Advertisement

Ad code

புயல் -15



 மோகம்- 15:

கதிர் அறைந்ததும் நம்ப முடியாமல் அவனைப் பார்த்தவள் சுந்தரம் கதிரை அதட்ட அனைவரின் முன்பும் தன்னை அறைந்து விட்டானென்று சுயப்பட்ச்சாதாபம் எழ உடனே தன் அறைக்கு சென்று விட்டாள்.

அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை மடை திறந்த வெள்ளம் போல் பொலப்பொலவென கண்ணீர் கொட்ட ஒரு மூச்சு அழுது தீர்த்தவள் கண்களைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தவள் ரகுவிடம் மன்னிப்பு வேண்டி தன் அத்தை மாமாவிடமும் மன்னிப்பு வேண்ட அப்பத்தா தமிழிடம் வந்து நீ வா டா ராசாத்தி நாம போவோம் என்று தன்னறைக்கு அழைத்து செல்ல கதிருக்கு ஈரக்கொலையே நடுங்கியது.

ஏற்கனவே தான் அடித்ததால் அவள் அழுது கன்னம் சிவந்திருந்ததைப் பார்த்தவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை இதில் அப்பத்தா வேற அவளை அவர் அறைக்கு அழைக்க இவளும் பின்னாடியே செல்ல போசசு என்று மானசீகமாக தன் தலையில் அடித்துக் கொண்டான்.

ஐயோ அப்பத்தா கூடவே போய்ட்டாலே நம்ம ரூமுக்கு வர மாட்டாளா ஹே அம்மு சாரி டி வந்து குடி அத்தான் பாவமில்லையா நான் உன்னை மத்தவங்க யாரும் எதும் சொல்லிடக் கூடாதுன்னு தான் டி நான் முந்திக்கிட்டேன் என்னை மன்னிச்சிடு டி ப்ளீஸ் சாரி டி என்று மானசீகமாக அவளிடம் மன்னிப்பு வேண்டினான்.

(மன்னிப்பு கேட்டாலும் ஆப்பு இருக்கு கதிரு…)

அப்பத்தா தமிழிடம் சாப்பிட வா தமிழ் என்று அவளை அழைக்கவும் வேண்டாம் அம்மாச்சி என்று அவர் மடியில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள் சற்று நேரம் பொறுத்துப் பார்த்தவர் சரி நீ படுத்திருடா நான் இதோ வந்துடுறேன் என்று அவளைத் தலையணையில் படுக்க வைத்தவர் வெளியே வந்தார்.

அங்கு அனைவரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க ரகுவும் சசியும் அவர்கள் அறையில் இருந்திருக்க கதிர் அப்பத்தா அறையையே பார்த்தவாறு கைகளைப் பிசைந்தவாறு நின்றுக் கொண்டிருந்தான்.அவனை பார்த்த அப்பத்தா முகத்தைத் திருப்பிக் கொண்டு போக அவரை அசைய விடாமல் பிடித்துக் கொண்டவன் அப்பத்தா தமிழ சாப்பிட வை அப்பத்தா அவ பசித் தாங்க மாட்டா அப்பத்தா என்று கெஞ்சினான்.

நீங்கதான் அவ்வளவு தைரியமா அடிக்க தெரிஞ்ச உங்களுக்கு சங்பாடு கொடுக்க தெரியாது போய் நீயே கொடு உன் பொண்டாட்டி தானே எல்லார் முன்னாடியும் அடிப்ப ஆனால் இதை உன்னால பண்ண முடியாதா இதுக்கு மட்டும் என்கிட்ட கேக்குற எனக்கு எதுவும் தெரியாது.. எனக்கு பசிக்குது நகரு நகரு என்று அவனை தள்ளிவிட்டு தான் போய் அமர்ந்து சாப்பிட அமர்ந்தார்.

கதிர் தமிழ் இருக்கும் அறையையே பார்த்துக் கொண்டிருக்க வடிவாம்பாள் வந்து சாப்பிடு கதிரு என்று அழைக்கவும் ம்மா தமிழ் சாப்பிடலை ம்மா என்று பாவமாகக் கூற ஏதோ கூ வந்தவரை அப்பத்தி அவர் கையைப் பிடித்து தடுத்தார். பின் வடிவாம்பாளும் எதும் கண்டுக் கொள்ளவில்லை.

இங்கும் அங்கும் நடந்துக் கொண்டிருந்தவன் மனதில் இப்போ போனா திட்டுவா பரவால்ல நான் பண்ணினதுக்கு அவ திட்டினாலும் வாங்கிக்கனும் ச்சே சாரி தமிழ் என் செல்லக்குட்டி டி நீ உன்னை எப்படி நான் அடிச்சேன் என் அம்முக்குட்டி நீ என்று அனைத்துக் குட்டிகளையும் போட்டு தன் மனதிற்குள்ளே புலம்பித் தள்ளினான்.

(நீ எத்தனை குட்டிகள் போட்டு கொஞ்சி கெஞ்சினாலும் இப்போதைக்கு நீ குட்டிப் போட மாட்ட அது கன்பார்மா எனக்கு கண்கூடா தெரியுது..)

ஆர அமர அப்பத்தா சாப்பிட்டு விட்டு வேண்டுமென்றே கதிர் பக்கத்தில் வந்து ஏப்பம் விட அப்பத்தா அப்பத்தா ப்ளீஸ் அப்பத்தா எனக்கு பயமா இருக்கு அப்பத்தா அவ திட்டுவா அவளை சாப்பிட வச்சிடு அப்பத்தா என்று கெஞ்ச அதிர்ந்தது போல முகத்தை வைத்துக் கொண்டு ஏது உனக்கு பயமா இருக்கா என்ன ஏதுன்னு விசாரிக்காம பொம்பளை பிள்ளை மேல அத்தனை பேர் முன்னாடி கைவைக்க பயமில்லை இதுக்கு பயமா இருக்கா என்று அவனை அதட்ட தன் தப்பை உணர்ந்தவன் நான் பண்ணினது தப்பு தான் அப்பத்தா என்னை மன்னிச்சிடு என்று அவரிடம் மன்னிப்பை வேண்டினான்.

அவன் மன்னிப்பு கேட்கவும் நானா அடி வாங்கினேன் அவளை தானே அடிச்ச அவக்கிட்ட போய் மன்னிப்பு கேளு அதை விட்டுட்டு என்கிட்ட கேட்கிற என்கவும் சரி அப்பத்தா நான் பேசிக்கிறேன் அவக்கிட்ட நீ சாப்பாடு மட்டும் கொண்டு போ அப்பத்தா என்று வேண்டினான்.

நான் வரும் போதே அவளை கூப்பிட்டேன் அவள் வேண்டாம் பசிக்கலைன்னு சொல்லிட்டுப் படுத்துட்டா இதுக்கு மேல ஊட்டியா விட முடியும் என்று வேண்டுமென்றே பட்டும்படாமல் பேச என் பொண்டாட்டிக்கு நானே சாப்பாடு கொடுத்துக்கிறேன் என்று அவரிடம் வீரவசனம் பேசியவன் சமையலறைக்கு சென்று சாதத்தை அள்ளிப் போட்டு எடுத்து வந்தான்.

அதுவரை தான் அவன் வீரமெல்லாம் அந்த அறையை நெருங்க நெருங்க ஐயோ செமையா திட்டப் போறா என்று நினைத்துக் கொண்டே சென்றவன் மனதில் எழுந்த தே ஒரு கற்பனை. ஒருவேளை தமிழ் இப்போ கோபமா இருக்குறதால பருத்திவீரன் படத்துல பிரியாமணி கோபத்துல தட்டு நிறைய சாப்பாடு போட்டு சாப்பிடுற மாதிரி சாப்பிடுவாளோ ச்சீ ச்சீ அப்படிலாம் நம்ம தமிழ் சாப்பிட மாட்டா நினைச்சாலே கோரமா இருக்கே என்று அப்படியும் இப்படியும் அந்த அறைக்குள் செல்வதற்குள் பலவாறு யோசித்தப்படி சென்றான்.

(தட்டுல நிறையப்போட்டு சாப்பிடுறாளோ இல்லையோ உன்னை முட்டிக்கு முட்டித் தட்டாமா விட மாட்டா..)

மோகம்

 மையம் கொள்ளும்…

Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments