தேவநிலா - 8:
அவன் அவளை தன் அறைக்கு தூக்கி வந்தவன் பெட்டில் தொப்பென்று போட்டு விட்டு தன் சட்டையை கழட்டினான்.அவர்கள் பின்னாடிே வாலை ஆட்டிக் கொண்டே வந்த டைகர் அவனை பார்த்து வாலை ஆட்டவும் அவன் அதன் கழுத்தை நீவி விட்டு அவளை பார்த்தான்.
அவளோ ஏற்கனவே அவை சட்டையை கழட்டியதில் என்னென்னமோ நினைத்தவள் அவன் நாயை தடவி விடவும் ஐயோ இவன் என் வெட்கம இல்லாம பொட்டை பிள்ளை முன்னாடி சட்டை அவுத்துப போட்டு திரியுறான். இவன் பண்றது எல்லாம் நமக் நெஞ்சு பக்கு பக்குன்னு அடிக்குது.
இந்த சின்ன வயசுலேயே என்னை பரலோகம் அனுப்பி வச்சிடுவான் போலையே.. ஐயோ என்னை காப்பாத்தா இங்க யாருமே இல்லையா இந்த ராட்சசன் கிட்ட இருந்து என்னை யாராவது காப்பாத்துங்க என்று உள்ளுக்குள் பயத்தில் கதறினாள்.
அவன் டைகரை நீவி விட்டு அவளை பார்த்துக் கொண்டே தன் கழுத்தில் கை வைத்து சொடுக்கு எடுத்தவன் அவளை நெருங்க ஐயோ கிட்ட வரானே பயமா இருக்கே என்று நினைத்தவள் பயப்படாத தேனு இவன் அப்ப நம்மள என்ன பண்ணிட முடியும் எதுவும் தப்பா நடக்கா என்று தனக்கு தானே தேற்றி கொண்டாள்.
அவன் ரொம்ப நெருங்கவும் பின்னால் மெத்தையில் நகர்ந்து கொண்டே சார் சார் என்னை விட்டுடுங்க சார் நீங்க நினைக்கி மாதிரி பொண் நான் கிடையாது சார் என் பையை கொடுத்திடுங்க சார் நான் எங்க ஊரு பக்கம் போயிடுறேன் ப்ளீஸ் சார் என்று கெஞ்ச ஒஹ் நான் நினைக்கிற மாதிரி பொண்ணு நீ இல்லையா என்று கேட்க ஆமாம் என்று தலையசைக்க அப்படியா சரி அதையும் செக் பண்ணிடலாமா என்கவும் மலங்க மலங்க விழித்தாள்.
அவள் பார்வையை தனக்குள் உள் வாங்கியவன் உன்கிட்ட சில கேள்விகள் மட்டும் கேட்டுக்கிறேன் அதுக்கு பதில் சொல்றதை பொறுத்து தான் உன்னை வீட்டுக்கு அனுப்பலாமா இல்லை மும்பைக்கு அனுப்பலாமான்னு யோசிப்பேன் என்ன ஓகேவா என்று கேட்க அப்பாடி ராட்சசன் மனசு இறங்கிட்டான் போல அவன் கேட்கிறதுக்கு உண்மையான பதிலை சொல்லிடுவோம் அப்போதான் நம்மை வீட்டுக்கு அனுப்புவான் என்று யோசித்து விட்டு பூம் பூம் மாடு போல் அனைத்து பக்கமும் தலை ஆட்டினாள்.
அவன் வாயை திறக்கவும் சார் நான் பன்னிரெண்டாம் வகுப்பு வரைக்கும் தான் படிச்சிருக்கேன் அதுல கேளுங்க அதுவுமே மறந்து போச்சு கொஞ்சம் ஈசியா கேளுங்க சார்.
வாய்க்குள் ஏதோ முனகியவன் சுப் வாயை மூடு என்றவன் எதுக்கு சென்னை வந என்று கேட்டான்.
படம் நடிக்க சார்
ஏன் படம் நடிக்க அவ்வளவு ஆசையா என்ன என்று நக்கலாகக் கேட்க எங்க வீட்டுல ரொம்ப கஷ்டம் சார் அதான் எங்கம்மா படம் நடிச்சா காசு வரும்னு சொன்னாங்க அதான் வந்தேன் என்று கூறினாள்.
அப்போ பணத் தேவை அதனால படம் நடிக்க வந்த அப்படி தானே என்றதற்கு ஹிம்ம் ஆமா சார் ஆனால் எனக்கு என அவள் அவளின் நடிப்பின மீதான ஆசையைக் கூற வர |ச்சீ வாயை மூடு எப்படி இப்படி இருக்கீங்க பணத்துக்காக என்ன வேணும்னாலும் செய்வீங்களா எப்போ பார்த்தாலும் பணம் பணம் என்று வெறி பிடிச்ச நாய் போல இப்படி அலையுறீங்க ஷிட் என்று தன் பலம் மொத்தம் கூட்டி மெத்தையில் குத்தினான்.
அவன் செயலில் பயந்தவள் தன்னை குறுக்கிக் கொண்டு அமர அவளை கண்டவன் ஏய் இங்கே என்னை பாரு நேத்துல இருந்து என்னோட அடிமை நீ.. நான் சொல்றதை தான் நீ கேட்கணும் நீ சொன்னியே அது என்ன ஆன் ராட்சசன் ஹிம்ம் ஆமா நான் ராட்சசன் தான்..
அப்புறம் உங்க வீட்டுல இந்நேரம் நீ காணாம போயிட்டதா நியுஸ் போயிருக்கும்..எல்லாரும் உன்னை தேடிட்டு இருப்பாங்க. உன்னை எங்கு தேடினாலும் நீ கிடைக்க மாட்ட.
ஏன்னா நீ இந்த வர்மதேவனோட கோட்டையில் இருக்கிற வரைக்கும் எந்த கொம்பனாலையும் உன்னை கண்டு பிடிக்க முடியாது.
அப்புறம் இந்த மாதிரி ஓடுற வேலையெல்லாம் இனி பார்க்காத அப்படி இன்னொரு முறை நடந்தால் காலை ஒடிச்சிடுவேன் அப்புறம் நடக்கவே முடியாது என்றவன் தன் டைகரிடம் திரும்பியவன் டைகர் வாட்ச் ஹெர் ஆல்வேஸ் என்றவன் அவள் முகம் போன போக்கை பார்த்து கோணலாக சிரித்தான்.
ஏன் இப்படி பண்றீங்க சார் ப்ளீஸ் என்னை விட்டுடுங்க என்று கெஞ்ச ஏன்னா உன்னை எனக்கு பிடிக்கல நீ ஒரு பணப்பேய் என்று பாதி மட்டும் கூறி பாதியை முழுங்கினான்.
சார் எங்க அண்ணா பாவம் என்னை தேடுவான் என்னை விடுங்க ப்ளீஸ் என்று கதற ஐ டோன்ட் கேர் என்றவன் தன் தலையில் ஏற்பட்ட காயத்திற்கு மருந்து போட ஆரம்பித்தான்.
அழுது கொண்டிருந்தவள் எங்க மாமா போலீஸா இருக்கு உன்னை கண்டு பிடிச்சு சுடுவாங்க பாரு நான் அதை பார்த்து சிரிப்பேன் என்று ஒரு வித வெறுப்போடு கூற ஹாஹா உங்க மாமன் தமிழ்நாட்டு போலீஸ் மா நீ இன்னும் தமிழ்நாட்டில் இருக்கன்னு நினைப்பா உனக்கு.
நீ இருக்குறது ஆந்திரா டி இந்த வர்மதேவனோட கோட்டை என்று அந்த அறை அதிர சிரித்தவன் இனி என்கிட்ட இருந்து நீ தப்பிக்கவே முடியாது.. நீ என்னோட அடிமை டி என்றவனுக்கு அப்போது தெரியவில்லை அவனையே அவளுக்கு அடிமை சாசனம் எழுதி தரப்போவதை.
காதலில் அனைத்தும் சாத்தியம் தானே.
.
என்ன மக்காஸ் நான் சொல்வது சரி தானே..
0 Comments