Advertisement

Ad code

புயல் -11

 


மோகம்-11:


அதிகாலை ஐந்து மணிக்கு முழிப்பு வந்தவன் பார்த்ததென்னவோ தன் கைவளைவில் தலைவைத்து சிறுபிள்ளை போல் வாயை ஆவென்று பிளந்து தூங்கும் தமிழைத்தான்.. அவளைக் கண்டு சிரித்தவன் அதீத காதலுடன் உச்சந்தலையில் முத்தமிட்டவாறு தமிழ் என்று கிசுக்கிசுப்பாக அழைத்தான்..


ஹிம்ம் என்ற சத்தத்துடன் அவன் நெஞ்சில் கை போட்டுத் தன்னுடன் இறுக்கியவாரே படுத்தவள் இதழைத் தன்னிதழ் கொண்டு சிறைப் பிடித்தவன் பிறகு விடவேயில்லை..

அவள் இதழில் தன் இதழைப் புதைத்ததும் தன்னுள் எழும் பல மின்சாரங்களைக் கண்டு திகைத்தான். தான் தானா இது.. இவள் வந்ததில் இருந்து தான் இப்படி இருக்கேன்.. இப்படி இருக்குறது எனக்கும் பிடிச்சிருக்கு என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு அவள் இதழில் ஊறும் தேனை சொட்டு விடாமல் பருகினான்.


தூக்கக் கலக்கத்தில் தமிழுக்கு ஒன்றும் புரியவில்லை.. அவன் கடித்து இழுக்கவும் அவள் கனவென்று நினைத் உரை ஆரம்பித்தாள். வாங்குள்ளாகவே முனக ஒன்றும் புரியவில்லை அவள் ஏதோ முனகவும் அவளிதழில் இருந்து பிரிந்தவன் காது கொடுத்துக் கேட்க டேய் கருப்பட்டி விடுடா.. கம்மங்கொல்லையில் மாடு புகுந்தக் கதையா இருக்கு நீ ரொம்ப மோசம்.. நீ இப்போல்லாம் சரியில்லை உன்னை சாமியாருன்னு நினைச்சேன் ஆனால் நீ ஆசாமிடா என்று ஏகத்தும் டா போட்டுப் பேச அடியாத்தி என்று வாயில் கையை வைத்தான்.


புலம்பிக் கொண்டிருந்தவள் தீடிரென்று சிரித்து ஆனா எனக்கு இந்தக் கதிர ரொம்ப பிடிச்சிருந்தது தெரியுமா சேட்டை பண்ற ஹான் இப்போத்தான் உனக்கு நான் கண்ணுக்கு தெரிஞ்சேனா சொல்லுடா என்று தன் இருக்கைகளையும் முன்னால் கொண்டுவர அடியேய் அம்மு எழுந்திரி டி காலையிலேயே இத்தனை அலப்பறைப் பண்ற என்று அவள் கைகளை ஒரு கையால் பிடித்தவன் அவள் கன்னத்தைக் கடித்தான்.


அவன் கடித்ததால் ஏற்பட்ட வலியில் கன்னத்தைத் தேய்த்தவாறு திடுக்கிட்டு எழுந்தவள் தன்னை பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தவனைக் கண்டு இவன் ஏன் காலையிலேயே இப்படி பல்லப் பல்லக் காட்டுறான்.. நாம ஏதாவது தூக்கத்தில் பண்ணிட்டோமா அவங்ககிட்ட எதாவது தப்பா நடந்துக்கிட்டோமா என்று நினைத்துக் கொண்டே ஐயோ என அலறினாள்


இப்போ எதுக்கு தமிழ் கத்துற அவள் கையைப் பிடித்துக் கொண்டு கேட்டவனை கண்டு ஏன் அத்தான் சிரிக்கிறீங்க நான் தூக்கத்துல ஏதாவது தப்பா நடந்துக்கிட்டேனா என்று அச்சத்துடன் கேட்க தப்பா நடந்துக்கிட்டியாவா ஐயோ ஐயோ நான் இதை எங்கன்னு போய் சொல்லுவேன் யாருக்கிட்ட போய் சொல்லுவேன்..


நைட்டோட நைட்டா எல்லாத்தையும் முடிச்சிட்டுக் காலையில் நல்லப் பிள்ளை மாதிரி ஒன்னும் தெரியாதது போல தப்பா நடந்துக்கிட்டேனான்னு கேட்குற இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியலை.. நேத்து நைட்டு என்னை கெட்டப் பிள்ளைனு சொன்ன நீ தான் டி ரொம்ப ரொம்பக் கெட்டப் பிள்ளை என்கவும் என்ன அத்தான் ஆச்சு என்று ஐயோ என்ன பண்ணினேன்னு தெரியலையே என்று நினைத்துக் கொண்டே கேட்டாள்.


இன்னும் என்ன நடக்கனும் இல்லை என்ன நடக்கனும்னு கேட்கிறேன் அதான் எல்லாத்தையும் பண்ணி முடிச்சிட்டியே இனி நான் செய்ய ஒன்னும் இல்லை என்று சோக முகத்துடன் கூற ஐயோ என்று கூவினாள். ஹிம்ம் இப்போ ஐயோன்னு கத்துை என்ன பிரோயஜனம் எல்லாம் முடிஞ்சிப் போச்சு விடுடி விடுடின்னு கத்துனேன் கேட்டியா என் பேச்சையே கேட்க மாட்டுற..


சொல்ற பேச்சைக் கேட்காம எல்லாத்தையும் முடிச்சுட்டு ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி வந்து கேட்கிற போடி என்கிட்ட பேசாத என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர்ந்து விட்டான்.அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை நான் தான் சொல்றேன்னா அதையும் நம்புறா மக்கு பாப்பா என்று கொஞ்சிக் கொண்டான்.


கதிர் சொல்ல சொல்ல அதிர்ந்தவள் ஐயோ எனக்கு ஏதும் நியாபகம் வரலையே ச்சே தூக்கத்துல எப்படியெல்லாம் பண்ணிருக்கேன் பாவம் அத்தான் (அவனா பாவம் ஐயோ ஐயோ) ஆனால் எனக்கு ஏதும் நியாபகம் வரலையே என்று பேசித்தவள் எதுவும் நியாபகம் வராததால் அவனிடமே கேட்டாள்.. அத்தான் நான் என்ன பண்ணினேன் எனக்கு எதுவும் நியாபகம் வர மாட்டுது என்று வினவினாள்.


ஐயோ இப்படி திடீர்னு கேட்டா நான் என்னன்னு சொல்லுவேன்.. இப்போன்னு எதுவும் வரலையே என்று உள்ளுக்குள் ஜர்க்கானவன் அவள் தூக்கக் கலக்கத்தில் உளறியதை மட்டும் கூறினான். தமிழ் நீ என்னை வாடா போடான்னு கூப்பிட்டு என்னலாம் பேசினத் தெரியுமா என்று சோகப் படம் ஓட்டினான்.. நான் அப்படியே ஷாக்காயிட்டேன் அதுக்கப்புறம் எல்லாமே முடிஞ்சிப் போச்சி போடி நீ என்கிட்டப் பேசாத என்று திரும்பியவனை சரி விடுங்க அத்தான் எப்போவாச்சும் நடக்கப் போறது தானே அது நேத்து நைட்டே நடந்து போச்சு விடுங்க.. இதுல என்ன இருக்கு என்று அவள் அசால்ட்டாகக் கூறினாள்.


அடிப்பாவி நேத்து அப்படி நெளிஞ்சிட்டு இப்போ இப்படி சொல்றா என்று உள்ளுக்குள் நினைத்தவன் தமிழ் ஒரு துப்பு பண்ணினா அதை மறு தடவை பண்ணும் போது தப்பா தெரியாதாம் வா இப்போ பண்ணலாம் என்று அவள் கையைப் பிடித்து இழுத்தான் ஐயோ அத்தான் என்னப் பண்றீங்க விடுங்க அத்தை வரப் போறாங்க டைம் ஆயிடுச்சு நான் போய் குளிச்சிட்டு வாசல் தெளிச்சிட்டுக் கோலம் போடணும் என்று அவனை விலக்கினாள்.


மணி ஆறு கூட ஆகலை அதுக்குள்ள என்னடி வா என்று இழுக்கவும் நீங்க ரொம்ப மோசம் அத்தான் என்று வாயடிக்கவும் இப்போ மட்டும் அத்தான் ஆனால் நைட் தூங்கும் போது வாடா போடா கதிர் சொல்ற ஹிம்ம் என்று நாக்கைக் கடித்து மிரட்டுவது போல் குரலை உயர்த்தவும் வெட்கத்துடன் சிரித்தாள்.அப்பொழுது அறைக்கதவுத் தட்டப்பட தமிழ் போய் திறந்தாள்.


வடிவாம்பாள் தான் நின்றிருந்தார்.. முத்து சீக்கிரம் குளிச்சிட்டு கிளம்புங்க காலையிலேயே போனா தான் மதியம் போல வீட்டுக்கு வர முடியும் என்று கூறிவிட்டு சென்றார். அறையின் உள்ளே வந்த தமிழ் போர்வையை மடித்துக் கொண்டிருக்க கட்டிலை சுற்றி அவளிடம் வந்து பின்னாலிருந்து அணைத்துக் கொண்டு அம்மு ஒரு உம்மா கிடைக்குமா என்று அவளுடன் இழைத்துக் கொண்டே கேட்டான்.


போங்க அத்தான் என்று ஏதோ அவள் கூ வர ஹே தமிழ் தயவு செஞ்சு வெட்கமா இருக்குன்னு மட்டும் சொல்லிடாத டி அப்புறம் நேத்து நைட் உனக்குள்ள சந்திரமுகி புகுந்துருச்சுன்னு நான் நினைச்சுக்குவேன்.. ஒரு உம்மாக்கு இந்த அக்கப்போரா ஆமா அதென்ன அம்மு செல்லப் பேரா என்று கன்னங்குழிய சிரிக்க ஆமா என் செல்லமான செல்லத்தின் செல்லப் பெயர் என்று கூற ஆஹான் என்று கூறி சிரிக்க ஏன் உனக்கு பிடிக்கலையா டி என்று அவள் கழுத்தில் தன் தாடையைப் பதித்தவாறு அவளுடன் இழைந்துக் கொண்டே கேட்க யாரு சொன்னா எனக்கு பிடிக்கலைன்னு அவ அவ புருஷன் செல்ல பேரு சொல்லிக் கூப்பிட மாட்டானான்னு ஏங்கிப் போயிருக்கா எனக்கு வரமா வருது அது எப்படி வேண்டாம்னு சொல்லுவேன் என்று தானும் அவன் இரண்டு நாள் தாடியுடன் கூடிய தாடையில் தன் கன்னத்தைத் தேய்த்தவாறு கூறினாள்.


ஹிம்ம் ஹிம்ம் சரிடா நான் கொஞ்சம் வயல் வரைக்கும் போயிட்டு வரேன் நீ கிளம்பி இரு சரியா என்று அவள் கன்னம் தட்டியவன் வயலுக்கு சென்றான். கதிர் தன் புல்லட்டை எடுக்காமல் பக்கத்தில் இருக்கும் களத்திற்கு நடந்தே போக எதிரே தீனா பெரிய பையுடன் நடந்து வந்து கொண்டிருந்தான்.


இவனை கண்டும் காணாதது போல் செல்ல முயன்றவனை என்ன இஞ்சி ( அது இஞ்சினியர்னு பீத்திக்கிட்டு இருக்கும் அதான் இந்த பேரு) இந்த பக்கமா போற ஓ வீட்டை விட்ட தொரத்திட்டாங்களா ஐயோ பாவம் என்று சோகம் போல் சொல்ல ஏய் என்று எகிர ஏய் ஏய் என்ன ஏய் என்று தன் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அவனை நெருங்க பயத்தில் இரண்டடி பின்னால் தள்ளிச் சென்றான்.


அவன் பின்னால் நகரவும் அது அந்த பயம் இருக்கட்டும் இஞ்சி..என் பொண்டாட்டிக் கிட்ட வாலாட்டுன பொழுதே உன்னை நையப் புடைச்சிருக்கனும் உங்க அப்பா முகத்துக்காகத்தான் விட்டு வச்சிருக்கேன்.. ஓடிடு என் கண்ணுல நீ இனி படக்கூடாது பொறுக்கி என்று அவன் முதுகில் ஓரடி பளீரென வைத்தவன் தன் வயலுக்குச் சென்றான்.


டேய் கதிர் உன்னை ஏதாவது பண்ணலைன்னா என் பேரு தீனா இல்லடா.. (ஏன் சூனா பானா இந்த குதி குதிக்குது..)


நேற்று இரவு தீனாவின் தந்தைபெரிய பண்ணை அவனை வீட்டுக்குள்ளேயே விடவில்லை.. இவன் ஏன் டி இப்படி இருக்கான்..இவன் நம்மை பிள்ளை தானா இல்லை ஹாஸ்பிட்டலில் பிள்ளை மாறிப் போச்சா.. என் மானத்தை வாங்குறதே இவன் வேலையா பேச்சு அந்த கதிர் தம்பி என்ன செஞ்சா இவனுக்கு என்ன.. அவனை மாட்டி விடுறேங்கிற பேருல இவன் போல் மாட்டிக்கிட்டு என் உயிரை வாங்குறான்.


இவனுக்கு என்ன டி நான் குறை வச்சேன்.. இனி ஒரு நிமிஷம் கூட என் முன்னாடி இருக்கக் கூடாது.. எங்கயாவது போக சொல்லு என்று தன் மனைவியிடம் கூறியவர் அவனை முறைத்து விட்டு உள்ளே சென்று விட்டார்.



தீனாவின் தாயோ பிள்ளைக்கும் பேச முடியாமல் கணவன் சொல்லை எதிர்த்தும் பேச முடியவில்லை.. கையைப் பிசைந்துக் கொண்டு நிற்க யம் மோங் என் பையைப் போய் எடுத்துட்டு வா நான் தோட்டத்து வீட்டுல நைட் இருந்துட்டு காலையில் சென்னை கிளம்புறேன் என்று கூறிவிட்டுப் பையை வாங்கிக் கொண்

டு சென்று விட்டான்.


மோகம் மையம் கொள்ளும்...

Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments