மழை - 7:
இருவரும் சண்டை போடுவதைக் கண்டு "ஓய் வாண்டுகளா.. வெளியே போய் விளையாடுங்க.." என்று அவர்களை கேலி செய்த மகேன்.. தன்னறைக்கு சென்று சில மருத்துவ உபகரணங்களை எடுத்து வந்தவன்.. சாணுவிடம் பேசிக் கொண்டிருந்த தன் தாய் தந்தையிடம் வந்து அருகில் அமர்ந்தான்.
தன் தந்தைக்கு இரத்தழுத்தத்தைப் பரிசோதித்தவன் "அப்பா பிரஷர் ஏறியிருக்கு.. ஏன் ப்பா! எதுக்கும் கவலைப்படாதீங்க.. எங்களுக்கு எதுவும் ஆகாது.." என்கவும் "அதில்லைப்பா.. என் தம்பி குடும்பம் போன துக்கமே என் மனதை விட்டு இன்னும் அகலவில்லை.. இப்போ இந்த போன் கால் வேற.. அதான் கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன்.." என்று சற்று சாய்வாக சோஃபாவில் சாய்ந்தமர்ந்தார்.
"எதைப் பற்றியும் நினைக்காதீங்க.. நாங்க பார்த்துக்கிறோம்.." என்று அவர் கையை அழுத்திக் கொடுத்தவன்.. தன் தாய்க்கு நவீன கருவி கொண்டு சுகர் லெவலை பரிசோதனை செய்து.. அவருக்கும் ஒரு மருத்துவராக அறிவுரை வழங்கியவன்.. மகனாக "உன்னை விட்டு எங்கும் போகமாட்டோம் ம்மா.." என்று உறுதியளித்தான்.
ஆனால் அப்பொழுது அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. அவன் சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாமல் தன் உயிருக்கு உயிரான தன் தம்பியை பலிக்கொடுக்க போகிறோமென்று...
அவன் பரிசோதனை செய்வதைப் பார்த்த வீர் "என்ன டாக்டரே பரிசோதனையெல்லாம் முடிச்சாச்சா..?" என்றவாறு தன் தமையனை நோக்கி வந்தவன் அவன் சொன்ன தன் தாய் தந்தையின் ஹெல்த் கண்டிஷனை பற்றி அறிந்துக்கொண்டவன்.. அவர்களை முறைத்தான் "என்ன பண்ணி வச்சுருக்கீங்க..?" என்று எகிறியவனை கலைத்தது மகேனின் செல்பேசி அழைப்பு..
தன் கைப்பேசியை எடுத்துப் பார்த்தவன் இந்திய நம்பர் காட்டாமல் அமெரிக்க நம்பர் காட்டவும்... எழுந்துக்கொள்ளப் போக அவனை தடுத்த ஜெயா "இங்கேயே பேசுப்பா.." என தன் நடுங்கும் குரலில் ஜெயா கூற.. தன் தாய் அந்த அழைப்பைக் கண்டுக்கொண்டார் என புரிந்துக்கொண்டவன்.. தன் தம்பிக்கு கண்ணைக் காட்ட அதனை புரிந்துக்கொண்டவன்.. தன் தாய் தந்தையர் இடையில் சென்று அமர்ந்துக்கைகளை அவர்களின் தோளை சுற்றிப் போட்டுக்கொண்டு அணைத்துக்கொண்டான்.
மகேன் ஆன் செய்து காதில் வைக்க "என்ன ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல..? உங்க ரெண்டு பேருக்கும் ரைடர்னு நினைப்பா..? அப்படியே பைக்ல பறக்குறீங்க.. ஒரு லாரி ஏற்பாடுப் பண்ணி தூக்கலாமென்று தான் பார்த்தேன்.. அப்படி செய்தால் நீங்க பொட்டுன்னு போயிடுவீங்க இல்லையா.. நீங்க ஒரே அடியில் மேலே போய்ட்டா அது நல்லாருக்காது.. அப்படியே துடித்துடிச்சி அணு அணுவா சாகனும்.. அதைப் பார்த்து நான் ரசிக்கனும்.. ஹா.. ஹா.." என்று கர்னக் கொடூரமாக சிரித்தவன் அவன் அமைதியாக இருக்கவும் "என்னடா பயமா..? உன் அப்பனும் ஆத்தாளும் பயத்துலையே மேல போய் சேர்ந்துடுவாங்கப் போலையே..?" என்று எகத்தாளமாக கூற தன் கோபத்தை சிரமப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தவன்.. தன் தாய் தந்தையைப் பற்றி அவன் பேசவும் "ஏய் என்ன விட்டா பேசிக்கிட்டே போற..? உன்னால என்ன முடியுமோ பண்ணிக்கோடா..? தைரியம் இருந்தா என் முன்னாடி வந்து பேசுடா.." என்று கழுத்து நரம்பு புடைத்து வெளித்தெரிய கோபத்தில் கண்கள் சிவந்து கர்ஜித்தான்.
அவன் கர்ஜித்ததில் அங்கு அமர்ந்திருந்த அனைவரும் அவனை அதிர்ந்துப் பார்த்துக் கொண்டிருக்க "என்னடா..? உன் அப்பன் ஆத்தால சொன்னா.. உனக்கு பொத்துக்கிட்டு வருது போல.." என்று கேலியாகக் கூறியவனை இப்பொழுது கண்டதுண்டமாக வெட்டிப் போடும் ஆத்திரம் எழுந்தது. "டேய்..! நீ மட்டும் என் கையில் கிடைச்ச.." என்று கர்ஜிக்க "டேய்..! நிறுத்து நிறுத்து.. இந்த சவுண்டெல்லாம் நீ போடக் கூடாது.. அப்புறம் பின் விளைவுகள் பெருசா இருக்கும்.." என்று மிரட்டியவன் "உன் மச்சான் வேற இன்னைக்குத்தான் வீட்டுக்கு வந்துருக்கான் போல.. உன் தங்கச்சியும் அவனும் மன்மதன் ரதியோ..! அப்படியே பார்வையிலேயே காதல் பண்றாங்க.. எல்லாரையும் பத்திரமா பார்த்துக்கோ.. இன்னும் ஒரு வாரத்துல உன் வீட்டுல சாவு விழும் பாரு.. வெயிட் அண்ட் வாட்ச் டாக்டர் கொம்பு.." என்கவும் "டேய் உன்னாலா என்ன பண்ண முடியுமோ பார்த்துக்கோ.. என் வீட்டுல இருந்து ஒரு பிடி மண்ணை கூட எடுக்க முடியாது உன்னால முடிஞ்சத பார்த்துக்கோடா.." என்று அழுத்தமாகக் கூற மறுபக்கம் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு இப்பொழுதே அவனை அழிக்க வேண்டுமென வெறி ஏற.. "வரதையப்பாளையத்துலையே உங்களை போட்டுருக்கனும்டா.. மிஸ் பண்ணிட்டேன்.. யுவர் கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ் நவ்.." என்று உறுமியவன் அழைப்பை துண்டித்தான்.
மகேன் போனை அனைத்து பாக்கெட்டில் போட "என்னடா அவனா..?" என்று வீர் விவை "அந்த நாதாரிதான்.. அவனை விடுடா.. லுச்சா பயல்.." என்று அவனை ஓரங்கட்டியவன் தன் தாய் நடுக்கமுற்று அமர்ந்திருக்க "அம்மா ஒன்னும் ஆகலை.. அவன் எவனோ பணத்துக்கு அடிப்போடுறான்.." என்று தன் நெஞ்சரிந்து தன் தாய்க்காக பொய் கூறினான்.
"பணத்திற்காகவா மகேன்.. எவ்வளவு வேணுமோ அந்த பையனுக்கு குடுத்துடலாம் ப்பா.. நம்மக்கிட்ட தான் பணம் இருக்கே பணம் கூட சம்பாரிச்சுக்கலாம் நாம கொடுத்துடுவோம்.." என்று வெள்ளந்தியாக கூற "ம்ம் சரிம்மா நல்லா கொடுத்திடலாமென.." அந்த 'நல்லா' வில் அழுத்திக் கூறினான்.
"சரிம்மா நீங்க போய் ரெஸ்ட் எடுங்க.. நாங்க சும்மா கொஞ்ச நேரம் வெளியே வாக் மாதிரி போயிட்டு வரோமென்று" தன் தாய் தந்தையையும் தங்கையையும் வீர் அவரவர் அறைக்கு அனுப்பி வைத்தவன் சாணுவையும் மகேனையும் அழைத்துக்கொண்டு வெளியே வந்தான்.
மனதை மயக்கும் மல்லிகை வாசம் மல்லிகைப் பந்தலில் இருந்து வரப் பலவகையான செடிகள் அழகாக திருத்தப்பட்டு கண்ணை கவரும் வண்ணம் இருக்க.. அதனை ரசிக்கும் நிலைமையில் மூவருமே இல்லை.
மகேனும் வீரும் அமைதியாக இருக்கவே சாணு தான் பேச்சைத் தொடங்கினான் "என்னடா மச்சான் ஆச்சு..? யாரு அவன் என்ன சொன்னான்..?" என்கவும் தன் மொபைலில் ஆட்டோமேட்டிக் கால் ரெக்காடர் செயலியை ஆன் செய்து அவன் பேசிய பொழுது ரெக்கார்ட் ஆன ஆடியோவை ப்ளே செய்ய அந்த அவன் பேசியதைக் கேட்ட இருவரும் கொதித்தெழுந்துவிட்டனர்.
சாணு மகேனிடம் "அந்த நம்பர் கொடுடா.. நான் சைபர் க்ரைமில் கொடுத்து செக் பண்ண சொல்றேன்.." என்கவும் "ஒவ்வொரு முறையும் வேறு வேறு நாடுகளில் இருந்து கால் வருது.. ஐ தாட் அவன் நெட் காலில் ஏதோ ஒரு செயலியை வைத்து பேசுறான் போல.." என்று கூற "ஓ..?" என்று யோசித்தவனிடம் "இது தான் அந்த நம்பர்.." என்று ஒரு எண்ணை காட்டியவன் பின் மற்றொரு எண்ணை காட்டியவன் "இது ஒரு வாரத்துக்கு முன்ன வந்தது.." எனக் காட்ட அதனைக் குறித்துக் கொண்டவன் "சரிடா டியூட்டிக்கு டைம் ஆச்சு.. நாளைக்கு பால் காய்ச்சனும்.." என்று அம்மா சொன்னாங்க..
"நாளைக்கு அம்மாவும் தங்கச்சிகளும் வராங்க.." என்று கூறவும் இத்தனை நேரம் கோபத்தில் இருந்தவன் மனதை மயிலிறகாய் வருடியது போலானது..
சாணு தங்கச்சி என்றதும் தன் சாக்கி பேபி வீரின் மண்டையில் தட்டி "என்னை மட்டும் யோசிடா" என்று மத்தளம் கொட்ட அவன் தன் சாக்கி பேபியுடன் டூயட் பாட ஓடி விட்டான் (கனவில் மட்டும்)
(இந்த ரணகளத்துளையும் உனக்கு குதூகலம் கேட்குது நீ அங்க இருக்கடா வீரி)
சாணு வீட்டினுள் சென்று தன் அத்தை மாமாவிடம் பால் காய்ச்சுவதைப் பற்றிக் கூறிவிட்டு தன்னவளிடமும் கண்களால் அழைப்பு விடுத்தவன் கிளம்பவும் "பி கேர்புல் மச்சி" என்று ஆயிரம் பத்திரம் சொல்லிக்கொண்டு கிளம்பினான்.
இங்கு வீர் தன் அறையில் தன் சாக்கி பேபியை நினைத்து பனிக்கூழாய் கரைந்துக் கொண்டிருந்தான். "அடியே கன்னுக்குட்டி..! எப்போ டி என்கிட்ட வருவ..?" என்று தன்னவள் தன் மனதில் அழியாக் கல்வெட்டாய் பதிந்த அந்த நாளுக்கு சென்றான்.
மூன்று வருடங்களுக்கு முன்பு... தன் படிப்பை அமெரிக்காவில் முடித்து விட்டு தன் அத்தையைப் பார்க்க சென்றவன் பார்த்ததென்னவோ தன் அத்தை மகளைத்தான்.. அதுவும் சாக்லேட்டை வைத்துக்கொண்டு ஒரு சிறுவனிடம் பேரம் பேசிக்கொண்டிருந்தாள்.
அதனைக் கண்டு பக்
கென்று சிரித்து விட்டான்.
மழை பொழியும்...
0 Comments