Advertisement

Ad code

தேவன் -5

 


தேவநிலா - 5:


நான்கு வருடங்களுக்கு முன்பு…


பதினெட்டு வயது பருவ மங்கையாக பால் வண்ண நிறத்தில் பார்ப்பவரை சுண்டி இழுக்கும் அழகில் தன் அன்னை பேச்சை கேட்டு யாரென்றே தெரியாத ஒரு நபருடன் தன் ஊரிலிருந்து புறப்பட்டு சென்னை வந்திருந்தாள் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு.


பங்கஜம் தன் மகளின் ஆசையை உணர்ந்து தனக்கு அதை பயன்படுத்திக் கொள்ள நினைத்து சினிமாவில் நடித்தால் மிக அதிகமாக சம்பளம் கிடைக்கும் அதன் பிறகு நாம் இப்படி கஷ்டப்படத் தேவையில்லை என்று அவள் மனதை கரைத்தார்.


தன் தாயின் பேச்சை நம்பியவள் அவள் காட்டிய நபருடன் இப்போது சென்னையும் வந்து சேர்ந்து விட்டாள்.


சூர்யா இருந்திருந்தாலாவது அவளுக்கு விவரத்தை சொல்லி அவன தடுத்திருப்பான் அவன் தன் கல்லூரி படிப்பை திருச்சியில் ஹாஸ்டலில் தங்கி பகுதி நேரம் வேலைக்கு சென்று படித்துக் கொண்டிருந்தான்.


பாவம் அவனுக்கு தெரியவில்லை தன் தாய் இந்த அளவுக்கு துணிவார் என்று..


நிலாவை அழைத்து வந்த மணி என்பவன் லைட்டிங் மேனாக பணிபுரிபவன்.. அவனுக்கு எப்பொழுதும் நிலாவின் மேல் ஒரு கண் அவன் எப்பொழுது ஊருக்கு வந்தாலும் நிலாவை பார்க்காமல் செல்ல மாட்டான்.


அவன் அது போல இந்த முறை ஊருக்கு வரும பொழுது நிலாவும் பங்கஜமும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டு விட்டு குட்டி வசமா மாட்டிக்கிச்சு என்று நினைத்தவன் பங்கஜத்திடம் சென்று அக்கா நிலாவை நடிக்க அனுப்பலாமே அவ இருக்கிற அழகுக்கு பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும் என்று ஆசையை வளர்த்தான்.


ஏற்கனவே பணத்தாசை பிடித்தவர் சிறு பொரியாக இருந்த நெருப்பை ஊதி பெருசாக்கி விட்டான். ஆசை யாரை விட்டது.


பணம் எவ்வளவு தம்பி கிடைக்கும் என்று இவர் அவனுக்கு தூண்டில் போட நினைக்க அவன் அவளுக்கு மேலல்லவா சிறு மீனை போட்டு பெரிய மீனை பிடித்தே விட்டான்.


ஆமாக்கா நிறைய கிடைக்கும் உன் பேங்க் அக்கவுண்ட் நம்பரை கொடு எங்க டைரக்டர்ட்ட பேசி பணம் அனுப்பி விட சொல்றேன் என்று கூற சரி சரி இந்தா பேங்க் புக் என்று அவர் பாஸ் புக்கை எடுத்து வந்து நீட்ட குறித்து கொண்டவன் சரிக்கா நீ நிலாக்கிட்ட பேசு நான் இன்னும் ஒரு வாரம் இங்க தான் இருப்பேன்..


உங்களுக்கு சரின்னா என் கூட அனுப்புங்க என்று விட்டு தன் வீட்டிற்கு சென்று விட்டான்.


அதிலிருந்து அந்த ஒரு வாரமும் நிலாவிடம் நீ நடிக்க போன நம்ம குடும்பம் நல்ல நிலைமைக்கு வந்துடும் அதன்பிறகு எல்லாரும் ஜாலியா இருக்கும் அது இது என்று அச்சிறு பெண்ணின் மனதில் தன் ஆசைக்காக ஆசையை வளர்த்தார்.


ஆனால் அது அவ்வளவு எளிதல்ல என்று அவளுக்கு தெரியவில்லை தன் தாய் சொல்லை கேட்டு அப்போ நாம நடிக்க போயிட்டா அண்ணாவும் நல்லா படிப்பாங்க அவங்க வேலைக் போக தேவையில்லை தம்பி தங்கச்சி எல்லாம் பெரிய ஸ்கூலில் படிக்க வைக்கலாம் என்று கனவு கோட்டை கட்டியவள் தன் தாயிடம் தன் சம்மதத்தை தெரிவித்தாள்.


ஆனால் அவள் வாழ்க்கை பயணம் அடியோடு மாறப் போவதை அவள் அப்போது உணரவில்லை.


***

பங்கஜத்திடம் பேசிவிட்டு வந்த மணி என்ன இந்த பொம்பளை பணமுன்னு சொன்னதுதான் போதும் உடனே பல்லை காட்டிட்டு அனுப்பி வைக்கிறேன்னு சொல்றா..


ஆஹா இப்போ பணம் கொஞ்சம் இருந்து சசுன்னா அவளுக்கு அனுப் விட்டுட்டு பொண்ணை லவுட்டிட்டு போயிடலாம் என்று யோசித்தவன் அவன் நண்பன் ரமேஷின் நியாபகம் வரவே அவனுக்கு அழைத்தான்.


என்ன மச்சி இந்த நேரத்துல போன் போடுற என்ன விஷயம் என்று கேட்கவும் மச்சி எனக் அவசரமா ஒரு பத்தாயிரம் வேணும் என்று ஏன் எதுக்கென்று போட்டு துருவ ஒரு பச்சி மாட்டிருக்கு டா


அதான் வேணும் என்கவும் மச்சி பொண்ணு எப்படிடா என்கவும் மச்சி பிரஷ் பீசுடா பதினெட்டு வயசுதான் பார்க்க தளதளன்னு தக்காளி பழம் போல இருப்பா சுண்டுனா இரத்தம் வரும் பார்த்துக்கோயேன் என்று நிலாவை வர்ணிக்க சரிடா மச்சி இப்போவே அனுப்பி விடுறேன் ஆனால் எனக்கும் பங்கு வேணும் என்று கூற உனக்கில்லாததா மச்சி நாம வச்சி செஞ்சிட்டு மும்பை வியாபாரிட்ட வித்துடலாம் செம ரேட்டு போவா என்று கீழ்த்தரமாக பேசியவர்கள் ஒரு சின்னஞ்சிறு மொட்டை கசக்க அந்த காமவெறியர்கள் ஆயத்தமாயினர்.


அடுத்த நாளே பங்கஜத்தின் அக்கவுண்டில் பணம் வர பங்கஜம் குத்தாட்டம் போடாத குறை தான்..


சென்னைக்கு மணி கிளம்ப அவனுடன் தன் மகளை அனுப் வைத்தவர் பார்த்து பத்திரமாக இருக்கவும் சொல்லவில்லை பசிக்கு சாப்பிடவும் சொல்லவில்லை.. நிலாவிடம் அங்கே போய் நிறைய சம்பாரிச்சு அம்மா அக்கவுண்ட்க்கு பணம் அனுப்பு என்று கூறி வழி அனுப்பி வைத்தார்..


இப்படியும் ஒரு தாய்..


****

மணி நிலாவுடன் சென்னை வந்து இறங்கியதும் நிலா அங்குள்ள மக்களை அதிசயமாக பார்த்தாள். காலை நேரத்தில் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருப்பதை சுவாரஸ்யமாக பார்த்தாள்.


அப்பொழுது மூக்கு வேர்த்தது போல் மணி வேலை செய்யும் டைரக்டர் போன் போட்டு அழைக்க ஐயோ இந்த ஆளு வேற எப்போ பார்த்தாலும் நொய் நொய்யின்னு போன் போட்டு தொந்தரவு பண்ணிட்டே இருப்பான் என்று புலம்பியவன் அவர் அழைப்பை ஏற்றான்.


ஹலோ சொல்லுங்க சார்..


மணி இன்னைக்கு ஷூட்டிங் இருக்கு வந்துடு ஊருல இருந்து வந்துட்ட தானே என்று கேட்டார்.


ஆமாம் சார் இப்போ தான் வந்தேன் என்கவும் சரி அப்படியே ஸ்டியோக்கு வந்துடு என்று விட்டு வைத்து விட்டார்.


இவன் ஒருத்தன் கொடுக்கிறது ஆயிரம் இதுக்கு காலையிலேயே கூப்பிடுவான் என்று முணுமுணுத்தவன் நிலாவையும்

தன்னுடன் அழைத்து சென்றான்.


அங்கு நிலாவை அந்த டைரக்டர் பார்த்ததும் யாரு இந்த பொண்ணு என்று மணியிடம் விசாரித்தவர் அவனை தனியே அழைத்து சென்றார்.


நிலா அங்கு இருந்த கேமராக்கள் அனைத்தையும் பார்வையிட்டவள் ஒஹ் இதுல தான் படம் எடுப்பாங்களா என்று நினைத்து அதனை தொட சென்றாள்.


ஏய் பொண்ணு அதெல்லாம் தொடக் கூடாது நீ யாரு புதுசா இருக்க இங்கெல்லாம் இருக்கக் கூடாது கிளம்பு கிளம் என்று அவர் விரட்ட நான் மணி அண்ணன் கூட வந்தேன் க்கா படத்துல நடிக்க போறேன் நடிச்சு நிறைய பணம் சம்பாதிக்க போறேன் என்று கூற அங்கிருந்த ஒருவன் அவளை திரும்பி பார்த்தான்.


அவள் கூறியதை கேட்டவன் வாயில் எதையோ முனகிக் கொண்டான்.


இது என்ன லூசு போல உளறுது என்று நினைத்தவர் சரி எதையும் தொடாம வேடிக்க பாரு என்று விட்டு தன் வேலையை பார்க்க சென்று விட்டார்.


ச்சீ எல்லா பொண்ணுங்களும் இப்படிதான் போல் பணம் என்றார் பிணம் கூட வாயை திறக்குமாம் இவள் விஷயத்துல கரெக்ட்டா இருக்கு என்று வெறுப்பாக கூறியவனின் கண்கள் நிலாவை வெறித்து பார்த்தது.. 


***

இங்கு மணியை அழைத்து வந்த இயக்குநர் தம்பி அந்த பொண்ணு சூப்பரா இருக்கு.. தயாரிப்பாளர் உன்னை கேட்க சொன்னார் உனக்கு எவ்வளவு வேணாலும் பணம் தரேன்னு சொன்னார்.


அந்த பெண்ணை நீ கண்டுக்காமல் விட்டுடு எப்படியாவது பேசி இன்னைக்கு இரவு நேரம் வரை இங்கு இருக்க வச்சிடு அதுக்கப்புறம் நாங்க பார்த்துக்கிறோம் என்று பேசிக்கொண்டிருக்க மணி பணமா நிலாவா என்று யோசித்தவன் பணம் பக்கம் தான் சாய்ந்தான்.


கொஞ்ச நேரம் சம்மதிக்காத மாதிரி நடி மணி அப்போதான் கொஞ்சம் மேல போட்டுக் கொடுப்பாங்க என்று நினைத்தவன் ஏதோ இயக்குநரிடம் கூற வர யாரோ கதவை திறந்து கொண்டு வர பார்த்தால் தயாரிப்பாளரும் ஒரு ஆடவனும் வந்தனர்.


ஆதி சார் இவர் தான் இப்போ இயக்க போற படத்தோட இயக்குநர் என்று அறிமுகப்படுத்தி வைக்க கையைக் குளுக்கி கொள்ள ஆதி மணியை கேள்வியாகப் பார்த்தான்.


நேத்து வரைக்கும் இங்க வேலை செய்த லைட் மேன் ஆனால் இனி கோடீஸ்வரன் என்று ஒரு கோடி ரூபாய் எழுதியிருந்த செக்கை மணியின் கையில் கொடுக்க காலில் விழுந்திருந்தான்..


அவனை பிடித்து எழுப்பி விட்டவர்கள் காலில் எல்லாம் விழ வேண்டாம் மணி சொன்னத முடிச்சி கொடுத்துடு என்று கோணலாக சிரித்தார்.


சரிங்க சார் பண்ணிடலாம் சார் என்றவன் வெளியில் சென்று விட்டான்.


அவன் சென்றதும் அந்த தயாரிப்பாளர் ஆதி சார் புது பீசு ஒன்னு மாட்டிருக்கு பாக்குறீங்களா என்று கேட்க ஐயோ சார் அவருக்கு அந்த பழக்கம் எல்லாம் கிடையாது என்று இயக்குநர் கூறினார்.


சரி சார் நான் வந்த வேலை முடிஞ்சுது என்றவன் கிளம் விட்டான்.


அவன் சென்றதும் இயக்குநரும் தயாரிப்பாளரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.


இந்த சிரிப்பின் பின் எத்தனை பெண்களின் வாழ்க்கை இருக்கிறதோ.. அந்த கடவுளுக்குத்தான் வெளிச்சம்.


***


வெளியில் வந்த மணி சந்தோஷமாக இப்படி ஒரு லாட்டரி அடிக்கும்னு நான் நினைக்கவே இல்லையே என்று நினைத்தவன் நிலாவிடம் வந்து என் அதிர்ஷ்ட தேவதை நீ தான் நிலா என்றவன் இங்கேயே இரு எனக்கு வெளியில் கொஞ்சம் வேலை இருக்கு..


நான் போயிட்டு வந்துடுறேன் என்று அவள் பதிலை கூட கேட்காமல் சென்று விட்டான்.


ஐயோ இந்த அண்ணா வேற எங்க போறாங்கன்னு தெரியலை இப்படி தனியா விட்டுட்டு போறாங்க எனக்கு பயமா வேற இருக்கு என்று தான் கொண்டு வந்த பையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.


அன்று இரவே நிலா கடத்தப்பட்டாள்.


அதே நேரம் அந்த தயாரிப்பாளரும் இயக்குநரும் காரில் செல்லும் போது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர்.


மணி மீது போதை பொருள் கடத்

தியாக சொல்லி போலீஸ் கைது செய்திருந்தனர்.


நிலாவை கடத்தியது யார்?


நடந்தது விபத்தா? அல்லது கொலையா?


தொடரும்… 

Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments