Advertisement

Ad code

புயல் -13

 


மோகம்- 13: 

 இரண்டு மணி நேர பயணத்திற்குப் பிறகு ஒரு அடர்ந்த காட்டின் வழியே சென்று இதற்கு மேல் வண்டி செல்லாது என்பது போல் ஓங்கி வளர்ந்த மரங்களும் கற்பாறைகளும் இருக்க அனைவரும் வண்டியை விட்டு இறங்கினர். கதிரிடம் ஏன் அத்தான் வேற வழியில்லையா இந்த வழியாகத்தான் போகனுமா என்று கேட்க ஒரு பத்து நிமிஷம் நடந்துப் போனா கோவில் வந்துடும் டா வா என்று அவளின் கைகளைப் பிடித்துக் கொண்டவன் தன் அன்னையிடம் இருந்த பூஜை சாமான் அடங்கியப் பையை வாங்கிக் கொண்டான். தமிழ் கால் வலிக்குதுன்னா சொல்லுடா தூக்கிக்கிறேன் என்கவும் தமிழைப் பார்த்து சசியும் பார்த்தியும் ஹிம்ம் ஹ்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் என்று நமட்டுச் சிரிப்பு சிரிக்க கதிரை முறைத்தாள். 

கதிர் அவளுக்கு மட்டும் கேட்கும்படி ஏய் தமிழ் உனக்கு கால் வலிக்குமேன்னு தான் டி தூக்கிக்கிறேன்னு சொன்னேன் மத்தப்படி நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை என்கவும் என்னு தூக்க மாட்டீங்களா இருங்க உங்களை என்று அவனை முறைத்தவள் ஏன் துரை சாருக்கு என்னை தூக்குறத விட உங்களுக்கு அப்படி என்ன வெட்டி முறிக்குற வேலை இருக்கு என்று இவனிடம் குசுக்குசுவென பேசிக்கொண்டே வர கீழே கிடந் கல்லை பார்க்கத் தவறிவிட்டாள்.

 அங்கு கிடந்த சிறு கல்லில் காலை இடித்துக்கொள்ள ஆஹ் என்று அலறி வலியில் துடித்துக் கீழே விழப் போனவளை இடது கையில் அவளை விழாமல் பிடித்துக் கொண்டான். அவள் அருகில் வந்த அப்பத்தா கீழே பார்த்து வரக்கூடாதா தமிழ் என்று கடிந்துக்கொண்டே அவள் காலை ஆராயக் கீழே குனியவும் இரு அப்பத்தா நான் பார்க்கிறேன் என்று தான் கையில் வைத்திருந்த பையைப் பார்த்தியிடம் கொடுத்து விட்டு அவள் காலைப் பார்க்க பெருவிரல் சிவந்திருந்தது. காலை அசைக்க முடியவில்லை என்று தமிழ் கூற ஐயா கதிரு காலை உருவி விடுப்பா என்று அப்பத்தா கூறவும் அவன் காலை உருவி விட ஆஹ் வலிக்குது வலிக்குது வேண்டாம் விடுங்க என்று அவன் கையைத் தட்டிவிட்டாள். இரு டி உருவி விட்டாதானே சரியாகும் கொஞ்சம் வலி பொறுத்துக்க என்று கோபமாக அதட்டவும் அதில் கோபமானவள் அம்மாச்சி வலிக்குது என்னால நடக்க முடியாது போல என்று கூறினாள். 

 அப்பத்தா உடனே கதிரிடம் கதிரு பிள்ளையைத் தூக்கிட்டு வா நாங்க முன்னாடி போறோம் என்று அனைவரும் கிளம்ப கதிர் அவள் காலில் வேறு எங்காவது அடிப் பட்டிருக்கிறதா என்று பார்த்து அவளை மெதுவாகக் காலை அசைக்க சொன்னான். ஆனால் அவளால் காலை அசைக்க முடியவில்லை.ஆஹ் அத்தான் அசைக்க முடியலை என்று கீழே தன் காலருகில் குனிந்திருந்தவனின் தோளில் தன் முகத்தைப் புதைத்தாள். கொஞ்சம் பொறுத்துக்கோ தமிழ் சாரிடி என்கிட்ட பேசிக்கிட்டே வந்ததுலதான் கவனிக்காம இடிச்சிக்கிட்ட என்று அவள் காலை கைகளால் தேய்த்து விட அத்தான் வாங்க கோவிலுக்கு போவோம் எல்லாரும் போயிட்டாங்க என்கவும் எழுந்தவன் அவளைத் தன் கைகளில் அள்ளிக் கொண்டான். 

 அவன் தன்னை தூக்கியதும் உள்ளுக்குள் சிரித்தவள் எப்படி தூக்க வச்சேன் பார்த்தீங்களா என்று உள்ளுக்குள் அவனிடம் உரையாடினாள். தன்னை எந்த ஒரு சிரமமும் இல்லாமல் தூக்கிக் கொண்டு நடந்தவனைக் கண்டு காதல் பெருக்கெடுக்க தன்னருகில் இருந்த அவன் கன்னத்தில் முத்தம் கொடுக்க தமிழ் சும்மா வா கோயிலுக்கு போயிட்டிருக்கோம் கன்னத்தை எச்சல் பண்ணாத என்கவும் அவளுக்கு வந்ததே கோபம் எச்சலா இருங்க என்று உடனே அவன் கழுத்தில் தன் நாவால் கோடிழுத்தாள். 

 அவள் எச்சில் ஈரத்தின் குளுமையில் தன்னுள் பல மின்னல்கள் உருவாக அவளைத் தன்னுடன் சேர்த்து இறுக்கினான்.அவன் தன்னை இறுக்கவும் அத்தான் என்று அவன் காதருகில் சென்று அத்தான் எனக்கு கால் நடக்க முடியும் அடிப்பட்டதுல வலி இருந்துச்சு தான் ஆனா நடக்க முடியும் என்கவும் தன் கைகளில் அழுத்தம் கொடுத்தவாரே எனக்கும் அது தெரியும் டி என்று சிரித்துக் கொண்டே கூற அத்தான் என்று அதிர்ச்சியாக விளித்தாள். 

 என்னடி அத்தான் பொத்தான்னுட்டு வா அப்படியே ஓடிப்போயிடலாம் வா வா என்று வந்த வழியே திரும்பி நடக்க ஐயோ அத்தான் வாங்க போகலாம் அங்க எல்லோரும் நமக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க வாங்க வாங்க என்று அவனிடமிருந்து இறங்குவதற்காக திமிறினாள். ஓய் தமிழு ஆடாம அசையாம இருடி எல்லாம் என் மேல உரசி எங்கேயோ கூட்டிட்டுப் போகுது..

 நீ தானே சூடேத்திவிட்ட அதை நீ தானே தணிக்கனும் வாடி வா என்று அவளிடம் கண்ணடித்தவாறு கூற ஐயோ நானே போய் மாட்டிக்கிட்டேனே என்று வாய்விட்டே புலம்ப ஆமா ஆடு தானே வந்து என்னை வெட்டு வெட்டுன்னு சொன்னா நான் சும்மா விடுவேனா என்று கேட்க வாங்க அத்தான் அங்க எல்லோரும் வெயிட் பண்ணுவாங்க. அட இரு தமிழ் வாடி போகலாம் என்று வேண்டுமென்றே அவளைத் தூக்கிக் கொண்டு போவது போல பாசாங்கு செய்ய ஐயோ என்று அலறினாள். விளையாண்டது போது என்று நினைத்தவன் கோயில் நோக்கி நடக்க இறக்கி விடுங்க அத்தான் நான் நாந்து வரேன் என்று இறங்க வந்தவளை கோவில் நெருக்கும் போது இறக்கி விடுறேன் டி அதுவரையும் என்கிட்டையே இரு என்று தூக்கிக்கொண்டு நடந்தான். 

 கோவில் நெருங்கவும் இறக்கி விட்டவன் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு நடந்தான். அக்கோவிலைக் கண்டதும் அத்தான் இது ஐயனார் கோவிலி என்று கேட்டதும் கருப்பசாமி கோவில் டா பெரிய கருப்பு சின்ன கருப்பு ரொம்ப சக்தி வாய்ந்த சாமி என்று விளக்கினான். ஒஹ் என்று அவன் சொல்வதைக் கேட்டவாரே சுற்றிப் பார்த்தாள். அங்கு பொங்கல் வைக்கும் இடத்தில் அனைவரும் கூடியிருக்க அவர்களிடம் சென்று நின்றுக் கொண்டாள்.

அப்பொழுது தான் பார்த்தாள் ரகு வந்திருக்க வாங்க அண்ணா எப்படி இருக்கீங்க என்று விசாரிக்க கதிரும் தன் தங்கையின் கணவனைப் பார்த்து எப்போ வந்தீங்க மாமா என்று விசாரித்து அவர்கள் பேசிக் கொண்டிருக்க அப்பத்தா தமிழை அழைத்தார். முத்து வந்து பொங்கல் வைடா என்று சொல்லவும் அவர்கள் சொன்னபடி அனைத்தையும் செய்தாள்.

 பின் சாமிக்குப் படையலிட்டு கொஞ்ச நேரம் அங்குள்ள மண்டபத்தில் அமர்ந்திருக்க அப்பத்தா கதிரிடம் தெப்பக்குளத்துக்கு தமிழை அழைச்சிட்டுப் போயிட்டு வாப்பா என்று கூறினார். இருவரும் குளத்திற்கு வர அங்கு ஏற்கனவே சசியும் ரகுவும் எதோ பேசிக் கொண்டிருந்தவர்கள் இவர்களைக் கண்டதும் சிரித்து விட்டு மண்டபத்திற்கு செல்ல கதிர் பார்த்தானோ இல்லையோ சசியின் கண்கள் கலங்கியிருந்ததை தமிழ் பார்த்தாள்.

 என்னாச்சு என்று யோசனையிலே தங்களைக் கடந்து போன சசியையே பார்த்துக் கொண்டிருந்தாள். பின் சிறிது அங்கிருந்து விட்டு அனைவரும் கிளம்பி வீட்டிற்கு வர ரகு கிளம்புவதாக சொல்லவும் தமிழ் அக்கா நீங்க போகலையா அண்ணா கிளம்புறாங்க போங்க எவ்வளவு நாள் தான் இங்கேயே இருக்குறது என்று கூற சசி ரகுவைப் பார்க்கவும் அவள் இங்க இருக்கட்டும் என்ற ரகுவிடம் இன்னும் எவ்வளவு நாள் தான் இங்க இருப்பாங்க என்று ஒரு மாதிரி தமிழ் கூறவும் ரகுவிற்கு சுள்ளென கோபம் வர சசி கிளம்பு என்று சத்தத்தை உயர்த்தவும் கதிர் எதையும் அறியாமல் தமிழை என்ன வாய் நீள்து என்ன நினைச்சிட்டு இருக்க வீட்டு மாப்பிள்ளைக்கிட்ட எப்படி பேசணும்னு தெரியாது என்று அனைவரின் முன்பும் கோபத்தில் அடித்து விட்டான். அவன் அறைந்ததும் தன் அத்தானா தன்னை அடித்து விட்டான் என்று நம்ப முடியாமல் கன்னத்தில் கை வைத்து கண்கள் கலங்க அதிர்ந்து பார்த்தாள்.

 மோகம் மையம்

 கொள்ளும்...

Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments