தேவநிலா - 4:
ஹனி இந்த புடவையில ஏதோ பண்ணுரியே இப்படி ஆளை அசரடிக்குற அளவுக்கு வளர்ந்து நிக்குறியே ஒருவேளை இது தான் சரியான வயசோ நான் தான் கொஞ்சம் அவசரப்பட்டுட்டேனோ..
என்ன தான் இருந்தாலும் நாம ரெண்டு பேரும் லவ் பண்ணலையே.. நீ தானே சொன்ன லவ் இருந்தால் தான் கல்யாணம் செய்ய முடியும்னு.
(அட லூசுப் பயலே அவ எப்ப சொன்னதை அப்போ கோட்ட விட்டுப்புட்டு இப்போ கடைப் புடிக்குது பாரு விளங்கிடும்..)
உனக்கு பிடிச்சவங்களை கல்யாணம் செய்து சந்தோஷமா இரு என்றவனுக்கு தெரியவில்லை இன்று அவன் நினைப்பு தவிடுப்பொடியாகப் போவது.
அப்பொழுதுதான் நிலாவிடம் அத்துமீறுவது கண்டு தன் ஆட்களுடன் வந்தவன் ஏன்டா நாயே உன் புறா தலைக்கு என் ஹனி உனக்கு வேணுமா உன்னை பற்றி தெரிஞ்சும் என் ஹனியை அனுப்பினது என் தப்பு தான் என்று சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு வந்த சுவடே இல்லாமல் சென்று விட்டான்.
இங்கு கொலை கொலை என்று அலறியவர்கள் அங்கும் இங்கும் ஓடி பதுங்க அதில் யாரோ ஒருவர் போலீஸிற்கு அழைப்பு விடுத்திருப்பர் போலும்.. அடுத்து பத்து நிமிடத்தில் போலீஸ் வந்து பார்த்தது இறந்து போன அந்த பெரிய மனிதரின் உடலை தான்..
கிட்டத்தட்ட பதினாறு இடங்களில் வெட்டு விழுந்திருக்க அவர் அணிந்திருந்த உடை முழுவதும் அவரின் இரத்தத்தில் நனைந்து போயிருக்க இடது கை வெட்டப்பட்டு பக்கத்தில் தனியே கிடந்தது.
இதனையெல்லாம் போலீசார் அங்கிருந்தவர்களிடம் இந்த ஷூட்டோட இயக்குநர் நடிகர் நடிகை எல்லாரும் இன்னும் கொஞ்ச நேரத்துல வரணும் என்று உத்தரவிட்டவர் அந்த கட்டடத்தின் கதவை இழுத்து மூட சொன்னார்.
விஷயம் அறிந்து வந்த ராகவ் தன் தந்தை இருக்கும் கோலத்தை கண்டு கதறி அழுதான்.. அவர உடல் முழுதும் வெள்ள துணி போட்டு மூடி வைத்திருக் அவரது இரத்தம் உறைந்து கிடந்தது.
அவர் இழப்பைத் தாங்க முடியாமல் மண்டியிட்டு கதறி அழுதவன் ப்பா உங்க சாவுக்கு காரணமானவனை சும்மா விட மாட்டேன் ப்பா என்று கதறியவனை இன்ஸ்பெக்டர் வந்து தூக்கிவிட்டு சர் எழுந்துறீங்க என்று எழுப்பியவர் கொஞ்சம் விசாரணை பண்ணனும் என் கூட கொஞ்சம் வாங்க என்றவர் தன்னுடன் வந்த சப் இன்ஸ்பெக்டர் சத்யபாமாவை அழைத்தார்.
(இதுதான் பீமுக்கு ஏற்ற பாமோ.?)
சத்யா இங்க இருக்குறவங்களை எல்லாம் விசாரணை முடிச்சிட்டு அனுப்பி விடுங்க என்று விட்டு ராகவுடன் வெளியில் சென்றார்.
சத்யபாமா அனைவரையும் விசாரிக்க அஞ்சு பேரு வந்தாங்க வெட்டிப் போட்டுட்டு போயிட்டாங்க என்று ஒரே பதிலையே தர டைரக்டர் முறை வரவும் அப்போ தான் ஷாட் முடிச்சிட்டு பேசிட்டு இருந்தோம் திடீரென்று எப்படி வந்தாங்கன்னு தெரியல கையில் பெரிய பெரிய கத்தி வச்சிருந்தாங்க..
எல்லாம் பயத்துல அலறி அடிச்சு ஓட இவரை வெட்டி சாச்சிட்டாங்க என்று தனக்கு தெரிந்ததைக் கூறினார்.
ஓகே இந்த செட்டுல சிசிடிவி கேமரா இருக்கா என்று கேட்க இருக்கு மேடம் என்று கூறவும் ஓகே அந்த ஃபூட்டேஜ் எனக்கு ஒரு டிரைவ்ல காப்பி பண்ணி தாங்க..
அதுக்கு முன்னாடி இந்த விளம்பரத்தில் நடிக்க வந்த ஆர்டிஸ்ட்ட கூப்பிடுங்க என்று உத்தரவிட்டவள் அங்கிருந் நாற்காலியில் அமர்ந்துக் கொண்டாள்.
இப்போ கூப்பிட்டு வர சொல்றேன் மேடம் என்ற டைரக்டர் அங்கிருந்த ஒரு பையனை அழைத்து தீக்ஷிதா மேமையும் வருண் சாரையும் அழைச்சிட்டு வா என்றவர் சிசிடிவி ஃபூட்டேஜ் எடுக்க சென்றார்.
அந்த பையன் சென்று அழைக்கவும் வருண் அங்கு வந்தான்.
சார் இப்படி கொஞ்சம் உட்காருங்க உங்ககிட்ட இந்த கொலை சம்மந்தமா விசாரிக்கணும் என்று தனக்கு முன் இருந்த நாற்காலியை காட்டி அமர சொன்னாள்.
என்ன மேம் கேட்கணும் அப்போ தான் ஷூட்டிங் முடிந்தது நான் கேரவனுக்குள் போயிட்டேன் அதுக்கப்புறம் வெளி சத்தம் கேட்கவும் தான் எட்டிப் பார்த்தால் இவர் இரத் வெள்ளத்தில் விழுந்துக் கிடக்கார். எனக்கு இவ்வளவு தான் தெரியும் மேடம் என்று தனக்கு தெரிந்ததை கூறியவன் கண்கள் அங்கு பீமுடன் வந்த நிலாவை ஆர்வமாகப் பார்த்தது.
அவன் பார்வையை உணர்ந்த பீம் டேய் ரப்பர் வாயா இப்போ கையை வச்சதுக்கு உயிரை எடுத்துட்டு போய் இருக்காரு நீ இப்படி பார்த்து திரும்ப வர வச்சுராத என்று உள்ளுக்குள் நினைத்தவன் உன் கண்ணு காக்காவுக்கு கன்பார்ம் என்னு முணுமுணுத்தவன் அவனை முறைத் பார்த்தான்.
வருண் பார்வையை சத்யாவும் உணர்ந்தே இருந்தாள். பின் தொண்டையை கணைத்துக் கொண்டவள் ஓகே சார் நீங்க போகலாம் நான் அவங்க கிட்ட விசாரணை பண்ணனும் என்று சத்யா கூறவும் நிலாவிடம் வந்த வருண் ஹாய் தீக்ஷா இன்னைக்கு நைட் பிரியா நீங்க என்றவன நான் கேட்டதுக்கு இதுவரைக்கும் பதில் சொல்லவே இல்லையே..
எப்போ டேட் போகலாம் என்று கேட்க எந்த ஒரு உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் நாட் இன்டிரஸ்டட் என்று முகத்தில் அடித்தது போல் கூறிவிட்டு சென்று விட்டாள்.
டேட்டிங்கா கூப்பிடுற செத்து சொர்கத்துக்குப் போய் உன் செத்து போன ஆயா கூட போடா டோமர் தலையா என்று சொன்னது வேறு யாருமல்ல சாட்சாத் நம் பீமன் தான்..
வருண் யூ… என்று கத்த பீம் நெஞ்சை நிமிர்த்தி கொண்டு அவனை நெருங்க அவன் உடம்பையும் உயரத்தையும் கண்ட வருண் வந்த வழியே சென்று விட்டான்.
இவை அனைத்தையும் சத்யபாமா பார்த்துக் கொண்டு தான் இருந்தாள்.
நிலா வந்து அமர்ந்ததும் அருகில் பீமனும் நிற்க ஹலோ சார் இவங்ககிட்ட விசாரணை பண்ணனும் நீங்க கொஞ்சம் வெளியே போங்க என்று சத்யா கூற நோ மேடம் அது முடியாது நான் எப்பொழுதும் மேம் கூட இருக்கணும்னு எனக்கு ஆர்டர். அதுதான் என் வேலையும் கூட என்று நெஞ்சை நிமிர்த்தி கொண்டு கூற அவனை ஒரு பார்வை பார்த்தவள் நிலாவிடம் கேள்விகளை கேட்க ஆரம்பித்தாள்.
அவள் கேட்கவும் மேம் அப்போ அங்கே இல்லை அவங்களுக்கு வெளியே நடந்தது எதுவும் தெரியாது கேரவனில் இருந்தாங்க என்று விறைப்பாக கூற ஹலோ மிஸ்டர் நான் உங்கள எதும் கேட்கலை என்று காட்டமாக பதில் கூற பீம் கொஞ்சம் அமைதியா இருங்க என்று நிலா அடக்கினாள் அதன் பிறகு வாயே திறக்கவில்லை.
தடி மாடு மூஞ்சை பாரு முந்திரி கொட்டை என்று மனதிற்குள் அவனுக்கு அர்ச்சனை செய்தாள்.
பின்பு பீமனையும் அபியையும் விசாரணை செய்து விட்டு சிசிடிவி ஃபூட்டேஜ் வாங்க சென்றாள்.
இங்கு பீமன் நிலாவிடம் மேம் கிளம்பலாம் இதுக்கு மேல இங்கு இருக்க வேண்டாம் சேப் இல்ல என்றவன் அபியையும் நிலாவையும் அழைத்துக் கொண்டு கார் நிற்கும் இடத்திற்கு வர ஒருவன் வந்து பீமனிடம் உங்களை சப் இன்ஸ்பெக்டர் வர சொன்னாங்க என்று கூற அதான் விசாரணை எல்லாம் முடிஞ்சிடுச்சு தானே எதுக்கு இப்போ கூப்பிடுறாங்க அதெல்லாம் வர முடியாதுன்னு சொல்லு என்று கூற நிலா பீமா போய் என்னன்னு கேட்டுட்டு வா நாங்க கார்ல இருக்கோம் என்று கூற முடியாது மேம் என்று கூற வர மூச் போடா உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லை என்று அவனை அனுப்பி வைத்தாள்.
அதுவே அவளை கடத்துவதற்கு ஏதுவாக அமைந்து விட்டது.
நிலா காரில் ஏறியதும் அபி மறுபக்க கதவை திறக்க போக எங்கிருந்து தான் அந்த வாகனம் வந்ததோ அவர்கள கார் அருகில் கொண்டு வந்து நிறுத்தி அபியை இரு கரங்கள் காரில் அள்ளிப்போட்டு பறந்து விட்டது.
இதனை எதிர்ப்பார்க்காத நிலா சட்டென்று காரை விட்டு இறங்கினாள்.
(மேடமுக்கு கார் ஓட்ட தெரியாது.. பட் வாயால பிளைட்டே ஓட்டுவாங்க)
சிறிது தூரம் அந்த காரை துரத்த அந்த கார் அவள் கண்ணில இருந்து மறைந்து விட்டது.
கண்ணீர் கண்களை மறைக்க அபிம்மா என்று கத்த அவளருகே ஒரு கார் வந்து நிற்க சார் சார் என் தங்கச்சியை கடத்திட்டு போறாங்க ப்ளீஸ் அந்த காரை பாளோ பண்ணுங்க ப்ளீஸ் என்று கெஞ்ச அந்த டிரைவர் பின் சீட்டை திரும்பி பார்க்க கட்டளை வந்ததும் ஏறுங்க மேடம் என்று கதவை திறந்து விடவும் அவள் இருக்கையில் அமர்ந்து அண்ணா ஒரு வெள்ளை கார் என்று கூறினாள்.
சரிங்க மேடம் என்று காரை எடுக்க தங்கச்சிய கண்டுபிடிக்கிறேன்னு என்கிட்ட வந்து மாட்டிக்கிட்டியே என்ற குரல் பின் சீட்டில் இருந்து வரவும் அதிர்ந்து திரும்பியவள் அப்படியே மயங்கி சரிந்தாள்.
இங்கு பீம் திரும்பி வந்தவன் கார் மட்டும் தனியே நிற்கவும் ஐயோ போச்சு என்று தலையில் அடித்துக் கொண்டவன் தன் பாஸிற்கு அழைத்தான்.
****
அந்த இரவு நேரத்தில் ஆள் அரவமற்ற சாலையில் வருணின் கார் நின்றிருக்க வருணை ஒருவன் இந்த வாய் தானே டேட்டிங்கு கூப்பிட்டுச்சு என்று அவன் வாயிலேயே குத்த முன் பற்கள் நான்கும் உடைந்து இரத்தம் பொலப்பொலவென கொட்டியது.
அபியை
கடத்தியது யார்?
நிலாவை கடத்தியது யார்?
வருணை அடி வெளுத்து வாங்குவது யார்?
தொடரும்…
0 Comments