Advertisement

Ad code

புயல் -19

 



மோகம்-19:


 அவனையும் அவள் கால்களையும் மாறி மாறி பார்க்க அவள் கண்களின் வழியே குறிப்பை அறிந்தவன் கீழே அமர்ந்திருந்தவன் சட்டென்று அவள் கால்களைப் பற்ற அதிர்ந்தாள். அவள் விளையாட்டுக்குத் தான் அவ்வாறு ஜாடை செய்தால் இவன் உண்மையில் செய்வான் என்று நினைக்கவில்லை அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள்..


அடுத்த நிமிடம் அவள் என்னவென்று உணரும் முன்பே கீழே அமர்ந்திருந்தவன் மேல் விழுந்திருந்தாள். கதிர் அவள் கால்களைப் பிடிப்பது போல் கால்களைப் பிடித்து இழுத்து தன் மேல் சாய்த்திருந்தான்.. அவன் மேல் விழுந்தவாறு மலங்க மலங்க விழித்தவளைத் தன்னுடன் சேர்த்து இறுக்கியவாரு ஏய் இப்போ என்ன பண்ணுவ நான் தான் உன் காலில் விழுந்துட்டேன் ல பேசுடி என்கவும் அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளினாள்.


அவள் தள்ள தள்ள இன்னும் இன்னும் தன்னுடன் சேர்த்து நெருக்க ம்ம் விடுங்க விடுங்க என்று கத்த அதை கண்டுக்கொள்ளாமல் இன்னும் நெருக்க டேய் விடுடா எருமை என்று கொஞ்சம் மரியாதை குறைய விட்டான். அவள் எழ உடனே இழுத்து தன் கைவளைவிற்குள் வைத்துக் கொண்டவன் இப்படியே இரு டி தள்ளிப் போகாத என்கிட்டேயே இரு என்கவும் அதுவரை தேக்கி வைத்திருந்த அழுகையை ஆரம்பித்தாள்.


அவள் அழுகவும் ஏய் தமிழு உன்னை எவ்வளவு தைரியமான பிள்ளைன் நினைச்சேன் நீ என்னடான்னா ஆவூன்னா வாட்டர் ஃபால்ஸை திறந்து விட்டுட்டு இருக்க என்று வினவ எனக்கு யாருமில்லைனு தானே அடிச்சீங்க என்னை அடிச்சா யாரும் வந்து கேட்க மாட்டாங்கன்னு தானே நீங்க அத்தனை பேரு முன்னாடி அடிச்சீங்க என்று தேம்பியவாறு கேட்டாள்..


ஐயோ தமிழு யாருமில்லைனா என்ன டி நான் இருக்கேன் டி இப்போழுதும் எப்பொழுதும் நான் உன்னை பாத்துக்குறேன் டி எனக்குன்னு நீ மட்டும்தானே டி உன்னை யாரும் எதும் சொல்லக் கூடாதுன்னு தானே உன்னை அடிச்சேன் ப்ளீஸ் டி என்னை மன்னிச்சிடு நான் வேணும்னு அடிக்கலை அத்தனை பேருக்கு முன்னாடி அடிச்சது தப்பு தான்…


கல்யாணத்துக்கு முன்னாடி எப்படியோ ஆனால் இப்போ உன் முகம் சோர்ந்து போனதும் என் மனசு கேட்கலை அதும் அது என்னால தான்னு நினைக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு.. முடிஞ்சா என்னை மன்னிச்சிடு இனி இந்த தப்பை பண்ண மாட்டேன் அப்படி உனக்கு கோபம் போகலைன்னா என்ன அடிச்சிக்கோ என்கவும் எதுவும் யோசிக்காமல் உடனே கன்னத்தில் ஒரு அறை வைத்தாள் அவன் அதை வாங்கிக் கொண்டு முடிஞ்சிதா என்பது போல் பார்க்க மறு கன்னத்தில் இன்னொரு அறை வைத்தாள்.


அவ்ளோதானா என்று கேட்க ஹிம்ம் என்று தலையாட்ட அவளை விட்டு எழுந்தவன் மேல வந்து படு தமிழ் கீழே படுத்தா உடம்பு வலிக்கும் என்று கூற எதுவும் பேசாமல் சென்று படுத்துக் கொண்டாள்.. அவன் அறையின் லைட்டை அனைத்து விட்டு வந்து அவள் கீழே போட்டிருந்த பாயில் படுத்துக் கொள்ள இங்கு கட்டிலுக்கு வராமல் அவன் கீழே படுக்கவும் அத்தான் என்னை சொல்லிட்டு நீங்க கீழ படுத்துக்கிட்டீங்க மேல வாங்க என்கவும் முறுக்கிக் கொள்வது இவன் முறையானது.


(யோவ் இந்த சண்டை ரொம்ப நீளுது ஒரு முடிவுக்கு வாங்கப்பா)


அவன் ஒன்றும் பேசாமல் இருக்கவும் இவள் கீழிறங்கி வந்து அவன் முன்புறம் வந்து அவனை பார்த்தவாறு படுக்க என்ன என்பது போல் பார்த்தான். அது ஒன்னும் இல்லை அத்தான் என் புருஷனுக்கு தனியா படுத்தா பயமா இருக்காம் அதான் என்று அவன் கழுத்தை சுற்றியவாறு தன் கைகளைப் போட்டவள் தன்னை நோக்கி இழுத்தாள்.


நான் அடிச்சது கோபமா அத்தான் என்று கிசுக்கிசுப்பாகக் கேட்க இல்லையென்று தலையசைக்க அப்புறம் என் அத்தான் கீழ வந்து படுத்தீங்க என்கவும் உனக்கு கோபம் போகட்டும்னு தான் இங்க வந்து படுத்தேன்.எனக்கு கோபம் போயிடுச்சு அத்தான் நிஜமா என்று கேட்க உண்மையா அத்தான்…


அம்மு நான் முன்னாடி இப்படி இல்லை ஆனால் நீ என் வாழ்க்கையில் எப்போ வந்தியோ அப்போவே நீ ஏதோ பண்ணின உன்னோட ஒவ்வொரு செய்கையும் என்னை உன் பக்கம் ஈர்த்துச்சு நான் நீயாகி பல நாள் ஆச்சு தமிழ் நீ கொஞ்சம் முகம் சுணங்கினாலும் எனக்கு வலிக்குது தமிழ் நானா இது நான் இப்படிலாம் இருப்பேன்னு இப்போதான் எனக்கு தெரியுது..


நீ பேசாம இருந்தா என்னால தாங்க முடியலை தமிழ் இனி நமக்குள்ள எந்த பிரச்சனை வந்தாலும் என்ன அடி திட்டு ஆனால் என் கூடவே என் பக்கத்திலேயே இருந்து எல்லாம் பண்ணு… 


(தாராளமா குடு தமிழ் ஒன்னு ரெண்டுலாம் கதிருக்கு பத்தலை போல பல்கா கொடு..)


(பொண்டாட்டிக்கிட்ட அடி வாங்கினவங்க தான் சரித்திரம் படைச்சிருக்காங்க.. நம்புங்க நம்புங்க ஹி ஹி)


ஐ லவ் யூ அத்தான் என்று அவனை அணைத்துக் கொள்ள சிரித்துக் கொண்டே அவனும் தன்னுடன் இறுக்கிக் கொண்டான். நீங்க சொல்ல மாட்டீங்களா என்று கேட்க எனக்கு அதெல்லாம் பழக்கமில்லை தமிழ் என்கவும் நீங்க நிறைய கத்துக்கனும் அத்தான்..நான் உங்களுக்கெல்லாம் சொல்லி தரேன் என்று அவனை எழுப்பி கட்டிலில் படுத்து அணைத்துக்கொண்டு உறங்கி விட்டாள்.


அடுத்த நாள் காலையில் கதிர் எழுந்து வெளியே வரவும் என்ன அண்ணே அடி பலமோ என்று பார்த்தி நக்கலாக வினவ அவனிடமிருந்து ஏதேதோ பேசி அவனிடமிருந்து தப்பித்து வருவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது…


தமிழிடம் வந்து தமிழ் நீ என்னை அடிச்சத யார்க்கிட்டையாவது சொன்னியா என்று கேட்கவும் இல்ல அத்தான் ஏன் கேட்கிறீங்க என்ன ஆச்சு என்கவும் ஒஹ் சரி யாருக்கிட்டையும் சொல்லிடாத முக்கியமா இந்த பார்த்திக்கிட்ட சொல்லிடாத ஊரு பூராப் பரப்பி விட்டுருவான்.. ஐயோ அத்தான் இதெல்லாம் வெளியே யாராவது சொல்வங்களா…


ஹிம்ம் சரி களத்துக்குப் போயிட்டு வரேன் டா என்று விட்டு செல்ல அத்தான் என்று அழைத்தாள் அவள் அழைக்கவும் திரும்பிப் பார்த்தவனிடம் ஷர்ட் என்று கேள்வியாக நிறுத்தவும் யம்மா தாயே கழட்டவே மாட்டேன் கவலைப்படாத சரியா என்று விட்டுக் கிளம்பினான்.


சந்தரம் தன் தாயிடம் அம்மா வரவேற்பு வர புதன் கிழமை வச்சுக்கலாம்னு ஐயர் சொன்னார் நீங்க என்ன சொல்றீங் என்று கேட்கவும் சரிப்பா புதன் கிழமையே வச்சுக்கலாம் நம்ம சொந்தக்காரங்க எல்லாரையும் பத்திரிக்கை வச்சு அழைச்சிடு என் பேரன் வரவேற்பு ஜாம் ஜாம்னு நடக்கனும்..


சரிம்மா எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன் என்கவும் எப்பா சுந்தரம் தமிழைக் கூப்பிட்டு அவர்க சொந்த ஊருல யாராவது சொந்தக்காரங்க இருக்காங்களான்னு கேளுப்பா அப்படி இருந்தா அவங்களுக்கும் பத்திரிக்கை வச்சிடலாம் இல்லையா..


நாள பின்ன யாராவது வந்து எங்களுக்கு சொல்லாம் விட்டுட்டீங்களே என்று நம்மை கேள்விக் கேட்கக் கூடாதில்லையா என்கவும் சரிம்மா அப்படியே செய்யலாம் வடிவு நீ போய் தமிழுக்கிட்டக் கேட்டுட்டு வந்துடு என்கவும் சரிங்க என்று அவள் அறைக்கு சென்றார்.


அப்பொழுது தான் அறையை ஒழுங்குப் படுத்தி வைத்துக் கொண்டிருந்தவளிடம் தமிழு உங்க சொந்த ஊருல யாராவது சொந்தக்காரங்க இருக்காங்களா மாமா உங்க வரவேற்புக்குப் பத்திரிக்கை வைப்பதற்காகக் கேட்கிறார் என்கவும் எனக்கு தெரியாது அத்தை ஆனால் எங்க அப்பாவோட தங்கச்சி அந்த ஊரில் இருக்கிறதா அம்மா அடிக்கடி சொல்வாங்க என்று கூறினாள்.


(அப்பாடி வில்லன் அறிமுகம் வந்துருச்சு..)


சரிம்மா நான் அவர்க்கிட்ட சொல்றேன் நீயும் பார்த்தியும் போய் உன் துணி புத்தகமெல்லாம் அங்க அந்த வீட்டுல இருக்குன்னு சொன்னியே போய் எடுத்துட்டு வந்துருங்க என்கவும் நான் அவர் வந்ததும் அவங்கக் கூடப் போய்க்கிறேன் என்கவும் சரிடா என்று விட்டு தன் கணவனிடம் கூறச் சென்றார்.


பின் கதிர் வந்ததும் அனைவரும் கலந்து பேசி புதன் கிழமை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்தனர். வடிவு கதிரிடம் கதிரு தமிழை அந்த வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய் அவனோட பொருளெல்லாம் எடுத்துட்டு வந்துருங்க என் கவும் அம்மா சந்தைக்கு இன்னைக்கு போகனும்னு சொன்னீங்களே போகலையா என்று கேட்க நான் பார்த்திக் கூட போய் காய்கறி எல்லாம் வாங்கிக்கிறேன் நீ தொனத்தொனன்னு பேசாமப் பிள்ளையைக் கூட்டிட்டுப் போயிட்டு வா என்று அனுப்பி வைத்தார்.


தங்கள் அறைக்கு வந்தவன் தமிழ் கிளம்பு உன் பொருளெல்லாம் எடுத்துட்டு வரலாம் என்கவும் தோ வரேன் அத்தான் என்று கத்திரிப் பூக்கலரில் கடிதார் அணிந்து வந்தாள்.. அவள் நிறத்திற்கு எடுப்பாகப் பார்க்கக் கண்களைக் கவரும் வண்ணம் இருந்தது.


அவளைக் கண்டதும் சுடிதார் அணிந்து வந்த சுவர்கமே என்று அந்தப் பாட்டை முணுமுணுக்க ஆஹான் அப்படியா நல்லாருக்கா அத்தான் என்று அவனிடம் கேட்க கைகளால் சூப்பர் என்று பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் சேர்த்து வாயசைக்க நிஜமா என்று மீண்டும் கேட்க நிஜமா டி என் லட்டு ஜாங்கிரி என்று அவள் குண்டு கன்னத்தை பற்களால் கவ்விக் கடித்தான்.


ஆஹ் அத்தான் வலிக்கிது என்கவும் ஆனால் எனக்கு இனிக்குதே என்று பதில் கூற உங்களுக்கு ஏதோ ஆயிடுச்சு அத்தான் என்கவும் பித்து அதுவும் இந்த தமிழ் பித்து பிடிச்சுடுச்சு என்று பெருவிரலால் அவள் கீழுதட்டை வருடியவாறு கூறினான்.


ஹிம்ம் சரி வா போகலாம் இப்போ போனா தான் கரெக்டா இருக்கும் இல்லனா வர டைம் ஆகிடும் வா வா என்று கைகளைப் பிடித்தப்படி செல்ல என் கண்ணே பட்டுடும் போல வடிவு பிள்ளைக ரெண்டும் வந்ததும் சுத்திப் போடு என்று அப்பத்தா தன் மருமகளிடம் கூறினார்.


கதிர் தன் புல்லட்டை எடுக்க பின்னால் ஏறி அமர்ந்தவள் அன்று போல் ஏதும் செய்யாமல் அமைதியாக வரவும் அவள் அன்று செய்த செயலை கதிர் எதிர்ப்பார்த்தானோ தமிழ் பிடிச்சுக்கோ விழுந்துர போற என் கவும் ஹிம்ம் சரி அத்தான் என்று சைடில் இருந்தக் கைப்பிடியைப் பிடிக்க சப்பென்றாகிவிட்டது.


(கதிரு வேணாம் ஓவர் ஆசை உடம்புக்கு ஆகாது..இப்போவே சொல்லிட்டேன்..அப்புறம் மிஸ் மிஸ் என்ன அடிச்சிட்டா கிள்ளிட்டா கடிச்சிட்டான்னு கம்பிளைன்ட் பண்ணக் கூடாது ஆமா..)


என்ன தமிழ் அன்னைக்கு உட்கார்ந்த மாதிரி உட்காரல என்கவும் நறுக்கென்று அவன் இடுப்பில் கிள்ள ஓய் என்றவாறு துள்ளியவன் பிரேக் பிடிக்க நீங்க தானே வெளிய இப்படி எல்லாம் பண்ணக் கூடாதுன்னு சொன்னீங்க என்று கூற அது அப்போ இது இப்போ அதெல்லாம் தோள் மேல கை வைக்கலாம் தமிழ் என்று கூ ஹிம்ம் ஹ்ம்ம் சரி சரி என்று சிரித்தவாறு வண்டியெடுங்

க போலாம் என்கவும் வண்டியைக் கிளப்பினான்.


மோகம் மையம் கொள்ளும்...

Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments