மோகம் :5
உள்ளே வலது காலை எடுத்து வைத்து வந்தவளை பார்த்து பார்த்திபன் ஹே முத்து என்ன ஆச்சு அழுதியா முகமெல்லாம் இப்படி சிவந்து போயிருக்கு.. என்ன ஆச்சு முத்து அத்தை நியாபகமா.. என்று கேட்டவனிடம் தீனா கதவைத் தட்டியது பின்பு தன்னை வெளியே வர சொன்னது அனைத்தையும் கூறினாள்.
பார்த்தியும் கூறிவிட்டு கதிரை திரும்பிப் பார்த்து முறைக்கவும் தவறவில்லை.. அதை தூசிப் போல் தட்டிவிட்டு தீனாவை என்ன பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
அவனுக்கு இதே வேலையா போச்சு.. அப்படியே சும்மா விட்டா அந்த பயல் இன்னும் ஆடுவான் எல்லாம நம்ம பண்ணைக்காக தான் பார்த்துட்டு இருக்கோம்..இல்லைனா அவன் பண்ற அக்கிரமத்துக்கு எப்போவோ ஊர விட்டுத் துரத்திருக்கனும் என்று உறுமினார் சுந்தரேசன்.
உள்ளே வந்த வடிவாம்பாள் அவனை கதிர் பார்த்துக்குவான் நீங்க எல்லாம் போய் படுங்க என்று சொல்லவும் சுந்தரேசனும் பார்த்தியும் தங்கள் அறைக்கு சென்றனர்.
வடிவு தமிழிடம் திரும்பி முத்து சாப்பிட்டியாடா என்று கேட்கவும் இல்லை என்று தலையாட்டியவள் எனக்கு வேண்டாம் அத்தை என்றதும் சாப்பிடுடா இன்னும் எவ்வளவு நாளைக்கு அதையே நினைச்சிட்டு இருப்ப வசந்தி உனக்காகவே வாழ்ந்தா நீ அழுதா அவளால தாங்க முடியாது..
நீ சந்தோஷமா இருந்தா தானே அம்மா சந்தோஷப் படுவா நிம்மதியா போய் தூங்கு டா சரியா..கதிரு புள்ளைய உன் அறைக்கு அழைச்சிட்டுப் போ என்றதும் அதுவரை தமிழை எங்க தங்க வைப்பாங்க என்று யோசித்துக் கொண்டிருந்தவன் முகம் தன் அம்மா கூறிய வார்த்தையில் பட்டென தவுஸண்ட் வாட்ஸ் பல்பு போல பளிச்சென ஒளிர்ந்தது..
(டேய் அப்போ நீ தீனாவ போட்டுத்தள்ள ப்ளான் பண்ணலையா அவ்வ்வா..ஏன்டா என் ஹீரோ எல்லாரும் இப்படி இருக்கீங்க..ஹிஹி இப்படி இருந்தா தான் நல்லா இருக்கும்..)
அம்மா நீங்க சாப்பாடு தட்டுலப் போட்டுக் கொடுங்க அவ ரூம்ல சாப்டுக்குவா மதியமும் கொஞ்சம் தான் சாப்பிட்டா என்றதும் தட்டில் சாப்பாடு போட்டுக் கொண்டு வந்து கொடுத்தார்.
அதை வாங்கியவன் வா தமிழ் போலாம் என்று அழைத்துச் சென்றவனை பார்த்து சிரித்துவிட்டு சென்றார் வடிவு.அவன் அறைக்கு வந்ததும் உள்ளே வா தமிழ் என்றதும் அம்மாயி எங்க அத்தான்..ஆளைக் காணோம் என்று கேட்டதும் சாப்பாட்டை அங்கிருந்த மேசையில் வைத்தவன் அவங்களுக்கு இடுப்பு வலி தமிழ் அதான் சீக்கிரமா படுத்துட்டாங்க.. என்று கூறிக் கொண்டே கதவின் தாழ்ப்பாளைப் போட்டான்.
அம்மாயி வந்துருக்கலாம் என்று கூறியதும் ஏன் இன்னும் பத்து நாள் அங்கேயே இருந்துருப்ப என்று கூறியவன் தட்டை எடுத்து அவளிடம் நீட்டி சாப்பிடு என்று கொடுத்தான்.
எனக்கு வேண்டாம் என்று கூறியதும் அடம் பண்ணாத தமிழ் சாப்பிடு என்று அவள் கையில் சாப்பாடு அடங்கிய தட்டை கொடுத்தான்.ஏன் இவ்வளவு நாள் நீங்க தானே ஊட்டி விட்டீங்க..இப்போ என்னை சாப்பிட சொல்றீங்க ஊட்டி விடுங்க என்றதும் சிரித்துக் கொண்டே அவளுக்கு ஊட்டி விட்டான்.
அவன் ஊட்டி விட அமைதியாக சாப்பிட்டு கொண்டிருந்தாள். தமிழ் நீ என்னோட பொண்டாட்டியா நான் உன் புருஷனா என்னால இதை இன்னும் நம்ப முடியலை என்று கூறியவனை பார்த்து ஏது நம்ப முடியலையா அடப்பாவி புருஷா அந்த வீட்டுல முத்தம் குடுக்கிறேன் பேர்வழின்னு உதட்டைக் கடிச்சி வச்சீங்களே அப்போ தெரியலையா நான் உங்க பொண்டாட்டின்னு..
யோவ் நான் உன் பொண்டாட்டி தான்யா நீ என் புருஷன் தான் என்று கூறியதும் ஹே அது இல்லடி நீ சின்னப் பொண்ணா இருக்க என்று கூறிக் கொண்டே கடைசிக் கவளத்தை ஊட்டியவனைப் பார்த்து அட மக்கு அத்தான் நான் சின்ன பொண்ணா என்று நினைத்தவள் ஏதோ யோசித்து தட்டில் கைக்கழுவிக் கொண்டிருந்தவனை தன் பக்கம் திருப்பினாள்.
அவனின் என்ன த..என்ற வார்த்தைகள் அவள் இதழ்களுக்குள்ளே முடிவுற்றது. தான் சிறு பெண் அல்ல என்று அவன் இதழில் தன் இதழைப் பொருத்தி நிரூபித்துக் கொண்டிருந்தாள்.
நீ என்னோட பொண்டாட்டி தானா என்று கேட்டதும் அதிர்ந்தவள் அவன் தன்னை சிறு பெண் என்கவும் பொங்கி எழுந்து விட்டாள்.
ஆனால் அவள் அவன் இதழில் பொருத்தி ஆரம்பித்தது மட்டுமே அவள் சிறிது நேரத்திலே அவள் செயலைத் தனதாக்கிக் கொண்டான். தன் முத்தத்தால் புண் பட்டிடுருந்த உதட்டிற்கு தானே மருந்தாகினான்.
அவன் அவளை சிறு பெண் என்று நினைத்துக் கொண்டிருக்க தான் சிறு பெண் இல்லை நான் உன்னுடைய மனைவி என்று திட்டவட்டமாக அவன் இதழில் தன் இதழைப் புதைத்து நிரூபித்தாள்.
அதற்கு மேல் அவன் தாமதிக்க வில்லை அவள் செயலை தனதாக்கிக் கொண்டான்.அவளை தன்னோடு இறுக்கிக் கட்டிக் கொண்டு அவள் மென்மையின் மேடுகளில் முகத்தைப் புதைத்தான்.
அவன் முகம் பதித்து தேய்க்கவும் ஷாக் அடித்தவள் போல் துள்ளினாள். ஏதோ ஓர் உணர்வு எழுந்து அவளை ஆட்கொள்ள அவன் செயலை தாங்க முடியாமல் அவன் சட்டையை இறுகப் பற்றிக் கொண்டு அவன் மேலேயே சரிந்து துவண்டாள்..
அவள் காதோரம் குனிந்து அவள் காது மடலை சப்பி இழுத்துக் கடித்தவன் தமிழ் உன்னை சின்ன பொண்ணுன்னு நினைச்சேன் ஆனால் அப்படி இல்ல தமிழ் எல்லாம் நல்லா கரெக்ட்டா இருக்கு என்று மென் பந்துகளில் ஒன்றை அழுத்திக் கொண்டே ஹஸ்கி குரலில் சொல்லவும் காது மடலை கடிக்கவும் சிலிர்த்தவள் பிறகு பேசிய வார்த்தைகளைக் கேட்டுக் கூச்சம் தாளாமல் அவன் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள்.
அவனை இறுக்கிக் கட்டிக் கொண்டவள் அத்தான் நீங்க என்ன இப்படி எல்லாம் பண்றீங்க..எனக்கு ஒரு மாதிரியா இருக்கு என்று கூறிக்கொண்டே இன்னும் அழுத்திக் கட்டிக் கொண்டாள்.
தமிழ் நீ தானே சொன்ன நீ என் பொண்டாட்டின்னு.. அதும் இல்லாம நீ சின்ன பிள்ளை இல்லன்னு சொன்னியே அதான் நானும் நீ பெரிய பொண்ணு தானான்னு செக் பண்ணினேன் தமிழ்..என்று அவளைக் கட்டிக் கொண்டான்.
அவள் அவனை நிமிர்ந்து பார்க்கவும் அவள் கண்களைப் பார்த்துக் கொண்டே நல்ல பெரிய பொண்ணு தான் தமிழ் என்று அந்த பெரிய என்றதில் அழுத்திக் கூறினான்.
அவனிடம் இருந்து பிரிந்து குளியலறைக்குள் தட்டை எடுத்துக் கொண்டு சென்று விட்டாள்.அவள் சென்றதும் தன் தலை முடியை விரல்களால் கோதியவன் டேய் கதிரு இந்த குட்டிப் பிசாசு எதோ உன்னை பண்றா டா என்று தனக்குள் பேசிக் கொண்டிடுருந்தான்.
ஐயோ இவ படிச்சு முடிக்கனுமே அது வரையும் நான் தாங்குவேனா..என்று நினைத்தவன் தனக்கு ஒரு பெட் ஸீட்டை எடுத்து தரையில் விரித்தான்.
குளியலறையில் இருந்து வெளியே வந்தவள் அவனை தேடினாள். கதிர் கட்டிலுக்கு மறுபக்கம் தரையில் படுத்திருக்கவும் இவ்ளோ நேரம் என்னை துடிக்க விட்டுட்டு எப்படி ஒன்னுமே தெரியாத பிள்ளை போல படுத்திருக்கறது பாரு…
பண்றதெல்லாம் கேடி வேலை இருங்க வரேன் என்று நினைத்தவள் எதுவும் பேசாமல் அவன் அருகில் சென்று நல்ல பிள்ளை போல படுத்துக் கொண்டாள்..
அவள் தன் அருகில் படுப்பதைப் பார்த்தவன் ஐயோ இவ கிட்ட வந்தாலே ஏதாவது பண்ணனும்னு தோணுது..இந்த மோகினி பிசாச பக்கத்துல வச்சுக்கிட்டு நான் எப்படி தூங்குவேன்..என்று தனக்குள் புலம்பியவன் அவள் பக்கம் திரும்பினான்.
தமிழ் மேல போய் படு.. ஏன் கீழே படுத்துருக்க என்றதும் அவனைப் பார்த்தவாரு ஒருக்களித்துப் படுத்தவள் அத்தான் கல்யாணம் ஆனவங்க தனியா படுத்தா பக்கத்துல பிசாசு வந்து படுத்துக்குமாம் அதான் படுத்தேன் வாங்க மேலே போய் படுப்போம் என்று கதைப் பேசியவளைச் சிரிப்புடன் பார்த்தான்.
நீயே ஒரு குட்டிப் பிசாசு இதுல இன்னொரு பிசாசா என்று கூறியப் பிறகு தான் அவளைப் பார்த்தான் அவள் தன்னை முறைத்துக் கொண்டிருப்பதை.
தன்னைப் பார்த்து ஒருக்களித்துப் படுத்திருந்தவனை ஒரே தள்ளாகத் தள்ளி அவன் மேல் ஏறி அமர்ந்து நான் உங்களுக்கு பிசாசா நான் உங்ககிட்ட பேச மாட்டேன் போங்க என்று அவனை அடித்துக் கொண்டே கூறியவள் தான் அமாந்திருக்கும் நிலையை உணர்ந்து கூச்சத்தில் படக்கென்று எழுந்து கட்டிலில் படுத்துக் கொண்டாள்.
ஐயோ தமிழு என்னடி இப்படி பண்ணிட்ட அத்தான் என்ன நினைச்சிருப்பாங்க ச்சீ..ச்சீ..என்று தலையணையில் முகத்தை புதைத்துக் கொண்டாள்..
0 Comments