Advertisement

Ad code

Devan-6



 தேவநிலா - 6:


நிலா நீ எவ்வளவு அழகு தெரியுமா.. உன்னை இத்தனை நாளா நான் ஏன் பார்க்காமல் இருந்தேன்.. உன்னை போல் ஒரு அன்பான பெண்ணை யாராவது வேண்டாமென்று சொல்வார்களா ஐ லவ் யூ நிலா என்று அவன் தன் காதலை அவளிடம் கூற அவள் வெட்கப்பட்டுக் கொண்டே அவன் கைகளைப் பிடிக்க வர "ஏய் பொண்ணே இந்தா எழுந்திரு உன்னை ஐயா அழைச்சிட்டு வர சொன்னாங்க" என்று ஒரு வயதான பாட்டி ஒருவர் அவள் கையை பிடித்து உளுக்கி அழைத்து விட்டு போக அடித்து பிடித்து எழுந்தவளுக்கு அப்பொழுதுதான் தெரிந்தது தான் கண்டது கனவென்று..


படுக்கையில் இருந்து எழுந்தவள் சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரத்தை பார்க்க ஐயோ ஒன்பது மணி வரைக்குமா தூங்கினோம்.. எப்படி இவ்வளவு நேரம் தூங்கினோம் நேத்து நைட் அந்த சார் அழைச்சிட்டுப் போனாரே அதுக்கப்புறம் என்ன நடந்துச்சுன்னு தெரியலையே என்று யோசித்தவளுக்கு தலை தான் வலித்தது.


தட்டுத்தடுமாறி எழுந்தவள் முகத்தை கழுவி விட்டு தன் தாவணியால் முகத்தைத் துடைத்துக் கொண்டே வெளியே வர என்ன அம்மணிக்கு இப்போதான் விடிஞ்சதா ஒன் மகாராணியை ஆள் விட்டு எழுப்பினா தான் தூக்கம் கலையுமோ என்ற குரல் அந்த வீடே அதிரும் படி கேட்க அவன் குரலில் பயந்தவள் ஐயோ இல்லை சார் நான் எப்பொழுதும் சீக்கிரம் எழுந்துடுவேன் இன்னைக்கு என்னன்னு தெரியலை அதிக நேர தூங்கிட்டேன் என்று கூற ப்ச் நிறுத்து உன் பேச்சை கேட்க எனக்கு நேரம் இல்லை போய் உனக்கு கொடுக்கிற வேலையை செய் என்று விட்டு நகரப் போனவனை சார் சார் என்று அவனருகில் ஓடியவள் அவன் கையைப் பிடித்து சார் அந்த பெரிய சார் எங்க அவர்கிட்ட நான் படம் நடிக்க கேட்டிருந்தேன்..


அவரும் கண்டிப்பாக தரேன்னு சொன்னாரு சார் அவர் எங்க சார் என்று அவனிடம் பயமில்லாமல் கேள்வி கேட்க அவள் தன் கையை பிடித்திருப்பதைப் பார்த்தவன் ஒஹ் உனக்கு சினிமாவில் நடிக்கணும்னு ரொம்ப ஆசையோ என்று எகத்தாளமாக கேட்டவன் அவள் கையை உதறிவிட்டு நீ படமெல்லாம் நடிக்க போறது கிடையாது..


போ போய் பத்து பாத்திரம் தேய்ச்சிட்டு சம்பளம் வாங்கிக்க என்று கூற சார் நான் அந்த பெரிய சாரை பார்க்கணும் நீல் என்னை துப்பா புரிஞ்சிட்டு இருக்கீங்க என் அவள் பாட்டுக்குக் கூற அவள் கன்னத்தில் பளாரென அறைந்தவன் ஏய் சொன்னதை செய் சும்மா வளவளன்னு பேசிட்டுருந்தன்னு தெரிஞ்சுது வெட்டிப் போட்டுடுவேன் போ போய் வேலையைப் பாரு நடிக்க வந்துட்டா பையை தூக்கிக்கிட்டு எல்லாம் பணம் படுத்தும் பாடு என்று கர்ஜித்தவன் தன் வேலையைப் பார்க்க வெளியே சென்று விட்டான்.


எவ்வளவு நேரம் அவன் அடித் கன்னத்தைப் பிடித்தப்படி நின்றிருந்தாளோ அந்த முதியவர் வந்து அவளை அழைக்கும் வரை அப்படிே அழுது கொண்டே நின்றிருந்தாள்.


யம்மா பொண்ணு வா வந்து சாப்பிடு என்கவும் இல்லை எனக்கு வேண்டாம் என்று அவரிடம் மறுத்தவள் தான் இருந் அறைக்கு சென்று தான் கொண்டு வந்த பையைப் பார்க்க அங்கு எந்த ஒரு பையும் இல்லை..


எங்க வச்சேன் பையை காணும் நைட் நான் எப்படி இங்க வந்தேன் நான் இங்க வந்தது போல கூட நினைப்பு இல்லையே என்று யோசிக்க யாரோ தன்னை தூக்கி வந்து மெத்தையில் போட்டு விட்டு சென்றது மங்கலாக நினைவு வந்தது..


யாரா இருக்கும் இப்போ என்னை அடிச்சிட்டு முரட்டு பீசா இருக்குமோ அவனா தான் இருக்கும் முதல்ல படத்துல நடிச்சிட்டு பணம் வந்த பிறகு உன்ன என்ன பண்றேன்னு பாரு என் பயில்வான் வச்சு உன்னை அடிச்சு தோலை உறிச்சி தொங்க போடுறேன் என்று தனக்குள் பேசியவள் மீண்டும் ச்சே நான் என்ன கேட்டேன்னு இப்படி அடிச்சான்னு தெரியலை இரு எங்க அண்ணாகிட்டையும் வெற்றி மாமாட்டையும் சொல்றேன் அப்புறம் உனக்கு இருக்கு என்று விசும்பியவள் அப்படியே தூங்கிப்போனாள்.


இங்கு வெளியே வேலையாக சென்று விட்டு வந்தவன் ராணிம்மா அவ சாப்பிட்டாளா என்று கேட்க இல்ல தம்பி வேணாமுன்னு சொல்லிட்டுப் போய் படுத்துக்கிச்சு என்கவும் சரி நான் சொல்லும் போது சாப்பாடு கொடுத்து அனுப்புங்க என்றவன் அவளிருந்த அறைக்கு வேகமாக சென்றான்.


கதவை திறந்து கொண்டு வந்தவை பார்த்ததென்னவோ மெத்தையில் தன்னை குறுக்கிக் கொண்டு தூக்கத்தில் ஏதோ முனகிக் கொண்டு இருந்தவளைத்தான்..


அவள் அப்படி என்னத்தான் சொல்கிறாள் வாங்க கேட்போம்..


அண்ணா இந்த ராட்சசன் என்னை கன்னத்துல அடிச்சிட்டான் தெரியுமா எனக்கு வலிக்குது நீ வா வந்து இந்த டப்பா தலையன அடி மாமாவையும் கூட்டிட்டு வா அப்போதான் அவன் இனிமே இப்படி அடிக்க மாட்டான்.. என்று தூக்கத்தில் உளறிக் கொண்டிருந்தாள்.


பாவம் அவளுக்கு தெரியவில்லை அவள் உளருவதை அந்த ராட்சசன் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்று.


ஏய் எழுந்திரு என்று அவளை உலுக்க படக்கென்று கண்களைத் திறந்தவள் அவனை அத்தனை அருகில் கண்டதும் அதிர்ந்தவள் ராட்சசன் நகரு உன்ன பார்க்கவே எனக்கு பிடிக்கலை என்னை விடு அந்த சார் எங்க இல்லைன்னா என்னை மணி அண்ணாட்ட கொண்டு விடு என்று அழ ஆரம்பிக்க 


ஒஹ் என்னை உனக்கு பிடிக்கலையா என்று கேள்வியாக கேட்க


ம்ம் நீ என்னை அடிக்கிற பயமா இருக்கு போ


ஒஹ் அப்போ அவனுங்கள மாதிரி தடவுனா உனக்கு பிடிக்குமோ என்று அவள் பட்டு உதட்டை கைகள் கொண்டு வருட ச்சீ தள்ளி போ நான் இங்கிருந்து போகணும் என்னை விடு என்று கத்த ஆரம்பித்து விட்டாள்.


அவள் கத்தவும் ஏய் வாயை மூடுடி உன்னை கொண்டு போய் விடுவதற்கா உன்னை அவ்வளவு பாடுபட்டு கடத்திட்டு வந்தேன் 


என்னாது கடத்திட்டு வந்தியா?


ஹிம்ம் ஆமா அதுக்கென்ன இப்போ.. உன்னை கடத்திட்டு வந்தது எதுக்குன்னு நினைக்குற உன்னை மும்பைல விற்க தான்..


அவள் அவனை அதிர்ந்து நோக்கவும் அவளைத் திருப்தியாக பார்த்தவன் மீண்டும் தொடர்ந்தான்.


 நீ ரொம்ப அழகா இல்லைன்னாலும் கொஞ்சம் சுமாரா இருக்க இல்லையா அதனால கொஞ்ச ரேட்டு அதிகமாத்தான் போக வாய்ப்பு இருக்கு அதான் உன்னை தூக்கிட்டேன் என்று கூற எங்கிருந்துதான் அப்படி ஒரு கோபம் வந்ததோ பக்கத்தில் இருந்த பூ ஜாடியை எடுத்து அவன் மண்டையில் அடித்தவள் அங்கிருந்து எப்படியாவது தப்பிக்க ஓட்டம் பிடித்தாள்.


அவன் சுதாரிப்பதற்கு முன் 

அத்தனையும் நடந்து முடிந்திருந்தது..


தொடரும்...

Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments