மோகம் - 21:
தமிழ் ஸ்டூலில் நின்றுக் கொண்டு புத்தகத்தை எடுத்து அவனிடம் கொடுக்க அதனை வாங்கிக் கீழே வைத்தவன் ஏய் ஏன்டி இந்தப் பாவாடை சட்டைப் போட்ட என்று குரல் கரக்கரக்கக் கேட்க ஏன் அத்தான் இது தான் ஃபிரியா படுக்க நல்லாருக்கும் அதான் இதைப் போட்டேன் என்று அவனுக்கு காரணத்தைக் கூறினாள்.
அதுக்கு ஏன் தமிழ் இவ்ளோ கஷ்டம் படுற என்கிட்ட கேட்டிருந்தா ஈஸியான ஐடியா சொல்லிருப்பேன்ல என்று ஸ்டூலை ஒரு ஆட்டு ஆட்ட அதில் பயந்தவள் ஒழுங்கா பிடிக்க மாட்டீங்களா நான் பயந்தே போயிட்டேன் என்றவாரு கீழே குனிந்து அவன் தோளைக் கட்டிக்கொள்ள கலகலத்து சிரித்தான்.
சிரிக்காதீங்க வேணும்னுதானே இப்படி பண்ணுனீங்க நான் ஒரு நிமிஷம் பயந்தே போயிட்டேன் நீங்க ரொம்பக் கெட்டப் பையன் அத்தான் என்று அவனை அடித்துக் கொண்டே கூற ஹிம்ம் நான் ரொம்ப கெட்டப் பையன் இல்லை ரொம்ப ரொம்ப ரொம்பக் கெட்ட பையன் என்று அவள் இடையை வருடியவாறு அவன் அருகிலிருந்த அவள் காதுமடலைக் கடித்தான்..
ஹிம்ம் விடுங்க அத தான் புக்ஸ் எடுக்கணும் என்று அவனிடமிருந்து பிரிந்தவள் புத்தகத்தை எடுத்தவாரே என்ன ஏதோ ஈஸியான வழி நான் சொல்லுவேன்னு சொன்னீங்க என்ன அது என்று கேட்க அவன் சொன்னப் பதிலில் ச்சீ ச்சீ அத்தான் என்று சிணுங்கி அவள் கையில் வைத்திருந்த புத்தகத்தாலேயே அவனை அடி வெளுத்தாள்.
அவள் கொடுத்த அடிகளை சுகமாகவே வாங்கிக் கொண்டவன் ஏய் மாமன் ரொமான்ஸ் பண்ற நேரம் மட்டும் உனக்குள்ள சந்திரமுகி பூந்துடுவாளா இப்படி வெளுத்து வாங்குர என்று சும்மா இருந்தவளை சொறிந்துவிட்டது போல் பேச காண்டா வள் அவன் மேல் அப்படியே பாய்ந்திருந்தாள்..
இதை சற்றும் எதிர்ப்பாராதவன் அவளுடன் தானும் கீழே சரிந்தான்.. அவன் கீழே கிடக்க இவள் அவன் மேல் படுத்திருக்க இடுப்பைப் பிடித்தவன் ஐயோ இப்படி நான் எதும் பண்ணாததுக்கு முன்னாடியே இடுப்பை உடைக்கிறாளே என்னை காப்பாத்த யாருமே இல்லையா…என்று கதறினான்.
இப்போ எதுக்கு அத்தான் கத்துறீங்க வாயை மூடுங்க இல்லை நசுக்கிடுவேன் என்று அவனிடம் எகிர இன்னும் என்ன டி நசுங்குறதுக்கு இருக்கு அதான் எல்லாத்தையும் பஞ்சர் பண்ணிட்டியே படுபாவி என்று கூற முதலில் ஒன்றும் புரியாமல் விழித்தாள்.
பின் புரிந்ததும் ஐயோ போச்சு அத்தான் என்று அவனை உலுக்க ஆமா டி போச்சு உன்னை யாரு டி அதுக்குள்ள எனக்கு குடும்பக் கட்டுப்பாடு பண்ண சொன்னது.. போனா போகுதுன்னு ஒரு பத்து பிள்ளை பெத்தப் பிறகு நானே பண்ணியிருந்துருப்பேனே.. அதுக்குள்ள இப்படி பண்ணிட்டியேடி ராட்சசி என்று வராதக் கண்ணீரை சுண்டிவிட்டவாறு அவள் அதிர்ச்சியை ரசித்தான்..
அதற்குள் அதை உண்மை என்று நம்பியவள் ஐயோ எல்லாம் போச்சே என்று ஒப்பாரி வைக்க ஆரம்பிக்க ஐயோ இவ என்ன ஊர கூட்டிடுவா போல என்று ஹே தமிழ் சும்மா சொன்னேன் டி சும்மா ஒன்னும் ஆகலை என்று கூறியதும் அவனை தள்ளி மேலே அமர்ந்தவள் அவன் தலை முடியை கொத்தாக பிடித்துக் கொண்டு ஏன்டா எரும மாடு நீ சொன்னதும் நான் எவ்வளவு பயந்து போய்டேன் எதுல விளையாடனும்னு கூடவா தெரியாது என்று அவனை அடித்தாள்..
ஹே தமிழ் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் டி சும்மா என்று சிரித்துக் கொண்டே கூற ஹிமம் சும்மாவா என்று கேட்டவாறு அவன் தொடையில் நறுக்கென்று கிள்ளி அவனை அலரவிட்டாள்…
ஐயோ அம்மா கொல்ராளே ராட்சசி ஹே விடு டி வலிக்குது என்று அவள் கையை எடுத்தவன் போ டி போய் புத்தகத்தை எடுத்து வை என்று தான் எழுந்து அவளுக்கு கை கொடுத்து எழுப்பியவன் ஆமா அதான் படிப்பு முடியப் போகுதே இந்த புக்ஸ் இனி தேவையா என்று கேட்க ஹிம்ம் இதுல புக்ஸ் மட்டும் இல்ல அத்தான் நான் பண்ணின புராஜக்ட் இருக்கு இது ரொம்ப முக்கியம் அத்தான்…
ஒஹ் சரி சரி என்ன புராஜக்ட் இது என்ன பண்ணின என்று கேட்க அது நிறைய வகையான பூச்சிகள் பிடிச்சு ஒட்டனும் அப்புறம் விவசாயத்துக்கு எதுலாம் உதவுமோ அதெல்லாம் பிடிச்சு ஒட்டி வச்சுருக்கேன் என்று கூற என்ன பூச்சா என்ன டி அக்ரி படிக்கிறன்னு சொல்லிட்டு பூச்சி பிடிச்சு வச்சிருக்க என்று கலாய்த்தான்..
அத்தான் நீங்க கிராம்ப கலாய்க்கிறீங்க என்று சிணுங்க என்ன தமிழ் ஏதோ கறுகிற வாசனை வருது நம்ம தான் ஏதும் சமைக்கலையே என்று முகர்ந்து பார்க்க எனக்கு வாசனை வருது தமிழ் என்கவும் அவளும் முகர்ந்துப் பார்க்க ஆமா அத்தான் எனக்கும் வருது என்று ஸ்டூலை விட்டு இறங்கினாள்.
இவன் சுற்றும் முற்றும் பார்க்க தமிழ் பெட்டியில் அணைத்தையும் எடுத்து வைத்து மூடினாள்.. கதிருக்கு எதோ தவறாகப் பட மேலே நிமிர்ந்து பார்க்க கூரை எரியத் தொடங்கி நெருப்புக் கங்குகள் தெரிய தமிழ் என்று அவளை இழுத்துக் கொண்டு வெளியே வந்தான்..
அவள் என்ன என்று உணரும் முன்பே அவளை வெளியில் தள்ளி விட்டு மீண்டும் உள்ளே சென்றான். அப்பொழுது தான் தமிழ் உணர்ந்தாள் கூரைத் தீப்பற்றி எரிவதை உடனே உடல் நடுங்க அத்தான் அத்தான் என்று கத்த அவன் தமிழ் வராதா அங்கேயே இரு வரேன் என்று குரல் கொடுத்தான்.
அத்தான் வாங்க என்று கத்தி அழ அங்கு பக்கத்தில் வயல் என்பதால் வீடுகள் ஒன்று இரண்டு தான் இருந்தது.. இவள் அழுதுக் கொண்டே என்ன செய்வது என்று தெரியாமல் கத்த முன் பக்கம் இருந்த அனைத்தும் நெருப்பில் எரிந்து கீழே விழுந்து வாசலை அடைத்துக் கொள்ள ஐயோ அத்தான் என்று கிட்டேப் போக அவளுக்கு உடலில் எரிச்சல் ஏற்பட்டாலும் அதைப் பொருட்படுத்தாமல் அத்தான் என்று அழுதுக் கொண்டே நெருங்க எப்படி வந்தானோ பார்த்தி அவளை இழுத்திருந்தான்.
அத்தான் அத்தான் என்று அழுதுக் கொண்டே வீட்டைப் பார்த்துக் கத்த அங்கு நின்று அதை பார்த்த ஒருவனுக்கு முகம் முழுக்க சிரிப்பு. ஏய் தமிழ் இரு ஒன்னுமில்லை இங்கேயே இரு நான் வரேன் அதுக்குள்ள இந்தா வீட்டுக்குப் போன் போட்டு அப்பாக்கு சொல்லு என்று தன் செல்போனை கொடுக்க அவள் அதையெல்லாம் கண்டுக் கொள்ளும் நிலைமையில் இல்லை.
அவள் இருக்கும் நிலைமைக்கு இப்பொழுது எப்படியாவது அவனைப் பார்த்தே ஆக வேண்டும் அத்தான் அத்தான் என்று மீண்டும் வீட்டை நெருங்க ஏய் தமிழ் லூசு நெருப்பு அண்ணனுக்கு ஒன்னும் ஆயிருக்காது வா பின் வாசலில் போய் பார்ப்போம் என்கவும் அவள் அழுகையை விடாமல் தொடரவும் அவள் அதிர்ச்சியில் இருக்கிறாள் என்று உணர்ந்தவன் வா தமிழ் அண்ணா பின்னாடி தான் இருக்கும் என்று அழைத்தான்.
வீடு ஃபுல்லா எரிஞ்சிப் போச்சு பாரு அத்தான் எனக்கு வேணும் என்று அழ வா என்று அவளை இழுத்துக் கொண்டு பின் வாசலிற்கு சென்றான் அங்கு அவனை ஏமாற்றாமல் கதிர் நிற்க அவனை கண்டதும் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் உடனே அவனை நோக்கிப் பாய்ந்தாள்.
அவனை கட்டிக்கொண்டு அத்தான் அத்தான் என்று கதறிக் கொண்டே முகம் முழுக்க முத்தமிட்டவள் அவனை தன்னோடு இறுக அணைத்துக் கொண்டாள்.
தமிழ் ஏய் ஒன்னுமில்லை டி இங்கப் பாரு நான் நல்லாத்தான் இருக்கேன் இங்கப்பாரு என்கவும் உடும்புபோல் அவனை ஒட்டிக் கொண்டவள் பிரியவே இல்லை கடைசி வரைக்கும்..
பார்த்தி தன் வீட்டிற்கு அழைத்தவன் தன் அப்பாவிடம் சுருக்கமாக சொல்லி அழைத்தான்.அவர் பதட்டத்துடன் பிள்ளைங்க ரெண்டும் எங்கப்பா என்று கேட்க அவங்க நல்லாருக்காங்கப்பா அண்ணனுக்குத்தான் கொஞ்சம் காயம் போல நீங்க சீக்கிரம் வாங்க என்று கூறிவிட்டு போனை அணைத்தான்.
அவர்கள் அருகே சென்றவன் அங்கிருந்த பெட்டியை மற்ற பொருட்களையும் ஓரமாக எடுத்து வைத்தவன் ஏய் தமிழ் அண்ணன் கொஞ்சம் உட்காரட்டும் விடு என்று கூற உனக்கென்னடா எருமை என் புருஷன் போடா உன் வேலையைப் பார்த்துட்டு என்று அவனை விட்டு விலக சொன்னக் கோபத்தில் அவனை கத்தினாள்.
ஹே யாரு இல்லன்னு சொன்னா அவரு உன் புருஷன் தான் இங்க அணலா இருக்கு அங்க வாங்க என்று அழைக்க அதுவும் சரி தான் வா தமிழ் அங்கப் போகலாம் உடம்பெல்லாம் அரியுற மாதிரி இருக்கு என்று கூறவும் சற்று விலகினாள்.
அப்பொழுது தான் அவன் கையில் இருந்த தீக்காயத்தைக் கண்டாள் ஐயோ அத்தான் என்று மீண்டும் விட்ட அழுகையைத் தொடங்க ஒன்னுமில்லை தமிழ் வா என்று ஒரு காலை எடுத்து வைத்தவனால் மற்றொரு காலை எடுத்து வைக்க முடியவில்லை ஸ்ஸ் என்று சத்தம் கொடுக்க அவன் சத்தத்தை தொடர்ந்து அவன் பார்வை சென்ற இடத்தைப் பார்த்தவள் அத்தான் என்று கதறினாள்.
காலில் வேறு நெருப்புக் காயம் பட்டிருக்க அவன் நகர முடியாமல் நிற்கவும் பார்த்தி உடனே அவனிடம் வந்தவன் வா அண்ணா கொஞ்சம் தூரம் தான் பைக் வரைக்கும் கொஞ்சம் ட்ரைப் பண்ணு என்று அவன் ஒரு புறம் தோளைப் பிடித்துக் கொண்டான்.
அவனையும் அவன் காயத்தைப் பார்த்து அழுதுக் கொண்டிருந்த தமிழை ஏய் தமிழ் அந்தப் பக்கம் பிடி என்கவும் மற்றொரு புறம் பிடித்துக் கொண்டாள்.அவர்கள் இருவரையும் பிடித்துக் கொண்டு மெது மெதுவாக அடி எடுத்து வைத்து நடந்தவனிடம் வலிக்குதா அத்தான் என்று கேட்க இல்லை இனிக்குது கேட்கிறா பாரு கேள்வி என்று சிரிக்க இவள் அழுதாள்.
(இப்போ அழுவுறான்னா பின்னாடி ஆப்பு இருக்கு கதிரு தயாரா இருந்துக்கோ எல்லாத்தையும் தாங்க..)
வீட்டிலிருந்து அனைவரும் வந்திருக்க கதிரைப் பார்த்து பெண்கள் அனைவரும் அழுதனர்.. கொஞ்ச நேரம் சும்மா இருங்க என்று கத்திய சுந்தரம் பார்த்தி அண்ணனை கிளினிக் அழைச்சிட்டுப் போ நான் இவங்களை வீட்டுல விட்டுட்டு வரேன் என்றவர் அவர்கள் இருவரும் கிளம்பியதும் பெண்களை அழைத்துக்
கொண்டு வீடு நோக்கி சென்றார்..
இதை அனைத்தையும் கண்ட அந்தக் கருப்பாடு குதூகலத்துடன் அந்த இடத்தைக் காலி செய்தது.
அந்தக் கொழுப்பெடுத்தக் கரு
ப்பாட்டைக் கதிர் பிரியாணி போடுவானா..?
மோகம் மையம் கொள்ளும்…
0 Comments