Advertisement

Ad code

Mazhai-2

 


மழை -2 :


பாலென கொட்டும் நீரில் நின்ற இருவரும்.. சற்று நேரத்திற்கு சிறுவர்களென ஆர்ப்பரித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலிருந்து வேகமாய் கொட்டும் நீரின் அடியில் நின்றதும் அதன் குளுமை தேகத்தை சிலிர்க்க வைக்க.. முதலில் உச்சந்தலையில் வேகமாய் கொட்டிய நீரினால் சற்றே தடுமாறியவர்கள்.. பின் அதற்கேற்றார் போல் நின்று அந்த சுகத்தை ஆழ்ந்து அனுபவித்தனர். 


அருவியில் குளித்து விட்டு சிறுதும் சோர்வுராமல் புத்துணர்ச்சியுடன் மலையிறங்க தொடங்கினர். தங்களின் உடைகளை அணிந்துக்கொண்டு.. உடைமைகளை எடுத்துக்கொண்டு.. பெரிய பெரிய ராட்சத அளவிலிருந்த பாறைகளை தாவி குதித்து, கடந்து தங்களின் வாகனம் தரித்திருக்கும் இடத்திற்கு வந்தனர்.


அப்பொழுது இருவரின் மொபைலும் ஒலிக்கவே ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டே எடுத்து காதில் வைத்தனர்.


மகேன் தன் கைப்பேசியில் "ம்மா.." என்கவும் அந்த பக்கம் என்ன சொல்லப்பட்டதோ..! "இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுல இருப்போம் ம்மா.." என்றான் மிருதுவான குரலில்.


"..."


"ஹிம்ம்.. சரி ம்மா.. பொறுமையாவே வரோம் ம்மா.. நீங்க கவலைப்படாதீங்க ம்மா.." என்றவாறு தன் கைப்பேசியை அணைத்துவிட்டு அங்கு தன் கைப்பேசியில் பம்மிக்கொண்டிருந்த தம்பியிடம் சென்றவன்.. அவன் அடக்கி வாசிப்பதைப் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தான்.


அவன் சிரிப்பதைக் கண்ட வீர் நாக்கை மடக்கி பற்களால் கடித்தவாறு ஒற்றை விரல் நீட்டி தன் தமையனிடம் எச்சரித்தவன்.. தன் தந்தை கேட்பதற்கு பதில் கூறிக்கொண்டிருந்தான்.


"எத்தனை முறை சொல்றது..? சொல்லாம கொல்லாம எங்கும் போகாதீங்கன்னு.. நீங்க இன்னும் சின்ன பிள்ளைங்க இல்லை வீர்.. நமக்கு இருக்கிற பிரச்சனையில் இதெல்லாம் தேவையா..?" என்று கேட்க "தேவைதான்" என்று நாவு வரைக்கும் வந்த வார்த்தைகளை மென்று முழுங்கியவன் தன் தமையனை பாவமாகப் பார்த்தான்.


"சரி ப்பா.. இனி எங்கேயும் போகமாட்டோம் ப்பா.." என்று கூறினான்.


"..."


"சரிப்பா.. இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டில் இருப்போம்.."


"..." 


"ஹிம்ம்.. பொறுமையாகவே வரோம்.." என்று அந்த 'பொறுமையில் ' அத்தனை அழுத்தம் கொடுத்து தன் கைப்பேசியை அணைத்துவிட்டு பெருமூச்சி விட்டான். 


"இதுக்கே இப்படி நாக்கு தள்ளுதா..!" என்றவாறு தன் வண்டியருகே சென்றான் மகேன்.


மகேன் தன் பைக்கில் ஏறி அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்தவன் ஆக்ஸிலேட்டரைத் திருகியவாறு அங்கு பார்க்கிங்கில் நின்றுக் கொண்டிருந்த கல்லூரி பெண்களை டாவடிக்கும் தன் தம்பியைக் கண்டு முறைத்தான்.


"டேய் வீரி.." என்று தன் தமையன் உறுமுவது கேட்டதும்.. தன் வாலை சுருட்டியவாறு.. தன் பைக்கில் ஸ்டைலாக ஏறி அமர்ந்தவன்.. தன் வண்டியின் பின் சீட்டை கண்களால் அந்த பெண்களிடம் காட்டினான்.


"டேய்.. உன்னோட முடியலைடா வீரி.." என்று அலுத்துக் கொண்டவன் "ஓரடி உயரத்துல இருக்குற அந்த பேக் சீட்டில் உட்கார்ந்தா.. ஒன்னு ஒட்டிக்கனும்.. இல்லனா விழுந்து வாரனும்.. உன் ஜொல்லைக் கொஞ்சம் நிறுத்துடா.. அருவிக்கு இப்போதானே போயிட்டு வந்தோம்.. நீ வேற அருவியை மலையடிவாரத்துல திறந்து விடுறியா.." என்று அச்சாக்கி பாயை இன்ஸல்ட் பண்ணினான்.


"டேய் மகேன்.. உன் பேக் சீட்டுல உட்கார்ந்தா விழுந்து வாரனும்.. என் பேக் சீட்டுல உட்கர்ந்தா ஒட்டிக்கனும்னு.. தெளிவா சொல்லுடா.." என்று கூறிக்கொண்டே சென்றவன் தன் தமையனின் முறைப்பில் கப்பென்று வாயை மூடிக்கொண்டான்.


மகேன் முறைக்கவும் "இவனும் அனுபவிக்க மாட்டான்.. நம்மையும் அனுபவிக்க விடமாட்டான்.." என்று வாய்க்குள் முணகியவாறு தன் ஹெல்மெட்டை அணிந்து கொண்டு.. தன் பைக்கை ஸ்டார்ட் செய்தவன்.. ஆக்ஸிலேட்டரைத் திருகிக்கொண்டே மறுகையால் பிரேக்கை அழுத்திப்பிடிக்க.. பின் டயர் சுற்றி புழுதிப் பறக்க செய்தவன்.. தன் ஹெல்மட்டின் கண்ணாடி திறப்பை மேலேற்றியவாறு அப்பெண்களைப் பார்த்து ஒற்றைக் கண்ணடித்து தன் கைகளால் ஸ்டைலாக 'பாய்' சொன்னவன் தன் தமையனுடன் வீட்டை நோக்கி வண்டியில் பறந்தான்.


அடுத்த ஒரு மணி நேரத்தில் தங்கள் வீட்டின் கரேஜ்ஜில் வண்டியை நிறுத்தி விட்டு வீட்டினுள் வந்தவர்களைக் கண்டு "ம்மா.. உன் வானரப்படைகள் வந்துருச்சு.. போ.. போய் நல்லா மடியில் தூக்கி வச்சி கொஞ்சு.." என்று இருவரையும் பார்த்து தன் அன்னையிடம் நக்கலாகக் கூறினாள் ஐஸ்வர்யா.


"ஹேய் உலகழகி..! உனக்கென்ன இங்க வேலை..? ஆபீஸ் போகலையா.?" என்று வீர் கேட்க "அதை நான் கேட்கனும் பூரி.. ஹாஸ்பிட்டல் போகாம..!எங்கே போய் ஊரு சுத்திட்டு வரீங்க..?" என்று இருவரும் மாற்றி மாற்றி கடித்துக்கொள்ள மகேனிடம் வந்த ஜெயா "ஏன் ப்பா..? சொல்லிட்டு போனா என்ன..? நீங்க வர வரைக்கும் என் உயிரே என் கையிலில்லை.." என்று தன் மகனின் தாடியடர்ந்த கன்னத்தை வருடிக் கொடுத்தவாறு கண்கள் கலங்க கேட்டார்.


"ம்மா.. பயப்படாதீங்க ஒன்னும் இல்லை.. எவனோ வேண்டுமென்று நம்மை மிரட்டுவதற்காக அந்த போன் கால் வந்தது.. அதையெல்லாம் பெரிய விஷயமா எடுத்துக்கிட்டா வெளியேவே போக முடியாது.. நம்மேல் உள்ள பெறாமையில் நம்மை முடக்க இப்படி யாராவது பண்ணுவாங்க தான் நாம கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் அதுக்காக வீட்டுக்குள்ள இருக்க முடியுமா..?" என்று தன் அன்னையின் கண்ணீரினை தன் பெருவிரல் கொண்டு துடைத்து விட்டவன் தன்னோடு ஆறுதலாக அணைத்துக்கொண்டான்.


இவர்கள் இருவரும் அணைத்துக்கொண்டிருப்பதைக் கண்ட வீர் தன் தங்கையுடன் அவர்களருகே வந்து தானும் அவர்களை அணைத்துக் கொண்டு "பெத்து எடுத்தவத்தான் என்னையும் தத்துக் கொடுத்துப்புட்டா" என்று சோகமாகப் பாட்டுப்பாட அதைக் கேட்டு ஜெயா அவன் முதுகில் பட்டென்று ஒன்று வைத்து "அராத்து..! அம்மாக்கிட்ட இனி சொல்லாம போவியா வெளியே..?" என்று அவன் காதை திருகியவாறு கேட்க 


தன் ஆறடி உயரத்தை தன் அன்னைக்காக அவர் முன் குனிந்து தன் காதை காட்டிக்கொண்டிருந்தவன் வலிப்பது போலவே முகத்தை சுருக்கி "ஆ..ம்மா.. இனி உன்னை விட்டு போகமாட்டேன் ம்மா.." என்று வாக்குக் கொடுத்தவனுக்கு தெரியவில்லை அதை தான் காப்பாற்ற போவதில்லையென்று.


"ரொம்ப குனியாதடா தடியா.. இடுப்பு சுலுக்கிக்க போகுது.." என்றவாறு தன் தமையனின் பிருட்டத்தில் ஓரடி வைத்தவள் ஓட்டம் பிடிக்க.. தன் தாயிடமிருந்து பிரிந்தவன் அவளை துரத்தினான். 


"உனக்கு ஐஷூன்னு பேர் வச்சிருக்க கூடாது.. கொசுன்னு வச்சுருக்கனும்.. யப்பா என்னா அடி..! சுள்ளுன்னு வலிக்கிது" என்றவாறு அவளடித்த இடத்தை தேய்த்தவாறே அவளை துரத்தினான்.


கண்மண் தெரியாமல் ஓடிக்கொண்டிருந்தவள் தன் பின்னால் தன்னை துரத்தி வரும் தமையனைப் பார்த்து நாக்கை துருத்தி காட்டி ஓடியவள்.. எதன் மீதோ நங்கென்று மோதி அப்படியே நின்றாள். தலையை தேய்த்து விட்டவாறு "நம்ம வீட்டுல.. அதும் நடு ஹாலில் தூண் இல்லையே..!" என்று மனதில் எண்ணியவளாக நிமிர்ந்து பார்த்தவள் அதிர்ந்தாள் இன்பமாக.


தன் முன் நின்றவனை பார்த்தவள் பார்த்தப்படியே நின்றிருந்தாள். தன் தங்கையைத் துரத்திக்கொண்டு வந்த வீர் அங்கு நின்றவனைக் கண்டு "டேய் மச்சான்..!" என்று அவனை அணைத்துக்கொள்ள அந்த புதியவனும் வீரை அணைத்துக்கொண்டான்.


இவர்களை நோக்கி வந்து மகேனும் அந்த கூட்டணியில் "டேய் சாணு" என்று சேர்ந்துக்கொள்ள ஜெயாவும் விஜயனும் அவர்களை நோக்கி வந்த "என்னப்பா இது போலீஸ் டிரெஸ்..?" என்று கேட்கவே "என்னம்மா இது தெரியாதா உனக்கு..? இவர்தான் புதுசா பதவி ஏற்றிருக்கும் நம்ம ஏரியா ஏ.சி.பி.. சாணக்கியன் ஐ.பி.எஸ்.." என்று கூறவும் ஆமென தலையாட்டிய சாணக்கியன் தன் அத்தை மாமா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினான்.


மனம் நிறைய வாழ்த்தியவர்கள் "எப்போ சாணு சென்னை வந்தே..? சொல்லவேயில்லை.. அம்மா தங்கச்சியெல்லாம் எப்படி இருக்காங்க..?" என்று விசாரித்தார். 


"இந்த வாரம் வெள்ளிக்கிழமை தான் அத்தை வந்தேன்.. வீட்டுல எல்லோரும் நல்லாருக்காங்க.." என்று கூறினான்.


"இதென்ன காக்கி சட்டையோட வந்திருக்க..!"என்று வீர் கேட்கவும் "டியூட்டில இருந்தேன் மச்சி.. அதான் அப்படியே நேரா வந்துட்டேன்.. அப்படியே அத்தை கையால் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு.." என்றவன் தன்னை அதிர்ந்து பார்த்துக்கொண்டிருந்த ஐஸ்வர்யாவை பார்த்துக்கொண்டே "அதுமில்லாம ஒரு திருடி இந்த வீட்டுல இருக்குறதா தகவல் கிடைச்சுது.. அதான் அப்படியே அரெஸ்ட் பண்ணலாமென்று வந்தேன்.." என்று கூறினான்.


"திருடியா..?" என்று யோசித்த வீர் அவன் பார்வை ஐஷூவை நோக்கி இருக்க "மச்சி உனக்கு அரெஸ்ட் பண்ண எப்பவோ பர்மிஷன் குடுத்துட்டாங்க.. நீ தான் இன்னும் ரெண்டு வருஷம் போகட்டுமென்று சொன்ன.." என்று அலுத்துக்கொண்டான்.


"எல்லாம் காரணமாத்தான் வா மச்சி" என்று தன் இரு மச்சானின் தோள்களில் கைகளைப் போட்டவாறு வந்தான். ஜெயா தன் பிள்ளைகளிடம் "போய் குளிச்சிட்டு வாங்க.." என்று அனுப்பி வைத்தவர் தன் மகளை அழைத்தார்.


தன் பேராழிக் கண்ணை விரித்து அதிர்ந்து நின்றவளை "ஐஷூ ஏன் அங்கேயே நிக்கிற..? சாணுவ அவன் ரூமுக்கு கூட்டிட்டு போய் டிரெஸ் எடுத்துக்கொடு.. நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.." என்று சமையற்கட்டிற்கு சென்றார்.


விஜயனும் தன்னறைக்கு சென்று விட.. இவனையே கீழிருந்து மேல் வரை பார்த்துக் கொண்டிருந்தவளை.. யாரும் இல்லையென உறுதிப்படுத்திக் கொண்டவன் அவள் அறைக்கு அலேக்காக தூக்கிச் சென்றான்.


அவன் தூக்கியதும் கத்த போனவளின் இதழைத் தன்னிதழ் கொண்டு பூட்டியவன் அவளறைக்கு வந்தும் விடவேயில்லை. அதில் ஊறும் தேனை சொட்டு விடாமல் இன்றே அனைத்தையும் உறிந்துவிடுபவன் போல் அவள் பூவ்விதழில் மூழ்கிப்போனவனிடமிருந்து தன்னை வலுக்கட்டாயமாகப் பிரித்துக்கொண்டு மூச்சு வாங்கினாள்.


தன்னை பிரிந்து மூச்சு வாங்கியவளைப் பார்த்து மோகத்தீ பற்ற அதனை அணைக்க அவளை தள்ளிக்கொண்டு சுவரோடு சுவராக சாய்த்தவன்.. அவள் மேல் படர்ந்து தன் தேக்குமர தேகம் உரச நின்றவன்.. அவள் காதில் தன் உதடுகள் உரசியவாறு "இப்போ ஓகே வா ஐசு..?" என தன் இதயத்திருடியிடம் அக்காவலதிகாரி சரணடைந்தான்.


அவன் அப்படி கேட்டதும் "சோட்டு" என்று அவனை கட்டிக்கொண்டு அவன் முகம் முழுதும் தன் மலரிதழால் ஒத்தடம் கொடுத்தவள் அவன் பருத்த கீழுதட்டை கவ்வி

க்கொண்டு தன் காதல் தலைவனை மோகச் சுழலுக்குள் இழுத்துச்சென்றாள்.


மழை பொ


ழியும்… 

Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments