தேவநிலா - 10:
என்ன லக்ஷ்மிமா அந்த பொண்ணு இன்னைக்காவது சாப்டுச்சா இல்லையா என்று கேட்க இல்லை தம்பி அது சாப்பிட மாட்டேங்குது நான் எப்போ சாப்பாடு எடுத்துட்டுப் போனாலும் போய் படுத்துக்குது அது வந்ததுல இருந்து சாப்பிடவே இல்லை மெலிஞ்சுபோச்சு.
நீங்க சத்தம் போட்டு கொஞ்சம் சாப்பிட வைங்க தம்பி என்கவும் அவ சாப்பிட்டால் இருப்பா இல்லைனா செத்து போறா எனக்கென்ன வந்துச்சு அவள் சாப்பிட்டா என்ன சாப்பிடலனா எனக்கென்ன கிடக்கட்டும் என்றவன் சரி நேரம் ஆச்சு நீங்க கிளம்புங்க காவலுக்கு ராஜ் இருக்கான் என்றதும் சரி தம்பி நான் காலையில் வரேன் என்கவும் ஹிம்ம் லக்ஷ்மி மா நான் கேட்டது என்று நிறுத்த எல்லாமே அலமாரில இருக்கு தம்பி என்றவர் கிளம்பிவிட்டார்.
அவர் சென்றதும் நிலா அறைக்கு சென்றவன் கதவை திறக்கவும் சட்டென்று அறையின் விளக்கு அணைந்தது. ஏய் இப்போ எதுக்கு லைட்டை ஆப் பண்ணி வச்சிருக்க என்று கேட்க ஒரு சத்தமும் வரவில்லை. இப்போ நீ லைட் போடுறியா இல்லை நான் போடவா என்கவும் அப்பொழுதும் எதுவும் சத்தம் வராமல் இருக்க ஸ்விட்ச் இருக்கும் பக்கம் அவன் நகரவும் சார் லைட் போடாதீங்க என் மேல டிரஸ் எதும் இல்லை நீங்க வெளியே போங்க.
ஏய் பொய் சொல்லாத என்று அதட்ட சார் நான் இப்போதான் குளிச்சேன் என் தாவணியை துவைச்சுப் போட்டேன் அதான் இன்னும் காயலை என்று பரிதாபமாக கூற ஏய் அரைவேக்காடு அதான் அலமாரியில் அத்தனை டிரெஸ் இருக்கே எதையாவது ஒன்னை எடுத்துட்டுப் போட வேண்டியது தானே எதுக்கு என் கழுத்தை அறுக்குற என்று சாடினான்.
உங்களோட டிரெஸ் எதுவும் எனக்கு வேண்டாம் சார் அது யாரு யாரு போட்டதோ இதுக்கு முன்னாடி எத்தனை பொண்ணுங்களை கடத்தினீங்களோ யாருக்கு தெரியும் உங்களோடதை உயயோகப் படுத்தினால் உங்க பாவம் எல்லாம் என்னை தான் வந்து சேரும் எனக்கு உங்களை சேர்ந்தது எதுவும் வேண்டாம்.
தயவு செய்து என்னை எங்க வீட்டுக்கு அனுப்பி வச்சிடுங்க ப்ளீஸ் உங்களை கெஞ்சிக் கேட்டுக்கிறேன் என்று கெஞ்ச அந்த அரக்கன் மனம் இரங்கவே இல்லை.
ஒஹ் இங்க எத்தனை பொண்ணுங்க இருந்தாங்க அதை எத்தனை முறை உன் கண்ணால் பார்த்த ஹான் சொல்லு என்கவும் அவளிடம் பதிலில்லை.
போ போய் டிரெஸ் மாத்திட்டு வா என்று உறுமினான்.
அவள் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருக்கவே என்ன என்று மீண்டும் கர்ஜித்தான்.
அவன் கர்ஜனையில் மானாக நடுங்கியவள் நீங்க வெளியே போங்க என்கவும் ஆமா இவங்க அப்படியே பேரழகி என்று வாய்க்குள் முனகியவன் இருட்டில் அவள் வரிவடிவத்தைக் கண்டு முறைத்து பார்த்து டிரெஸ் போட்டுட்டு வா அப்புறம் இருக்கு உனக்கு என்று வாய்க்குள் முனகியவன் வெளியே சென்றான்.
அவன் சென்றதும் குளியலறையில் இருந்து காயவைத்திருந்த தன் உடைகளை எடுத்து வந்தவள் போட ஆரம்பிக்க அவன் அடுத்து கேட்ட கேள்வியில் கையில் வைத்திருந்த உடை நழுவியது.
இப்போ என் காதுல கரெக்டாதான் விழுந்துதா.. என்று யோசித்தவள் என்ன சார் கேட்டீங்க என்று திரும்பவும் கேட்க உன் பேர் என்ன என்று பல்லை கடித்தபடி கேட்டான்.
அடங்.. கொக்கமக்கா பேரு தெரியாமையா டா ஒரு பிள்ளையை கடத்தி வந்து வச்சிருக்க என்று நினைத்தவள் அதை அவனிடமே அதிர்ச்சி மாறாமல் கேட்டாள்.
சார் என் பேருக்கூட தெரியாமலா என்னை இப்படி கடத்திட்டு வந்து வச்சுருக்கீங்க என்று கேட்கவும் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு நீ என்னை கேள்வி கேட்காத புரிஞ்சுதா என்றவன் அவள் பதிலுக்காக காத்திருக்க என் பேரு தேன்நிலா சார் என்கவும் வாட் யூ மீன் ஹனி.?
ஹிம்ம் ஆமா சார் ஹனிமூன் தான் ச்சீ தேன்நிலா சார் என்று தலையில் அடித்துக் கொண்டு தன் உடைகளைப் போட்டுக் கொண்டாள்.
அப்போது கீழே டைகர் குறைக்கும் சத்தம் கேட்கவே ஏன் டைகர் இந்த நேரத்துல கத்துறான் என்னாச்சு என்று படிக்கட்டுகளில் இறங்கப் போக இங்கு அறையில் நிலாவின் அலறல் சத்தம் கேட்டது.
ஆஆ.. சார் .. ஆஆஹ் என்னை விடு ஆஹ் என்ற அலறலில் கதவு பக்கம் ஓடி வந்தவன் ஹே என்னாச்சு ஹனி ஹே என்று கத்தியவன் கதவை திறக்க முயற்சி செய்ய அதுவோ லாக் ஆகியிருந்தது.
ஷிட் என்று கதவை காலால் அட்டி உதைத்தவன் தன் பலம் கொண்ட மட்டும் கதவை ஓங்கி தள்ளி உடைக்க முயற்சி செய்தான்.
ஆஹ் சார் வலிக்குது விடுடா ஆஹ் சார் காப்பாத்துங்க சார் ஆஹ் வலிக்குது சார் என்ற அவளின் அலறலில் ஒஹ் காட் ஹனி இதோ வந்துடுறேன் என்று இவன் குரல் கொடுக்க அங்கு உள்ளே ஒருவன் நிலாவின் உடம்பில் பார்க்கும் இடத்தில் எல்லாம் கத்தியால் கீறியவன் வந்த வழியே சென்று விட்டான்.
இங்கு வெளியே தேவன் தன் பலம் கொண்டு கதவை மோத டப் டப் என்ற பெரும் சத்தம் கேட்டது..
கீழே இருந்து டைகர் சத்தம் கேட்டு ஓடி வந்தது அந்த கதவை தன் காலால் பிராண்ட ப்ளீஸ் ப்ரே பார் ஹெர் டைகர் என்று அதனிடம் கூறிக்கொண்டே கதவை மோத கதவு உடைந்து கொண்டு விழுந்தது.
உள்ளே சென்று பார்த்தவனுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.
சற்று முன்னர் வரை தன்னிடம் பேசிக் கொண்டிருந்தவள் இப்பொழுது இரத்த வெள்ளத்தில் கிடந்தாள்.
ஒஹ் காட் ஐ ஆம் சாரி ஹனி ப்ளீஸ் பர்கிவ் மீ என்றவன் அவளது நாடியைப் பிடித்து பார்த்தான்.
இவனது அலறலில் அரை மயக்கத்தில் கிடந்தவள் சார் வலிக்குது காப்பாத்துங்க சார் என்று அவன் கையை பிடித்தவாறு மயக்கத்திற்கு செல்ல அந்த கணம் அவன் தன்னையே வெறுத்தான்.
ஹேய் ஹனி உனக்கு ஒன்றுமில்லை உனக்கு எதுவும் ஆக விடமாட்டேன் ஸ்டே வித் மீ ப்ளீஸ் என்றவன் கண்ணில் கண்ணீர் துளி.
தான் தானா இது யாரென்றே தெரியாத ஒருத்திக்காக தான் ஏன் கண்ணீர் சிந்துகின்றோம் என்று அவனுக்கு புரியவில்லை.
அவளை தனக்கு பிடிக்காது தான் அதற்காக ஒருபோதும் அவள் சாக வேண்டும் என்றெல்லாம் அவன் நினைத்ததில்லை.
அவள் உடம்பில் இருந்து இரத்தம் வெளியேறிக் கொண்டிருக்க அதனை உணர்ந்தவன் அவளை தன் கையில் ஏந்தியவன் டைகரிடம் டைகர் பர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் எடுத்துட்டு வா என்கவும் அது ஓடியது.
அவளை மெத்தையில் படுக்க வைத்தவன் அவள் மாராப்பை விலக்க அவள் அந்த மயக்க நிலையிலும் சார் என்று அவன் கையைப் பிடிக்க ஹேய் நான் ஒன்னும் பெண்பித்தன் கிடையாது முடியாம இருக்கிற பெண்ணிடம் பாய.. கையை எடு இரத்தம் அதிகம் போகுது கட்டுப் போட்டுட்டு ஹாஸ்பிட்டல் போகலாம் என்றவன் டைகர் பர்ஸ்ட் எய்ட் அடங்கிய பெட்டியை வாயில் கவ்விக் கொண்டு வர அதனிடமிருந்து பெட்டியை வாங்கியவன் அவள் உடைகள் அனைத்தையும் அகற்றினான்.
அவன் முன் பிறந்த மேனியாக கிடக்கிறோம் என்ற நினைப்பே அவளுக்கு உடம்பெல்லாம் கூசியது.
கண்களை திறக்க முடியாமல் திறந்தவள் சார் வேண்டாம் சார் என்று அவன் கைகளைத் தடுக்க ஹனி கொஞ்சம் நீ சும்மா இரு இத்தனை வெட்டு வாங்கி வச்சிருக்க வாய் மட்டும் பேச தெரியுதுல்ல என்று அவளிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே ஒவ்வொரு இடமாக அழுத்தி துடைத்து பஞ்சு வைத்து பிளாஸ்டரை ஒட்ட அவள் வலியில் கத்தினாள்.
சார் ஐயோ வலிக்குது என்று அழ கொஞ்சம் பொறுத்துக்கோ ஹனி என்றவன் அவள் கைகளில் வேறெங்காவது காயம் இருக்கிறதா என்று பார்க்க அப்பொழுது தான் மெத்தை முழுக்க இரத்தம் அவளை திருப்பிப் பார்க்க முதுகில் பெரிய வெட்டுக் காயம் சற்று ஆழமாகவே இறங்கி இருந்தது.
இரத்தம் அதிகமாக வெளியேறவே ஒரு துணியை எடுத்தவன் அதில் அழுத்தி அவள் வயிற்றோடு கட்டுப் போட இங்க ஒன்னும் பண்ண முடியாது நாம ஹாஸ்பிட்டல் போயே ஆகனும் என்று அவளிடம் கூறியவன் அவள் மேல் ஒரு போர்வையைப் போர்த்தி விட்டு தன் கைகளில் ஏந்திக் கொண்டவன் ராஜூவிற்கு கால் செய்ய அவன் எடுக்கவில்லை.
உடனே பீமனுக்கு அழைத்தவன் சேனா இங்க கொஞ்சம் பிரச்சனை ராஜூவை வந்து பாரு என்றவன் அவளை ஏந்திக்கொண்டு சென்று காரில் கிடத்தியவன் மருத்துவமனைக்கு காரை செலுத்தினான்.
நிலாவின் இந்த நிலை
மைக்கு காரணம் யார்?
தேவனிடம் சிக்கினால் அவர்களின் நிலை என்ன?
தொடரும்…
0 Comments