Advertisement

Ad code

புயல் -18

 


மோகம்-18:


ரகுவும் சசியும் வீட்டிற்கு வந்தவர்கள் அனைவரிடமும் ஊருக்கு கிளம்புவதாகக் கூற ஏன் மாப்பிள்ளை இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டுப் போகலாமே என்று சுந்தரம் வினவ வரவேற்புக்கு வரும் போது ரெண்டு நாள் இருக்குற மாதிரி வரோம் மாமா இப்போ அங்க கடையில் ஆள் இல்லை அதான் நான் போக வேண்டிய கட்டாயம் என்று தன் நிலைமையைக் சசியிடம் திரும்பியவர் ஆத்தா புருஷன் பொண்டாட்டிக்குள்ள எவ்வளவு சண்டை வந்தாலும் இப்படி கோவிச்சுக்கிட்டு வரக் கூடாது சரியா…


உங்கக்குள்ளையே சுமூகமா பேசி முடிச்சிக்கனும் புரியுதா என்று தன் அறிவுரையை வழங்க ஹிம்ம் சரிப்பா என்று தலை ஆட்டியது ரகுவின் தலை உருளுவது உறுதி என்று சொல்லாமல் சொல்வதைப் போல் இருந்தது. ஆஹா இவ என்ன இப்படி பூம் பூம் மாடு போல தலையை ஆட்டுறா வீட்டுலப் போயும் தொடருமா போச்சு அனுபவிடா ரகு… என்று தன் மனதிற்குள்ளே தான் அடிவாங்கப் போகும் நேரத்திற்காகக் காத்துக்கொண்டிருந்தான்.


இருவரிடமும் வரவேற்புக்கு வந்துடுங்க மாப்பிள்ளை நான் பத்திர்க்கை எல்லாம் அடிச்சிட்டு சம்மந்தியைப் பார்க்க வரேன் என்று வழியனுப்பி வைத்தனர். இவர்கள் கிளம்பிய சில நிமிடங்களில் தமிழ் வந்து சேர்ந்தாள் வந்தவள் நேரே அப்பத்தா அறைக்கு செல்ல அப்பத்தா அவளிடம் சமாதானமாக பேசி உன்னால அவனை மன்னிக்க முடியலைன்னா அவன் மேல் கோபம் இருந்துச்சுன்னா ஒரு அடிக்கூட அடிச்சிரு கோபம் போயிடும் என்று கதிரை அடிக்க பிளான் போட்டுக் கொடுத்தார்.


(அப்பத்தா நீங்க தான் அடிக்க சொன்னதா.. அதானே பார்த்தேன் எங்க தமிழு பச்சை மண்ணு அவளாவது அடிக்கிறதாவது..)


ப்போ அவன் வர நேரம் ஆச்சு போய் குளிச்சிட்டு உன் அறைக்குப் போ என்கவும் சரி அம்மாயி என்று தங்கள் அறைக்கு வந்து விட்டாள். வரட்டும் உங்கப் பேரன் கதிரு என் கையில சிக்கி பதராப் போகப் போறான் என்று வாய்விட்டு சொல்ல அவள் மனசாட்சி என்ன டி பொசுக்குன்னு அவன்னு சொல்லிபுட்ட என்று கேட்க ஹிம்ம் என் புருஷன் நான் என்னா வேணா பண்ணுவேன்..


அடிப்பேன் உதைப்பேன் மேல ஏறி குத்துப் பாட்டுக்குக் கூட டான்ஸ் ஆடுவேன் நீ மூடிக்கிட்டுப் போ வந்துட்டா வக்காளத்து வாங்க போடி என்று விரட்டியவள் அத்தை பொம்பளைங்க அங்க வேலை செஞ்சுட்டு இருக்கும் போது சட்டையை அவுத்துப் போட்டுட்டு நிக்கிறான் ஒருத்தி கண்ணு போல இருக்குமா எவளாவது பார்த்தா என்னாகுறது..


ஏன்டா கழட்டினன்னு கேட்டா வெயிலா இருந்துச்சு மழையா இருந்துச்சுன்னு பாவமா மூஞ்சியை வச்சிக்கிட்டு சொல்றது இப்படிலாம் சொன்னா நான் இவன் கூட பேசிடனுமா.. எல்லாரு முன்னாடியும் அடிக்கிறான் பெரிய இவன் மாதிரி.. எருமை ஒன்னுமே தெரியாம கையை நீருறது என்ன பழக்கம் வரட்டும் இன்னைக்கு என்கிட்ட செமத்தையா வாங்கிக் கட்டிக்கப் போறான் வாடா என்று அவன் வரவுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள்.


இங்கு தமிழ் வேகமாக இவனிடம் கத்திவிட்டு செல்ல பின்னாடியே செல்லப் போனவனை தம்பி என்று அங்கு கல் அறுக்கும் நபர் தடுத்து நிறுத்தினார்.. தம்பி இன்னைய கணக்கு இன்னும் எழுதுல தம்பி வாங்க என்கவும் தோ வரேன் போங்க என்று அவரைப் பின் தொடர்ந்தான்..


இன்று அவர்கள் அறுத்தக் கற்களைக் கணக்குப் பண்ணி நோட்டில் எழுதி வைத்து விட்டு எங்கெங்கு லோடு போயிருக்கு என்று விபரம் அறிந்துக் கொண்டவன் வீட்டிற்குக் கிளம்பினான்.. ச்சே மதியமே போய் சமாதானம் படுத்தியிருந்தா கொஞ்சமாச்சும் உக்கிரம் கம்மியா இருந்துருக்கும் அடியும் கொஞ்சம் கம்மியா கிடைச்சிருக்கும் என்று மனதில் நினைத்தவாறு கிளம்பினான்.


(கதிரு உன் நிலைமையை நினைச்சா எனக்கு சிரிப்பு சிரிப்பா வருதுடா நீ எப்போ போயிருந்தாலும் உனக்கு தமிழ் பேயோட்டனும்னு இருந்தா அதை யாரால மாத்த முடியும் சொல்லு நானே நினைச்சாலும் முடிய மாட்டேங்குது பாரேன்.. நம்புடா கதிரு)


கதிர், தமிழ் அப்பத்தா அறையில் இருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டு தங்கள் அறைக்கு வந்தவன் அறையின் கதவை சாற்றி விட்டு சட்டை பட்டனை கழட்டிக் கொண்டே திரும்ப சட்டென்று தமிழ் அவன் முன்பு வந்து நிற்க அவள் வந்து நிற்பாள் என்று எதிர்ப்பார்க்காதவன் சற்று பின்னால் நகர்ந்து கண்களை விரித்தவாறு நிற்க அப்புறம் என்ன அமுக்கு டு முக்கு அமால் டுமால் தான்…


அவன் கண்களை விரித்தவாறு பின்னால் நகரவும் கொத்தாக அவன் சட்டைக் காலரைப் பிடிக்கவும் கதிரு நீ இன்னைக்கு செத்தடா என்று நினைத்துக் கொண்டே அவளை அதிர்ச்சியாகப் பார்த்தான்.. என்ன கண்ணை விரிக்கிற எதிர்ப்பார்க்கலையா அங்க அவ்வளவு பேரு முன்னாடி சட்டையைக் கழட்டிப் போட்டுட்டு நிக்குற இப்போ என்னாச்சு கை அப்படியே ஸ்டக் ஆகி நிக்குது ஹிம்ம் என்று குரலை உயர்த்தி மிரட்டினாள்…


கதிர் அவள் ஒருமையில் பேசியதில் அதிர்ச்சியாகப் பார்க்க இன்னும் அவளை தூண்டியதோ அவன் செயல் ஹிம்ம் சொல்லு எதுக் இவ்வளவு பெரிய அதிர்ச்சி என்ன டா இவ இப்படியெல்லாம் பேசுறான்னு ஷாக்கா இருக்கா என்று வில்லிப் போல் சிரித்துக் கொண்டே அவன் சட்டைப் பட்டனை ஒவ்வொன்றாகக் கழட்டிக் கொண்டே அவனை மிரட்டிக் கொண்டிருந்தாள்.


முழுவதாகக் கழட்டி விட்டு சட்டையை உருவியவள் அங்கப் போய் சட்டையைக் கழட்டுவியா எவளாவது பார்த்துட்டான்னா என்ன ஆகுறது இன்னைக்கு எவ எவ கொள்ளிக் கண்ணெல்லாம் பட்டுச்சோ என்று கூறிக் கொண்டே அவன் கையில் நறுக்கென்று கிள்ள ஆஹ் என்று கத்தி துள்ளினான்.


என்ன டி இப்படி எல்லாம் பண்ற என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்க ஹிம்ம் இதுவும் பண்ணுவேன் இதுக்கு மேலேயும் பண்ணுவேன்டா இப்போ என்னாங்குற என்று சரமாரியாக அவனை வார்த்தைக்கு வார்த்தை டா போட்டு அவனை திணறடிக்க ஒருவன் எத்தனை அதிர்ச்சியைத் தான் தாங்குவது ஒரு அடி அடிச்சதுக்கு இப்படியா என்று மனதிற்குள் நொந்துக் கொண்டான்.


கதிரின் நிலைமை வெளியில் வாய் விட்டுக் கூட சொல்ல முடியாது அவ என்னை கிள்ளிட்டா அடிச்சிட்டா என்று புகார் கூட யாரிடமும் கூற முடியாமல் தமிழிடம் மாட்டித் தத்தளித்துக் கொண்டிருந்தான்.. அவனை அவளிடமிருந்து காப்பாற்றுவது போல அறைக் கதவைத் தட்டினார்கள். யப்பா தப்பிச்சேன் டா சாமி என்று நினைப்பதற்குள் தப்பிச்சுட்டன்னு நினைக்காத நைட் ரூமுக்கு வந்து தானே ஆகனும் வா அப்போ வச்சிக்கிறேன் உன்னை என்று மிரட்டி விட்டு கதவை திறக்க செல்ல கதிரின் முகம் பேயறைந்தது போலானது..


தமிழ் கதவை திறந்ததும் வெளியே அப்பத்தா நின்றுக் கொண்டிருக்க இவளைக் கண்டதும் சாப்பிட வாங்க தமிழு என்கவும் இப்போ தான் அம்மாயி வந்தாங்க அவங்க குளிச்சிட்டு வருவாங்க நாங்க அப்புறம் சாப்பிட்டுக்கிறோம் நீங்கப் போய் சாப்பிடுங்க என்று கூறவும் இதை கேட்ட கதிர் இப்போ மட்டும் வாங்க போங்கன்னு மரியாதை யம்மா என்று அதிசயித்தான்.


டேய் கதிரு இப்போ சாப்பிட வெளியே போறேன்னு கூட எஸ்கேப் ஆக முடியாது ஓடிடு என்று யோசிக்க உடனே அவன் மூலையில் மணியடிக்கவும் ஐயோ அம்மா என்று மனதிற்குள் அலறியவாறு துண்டை எடுத்துக் கொண்டு குளிப்பதற்காக வெளியே ஓடி விட்டான்..இவன் விறு விறுவென வேகமாக செல்வதைக் கண்ட அப்பத்தா இவன் ஏன் இப்போ பேயறைஞ்சாப் போல இப்படி ஓடுறான் என்று கேட்டுக் கொண்டே சென்றார். அதைக் கண்டு ஆமா அம்மாயி பேய் தான் அறைஞ்சிடுச்சு என்று கிளுக்கி நகைத்தவாறு அறையின் உள்ளே சென்றாள்..


இங்கு குளிக்க வந்தவன் எவ்வளவு நேரம் தான் குளிக்க முடியும் இதில் அவன் சென்று வெகு நேரமாகியும் அவன் வராததால் தமிழ் வந்து அத்தான் (இன்னைக்கு செத்தான்) என்று அழைக்கவும் பகீரென்று இருந்தது.. தோ வரேன் தமிழ் நீ போ நான் வரேன் என்று அவளை அனுப்பி வைத்தவன் உடை மாற்றிக்கொண்டு வந்தான்.


இவன் வரவும் சாப்பாடை இருவருக்கும் அறைக்கே எடுத்து வர அவளிடமிருந்து தப்பிப்பதாக நினைத்து அவளிடமிருந்து சாப்பாடு அடங்கிய தட்டை வாங்கி சாப்பிட ஆரம்பித்தான். இரண்டு வாய் வைத்திருப்பான் என்னடா அமைதியாயிருக்கு என்று அவளை நிமிர்ந்து பார்க்க அங்கே காளியாக உருமாறி கதிரை உக்கிரமாக முறைத்துக் கொண்டிருந்தாள்..


ஐயோ போச்சு இப்போ எதுக்கு முறைக்கிறா ஒன்னும் புரியலையே என்று திருத்திருவென விழித்தவன் அவள் பார்வை அவனையும் தட்டையும் மாறி மாறி பார்க்க ஒரு வாய் எடுத்து அவளுக்கு ஊட்டப் போக முகத்தை திருப்பவும் ஏய் தமிழ் சாரிடி என்று அவள் வாயருகே சாதத்தை கொண்டு செல்லவும் வள் முறைக்கவும் உன் காலுல கூட விழுறேன் டி இந்தா சாப்பிடு முறைக்காத எனக்கு பயமாயிருக்குல்ல என்று பரிதாபமாக விழிக்க சிரிக்க முயன்ற உதட்டை இழுத்துப் பிடித்து ஆவென்று வாயைத் திறந்தாள்..


உடனே அவளுக்கு ஊட்டியவன் தானும் உண்டு கை கழுவ அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு வந்தவள் அவனிடம் ஒன்றும் பேசாமல் தரையில் பாயை விரித்து படுத்துக் கொண்டாள். அவள் செயலைப் பார்த்தவன் ஏய் தமிழ் ஏன் கீழே படுக்கிற மேல படு இன்னும் கோபம் போகலையா சாரி டி நான் அடிச்சிருக்கக் கூடாதுதான் என்னை மன்னிச்சிடு நீ எல்லார் முன்னாடியும் அப்படி பேசவும் வேற யாராவது எதாவ சொல்லிடப் போறாங்கன்னு தான் அடிச்சிட்டேன்.


இதே மாமா அதாவது சொல்லியிருந்தா சண்டை பெருசாயிருந்துருக்கும் அதான் டி புரிஞ்சிக்கோ இல்லைனா நீ எப்படி சொல்லலாம் என் பொண்டாட்டியை என்று அவரும் நான் உனக்கு பரிஞ்சி பேசிக்கிட்டுப் போயிருந்தா இந்நேரம் பெரிய சண்டையாகி இருக்கும் தமிழு என்று விளக்க அவள் இவன் பக்கம் திரும்பாமல் ஒருக்களித்துப் படுக்க பின்னோடு வந்து அவளுடன் ஒட்டி உரசியவாறு படுத்துக் கொண்டான்.


நகருங்க இப்போ எதுக்கு கீழே வந்தீங்க போய் மேலே போய் படுங்க என்கவும் இல்லை தமிழ் தனியாப் படுத்தா பேய் வந்து கூடப் படுத்துக்கும்னு என் தமிழ் தான் சொன்னதா நியாபகம் என்று அவள் சொன்னதையே அவளிடமே திரும்பக் கூறினான்.


அவனை முறைத்தவள் மேலே ஏறி படுங்க என்று கூறவும் அப்போ நீயும் மேல வா எனக்கு தனியா படுக்க பயமா இருக்கு என்று கண்களில் குறும்புடன் கூறவும் அதே குறும்புடன் அவனை பார்த்தவாறு எழுந்தவள் அப்போ கொஞ்ச முன்னாடி என்கிட்ட சொன்னீங்கல்ல அதை பண்ணுங்க என்று கூறவும் அவன் என்ன சொன்னோம் என்று திருத்திருவென விழிக்கவும் அவனையும் தன் கால்களையும் மாறி மாறி பார்க்க உடனே நின்றுக் கொண்டிருந்தவள் கால்களைப் பிடித்தான் இப்பொழுது அதிர்ச்சியாக்

 நிற்பது அவள் முறையானது…


மோகம் மையம் கொள்ளும்...

Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments