தேவநிலா - 9:
நிலா ஊரில் இருந்து கிளம்பிய ஐந்தாவது நாள் சூர்யா தன் வீட்டிற்கு லீவிற்காக வந்தவன் தன் தம்பி தங்கைகளுக்காக நிறைய திண்பண்டங்கள் வாங்கி வந்திருந்தான்.
டேய் தேனு அபி விஜய் மூணு பேரும் எங்க இருக்கீங்க என்று அவர்களை அழைத்துக்கொண்டே உள்ளே வந்தவன் தன் அன்னை முற்றத்தில் அமர்ந்து கால்களை ஆட்டிக் கொண்டு சீரியல் பார்த்துக் கொண்டிருக்கவும் அவரைக் கண்டுக் கொள்ளாமல் உள்ளே சென்றான்.
அவனை கண்டதும் பங்கஜத்திற்கு எங்கிருந்துதான் அப்படி ஒரு பயம் வந்ததோ தெரியவில்லை காற்றாடி ஓடிக் கொண்டிருக்கும் போதே அவருக்கு வியர்த்து வழிந்தது. ஐயோ இவன் வேற சொல்லாம கொள்ளாம வந்து நிக்கிறானே இப்போ அவள் எங்கன்னு கேட்டா நான் என்னன்னு பதில் சொல்றது ஒன்னும் தெரியலையே இப்போ என்ன பண்ற என்று அவனிடமிருந்து எப்படி தப்பிப்பது என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்.
மணியுடன் அனுப்பிய அடுத்த நாள் அவனுக்கு போன் போட அவன் இருந்தால் தானே போனை எடுக்க அவன் தான் ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறானே எப்படி அவன் போன் எடுப்பான்.
இவன் என்ன போனை எடுக்க மாட்டேங்கிறான் என்று நினைத்தவருக்கு அதன் பிறகு என்ன செய்வதென்று தெரியவில்லை. இது எப்படியோ ஊர் மக்களுக்கு அரசல்புரசலாக தெரியவர என்ன பங்கஜம் உன் பொண்ணை மணி கூட அனுப்பி வச்சியே என்ன ஆச்சு போன் போட்டாங்களா என்று ஒருத்தி போட்டு வாங்க இன்னும் போனவங்க போன் பண்ணலை.
வேலையா இருப்பாங்களோ என்னவோ போன் பண்ணுவாங்க நீ உன் வேலையைப் போய் பாரு இனி பணம் வருமோ வராதோ என்று நினைத்து எரிச்சலாக சொல்ல கோபப் படாத பங்கஜம் நான் எதுக்கு சொல்றேன்னா இப்போ இருக்குற புள்ளைங்க எல்லாம் ஒன்னுமே தெரியாத மாதிரி முகத்தை வச்சிக்கிட்டுப் பண்ணாத வேலையெல்லாம் பண்ணுதுங்க..
உன் பொண்ணுக்கு வேற இது தான் பருவ வயசு வேற இந்த மணி பயலும் ஒரு மாதிரி அதான் ஒரு அக்கறையில் சொன்னேன் வேறு ஒன்னுமில்லை என்றவள் கிளம்பி விட்டாள்.
ஐயோ ஒரு வேளை இவள் சொல்ற மாதிரி இருக்குமோ என்று தான் பெற்ற பிள்ளையையே கேவலமாக நினைத்தவர் தன் பிள்ளையை காணவில்லையே சென்னை சென்றவள் முன் பின் தெரியாத ஊரில் எப்படி இருக்கிறாளோ என்ற பிள்ளையைப் பற்றிய எந்த ஒரு அக்கறையும் இல்லாமல் கால்களை ஆட்டிக் கொண்டு டீவி சீரியல் பார்த்துக்கொண்டிருந்தார் அந்த கேவலமான தாய்.
சூர்யா உள்ளே செல்ல அங்கு விஜய்யும் அபியும் அழுத முகத்துடன் தூங்கிக்கொண்டிருந்தனர். அபிம்மா என்று தன் சிறிய தங்கையை எழுப்ப எழுந்தவள் தன் அண்ணனை பார்த்ததும் அழுதாள்.
அண்ணா..
ஏன்டா அபிம்மா அழற இங்க பாரு கண்ணை தொடை
அவள் விக்கி விக்கி அழுகவும் அக்கா எங்க என்று கேட்க அண்ணா அக்கா என்று மீண்டும் அழுதாள்.
அக்கா எங்கடா என்று தேனு தேனு என்று உரக்க கத்தினான்.
அண்ணா அக்கா இனிமே வராதாம் யார் கூடையோ ஓடிப் போயிடுச்சாம் இங்க பக்கத்து வீட்டுல பேசுனதை நான் கேட்டேன் என்று அபி சூர்யாவிடம் கூறினாள்.
இவர்களின் சத்தத்தில் விஜயும் எழுந்து கொண்டவன் தன் அண்ணனை பார்த்ததும் ண்ணா பசிக்குது என்று கூற சாப்பிடலையாடா என்று கேட்க இல்லை அண்ணா அக்கா போனதுல இருந்து சாப்பிடல என்று அபி கூறிவிட்டு அழுதாள்.
தான் வாங்கி வந்து பொருட்களை எடுத்து சாப்பிடுமாறு கூறியவன் என்ன சத்தம் கேட்டாலும் வெளியே வரக் கூடாது சரியா நீங்க சாப்பிடுங்க இதோ அண்ணா வந்துடுறேன் என்றவன் அவர்கள் இருந்த அறையை சாற்றி விட்டு வெளியில் வந்தான்.
சூரியாவிற்கு தன் அன்னையின் மேல் கட்டுக்கடங்காமல் கோபம் வந்தது. பெற்ற பிள்ளைகளில் ஒருத்தி எங்கு சென்றாளோ என்று எந்த பரிதவிப்பும் இல்லாமல் பிள்ளைகள் சாப்பிட்டதா என்று கூட கவனிக்காமல் காலாட்டிக் கொண்டு டீவி மும்பரமாக பார்த்துக் கொண்டிருந்தவரைக் கண்டு வெறுப்பு தான் மிஞ்சியது.
நிலா எங்க என்று தன் முன் வந்து நின்றவனை கண்டு அவருக்கு தலை சுற்றிக்கொண்டு வந்தது.
எதுவும் பேசாமல் நின்றவரிடம் பணத்துக்காக பெத்த பொண்ணுன்னு கூட பார்க்காம யார்க்கிட்டையாவது வித்துட்டியா சொல்லு என்று கேட்க சூர்யா என்று கத்தினாரே தவிற வேறெதும் பேசவில்லை.
நீ ஏதும் பேசாம இருக்கும் போதே தெரியலையா நீ தான் என் தங்கச்சியை ஏதோ பண்ணிருக்க சொல்லு என்ன பண்ணின என்று கேட்க அமைதியே பதிலாக கொடுத்தார்.
நீ எதுக்கு எங்களை பெத்த நீ பெக்காம இருந்திருந்தா வேறெங்காவது புண்ணியம் பண்ணினவங்களுக்கு பிறந்திருப்போம்.. போன ஜென்மத்துல என்ன பாவம் பண்ணினோமோ தெரியல போயும் போயும் உன் வயித்துலையா நாங்க பிறக்கனும் ச்சே என்று அங்குள்ள சுவற்றில் குத்தி தன் கோபத்தைக் கட்டுப்படுத்தினான்.
எங்க அவளை அனுப்பி வச்ச ஒழுங்கா சொல்லிடு பெத்தவன்னு கூட பார்க்க மாட்டேன் என்றவன் அவர் அப்படிே மரம் போலவே நிற்கவும் தன் பெல்ட்டை கழட்டி அடி விலாச ஆரம்பித்து விட்டான்.
நீயெல்லாம் எதுக்கு பூமிக்கு பாரமா இருக்க போய் செத்து தொலைய வேண்டியது தானே உன்னை கண்டாலே எரிச்சலா வருது ச்சே என்று வெளுத்து வாங்க டேய் அடிக்காதடா வலிக்குது ஆஆஆ வலிக்குது என்று ஒப்பாரி வைக்க அவர் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் இருந்து என்னவோ ஏதோவென்று ஓடி வந்தனர்.
இரண்டு மூன்று ஆண்கள் வந்து சூர்யாவை பிடித்துக் கொள்ள அவர்களிடமிருந்து திமிறியவன் விடுங்க என்னை விடுங்க பொம்பளையா இவ ச்சே இவளை கொன்னா கூட என் ஆத்திரம் தீராது என்று கத்தியவன் ஐயோ என் தங்கச்சியை நான் இப்போ எங்கன்னு போய் தேடுவேன் என்று மண்டியிட்டுக் கதறினான்.
அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை பங்கஜம் வாய திறந்தால் தான் அவனுக்கு அடுத்தது என்ன செய்யலாம் என்ற முடிவே எடுக்க முடியும்..
அங்கிருந்த பெண்மணி ஒருவர் உன் தங்கச்சி சினிமாவுல நடிக்க ஆசைப்பட்டு மணி கூட போனாள். இப்போ போன் போட்டா மணி போனை எடுக்க மாட்டேங்கிறான் என்று தனக்கு தெரிந்த வரைக்கும் கூறினார்.
மணியா அவன் கூடவா நிலா போயிருப்பா அதும் என்கிட்ட சொல்லாம அவ எங்கேயும் போக மாட்டா இது தான் ஏதோ நடுவுல ஏதோ பண்ணிருக்கு என்று வெகு நேரம் யோசித்தான்.
சிறிது நேரத்தில் அனைவரும் அவரவர் வீட்டிற்கு செல்ல அனைவரும் சென்ற பிறகு பங்கஜத்திடம் வந்தவன் நீ தான் எங்களை பெத்தியா அதுவே எனக்கு சந்தேகமா இருக்கு மணி எவ்ளோ பெரிய கேடு கெட்டவன்னு உனக்கு தெரியாது ஹிம்ம்..
அவன் எவ்வளவு பெரிய அயோக்கியன்னு தெரிஞ்சும் நீ அவன் கூட நிலான அனுப்பி வச்சிருக்க பார்த்தியா நீ எல்லாம் பொம்பளையே இல்லை.
நிலாக் மட்டும் ஏதாவது ஆச்சு உன் சாவு என் கையால தான் குறிச்சி வச்சுக்க என்றவன் உள்ளே சென்று விட்டான்.
உள்ளே வந்தவனுக்கு என்ன செய்வதென் தெரியவில்லை. அப்பொழுது தான் தன் தூரத்து சொந்தமான வெற்றிவேந்தன் நியாபகம் வந்தான்.
உடனே
அவனுக்கு அழைத்தவன் நடந்ததை சுருக்கமாகக் கூறினான்.
தொடரும்...
0 Comments