Advertisement

Ad code

புயல் -20

 


மோகம் - 20:


பைக்கில் வந்து இறங்கியவர்கள் வீட்டைத் திறந்துக் கொண்டு இருவரும் உள்ளே சென்றனர்.. உள்ளே சென்றதுமே தமிழிற்கு தன் அம்மாவின் நினைவு அவளை வாட்ட அவர் எப்பொழுதும் படுக்கும் கட்டில் அருகே சென்று அமர்ந்துக் கொண்டாள்..


அம்மா ஏன் மா என்னை விட்டுப் போன ம்மா நீ எனக்கு வேணும்மா ப்ளீஸ் ம்மா என்கிட்ட எப்படியாச்சும் வா ம்மா எனக்கு உன்னை தேடுது என்று அழுதுக் கதறி எப்படியாவது தன் அம்மா வர மாட்டாளா என்று அவர் கட்டிலில் தலை வைத்தவாறு அழுதுக் கொண்டிருந்தாள்.


கதிர் அவள் அருகில் சென்று அமர்ந்துக் கொண்டு அவள் தோளைப் பற்றி தமிழ் என்கவும் அத்தான் அம்மா அம்மா வேணும் எனக்கு என்று அவன் நெஞ்சில் புதைந்து அழுதாள்.


எனக்கு வேணும் அத்தான் அம்மா வேணும் என்று சிறுபிள்ளைப் போல் தேம்பித் தேம்பி அழுதாள். பின் சிறிது நேரம் அவளை அழ விட்டவன் அழுகையில் குலுங்கும் முதுகை வருடி விட்டான்.


அவள் அழுகை சிறிது விசும்பலாக மாறவும் தமிழ் என்று அவள் தலையை வருடியவாறு அழைத்தான்.அவள் அசையாமல் இருக்கவும் தமிழ் இங்க என்னைப் பாரேன் என்று அவள் முகத்தை தன் நெஞ்சில் இருந்து நிமிர்த்தினான்.


அவள் கண்ணீரைத் துடைத்து விட்டு அவள் கன்னங்களைத் தன் கையால் வருடிக் கொண்டே தமிழ் அம்மா நம்மக் கூடவே தான் இருப்பாங்க.. உன்னை வளர்க்க ரொம்பக் கஷ்டப் பட்டாங்க அதெல்லாம் எதுக்கு நீ நல்லப்படியா சந்தோஷமா இருக்கனும்னு தானே


இப்போ இப்படி அழுதா அவங்க மனசு தாங்குமா இழப்பு பெரிய இழப்புத்தான் நான் இல்லைன்னு சொல்லலை ஆனால் இதையை நினைச்சு வருந்தக் கூடாது சரியா.. நீ சந்தோஷமா இருந்தால் தானே அம்மா சந்தோஷமா இருப்பாங்க..


நீ இப்படி இருந்தா என்னை தான் அவங்க திட்டுவாங்க என்ன மருமகனே என் பிள்ளையை ஒழுங்கா பார்த்துக்க மாட்டீங்களான்னு அதனால என் தமிழ் செல்லத்துக்கு நான் எப்பவும் இருப்பேன் எல்லாமாவும் இருப்பேன் சரியா..


நான் முன்னாடி சொன்னேன் இல்லையா அம்மா நமக்கு பாப்பாவா வந்து பிறப்பாங்க நீ வேணும்னா பார்த்துக்கிட்டே இரு அவங்க நமக்கு மகளா பிறப்பாங்க அப்புறம் ஃபுல்லா உன் கூடவே இருப்பாங்க..


ஓகேவா டி செல்லம் அழாத என் அம்மு பட்டுக்குட்டி என் பன்னுக்குட்டி என் தங்கக்குட்டி என்று கொஞ்சிக் கொண்டே அவள் தலையை வருட அவள் நெஞ்சில் அழுததால் அப்படியே தூங்கியிருந்தாள்.


அவளிடம் எந்த அசைவும் இல்லாமல் இருக்கவும் குனிந்து பார்த்தவன் அவளிடம் இருந்து சீரான மூச்சு வரவும் அப்படியே அவளை அணைத்த படியே மல்லாக்க தரையில் படுத்தான்.


அவள் தலையை வருடியவாரே அவளைத் தன்னுடன் அணைத்துக் கொண்டு உறங்கி விட்டான்..


மணி இரவு ஒன்பது மணியை நெருங்கவும் தமிழ் அப்பொழுது தான் கண் விழித்தாள். முதலில் எழுந்ததும் ஒன்றும் புரியாமல் சுற்றிப் பார்த்தவள் பின் தன் வீட்டில் தான் இருக்கிறோம் என்று எழ முயன்றவளால் எழ முடியவில்லை..


அவளை தன் கைகளால் சுற்றித் தன்னுடன் பிணைத்தவாறு உறங்க இவர் எப்படி இங்க என்று ஒரு நொடி அதிர்ந்தவள் பின் தான் அனைத்தும் அவளுக்கு நியாபகம் வந்தது.


(அடிப்பாவி தூக்கத்துல பண்றதுதான் எல்லாம் மறந்துப் போகுதுன்னு பார்த்தா தூங்கி எழுந்தா எல்லாத்தையும் மறந்துடுவியா..எப்படியோ கதிரைப் பார்த்து யாருன்னு கேட்காம விட்டியே அதுவரைக்கும் சந்தோஷம்..)


அப்பொழுது வீட்டின் கதவு தட்டப்படவும் யாரு இந்த நேரத்துல என்று மணியைப் பார்க்கவும் அது ஒன்பது என்று காட்டவும் ஐயோ வீட்டுல தேடுவாங்களே என்று கதிரின் கையை விலக்கி விட்டு தன் முடிகளை ஒதுக்கியவாறு சென்று கதவைத் திறந்தாள்.


கதவை திறக்க பார்த்தி தான் அங்கு நின்றுக் கொண்டிருந்தான் வா பார்த்தி என்று உள்ளே அழைக்க எனக்கு தூக்கம் வருது தமிழ் இந்தா இதைப் பிடி நான் நாளைக்கு வரேன் உங்க செண்டு பேரையும் இன்னைக்கு இங்கேயே இருந்துட்டு நாளைக்கு வர சொன்னாங்க என்று அவன் கையில் வைத்திருந்தப் பையை அவள் கைகளில் திணித்து விட்டுப் பறந்து விட்டான் சிட்டாக.. 


(எதுக்குன்னு கேளுங்க.. தூக்கம் வருதுன்னு சொன்னதெல்லாம் சும்மா..அவன் சிட்டாப் பறந்துப் போனது சிட்டுக்குருவியைப் பார்க்கத்தான்..)


இவன் ஏன் இந்த ஓட்டம் ஓடுறான்.. அதும் ஒன்பது மணிக்கே தூக்கம் வருதுன்னு பொய் வேற என்று மனதில் நினைத்துக் கொண்டே அங்கிருந்த மேசையில் பையை வைத்தாள்.


மேசையில் பையை வைத்து விட்டுத் திரும்ப ப் போவைளை பின்னாலிருந்து தன்னோடு சேர்த்து அனைத்தவன் அவள் கழுத்து வளைவில் முகத்தைப் புதைத்துக் கொண்டான்.


அதில் கூசி சிலிர்த்தவள் தன் கைகளைப் பின்னே கொண்டு சென்று அவன் முகத்தை விலக்குவதற்கு பதிலாக இன்னும் தன்னோடு சேர்த்து இறுக்கிக் கொண்டாள்.


கைகளை எடுக்காமலே அவன் தாடையை வருடியவாறு அத்தான் தாடி குத்துது என்கவும் பரவால்ல குத்தட்டும் என்று அவள் கழுத்தில் இன்னும் அழுத்தி தேய்த்தான்.


அந்த இடைவெளியில் அவன் கைகள் சம்மா இல்லாமல் அவள் இடையை இறுக்கிப் பிடித்து தன் இடையோடு ஒரு கையால் இறுக்கிக் கொண்டவனின் மற்றொரு கை மேலே சென்றது.


மெதுவாக அவள் உடையின் டே வருடியவாறு செல்ல உடல் குழைந்தவள் அவன் கையைத் தடுத்து நிறுத்த அவள் கைகளைப் பிடித்துக் கொண்டவன் தனக்கு இடையூராக இருந்த அவள் துப்பட்டாவை உருவிப் போட்டான்.


தன் விரும்பிய இடம் வரவே குத்தகைக்கு எடுத்தவன் கொத்தாகப் பற்ற வலியும் இன்பமுமாக ஒரு சேர உணர்ந்தாள்.அத்தான் ப்ளீஸ் என்று அவன் கைகளில் நெளிந்துக் கொண்டே கூற ஹே சும்மா இரு டி கொஞ்ச நேரம் என்று அதட்ட அதில் கோபமானவள் சட்டென்று அவனிடமிருந்து பிரிந்து அவன் கன்னத்தை கடிக்க அலறியவன் தானும் கடித்தான்.


ஆனால் கடித்த இடம் வேறாகிப் போனது. ஷாக்கடித்தது போல் அவள் உடல் உதறவும் அவளால் நிற்க முடியாமல் தள்ளாட அவளை

தன் கைகளில் தாங்கியவன் தூக்கிக் கொண்டு கட்டிலுக்கு சென்றவன் அவளைக் கிடத்திவிட்டுத் தானும் அவள் அருகில் படுத்துக கொண்டான்.


நீங்க ரொம்ப மோசம் அத்தான் இன்மை வேறு ஏதோ கூ வர அவள் உதட்டை தன் உதடு கொண்டு சிறைப் பிடித்தான்.. சற்று நேரம் தேனருந்தியவன் இந்த வாய் என்னவெல்லாம் பேசுது என்று மீண்டும் வன்மையாக அவளுதட்டைப் பற்களால் பற்றினான்..


அவனுக்கு ஈடுக்கொடுத்தவாரே அவன் சட்டையைக் கழற்றியவள் அவன் அவள் உதட்டிலிருந்து பிரியவும் அவன் எதிர்ப்பாரா நேரம் அவனை புரட்டிக் தள்ளி அவன் மேலமர்ந்தவள் என்னை சும்மா இருக்க சொல்றீங் நான் ஏன் சும்மா இருக்கனும் நானும் பண்ணுவேன் என்று அவன் உடல் முழுக்க கடித்து அவனை துள்ள விட்டாள்.


அவளது செயலில் சிரித்துக் கொண்டே சும்மா இருன்னு சொன்னது தப்பா டி தெரியாம சொல்லிட்டேன் விடு டி கடிக்காத உன் பல்லு கூரா இருக்கு விடு டி இவ்ளோ ஷார்ப்பா வச்சிருக்க தினமும் கல்லுல போட்டுப் பல்லை தீட்டுவியா….


அவன் பேசப் பேச இன்னும் வெளியானவள் இன்னும் விடாமல் கடிக்க ஐயோ என்னை யாராவது காப்பாத்துங்க ஒரு ரெத்தக் காட்டேரிக்கிட்ட மாட்டிக்கிட்டேன் என்னை கடிக்கிறா அடிக்கிறா இன்னும் என்னலாம் பண்ணலாம்னு காத்துட்டிருக்காளோ தெரியலையே என்று கத்த..


நான் உனக்கு காட்டேரியா இந்த வாய் தானே சொன்னிச்சு சொல்லுவியா சொல்லுவியா என்று அவன் உதட்டைக் கடித்து இழுத்தாள். இது தான் தக்க சமயம் என்று விடாமல் அவள் உதட்டை இவன் பற்றிக் கொண்டான்.. 


உனக்கு ஒன்னும் தெரியாதுன்னு தான் சும்மா இருன்னு சொன்னேன் அதுக்கு இந்த அக்கப்போரா என்று வாயை விட


 ( மாட்டிக்கிட்டியே கதிரு…)

 

ஏது எனக்கு தெரியாதா எனக்கு எல்லாம் தெரியும் என்று ஆவேசமாகக் கூறியவள் அவன் உதட்டைப் பற்றிக் கொண்டாள்.அவன் கீழுதட்டைப் பற்றிக் கொண்டு இழுத்து சப்பியவள் அவன் நாவோடு தன்னை நாவை வைத்து சண்டையிட்டாள்.


கதிர் அவளிடம் தன் உதட்டைக் கொடுத்து விட்டுக் கொண்டாட்டமாக அவளுக்கு அடியில் படுத்திருக்க இவள் எல்லாம் தெரியும் என்று பீத்திக்கொண்டு அவன் உதட்டைப் பஞ்சராக்கிக் கொண்டிருந்தாள்..


ஆஹா மேடமக் கொஞ்சம் உசுப்பேத்தி விட்டா எல்லாம் அவளே செஞ்சுடுவாப் போல சமத்துக் குட்டி என்று நினைத்துக் கொண்டான்..


ஏய் தமிழு இறங்குடி உனக்கு எல்லாம் தெரியுமான்னு இன்னும் கொஞ்ச நேரத்துல டெஸ்ட் பண்ணிடலாம் வா இப்போ சாப்பிடவோம் என்று அவளை அழைக்க ஹிம்ம் எனக்கு பசிக்கலை எனக்கு வேண்டாம் நீர்க சாப்பிடுங்க என்று சாப்பாடு அடங்கியப் பையை எடுத்து வைத்தாள்.


ஏன் பசிக்கலை இப்போ வேற தூங்கிட்டோம் எனக்கு படுத்தா தூக்கம் வராது கண்டிப்பா இன்னைக்கு ஒரு சம்பவம் இருக்கு அதுக்கு உடம்புல சத்து வேண்டாமா வா சாப்பிடு என்கவும் திருத்திருவென முழித்தாள்..


என்னடி இப்படி முழிக்கிற உனக்கு ஒன்னும் தெரியாதா என்று வம்பிழுக்க எனக்கு தெரியும் சாப்பாடு ஊட்டி விடுங்க என்று கெத்து குறையாமல் கூறினாள்.


பின் அவளுக்கு ஊட்டி விட்டு அவள் போதுமென்று சொல்லவும் இன்னும் ரெண்டு வாய் என்று மேலும் கொடுத்து சாப்பிட்டவள் நான் டிரெஸ் மாத்திட்டு வரேன் என்று உடையை எடுத்துக் கொண்டு சென்றாள்.


அவன் சாப்பிட்டு முடித்து விட்டு அனைத்தையும் ஒதுங்க வைத்தவன் தமிழிடம் தமிழ் உனக்கு எது எது முக்கியமா தேவையோ அதையெல்லாம் எடுத்துப் பெட்டிக்குள்ள வை உன் டிரெஸ் புத்தகம் வேற என்னென்ன வேணுமோ எல்லாத்தையும் எடுத்து வை என்றான்.


ஹிம்ம் சரி அத்தான் என்று தன் உடைகளை எடுத்து வைத்தவள் ஒரு ஸ்டூலை எடுத்து போட்டாள் பரன் மேலே உள்ள புத்தகங்களை எடுக்க.. அதனைப் பார்த்தவன் ஏன் தமிழ் என்னாச்சு எதுக்கு ஸ்டூல் என்று கேட்டான்.


மேல புக்ஸ் இருக்கு அத்தான் இங்க வாங்களேன் இந்த ஸ்டுலை ஆடாம பிடிச்சுக்கோங்க நான் ஏறி எடுக்கிறேன்.அவள் அனைத்து புத்தகத்தையும் எடுத்துக் கொடுக்க வாங்கி வைத்தவன் ஒவ்வொரு முறையும் எக்கி எடுக்கும் பொழுது அவள் இடை வெளியே தெரிந்து தாபத் தீ பற்றியது..


இங்கு அவனுக்கு தீ பிடிக்க அவர்கள் இருந்த வீட்டின் கூரையில் ஒரு குள்ள நரி பற்ற வைத்த தீ கொழுந்து

விட்டெறிந்துக் கொண்டிருந்தது.


அடுத்து என்ன நடக்கும்… திக் திக்…


மோகம் மையம் கொள்ளும்...

Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments