போ வந்தீங்க..? ரொம்ப நேரம் ஆச்சா..? சாரி மாமா.. நான் என் ப்ரெண்ட்ஸ் கூட கேண்டின் வரைக்கும் போயிருந்தேன்.." என்று கூறிவிட்டு தங்களின் முன்னால் நிற்கும் தன் தோழியைப் பார்த்து அவனுக்கு தெரியாமல் கண்ணடித்தவள் "யாரு மாமா இவங்க..?" என்கவும் அதுவரை அவள் நெருக்கத்தில் திகைத்தவன் "இந்த எரியா போலீஸ் என்று சொன்னாங்க" என்று கூறினான்.
இருவரையும் பார்த்து "ஓ.. இது தான் உன் பாப்பாவா.. ம்ம் சரி சீக்கிரம் கூட்டிட்டு இடத்த காலி பண்ணு.. அதிக நேரம் இங்க இருக்கக்கூடாது.." என்று விரட்டினாள். ஐஷூவும் தன் மாமனிடம் திரும்பி "வாங்க மாமா கிளம்பலாம்.. பைக்கை ஸ்டார்ட் பண்ணுங்
க.." என்றவள் அவன் கை பிடித்து இழுத்தாள்.
மழை பொழியும்...
0 Comments