தேவநிலா - 7:
அவனை பூ ஜாடியால் அடித்து விட்டு ஒரே ஓட்டம் பிடித்தவள் தான் அவன் என்ன ஆனான் என்று கூட பார்க்கவில்லை.. தன் மானம் தான் முக்கியம் என்று நினைத்தவள் எங்கும் நிற்கவே இல்லை.
(பாருடா நம்ம தேனு உசைன் போல்ட்டையே மிஞ்சிடுவா போலையே)
வேகமாக ஓடி வந்தவள் கொஞ்சம் மக்கள் நடமாடும் இடம் வந்ததும் மெதுவாக நடக்க ஆரம்பித்தாள். ஆனாலும் அவளுக்கு ஏற்பட்ட படப்படப்பு இன்னும் குறையவே இல்லை.
ரோட்டில் போகும் பேருந்துகளை பார்க்க அனைத்தும் வித்தியாசமாக இருந்தது.. பேருந்தின் நிறம் வேறு ஏன் பேருந்துகளின் அமைப்பே மாறியிருந்தது.. இதில் ஊர் பெயரைப் பார்க்க சில எழுத்துக்கள் நம் தமிழ் எழுத்தை தலைக்கீழ் போட்டது போலவும் இன்னும் சிலது ஜிலேபி போலவும் முருக்கு பிழிந்து விட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.
என்ன எல்லாம மாறியிருக்கு நாம தலைதெறிக்க ஓடி வந்ததுல ஏதாவது மண்டை குழம்பிடுச்சா அதனால தான் எல்லாம் வேற மாதிரி தெரியுதோ என்று யோசித்தவள் தலையை உளுக்கிக் கொண்டு மறுபடியும் பார்க்க அப்படியே தான் தெரிந்தது.
சரி நம்ம கண்ணுல தான் கோளாரோ சரி ஊருக்கு போய் தான் சரி பண்ணனும்.. இப்போ பஸ்ல ஏறனும்னா கூட நம்மகிட்ட காசு சுத்தமா இல்லையே இப்போ என்ன பண்றது.
சரி வரப்போற வண்டியில யார்கிட்டையாவது லிப்ட் கேப்போம். ஐயோ யாரும் வண்டியை நிறுத்தலன்னா என்ன பண்றது.. என்று புலம்பியவள் வண்டியை நிறுத்தி ஏத்திக்கனும் கடவுளே எவன் ஏத்துரானோ அவனுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் பண்ணுறேன்.
(அவன் உனக்கு சமாதி கட்டாம இருந்தா சரி தான்..)
இரண்டு மூன்று வாகனங்கள் இவள் கை காட்டியும் நிற்காமல் கடந்து செல்ல அச்சோ கடவுளே சீக்கிரம் நான் ஊருக்கு போகணும் ஏதாவது ஒரு வண்டில ஏறி உட்கார்ந்தா தான் நிம்மதியா இருக்கும்..
( ஏறி உட்கார்ந்ததும் நெஞ்ச வலியில் மேல போகாம இருந்தா சரிதான்)
வேறு ஏதாவது வண்டி வருகிறதா என்று ரோட்டை பார்த்தாள்.
சிறிது நேரத்தில் ஒரு கார் வரவும் அப்பாடி ஒரு கார் வருது கடவுளே உனக்கு கோடி கும்பிடு போடுறேன் எப்படியாவது இந்த வண்டியாச்சும் நிற்கணும் என்று வேண்ட அவள் கையைக் காட்டாமலே வண்டி நின்றது.
இருந்த பதட்டத்தில் அதனை கவனிக்காமல பட்டென் கதவை திறந்து ஏறியவள் பக்கத்தில் அமர்ந்திருந்தவனை திரும்பியும் பாராமல் நன்றி தெரிவித்தவள் தன் நெஞ்சில் கை வைத்து தன்னை ஆசுவாசப்படுத்திக கொண்டே இருக்கையில் சாய்ந்தாள்.
தன்னை கடத்தி வைத்திருக்கிறான் என்று கூறியதுமே அதிர்ந்தவள் அவன் தன்னை எதற்காக கடத்தினான் என்று கூறியதும் வெடவெடத்துப் போனாள்.
யாருக்கிட்ட மும்பையில விற்கப் போறானாமில்ல அவன் ஆளையும் தலையும் பாரு எருமை காட்டான்.. ச்சே இப்படி கூடவா இருப்பாங்க மனசாட்சியே இல்லாம நாக்கு கூசாம விற்கப் போறேன்ன அதும் என்கிட்டையே சொல்றான் எவ்வளவு தைரியம் இருக்கணும் அதான் போட்டேன்ல ஒரு போடு என்று அவனிடமிருந்து தப்பித்து விட்ட நிம்மதியில் வாய்விட்டே கூற யாரை போட்டீங்க என்ற குரல் கேட்கவும் அவள் அதிர்த முகத்திலேயே தெரிந்தது அவள் அவனைக் கண்டு கொண்டாள் யார் என்று…
ஓடும் காரில் இருந்து இறங்க போகிறோம் என்ற பயம் கூட இல்லாமல் இவனிடமிருந்து தப்பித்தே ஆக வேண்டும் என்ற ஒரு எண்ணத்தை மட்டும் மனதில் கொண்டு கதவை திறக்கப் பார்க்க பாவம் அவள் அறியவில்லை அவள் ஏறியதுமே அவன் சென்ட்ரல் லாக் போட்டதை.
கதவை திறக்க முயன்றவள் அது முடியாமல் போகவும் அவனை பயத்துடன் திரும்பிப் பார்த்தாள்.
அவனை பார்க்கவே அத்தனை பயமாக இருந்தது. அவள் பூஜாடியால் அடித்ததில் அவன் மண்டை உடைந்து இரத்தம் வந்திருக்க அதை கூட துடைக்காமல் அவளை பிடிக்க வந்திருப்பான் போலும்.
இவள் வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் போச்சி ராட்சசன் கிட்ட இப்படி வந்து மாட்டிக்கிட்டோமே ஐயோ கடவுளே இப்படி உன்னை நம்பின என்னை நடு ரோட்டுல காருக்குள்ள அதும் இந்த அரக்கனோட தன்னந்தனியா தவிக்க விட்டுட்டியே நீ எல்லாம் நல்லா இருப்பியா என்று ஒரே புலம்பாக புலம்ப, விட்டான் செவிட்டிலேயே ஒரு அரை அவ்வளவு தான் அந்த ஒரு அடியே தாங்காமல் மயங்கி விட்டாள்.
எவ்வளவு தைரியம் டி உனக்கு என்னையே அடிச்சிட்டு ஓடி வரியா இரு உனக்கு சரியான பாடம் புகட்டுறேன் அப்போ தான் இந்த வர்மன் யாருன்னு உனக்கு தெரியும் என்று மயங்கி சரிந்திரந்தவளிடம் பேசியவன் வேகம் எடுத்தான் தன் இருப்பிடத்தை நோக்கி.
தன் இடம் வந்து சேர்ந்ததும் வண்டியை அதன் இடத்தில் நிறுத்தியவன் இவளை வந்து தூக்க அவன் கையில் கடித்து விட்டு ஓட பார்க்க அவளை தன்னுடன் அணைத்துப் பிடித்தவன் டைகர் என்று குரல் கொடுக்க அவன் உயரத்தில் பாதி உயரம் இருந்த நாய் அவனுடைய செல்லப் பிராணி அவனுக்கு மட்டும் தான் செல்லப் பிராணி மற்றவர்களுக்கு என்றும் அது டைகர் தான்.
டைகர் தன்னருகில் வந்ததும் நிலாவை அணைத்து பிடித்திருந்தவன் பொத்தென்று கீழே போட இதை எதிர்ப்பாராதவள் அப்படியே கீழே விழவும் டைகரிடம் அவன் கேட்ச் ஹெர் என்று கூற இவளிடம் டைகர் தன் கோரப்பற்களைக் காட்டியவாறு நெருங்கியது.
அதனுடைய பற்களைக் கண்டு பயந்தவள் ஓட அதுவும் உன்ன விட மாட்டேன் என்பது போல் அவளைத் துரத்த அங்கு முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் காட்டாமல் இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் மேல் வேறு வழி இல்லாமல் தொத்திக்கொண்டாள்.
ச்சூ போ இங்கிருந்து என்று அவன் மேல் தொத்தியவாரே அதனை விரட்டப் பார்க்க அதுவோ உன்னை ஒரு கடியாவது கடித்தால் தான் என் மனது ஆறும் என்பது போல் அவளை பார்த்து உர் உர் என்று உறுமிக் கொண்டே இருந்தது.
அவளுக்கு இருந்த பயத்தில் அவன் கழுத்தைக கட்டிக் கொண்டு சார் சார் எனக்கு பயமாருக்கு ப்ளீஸ் சார் என்னை காப்பாத்துங்க சார் உங்களை விட இது என்னை ரொம்ப பயம் காட்டுது சார் என்று கெஞ்ச அவன் முறைத்த முறைப்பில் வாயை மூடிக் கொண்டாள்.
பயமா இருக்குன்னு சொன்னது ஒரு தப்பா அதுக்கு எதுக்கு இப்ப முறைக்கிறான் பனங்கொட்டத் தலையா..
ஐயோ இந்த ரெண்டு நாயிக்கிட்டையும் நான் படுற பாடு இருக்கே கடவுளே உனக்கு கண்ணில்லையா.. என்று புலம்பியவள் உனக்கு கண்டிப்பா கண் இல்லை அதான் நான் அவஸ்தை படுறதை பார்த்துட்டு இருக்க.. ஐயோ என்று தலையில் அடித்துக் கொண்டவள் சார் சார் ப்ளீஸ் சார் என்னை விட்டுடுங்க சார்..
நான் பச்சை பிள்ளை சார்..
நீ பச்சை பிள்ளையா இல்லை சிவப்பு பிள்ளையான்னு வா தோலை உறிச்சி பார்த்து
டலாம் என்று அவளை தூக்கிக் கொண்டே வீட்டின் உள்ளே சென்றான்.
0 Comments