Advertisement

Ad code

புயல் -12

 


மோகம்- 12:


வயலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தவன் தன் அறையில் இருந்து வெளிவந்த வடிவாம்பாளை எதிர்க் கொண்டவன் என்னம்மா என்று கேட்கவும் தமிழுக்கு போட்டுக்க கொஞ்சம் கொடுத்ததுட்டுப் போக வந்தேன் பா சீக்கிரம் கிளம்புங்க நேரமே போனா மதியம் போல வந்துரலாம் இல்லையா அதான் நான் அத்தை ரெடியாகிட்டாங்களான்னு பார்த்துட்டு வரேன் என்றவாறு தன் அத்தையின் அறையை நோக்கிச் சென்றார்.


சரிம்மா என்று தன் அறைக்குள் வந்தவனை எந்த நகை போடலாம் என்று ஆராய்ச்சி செய்துக் கொண்டிருந்த தமிழைத்தான் கண்டான். கண்ணாடி முன்பு நின்றுக்கொண்டு ஒவ்வொரு நகையாய் கழுத்தில் வைத்து எது தனக்கு அழகாக இருக்கிறது என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.அவள் நகைப் போடுவதில் முனைப்பாக இருந்ததால் உள்ளே வந்தக் கதிரைக் கவனிக்கவில்லை. இப்பொழுது தான் குளித்திருப்பால் போலும் இடைத் தொடும் கருங்கூந்தலில் இருந்து சொட்டு சொட்ட கத் தண்ணீர் விழ அவள் கழுத்தில் நகை அணிவதற்காக இரண்டு கைகளையும் தூக்கியிருக்க மேல் சட்டை கொஞ்சம் மேலேறி பலப் பலப்பான வெண்மை நிற இடை என்னை வந்து தொட்டுப்பார் என்று கதிரிடம் அழைப்பு விடுக்க அதன் பிறகு சும்மா இருப்பான் என்றா நினைக்கிறீர்கள்.


சட்டென்று தன் தமிழிடம் பாய்ந்து அவள் பின் உடலை தன் உடல் உரச நின்றவன் அவள் முதுகில் படர விட்டிருந்தக் கூந்தலை ஒதுக்கி முன்புறமாகப் போட்டவன் அவள் இடையைத் தன் இரு கரங்களால் அளந்தவறு வருடிக் கொண்டே அவள் கழுத்தில் முகம புதைக்க அவள் உடல் குளிர்ச்சியாக இருக்க இவன் உடல் சூட்டின் வெப்பம் அதிகரித்தது.


சட்டென்று வந்து பின்னாலிருந்து அணைக்கவும் அதிர்ந்த வள அத்தான் நகையைப் போட்டுப் பார்த்துட்டிருக்கேன் விடுங்க என்கவும் நானே போட்டு விடுறேன் தமிழ் என்றவாறு அவள் கைகளில் இருந்த ஆரத்தை வாங்கியவன் தன் கைகளால் ஆரத்தைப் போட்டு விடுகிறேன் என்ற பெயரில் அவள் கழுத்தில் அங்கும் இங்கும் ஊர்ந்து சில பல இன்ப இம்சைகளை செய்து சூடேற்றினான்.


அவன் செய்கையில் கிறங்கியவள் அவன் மேல் பின்புறமாக சாய நகையை அணிந்தவன் டிரெஸ் போடலையா தமிழ் கோயிலுக்கு கிளம்பனுமில்லையா என்று அவன் கைகளால் அவள் இடை வழிப் பயணித்து வயிற்றில் பல வட்டங்கள் இட்டு இன்னும் மேலேற அப்படியே தன் கரங்கள் கொண்டு அவன் கரங்களைப் பிடித்தவள் அத்தான் போய் குளிச்சிட்டு வாங்க. சீக்கிரம் அத்தை கிளம்ப சொன்னாங்க என்று கூ அவள் கரத்தை தட்டி விட்டு தன் கரங்கள் கொண்டு கொத்தான சதையைப் பிடித்து இறுக்கி தமிழ் என்று மோகத்துடன் அழைக்க ஆஹ் அத்தான் வலிக்குது என்று கூச்சலிட்டவள் அவன் கைகள் செய்த மாயத்தில் அவன் கைகளில் உருகவாரம்பித்தாள்.


அவள் கழுத்தில் முகம் புதைத்து அவள் வாசத்தை உள்ளிழுத்து தன் நுரையீரலில் நிரப்பிக் கொண்டவன் தமிழ் எனக்கு வேணும் டி என்று தன் தாடியால் அவள் தாடையை உரச அதில் கூசி சிலிர்த்தவள் அத்தான் நேத்து நைட்டுப் போலவே இன்னைக்கும் கோயிலுக்குப் போயிட்டு வந்து கண்டிப்பா அத்தான்.. இப்போ கோயிலுக்கு கிளம்பனும் விடுங்க அத்தான் என்று கெஞ்ச அப்போ நேத்து செஞ்சது போலவே செய் தமிழ் செமையா இருந்துச்சு என்று அவளை நாமென்ன பண்ணினோம் என்று யோசிக்க வைத்துவிட்டு நான் போய் குளிச்சிட்டு வரேன் என்று துண்டை எடுத்துக் கொண்டு சென்றான்.


அவன் சென்றதும் அப்படி என்ன செமையா செஞ்சோம் அத்தான் சொல்றளவுக்கு என்று யோசிக்க எவ்வளவு யோசித்தும் எதுவும் நினைவு வராததால் கோவிலுக்கு கட்டிக்கொண்டு செல்ல எடுத்து வைத்தப் புலவையை எடுத்தவள் ரவிக்கையும் பாவாடையும் அணிந்துக் கொண்டு இதை எப்படி தான் கட்டுறாங்களோ எப்பா கட்டுறதுக்கு முன்னாடியே கண்ணை கட்டுதே முடியல என்று அந்தப் பட்டுப் புடவையை இப்படியும் அப்படியும் திருப்பிப் பார்த்தாள்.


எவ்வளவு பார்த்தும் எது எந்தப் பக்கம் என்று தான் தெரியவில்லை அத்தை அப்பொவே கேட்டாங்க நான் கட்டிவிடவான்னு பெரிய இவ மாதிரி நான் கட்டிக்கிறேன்னு சொன்ன இப்போ ஒன்னுமே தெரியலை உனக்கு வாய் மட்டும் தான் தமிழு என்று தனக்குள்ளே புலம்ப ஆரம்பித்தாள். நேரம் தான் போனது ஆனால் புடவை கட்டியப்பாடு தான் இல்லை. கதிர் குளித்து விட்டே வந்துவிட்டான்.


தன் தலையைத் துண்டால் துவட்டிக் கொண்டே வந்தவன் இவன் வெறும் பாவாடை ரவிக்கையுடன் நிற்கவும் என்ன டி இப்படி நிக்கு நேத்து வீடியோலாம் பார்த்துட்டு இருந்த இப்போ என்ன அப்படியே நிக்கு என்றவாறு துண்டை கட்டில் மேல் போட்டவன் அவளிடம் வந்தான். இல்லை அத்தான் இது சாதாரண புடவையா இருந்தா வீடியோ பார்த்து ஈசியா கட்டிருப்பேன். ஆனால இது பட்டுப் புடவையா இருக்கு அதுவும் வெயிட் அதிகமா இருக்கு என்று கூற அம்மாவ கட்டி விட சொல்ல வேண்டியது தானே என்று அவளிடமிருந்து புடவையை வாங்க இப்போ கொஞ்சம் நேரம் முன்னாடி வந்தாங்க அத்தான்.


அவர்க என்கிட்ட கேட்டாங்க நான் புடவை கட்டி விடவா முத்துன்னு நான் தான் நான் கட்டிக்கிறேன் அத்தைன்னு சொன்னேன்.அவங்க நகையைக் கொடுத்துட்டு போயிட்டங்க என்று சோகமகக் கூறினாள்.ஏன் டி அம்மா சொன்னப்போவே அவங்ககிட்டையே கட்டிருக்கலாமில்ல என்கவும் அவங்க முன்னாடி இப்படி நிற்க கூச்சமா இருந்துச்சு அத்தான் என்று கூற உடனே அவளருகில் வந்தவன் அப்போ என் முன்னாடி இப்படி நின்னா ஓகேவா தமிழ் என்று அவளை மேலிருந்து கீழாகப் பார்த்தவாரு கூறினான்.


அப்பொழுதுதான் அவன் பார்வையை உணர்ந்தவன் திரும்பி நின்றுக் கொண்டாள். அவள் பின்புறமாக வந்து நின்று அணைத்தவன் இப்போ தான் தமிழ் முழுசா எல்லாம் தெரியுது என்கவும் புரியாமல் அவனை பார்க்க அவனோ அவள் முகத்தை தனக்கு எதிர்ப்புறமாகத் திருப்பினான். அப்பொழுது தான் தனக்கு முன்னால் கண்ணாடி இருப்பதை உடனே தன் மடத்தனம் புரிந்து வெட்கத்துடன் அவனை திரும்பி அணைத்துக் கொண்டாள்.


தன்னுடன் இறுக்கி அணைத்துக் கொண்டவன் அவள் மேல் எழுந்த தீரா ஆசையில் தமிழ் என்று அவள் கன்னத்தில் பிள்ளை முத்தம் கொடுத்தவன் அவளை நகர்த்தி நிறுத்தி புடவையை எடுத்து கட்டிவிட்டான். புடவையைக் கட்டிவிடும் சாக்கில் என்னவெல்லாம சில்மிஷங்கள் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து அவளை சிவக்க வைத்து தானும் கிளம்பி அவளையும் கிளப்பி வெளியே வந்தான்.


இருவரும் வெளியே வர அனைவரும் அங்கு நின்றிருந்த வேனில் ஏறினர். வடிவாம்பாளிடம் எல்லா பொருட்களையும் எடுத்து வச்சாச்சா வடிவு என்று சுந்தரம் கேட்க எல்லாம் எடுத்து வச்சாச்சுங்க என்று கூறியதும் டிரைவரிடம் வண்டியை எடுப்பா கிளம்பலாம் என்று கூறினார்

.


மோகம் மையம் கொள்ளும்...

Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments