Advertisement

Ad code

புயல் - 6


 மோகம் -6:


அவன் மேல் அமர்ந்து அவனை அடித்துக் கொண்டிருந்தவள் அந்த வித்தியாசத்தை உணர்ந்து விதிர்விதிர்த்து அவன் மேல் இருந்து எழுந்துக் கொண்டாள்.. அவன் மேல் அமர்ந்த தன் மடத்தன்மையை நினைத்து தன்னை தானே திட்டிக் கொண்டவள் தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு படுத்திருந்தாள்.


சிறிது நேரத்தில் தன் பக்கத்தில் அரவம் கேட்கவும் ஐயோ என்று மனதிற்குள் அலறினாள்.. அவள் இடுப்பில் ஒரு கரம் வருட அதனை அசையாமல் பிடித்துக் கொண்டவளின் தேகம் பயத்தில் நடுங்கியது. அவள் நடுகத்தை உணர்ந்தவன் ஓய் சில்வண்டு என்ன இப்படி உடம்பு நடுங்குது வாய்க்கு முந்நூறு தடவை பொண்டாட்டி பொண்டாட்டின்னு சொன்ன இப்போ இப்படி நடுங்குற என்று வேண்டுமென்றே நக்கல் செய்தான்.


அவன் நினைத்தது போலவே எலி அவன் விரித்த வலையில் வந்து தானாகவே சிக்கிடுச்சு.. அவனை நோக்கி திரும்பியவள் நான் ஏன் பயப்படனும் எனக்கு பயம் மெல்லாம் இல்லையே என்றதும் அவள் மேல் தாவிப் படர்ந்தான். அவன் தாவிய தாவில் கட்டிலே ஆட்டம் கண்டது.. அத்தான் என்றாள் பயத்துடன் அவளுக்கே அவள் குரல் கேட்கவில்லை வெறும் காற்று தான் வந்தது.


என்ன டி காத்துதான் வருது என்றவன் தன் பாதி உடல் அவள் மேல் படருமாறு படர்த்திருத்தான். அவன் என்ன பண்ணப் போகிறான் என்ற ஆர்வமும் பயமும் அவள் கண்களில் போட்டிப் போட அந்த கண்களில் முத்தம் வைத்தவன் கண்களை மூடித் திருந்தவளைப் பார்த்து பயம் போயிடுச்சா என்கவும் ம்ம் என்றாள்... அவள் ம்ம் என்கவும் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டவன் அவள் இதழை வன்மையாக சிறை செய்தான்.


முதலில் அதிர்ந்தவள் பின் அவன் வன்மையால் கவரப் பட்டவள் ஒத்துழைக்கும் போது பட்டென்று பிரிந்தவன்.. அவள் கழுத்து வளைவில் முகத்தைப் புதைக்க அத்தான் வேண்டாம் என்று அவனை தள்ளினாள். நிமிர்த்தவன் என்ன வேண்டாம் என்று கேட்டுக் கொண்டே அவள் கன்னத்தில் தன் மீசை முடிக் குத்த அழுத்தமாய் ஒரு முத்தம் வைத்தான்.


அதில் சிலிர்த்தவள் அத்தான் என்று முனகினாள்... தமிழ் என்று போதையாக அழைத்தான் ஐயோ இப்படி கூப்பிட்டு கூப்பிட்டுக் கொல்றான். அவள் கையை விட்டவன் தன் நான்கு நாள் தாடியால் அவள் கழுத்தில் உரசிக் கூச்சமூட்டினான். அவன் தலை முடிக்குள் கைகளை விட்டு அலைந்தவள் உணர்ச்சிப் பெருக்கில் அவன் தலையை அவள் கழுத்து வளைவில் வைத்து அழுத்தினாள்.


உடனே அவளிடம் இருந்து பிரிந்தவன் அவளை இழுத்துத் தூக்கித் தன் மேல் போட்டுக் கொண்டான். அவன் அப்படி செய்ததும் முன்பு இருந்த நிலையே பரவா இல்லை என்று தோன்றியது. அவன் மேல் மொத்தமாக படர்ந்திருந்தாள். அவன் உடலின் மீது தன் அங்கங்கள் உரச படுத்திருந்தது வெட்கமாக வந்தது. அவள் எழப்போக அவளை தடுத்தவன் கொஞ்ச நேரம் அப்படியே படுத்திரு தமிழ் .. என்று கூறி தன்னுடன் இறுக்கினான்.


அத்தான் எனக்கு ஒரு மாதிரி இருக்கு என்று அசைந்தாள். என் மேல நீதான முதல்ல படுத்து என்னை உசுப்பேத்தி விட்ட ..அசையாமல் படு தமிழ் இல்லன்னா ஆகுற சேதாரத்துக்கு நான் பொறுப்பில்லை என்றதும் அசையாமல் படுத்துக் கொண்டாள்... பின் சிறிது நேரத்தில் அவளை நகர்த்திப் படுக்க வைத்து அவள் அப்பாடி என்று பெருமூச்சு விடுவதற்குள் அவளை இழுத்து தன் நெஞ்சுக்குள் பொதிந்துக் கொண்டு தூங்கு தமிழ் என்று தட்டிக் கொடுத்து அவளை தூங்க வைத்துத் தானும் தூங்கிவிட்டான். 


காலையில் எழுந்த கதிர் தமிழ் தூங்கவே அவளைப் Uடுக்க வைத்து விட்டு வெளியில் வந்தான். என்னப்பா புள்ளை ராத்திரி முழுக்க அழுதுச்சா என்று வடிவு கேட்க ஆமாம்மா என்றவன் நான் வயலுக்குப் போயிட்டு வரேன் ம்மா என்றவன் கிளம்பி விட்டான். பிறகு தான் பஞ்சாயத்தில் புகார் குடுத்திருப்பதாக ஆள் வந்து சொல்லி அனைவரும் பஞ்சாயத்து நடக்கும் இடத்திற்கு சென்றனர்.


இன்று ....


பஞ்சாயத்து தலைவர் அதான் கதிரு தெளிவா நடந்தது சொல்லிடுச்சுல்ல எல்லாரும் ஊட்டுக்கு கிளம்புங்க என்றவர் சுந்தரேசனிடம் திரும்பி சுந்தரேசா அவசரகதியில நடந்த கல்யாணம் தான் நாளப் பின்ன இதுப்போல யாரும் பிள்ளைகள தப்பா பேசக் கூடாதுப் பாரு அதனால ஒரு வரவேற்பு வச்சிடு என்றவர் தீனாவிடம் திரும்பி எதையும் சரியா தெரியாம புகார் கொடுக்காதீங்க என்று அவனுக்குக் கொட்டு வைக்கவும் தவறவில்லை.


விட்டால் போதுமென்று தீனா ஓடி விட்டான்.பின் அனைவரும் வீட்டுக்கு வர சுந்தரேசன் தன் அம்மாவிடம் நாளைக்கு குலதெய்வக் கோவிலுக்குப் போயிட்டு வந்துருவோமா ம்மா என்று கேட்கவும் போலாம் தம்பி அப்படியே சீக்கிரம் வரவேற்பு வச்சிடலாம் என்ற வர் அந்த எடுப்பட்ட நாயிக்கு எவ்ளோ திண்ணக்கம் இருந்தா என் பேரப்பிள்ளைக மேல புகார் கொடுத்திருப்பான் .. என் கைல ஆம்புடட்டும் அவன் மண்டை மசுர ஆஞ்சிப்புடுறேன் ஆஞ்சு ...


பின் அனைவரும் சாப்பிட்டதும் கதிர் வெளியே சென்று வருவதாக சொல்லிவிட்டு தமிழிடம் நான் வந்த பிறகு போய் உன் துணியெல்லாம் எடுத்துட்டு வந்து குலாம் தமிழ் என்று விட்டுச் சென்றான். சிறிது நேரம் கழித்து கதிரின் தங்கை சசிக்கலா வரவும் உன்னை எப்போ வர சொன்னேன் என்று வடிவு கேட்டார். 


ம்மா அவருக்கு வேலை மா இப்போ கூட அதான் அவரு வரலை சரி நீ வேற வர சொல்லிக்கிட்டே இருந்த அதான் வந்தேன் என்று கூறினாள்.அவள் குழந்தையை தமிழ் ஆசையாக வாங்கிக் கொஞ்சினாள்.


சசியை அழைத்த வடிவு ஏய் எதாவது கலகலப்பா அவக்கிட்ட பேசுங்க டி பாவம் வசந்திய பற்றியே புள்ளை நினைச்சிட்டு இருக்கு நீங்க போய் பேச்சுக் கொடுத்து அவளை திசைத்திருப்புங்க நான் போய் சமைச்சிட்டுக் கூப்பிடுறேன் என்றவர் சமையற் கட்டிற்குள் சென்று விட்டார்.


சசி தமிழிடம் வந்து அமர்ந்து அண்ணா உன் கிட்ட நல்லா பேசுதா தமிழ் என்று கேட்டாள்.அதை கேட்டுக் கொண்டே வந்த பார்த்திபன் தமிழ் என்று கதிர் சற்று முன் அழைத்தது போல அழைத்துக் காட்டினான்.


டேய் பார்த்தி வேணாம் வம்புக்கு இழுக்காத என்றதும் ஜெர்க்கானவன் அம்மா தாயே ஆள விடுங்க.. என்று ஜகா வாங்கினான்.பின் சசி ஹே எதாவது விளையாடலாம் ப்பா என்று சொன்னதும் அனைவரும் தாயம் விளையாடுவது என்று முடிவானது.


மூவரும் குச்சி, புளியங்கொட்டை, கல் என அவரவருக்கு ஆறு எண்ணிக்கை வீதம் எடுத்துக் கொண்டனர். தாயங்கட்டையை எடுத்து வந்து பார்த்தி முதலில் போட மூன்று விழுந்தது. பிறகு சசி போட பன்னிரெண்டு பிறகு தாயம் விழ அவள் காய்களை உள்ளே நகர்த்தினாள்.


இரண்டாவது சுற்று வரும் போது பார்த்திக்கு தாயம் விழ அவன் தன் கல்லை நகர்த்தினான். சசியும் தன் குச்சியை நகர்த்தினாள். தொடர்ந்து ஐந்து ஆட்டங்களுக்கு தமிழிற்கு தாயமே விழவில்லை... ஆறாவது சுற்று வரும் போது தான் தமிழ் தாயம் போட்டு தன் காயை நகர்த்தினாள்.


அப்பொழுது தான் கதிர் வெளியே சென்று வந்தவன் தன் கால்களைக் கழுவி விட்டு உள்ளே வர பார்த்தி சசியின் குச்சியை இரண்டு போட்டால் வெட்டலாம் என்று நினைத்துக் கொண்டே தாயத்தை உருட்டினான்..அவன் நினைத்தது போலவே விழ ஐய் என்று கத்தினான்.


சசி மேஹ்.. மேஹ்.. என்று அஞ்சுக்கும் ரெண்டுக்கும் வெட்டு இந்த குஞ்சி என்று விட்டான் குச்சி என்பதற்கு அதை கேட்ட இரு பெண்களும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டனர். சசி தன் நெஞ்சில் கைவைத்து சிரித்துக் கொண்டே டேய் அஞ்சு குஞ்சு செம ரைமிங் ஹாங்...நீ என்டா அதை வெட்டுற...என்று சொல்லி சொல்லி சிரித்தாள்.


அதை கேட்டு தமிழ் அடக்க மாட்டாமல் சிரித்தாள். ஏய் தமிழு சிரிக்காத வாய் தவறி வந்துருச்சி என்று தானும் சிரித்துக் கொண்டே சொன்னான்.பின் இவர்கள் சிரிப்பதைக் கண்டு அருகில் வந்து கதிரிடம் பார்த்தி கூறியதை சொல்லி சிரித்தாள் சசி..


அதை கேட்டு விடாமல் சிரித்துக் கொண்டிருந்த தமிழை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தவன் தமிழ் அருகில் சென்று இயல்பாக அமர்ந்தான்.பின் இவன் வேடிக்கை பார்க்க மூவரும் ஆட்டத்தை தொடர்ந்தனர்.


தமிழுக்கு கதிர் சொல்லிக் கொடுக்க அவள் இருவரையும் வெட்ட கடுப்பாயினர்.அண்ணா நீ சொல்லித் தர போ இது போங்காட்டம் என்று சண்டையிட்டனர். உடனே தமிழ் பார்த்தியிடம் உனக்கு ஏன் டா இவ்ளோ பொறாமை என் புருஷன் நான் பழுக்குறதுக்கு வழி சொல்றார் உனக்கு என்ன என்றவள் நீங்க சொல்லி தாங்க அத்தான்.


இந்த பொடிச நான் பார்த்துக்குறேன் என்றவள் கொன்றுவேன் என்று பத்திரம் காட்டியவள் பின் கதிரின் உதவியுடன் அனைத்துக் காய்களையும் பழுத்து விட்டு ஏய் நான் பழுத்துட்டேன் தோத்தாங்கோலிஸ் என்று சிரித்துக் கொண்டே இயல்பாக அவன் சாய்ந்துக் கொண்டு சிரித்தாள்.


அன்று இரவு கதிர் தமிழிடம் காய் பழுக்க உதவிப் பண்ணினேன்னு சொன்னல்ல வா பழுக்க வச்சுடுவோம் என்று அவளை இழுக்க விளையாடப் போறோமா அத்தான் என்று அவன் இரட்டை அர்தத்தில் பேசியதை உணராமல் கேட்டாள்.


பின்பு தான் அதன் அர்த்தம் ஐயே ச்சீ என்று விலகி ஓடியவளை இழுத்து தன் கைகளில் அள்ளியவன் மெத்தையில் தொப்பென்று போட்டான்.


மோகம் மையம் கொள்ளும்….


Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments