Advertisement

Ad code

புயல் -14

 


மோகம்- 14:

சசியின் கண் கலங்கியிருந்ததைப் பார்த்தவள் ஏன் அக்கா இப்படி இருக்காங்க என்னாச்சுன்னு தெரியலையே ஏதோ பிரச்சனை இருக்கு எப்பொழுதும் இருக்கிறது போல இல்லை அவங்க இந்த முறை வீட்டுக்கு வந்ததுல இருந்து சந்தோஷமாகவே இல்லை பேருக்கு சிரிச்சிட்டு இருந்தாங்க இப்போ அண்ணா கூட பேசிட்டு இருக்கும் போது ஏன் கண் கலங்கிப் போறாங்க அண்ணா முகத்துலையும் சிரிப்பு இல்லையே என்னாச்சு என்று யோசித்துக் கொண்டிருந்தவளைக் குளத்தில் இருந்தத் தண்ணீரை வாரி அவள் மேல் தெளித்து அவள் சிந்தனையைக் கலைத்தான்.

என்ன டி யோசனை எல்லாம் பலமா இருக்கு ஏதோ வச்சு செய்ய போறப் போல (ஆமா ஆமா உனக்கு கும்மாங்குத்து கன்பார்ம்) என்று கிண்டலாகக் கேட்கவும் அப்படிலாம் ஒன்னும் இல்லை அத்தான் என்றதும் என்னாது ஒன்னும் இல்லையா என்னடி பொசுக்குன்னு இப்படி சொல்லிட்ட நான் கீ ஏதோ யோசிக்கவும் ஆஹா பிள்ளை ஏதோ நல்லதா நாலு யோசிச்சு வச்சிருப்பா இன்னைக் கலைக் கட்டப் போகுதுன்னு நினைச்சா இப்படி சொல்ற (ஆமா ராசா உனக்கு தான் இன்னைக்கு நல்லா வெயிட்டா இருக்கு கதிகலங்காம இருந்தா சரிதான்)

அத்தான் நான் வேற விஷயம் யோசிச்சேன் என்கவும் ஹே நம்மைப் பற்றி நினை டி என்று அவள் சிந்தனையைத் தன் பக்கம் திருப்பியவன் அவளிடம் விஷயம் என்னவென்று கேட்டிருக்கலாம் அடிப்படாமலாவது இருந்திருப்பான்.

(ஹிம்ம் விதி யாரை விட்டது அடி வாங்கனும்ன இருந்தா அதுக்கு நம்ம என்னப் பண்ண முடியும்)

பின் இருவரும் சற்று நேரம் குளத்தில் உள்ள தண்ணீரில் கால்களை நனைத்து விளையாடி விட்டு வர அனைவரும் வண்டியை நோக்கிச் சென்றனர்.ரகுவும் வண்டியில் ஏற சசி முன்னாடி இருந்த இருவர் அமரும் இருக்கையில் பிள்ளையை வைத்துக் கொண்டு அமர அதைக் கண்டும் காணாதது போல் ரகு பின்னாடி சென்று அமர்ந்துக் கொண்டான்.

சசியன் குழந்தை தூங்கவும் வடிவாம்பாள் அவனை வாங்கித் தன் மடியில் போட்டுக் கொண்டார். சசி தனியே அமர்ந்திருக்க தமிழ் கதிரிடம் அத தான் நான் அக்கா கூட உட்காருறேன் நீங்க அண்ணா கூட உட்காருங்க என் கவும் மூஞ்சை சுளித்தான்.பின் அவனிடம் கெஞ்சி அவளை சமாதானம் செய்து அவனை பின்னாடி அமர சொல்லித் தான் சசியுடன் அமர்ந்துக் கொண்டாள்.

இரண்டு மணி நேரப் பயணம் என்பதால் அனைவரும் தூங்கியிருக்க கதிரும் ரகுவும் ஏதோ தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்க சசியைத் திரும்பிப் பார்த்தாள்.அவள் ஜன்னல் புறம் திரும்பித் தன் முந்தானையில் கண்ணீரைத் துடைத்தவாறு இருக்க மெதுவக அவளது கையை எடுத்து தன் கையில் பொதிந்து வைத்துக் கொண்டாள். தமிழ் சசியின் கையைத் தட்டிக் கொடுக்கவும் ஆறுதலாக இருந்தது போலும் மடைத் திறந்த வெள்ளம் போல் தன் மனதில் இருந்த அனைத்தையும் தமிழிடம் கொட்டி விட்டாள்.

தமிழ் மாமாக்கும் எனக்கும் ஒரு மாதமா சண்டை தான் போயிட்டிருக்கு.. ஒரு மாதத்துக்கு முன்னாடி ஏதோ மீட்டீங்னு கிளம்பிப் போனவர் வரும் போது குளிச்சிட்டு வந்தார். அப்போ எதும் நான் கேட்டுக்கலை. அப்புறம் அதுவே வாரத்துக்கு ஒரு முறைன்னு ஆச்சு எனக்கு பயமா இருந்துச்சு அன்னைக்கு மீட்டீங்கு போனார் அதனால ஏன் குடிச்சீங்கன்னு நான் எதுவும் கேட்கலை ஆனால் வாரம் ஒரு முறை அதுவே தொடிவும் எனக்கு பயம் வந்துடுச்சு அதனால அவர்க்கிட்ட சண்டை போட்டேன்.

அவர் அப்போ ஓகே நான் இனி குடிக்கலைன்னு சொல்லிட்டு அப்புறம் அதுப்போலவே குடிச்சிட்டு வரவும் எனக்கு கோபம் வந்துடுச்சு நான் எதுக்கு குடிக்கிறீங்கன்னு திட்டினேன். குடிப் போதையில் என்னப் பண்றோம் எது பண்றோம்னு தெரியாம கோபத்தில் என்னைப் அடிச்சிட்டார். அதுக்கப்புறம் நான் அவர்க்கிட்ட பேசவே இல்லை. அவரும் எதும் பேசாம போய் படுத்துட்டார்.

அடுத்த நாள் காலையில் எழுந்து நான் பேசாம இருந்ததும் கெஞ்சினார்.நான் அவர்கிட்ட பேசலை எனக்கு கோபம் கோபமா வந்துச்சு அப்போதான் கோவிலுக்குப் போகனும்னு அம்மா கால் பண்ணினாங்க நான் கிளம்பி வந்துட்டேன் என்று அனைத்தையும் கூறினாள்.

இது உங்க அத்தை மாமாக்கு தெரியுமா அக்கா என்று தமிழ் கேட்கவும் இல்லை முத்து தெரியாது இவரும் எதுவும் சொல்லலைப் போல என்கவும் அண்ணா எப்படிக்கா உங்ககிட்ட அன்பா என்று இழுக்கவும் அதெல்லாம் நானென்றால் அவருக்கு உயிர் முத்து நான் இல்லாம அவரால் இருக்க முடியாது பாவம் நான் இல்லாம ரெண்டு நாளில் இளைச்சிப் போயிட்டார் என்று வருத்தத்துடன் கூறினாள்.

ஹிம்ம் விடுங்கக்கா பார்த்துக்கலாம் எல்லாம் சரியாப் போயிடும் என்று அவளுக்கு ஆறுதல் அளித்தவள் வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள். அனைவரும் வீட்டிற்கு வரவும் ரகு சசியைப் பார்த்துக் கொண்டே தன் அத்தை மாமாவிடம் கிளம்புறேன் என்று கூறவும் சசி தன்னுடன் வருவாள் என்று எதிர்ப்பார்த்தான் அவள் அசையவே இல்லை முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்றாள்.

அப்பொழுது தமிழ் வந்து அக்காவையும் அழைச்சிட்டுப் போங்க எவ்வளவு நாள் இங்கேயே இருப்பாங்க என்று கேட்கவும் தன் மனைவியை எப்படி சொல்லலாம் அவளுக்கென்ன தங்குவதற்கா இடமில்லை அங்கு கடல் போல வீடிருக்க இந்தப் பெண் இப்படி பேசுது.. இதற்கெல்லாம் சசி தானே இடம் கொடுத்தது என்று சுள்ளென கோபம் மூள வா போகலாம் என்று சசியிடம் குரலை உயர்த்தினான்.

அங்கு கூடியிருந்த அனைவரும் தமிழை அதிர்ந்து பார்க்க இதனை கேட்டுக் கொண்டிருந்த கதிர் எதையும் ஆராயாமல் அவள் கன்னத்தில் பளாரென அறை விட்டான்.அவன் அறைந்ததை நம்ப முடியாமல் அவனை கண்கள் கலங்க பார்க்க சுந்தரம் கதிரிடம் இது என்ன பொம்பளை பிள்ளை மேல கையை வைக்கிறது என்று அதட்ட அங்கு நிற்க முடியாமல் தன்னறைக்கு சென்று விட்டாள்.

பின் சசி ரகு குடித்த விஷயத்தை மறைத்து அங்கு இருந்தவர்களிடம் எனக்கும் மாமாக்கும் சின்ன சண்டை என்று விளக்கியவள் அதான் தமிழ் இப்படி பேசியிருப்பா. இப்படி பேசினா கோபத்துல என்னை அழைச்சிட்டுப் போயிடுவாருன்னு நினைச்சுத்தான் அப்படி பேசியிருப்பா என்று கூறினாள்.

ஐயோ இது தெரியாம நான் வேற அடிச்சிட்டேனே பாவம் தமிழ் வலிச்சிருக்கும் என்று தன்னறைக்கு செல்ல விழய தமிழே வெளியே வந்தாள். அவள் முகத்தைப் பார்த்ததுமே தெரிந்தது அழுதிருக்கிறாள் என்று முகமெல்லாம் சிவந்து கண்கள் கலங்கியிருந்தது. கதிரைக் கண்டுக் கொள்ளாமல் நேரே ரகுவிடம் சென்று அண்ணா என்னை மன்னிச்சிருங்க..நான் அப்படி பேசி இருக்கக் கூடாது தான். ஆனால் அப்படி பேசலைன்னா நீங்க அக்காவை வீட்டுக்குக் கூப்பிட்டிருக்க மாட்டீங்க அதான் அப்படி பேசினேன் சாரி அண்ணா என்று அவனிடம் மன்னிப்பு வேண்டினாள்.

ரகுவும் புரிந்துக் கொண்டு ச்சே ச்சே அதெல்லாம் ஒன்னுமில்லைம்மா பரவாயில்லை நீ வருத்தப்படாத என்று கூறினான்.பின் தன் அத்தை மாமாவிடம் திரும்பியவள் நீங்களும் என்னை மன்னிச்சிடுங்க என்று கேட்க அப்பத்தா அவளை அனைத்துக் கொண்டு என் ராசாத்தி நீ வாடா நாம போவோம் என்று தன்னறைக்கு அழைத்துச் சென்றார்.

அவர் அறைக்கு தமிழை அழைத்து செல்வதைப் பார்த்து ஐயோ போச்சு என்று உள்ளுக்குள் அதிர்ந்தான். தமிழ் சார் டி வா டி என்கிட்ட வந்துருடி ரூமுக்கு என்று மனதிற்குள் ஜெபம் செய்துக் கொண்டிருந்தான்.

அன்று இரவு அவனை ஏமாற்றாமல் தன்னறைக்கு வந்தவளிடம் சென்று அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு சாரி தமிழ் என்று கேட்கவும் அவனிடமிருந்து தன் கையை வலுக்கட்டாயமாகப் பிரித்தெடுத்தவள் விட்டாளே ஒரு அறை இப்பொழுது அதிர்ந்து பார்ப்பது கதிரின் முறையானது.

கோபப்படுவாள் என்று தெரியும் ஆனால் அவள் அடிப்பாள் என்று கனவிலும் நினைக்கவில்லை.. 

(இதுக்கெல்லாம் ஜோசியமாய்யா பார்க்க முடியும்)

(ஐயோ எனக்கு சிரிப்பு சிரிப்பா வருதே.. ஹி ஹி ஹி…)


மோகம் மையம் கொள்ளும்...

Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments