Advertisement

Ad code

Devan-3



 தேவநிலா - 3:


ஐயா அடுத்த வாரம் நம்ம ஜவுளி கடையோட திறப்பு விழா அதுக்கு சின்னதா ஒரு விளம்பரம் கொடுத்திடலாம் ஐயா நம்ம கடை என்றாலே பிரம்மாண்டம் தான் இதோட இருபத்திரண்டு இடத்துல பிராஞ்சு ஓபன் பண்ணியாச்சு நீங்க எதை தொட்டாலும் பொன்னா பெருகுது ஐயா என்று கொடுக்கும் காசுக்கு மேலேயே கூவினார்.


அடுத்து நகைக்கடை தான் திறக்கணும் நல்ல லாபம் பார்க்கலாம் என்று பேசிக் கொண்டிருந்தனர்.


அப்பொழுது அவரது மகன் வரவும் ராகவ் கண்ணா பூந்தமல்லில அடுத்த வாரம் ஓபன் பண்ண போறோம்ல அந்த ஜவுளி கடைக்கு சின்னதா ஒரு விளம்பரம் பண்ணிடலாம்.


சரிப்பா அப்படியே பண்ணிடலாம் என்று கூறினான்.


ம்ம் இந்த ஹிந்தி நடிகை எல்லாம் வேணாம் நம்ம ஊரு பொண்ணா குடும்ப பாங்காண அழகோடு இருக்கு பொண்ண பார்த்து பேசிடு என்று கூறவும் சரிப்பா என்றவன் சிறிது நேரத்திலேயே வரவு செலவு கணக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தவரிடம் இப்பொழுது இருக்கும் டாப் மூன்று நடிகைகளின் புகைப்படத்தை தன் தந்தையிடம் எடுத்து வந்து காட்டினான்.


இளஞ்சிவப்பு நிறத்தில் பட்டுப்புடவை அணிந்து கையில் தாமரையை வைத்து கொண்டு போஸ் கொடுத்திருந்த தேன்நிலாவை கண்டதும் அவருக்குப் பிடித்து போனது.


எப்பா எவ்வளவு அழகா இருக்கா செதுக்கி வைத்த கோயில் சிற்பம் போல.. இதுவரைக்கும் என் கண்ணில் படவே இல்லையே செம கட்டை பணத்தை கொடுத்து ஒரு நாள் இவக்கூட ஜமாய்ச்சிடலாம். ஏன் ஒருநாள் இனி ஒவ்வொரு நாளும் ஆடித் தீர்க்கலாம்.


பொட்டக் கழுதை காசு கொடுத்தால் எல்லாம் க்யூ கட்டி வருவாள்க என்று கேவலமாக நினைத்தவர் வெளியில் ஏதும் காட்டிக் கொள்ளாமல் இந்த பெண்ணை பேசி முடிச்சிடலாம் ராகவ்..


பணம் அமெளண்ட் எல்லாம் துரை பேசிடுவான் அந்த பொண்ணோட டீட்டெய்ல்ஸ் எல்லாம் துரைக்கிட்ட கொடுத்திடு என்று கூற ஏன் ப்பா எப்பொழுதும் நான் தானே போய் பேசுவேன் இப்போ என்ன புதுசா என்று அவரை சந்தேகமாகப் பார்த்தவன் தன் தந்தையின் பார்வையை உணர்ந்து கொண்டவன் ப்பா நீங்க ஏதாவது தில்லு முல்லு வேலை பண்ணாதீங்க..


நீங்க ஏதாவது செய்ய போய் அந்த பொண்ணு அதுக்கு ஒத்து வராம வெளியே பேரை நாரடிச்சிட்டா அவ்வளவுதான் என் அரசியல் கனவு கந்தலாகிடும் எதா இருந்தாலும் பார்த்து பண்ணுங்க என்று எச்சரிக்கை செய்து விட்டு தேன்நிலாவின் விவரம் அடங்கிய கோப்பை அவர் கையில் திணித்து விட்டு சென்றான்.


அந்த கோப்பை வாங்கி பார்த்தவர் அதில் தீக்ஷா என்று இருக்கவும் அவள் பெயரை இரண்டு முறை தீக்ஷா தீக்ஷா என்று சொல்லி பார்த்தவர் அவள் புகைப்படத்தைக் கையில் எடுத்து உன்னை அனுபவிக்க சொல்லி என் உடம்பு இப்போவே பரப்பரன்னு இருக்கு என்று முனகியவருக்கு தெரியவில்லை கை வைத்ததற்கே காணாமல் போக போகிறார் என்று.


துரை இந்தப் பொண்ணுக்கு எவ்வளவு காசு வேணாலும் கொட்டிக் கொடுக்கலாம்டா சீக்கிரம நம்ம விளம்பரத்துக்கு பேசி முடி என்கவும் ஐயா இது பெரிய நடிகையாச்சே விளம்பரத்துல நடிக்குமான்னு தெரியலை என்று கூற காசு அதிகமா கொடுத்தா வரப்போறா இந்தா செக் எழுதி தரேன் அட்வான்ஸா கொடு நாக்கை தொங்கப் போட்டுக்கிட்டு வருவாள்க


(உனக்கு நாக்கு தொங்கப் போகுதுடா டால்டா தலையா)


சரி ஐயா பேசிட்டு சொல்றேன்.


பேசி கண்பார்ம் பண்ணிட்டு வாடா அவள் எனக்கு வேணும் உனக்கும் மேல போட்டுத் தரேன் என்று கூற துரைக் வாயெல்லாம் பல்லானது.


(மாமா வேலை பாக்குறதுக்கு உனக்கெதுக்கு சிரிப்பு)


கோப்பில் உள்ள நம்பருக்கு அழைப் விடுத்து பார்த்த துரை யாரும் எடுக்கவில்லை என்றதும் நேரடியாக வீட்டிற்கே சென்று பார்க்கலாம் என்று நினைத்தவன் நிலாவின் வீட்டிற்கு செல்ல பங்கஜம் தான் இருந்தார்.


முன்பெல்லாம் நிலா ஷூட்டிங் செல்லும் பொழுது கூடவே செல்லும் பங்கஜம் அங்கிருந்தவர்களிடம் இந்த ஜூஸ் கொண்டு வா குடை பிடி என்று அராஜகம் செய்ய நீ வந்தா நான் நடிக்க மாட்டேன் என்று ஒரே போடாக நிலா போட வீட்டிலே இருந்து கொண்டார்.


தோட்டத்தில் உட்கார்ந்து காலாட்டிக் கொண்டு இருந்தவர் துரை வரவும் யாரு வேணும் என்ன விஷயமா வந்துருக்கீங்க என்று கேட்கவும் ஒரு விளம்பரம் பண்ணனும் அதும் எங்க முதலாளி தீக்ஷாம்மா தான் பண்ணி தரணும்னு ஒத்த காலில் நிற்கிறார் என்று கூறினான்.


என் பொண்ணு தான் தீக்ஷா அவள் விளம்பரத்தில் எல்லாம் நடிக்க மாட்டாலே அதும் நீங்க ஜவுளி கடை விளம்பரம்னு வேற சொல்றீங்க என்று இழுக்க துரை இருபது லட்சத்திற்கான காசோலையை நீட்டவும் பங்கஜத்தின் கண்கள் விரிந்து கொண்டது.


ஐயோ இருபது லட்சமா என மனதிற்குள் குதூகலித்தவர் வெளியில் கெத்தாக சரி தம்பி உங்களுக்காக நான் என் பொண்ணுக்கிட்ட பேசிப் பார்க்கிறேன்.. நான் சொன்னால் என் பொண்ணு இந்த விளம்பரத்துல நடிக்க ஒத்துப்பா என்று தன் கெத்து குறையாமல் சொன்னவர் வாயெல்லாம் பல்லாக அந்த காசோலையை வாங்கிக் கொண்டார்.


துரை சென்றதும் பங்கஜம் ஆஹா சொலையா இருபது லட்சம் சூப்பர் டி பங்கு உனக்கு இப்படி அதிர்ஷ்டம் அடிக்கும்னு நான் கனவுல கூட காணலையே என்று தனக்கு தானே பேசியவர் இப்போ இதை வச்சு என்ன செய்யலாம் வைர அட்டிகை வாங்கலாமா இல்லை ஆரம் வாங்கலாமா இல்லை இல்லை வேண்டாம் நமக்கு ஒட்டியாணம் செஞ்சுக்கலாம் என்று மாற்றி மாற்றி யோசித்தவர் எப்படியோ கடைசியாக ஒரு முடிவுக்கு வர அந்த இருபது லட்சத்தையும் தன் மகளைப் பற்றி நினைக்காமல் எடுத்துக் கொண்டு நகைக்கடைக்கு சென்று விட்டார் ஒட்டியாணம் செய்ய கொடுக்க..


*****

இங்கு துரை பங்கஜத்தை பார்க்க கிளம்பியதும் அந்த பெரிய மனிதர் விளம்பரம் எடுக்க புக் ஆகியிருக்கும் இயக்குநரை வீட்டிற்கு வர சொன்னார்.


இயக்குநர் வந்ததும் விளம்பரத்திற்கு என்ன ஸ்கிரிப்ட் வச்சிருக்கீங்க என்று கேட்க அவர் சாதாரணமாக கல்யாணம் ஷாட் வச்சிக்கலாம் சார் என்று கூற ஏதோ கணக்கு போட்டவர் ஓகே தம்பி ஐயராத்து முறையில் கல்யாணம் பண்ணுவது போல ஷாட் வச்சிடுங்க என்று கூறினார்.


பின்பு பச்சை வர்ணத்தில் பட்டு சேலை எடுக்க சொல்லி யாருக்கோ போன் செய்து கூறியவர் அவள் புகைப்படத்தைப் பார்த்து உனக்கு பச்சை கலர் எடுப்பா இருக்கும் குட்டி இன்னும் கொஞ்ச நாளில் உன்னை ருசிக்கப் போறேன் என்று அவளை ரசித்தவாறு தனக்குள் சொல்லிக் கொண்டார்.


***


இன்று காலையில் பங்கஜம் நிலாவிடம் விளம்பரத்தை பற்றி கூறிய அடுத்த பத்தாவது நிமிடம் இங்கு வயலுக்கு சென்று வந்த வெற்றிக்கு போன் டானென்று வந்தது.


தன் போனை எடுத்து அந்த எண்ணை பார்த்தவன் வரான் வரான் பூச்சாண்டி போன் மூலமா இன்னைக்கு என்ன காலையிலே சிங்கம் போன் பண்ணுது என்று முணுமுணுத்தவாறு அழைப்பை ஏற்க ஹலோ என்று எலிக்குரலில் கீச்சுக் குரலில் பேச அந்த பக்கம் புலியென கர்ஜித்தான்.


ரேய் இதுதான் நீ தேனை பார்த்துக் குற லட்சணமா பெரிய புடுங்கி மாதிரி என் நிலாவை கண்ணுக்குள்ள வச்சி பார்த்துப்பேன் பொந்துக்குள்ள வச்சி பார்த்துப்பேன்னு அப்படி இப்படின்னு சொன்ன அந்த வாயை வாடகைக்கு விட்டுட்டியா என்று கர்ஜிக்க டேய் இவன் ஒருத்தன் காலையிலே ஆரம்பிச்சுட்டான் என்னடா இன்னைக்கு நான் தான் உனக்கு கிடைச்சேனா என்று வெற்றி சலிப்பாக கூறினான்.


டேய் வந்தேன்னு வச்சுக்கோயேன் சுட்டுத் தள்ளிடுவேன் நான் பார்த்துக்குறேன்னு சொல்லி அழைச்சிட்டு போன இப்போ என்னடான்னா அங்க ஒரு பூதம் இருக்கே அது என் ஹனிக்கு பிடிக்காதது அனைத்தையும் செய்யுது எனக்கு இருக்குற கோவத்துக்கு அந்த பொம்பளையை பொலந்து கட்டணும்னு தோணுது.


ஐயயே இவன் ஒருத்தன் பிச்சி பிச்சி சொல்லிட்டிருக்கான் தலையும் புரியல வாலும் புரியல என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன் டேய் தேவா கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லி தொலை காலையிலேயே கடுப்பேத்துற நான் அப்போவே சொன்னேன் அந்த பூதத்தை அடிச்சி துரத்தி விடுன்னு…


அப்போ எதும் என் பேச்சை கேட்கலை என் ஹனி கஷ்டப்படுறா குஷ்டப்படுறான்னுட்டு இப்போ வந்து புலம்பிட்டிருக்க ஓடிடு என்கவும் டேய் என் ஹனியை விளம்பரம் நடிக்க வைக்க அது பணம் வாங்கி வச்சிருக்கு


(அந்த பணம் ஒட்டியாணம் வாங்க போயாச்சு..)


அதுமில்லாம அந்த கடை முதலாளி பொண்ணுங்க விஷயத்துல ஒரு மாதிரியாம் இவ போய் அங்க மாட்டிட கூடாது ஏதோ தப்பா நடக்கப் போற மாதிரி எனக்கு தோணுது என்று கூற அந்த பக்கம் வெற்றியின் சிரிப்பு சத்தம் கேட்டது.


டேய் குருவி மண்டையா ஒழுங்கா சிரிக்கிறதை நிப்பாட்டு என்று கூற தன் சிரிப்பை நிறுத்தியவன் ஏன்டா டேய் அது என்ன தப்பு நடக்க போற மாதிரின்னு சொல்ற அந்த தப்பை செய்யப் போறதே நீ தானே என்று மீண்டும் சிரிக்க 

இந்த பக்கம் தேவாவும் சிரித்தான்.


அந்த பெரிய மனுஷனோட உயிர் போய்தான் ஆகணும்னு இருந்தா போய் தானே ஆகும்.. என்று கூறியவன் இன்னும் சிலவற்றை பேசியவன் அழைப்பை துண்டித்தான்.


பின்பு தான் பீமிற்கு

 வீடியோ கால் அழைத்து பேசி சூரசம்காரமும் நடந்து முடிந்து விட்டது..


தொடரும்….

Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments