Advertisement

Ad code

புயல் - 4


 மோகம் : 4


அவன் வண்டியில் அமர சொன்னதும் இருங்க ஒரு நிமிஷம் என்று அவனிடம் கூறியவள் உள்ளே சென்று தன் உடைகளில் இரண்டு செட் எடுத்துக்கொண்டு வந்தாள்.


அவள் முகம் சிவந்து இருக்கவும் அவளை பார்க்க பாவமாக இருந்தது அவள் அழுததால் முகம் சிவந்தது என்று நினைத்து கொண்டு தன்னையே கடிந்து கொண்டான் முன்பே அவளை தன்னுடன் அழைத்து சென்றுருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டான்.


தமிழ் போய் முகத்தை கழுவிட்டு வா..பாரு அழுததுல முகமெல்லாம் சிவந்து போய்டுச்சு என்று கூறியதும் அவன் வண்டியின் கண்ணாடியில் தன்னை பார்த்தவள் முகம் சிவந்து உதடு லேசா வீங்கியிருக்க முடிகள் கலைந்து ஓவியமாக இருந்தாள்.


அட மக்கு சாம்பிராணி அத்தான் நீங்க பண்ணினதுல முகம் சிவந்து போச்சு இது கூட இன்னும் தெரியல என்று இருங்க இப்படி இருந்தா ஒன்னும் வேலைக்காகாது என்று நினைத்தவள்..


தன்னை கண்ணாடியில் பார்த்து விட்டு அவனை தன் குண்டு கண்களால் முறைத்து நறுக்கென்று அவன் தொடையில் கிள்ளினாள்.அவள் கிள்ளியதில் மெதுவாக அலரியவன் ஏன் டி கிள்ளின ஆஆ என்று அவள் கிள்ளிய இடத்தை பரபரவென தேய்த்து விட்டான்.


வலிக்குதா ச்சு ச்சு என்று உச்சுக் கொட்டியவள் முத்தம் குடுக்கிறேன்னு கடிச்சு வச்சுருக்கீங்க நான் எப்படி இப்போ எல்லார் முன்னாடியும் போய் என் முகத்தைக் காட்டுவேன். நான் உங்ககிட்ட முத்தம் கேட்டேனா என்று முறைத்தவள் வண்டியில் ஏறாமல் நின்றுக் கொண்டிருந்தாள்.


 வீட்டுக்குப் போக வேண்டாம்.. நான் எப்படி அவங்க முகத்துல முழிப்பேன் என்று கூறியவளை அதெல்லாம் ஒன்னும் தெரியலை 

நீயா ஏதாவது கற்பனை பண்ணி பார்த்தா அப்படி தான் தெரியும் பேசாம வண்டியில் ஏறி உட்கார்.


அவள் அமர்ந்ததும் தமிழ் இந்த மாதிரி வெளியே மத்தவங்க முன்னாடி என்னைக் கேட்காமத் தொடக் கூடாது சரியா என்று கூறியவனிடம் ஏன் தொடக் கூடாது எதுக்கு தொடக் கூடாது நான் என்ன வேணாலும் பண்ணுவேன் நீங்க தானே என் புருஷன் நீங்க தானே என் கழுத்துல தாலிக் கட்டினது அப்போ உங்க மேல எனக்கு முழு உரிமை இருக்கு அதெல்லாம் நீங்க சொல்லக் கூடாது என்று அவனிடம் எகிறினாள்.


எனக்கு குளிருது சீக்கிரம் வண்டியைக் கிளப்புங்க நான் வீட்டுல சமாளிச்சுக்குவேன் என்ன இந்த அம்மாயிதான் கண்டுப் பிடிச்சிடும் பார்த்துக்கலாம் என்று கூறி பிடிமானத்திற்கு வண்டியின் பின்புறம் இருந்த கம்பியைப் பிடித்துக் கொண்டாள்.


கதிரோ இவ என்ன இப்படி பேசுறா கிள்ளக் கூடாத இடத்துல கிள்ளி மனுஷனப் பாடாப் படுத்திட்டு அப்படி தான் பண்ணுவேன்னு சொல்றா ஐயோ இவக்கிட்ட ஜாக்கிரதையா இருக்கனும் இல்லைனா தினமும் கிட்னிப் புடுங்கக் கூப்பிடுவாப் போல என்று மனதிற்குள் அலறியவன் அவள் கம்பியைப் பிடித்துக் கொண்டு அமரவும் ஏமாற்றமடைந்தான் 


தமிழ் வண்டியில் இரண்டு பக்கமும் கால்களைப் போட்டுக் கொண்டு அவனை கொஞ்சம் கூட உரசாமல் கவனமாக அமர்ந்திருந்தாள். தமிழ் நம்ம ஊரு ரோடு பத்திதான் நல்லா தெரியும்ல நல்லா கெட்டியா என்னைப் பிடிச்சுக்கோ என்று கூறியதும் எதுக்குப்பா வீண் வம்பு உங்களுக்கு தான் நான் தொட்டா பிடிக்காதே.. நீங்க தானே சொன்னீங்க வேண்டாத பொண்டாட்டி கைப் பட்டாலும் குத்தம் கால் பட்டாலும் குத்தம் என்று ஏற்ற இறக்கத்துடன் கூறினாள்.


அடிப்பாவி நீ என் மேல கை வச்சாலே என்னால என்னை கட்டுப் படுத்த முடியலை அதனால வெளியே மேல கை வைக்காதன்னு சொன்னது தப்பா இப்படி முதலுக்கே மோசம் பண்றா என்று மனதிற்குள் கதறியவன் நான் உன்னை ஒன்னுமே சொல்ல மாட்டேன் தமிழ் என்று கூறியதும் தனக்குள் சிரித்துக் கொண்டவள் வெளியே ஒன்னும் தெரியாதது போல அவனிடம் அப்போ நான் உங்களை இனி தொடலாம் தானே என்று கேட்டதும் ம்...ம் என் தோளைப் பிடிச்சுக்கோ என்று வண்டியை ஸ்டார்ட் பண்ணினான் .


தமிழ் பிடிச்சுக்கோ போலாமா என்று கேட்டதும் அவன் இடுப்பைத் தன் கைகளால் இறுக்கிக் கொண்டு முகத்தை அவன் முதுகில் பதித்துக் கொண்டு அவன் மேல் தன் மென்மைகள் உரச இறுகக் கட்டிக் கொண்டவள் போலாம் அத்தான் என்று கிசுக்கிசுப்பாகக் கூறினாள்.


அவள் தன்னை கட்டி அணைப்பாள் என்று கனவா கண்டான். இருவருக்கும் கல்யாணம் நடந்த தே கனவு போல் இருக்கு இதுல இவள் இப்படி பண்ணினால் அவனும் தான் என்ன செய்வான் பாவம்.


 டேய் கதிரு வீடு போய் சேருற வரைக்கும் நல்லப் படியா போய் சேரனும் இந்த குட்டிப் பிசாசு என்னை ஏதோ பண்ணுறா இவக்கிட்ட தனியா மாட்ட கூடாது எனக்கு என்னன்னமோ தோணுது என்று புலம்பியவன் தன்னை மிகச் சிரமப்பட்டு வண்டியைக் கிளப்பினான்.



இங்கு இவர்கள் வண்டியில் கிளம்பியதும் இருளில் தன்னை மறைத்துக் கொண்டு நின்றவன் வெளியில் வந்தான்.அவன் முகம் பழிவெறியில் பளப்பளத்தது.


அவன் கையில் உள்ள தன் போனில் இருந்த புகைப்படத்தைப் பார்த்து குரூரமாக சிரித்தான்..டேய் கதிர் என்னையா அடிச்ச இப்போ உன்னை ஊரு முன்னாடி தலை குனிய வைக்கிறதுக்கு செ மேட்டர் கிடைச்சிருக்கு என்று முத்தமிழ் கதிரை அணைத்தப்படி இருந்த புகைப்படத்தைப் பார்த்துக் கூறினான்.


அடப் பொசக் கெட்டப்பயலே அவன் பொண்டாட்டி அவன கொஞ்சிறா.. நீயா வாலண்டியரா போய் மூக்கு உடைப்பட்டு வரப்போற அதை நினைச்சா எனக்குச் சிரிப்பா வருது என்று சிரித்தது விதி.


இரண்டு வருடத்திற்கு முன்பு தங்கள் பண்ணையில் வேலை செய்ய வந்த ஒரு சிறு பெண்ணிடம் பேசி தப்பான இடங்களில் தொடவும் அதை கதிர் பார்த்து யாருக்கும் அந்த விஷயம் வெளியே தெரியாமல் அந்த பெண்ணிடமும் யாரிடமும் சொல்ல வேண்டாம் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறியவன் அன்றிரவே தீனாவை சரமாறியாக அடித்து வெளுத்து வாங்கினான்.


உன் அப்பாவுக்காக பார்க்கிறேன் இல்லை தொலைச்சுக் கட்டிடுவேன் என்று எச்சரித்தவன் காலால் ஒரு உதை விட்டுவிட்டு சென்றான். அடுத்த நாள் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் பிள்ளையைப் படிக்க வைங்க என்று கூறியவன் அந்த பெண்ணிடம் அவள் படிப்புப் பற்றி விசாரித்தான் .


அவள் பெயர் மாதவி என்றும் பத்தாம் வகுப்பு முடித்து விட்டு வீட்டில் இருப்பதாகக் கூறினார் அவளின் தாயார். நான் பணம் கட்டுறேன் ம்மா நீங்க பிள்ளையைப் படிக்க வைங்க என்றதும் எங்க தம்பி இவளோட அப்பா சம்பாரிக்கிற பணத்தை எல்லாம் குடிச்சே அழிக்கிறான்.


ஒத்தப் பைசா வீட்டுல வைக்க முடியலை எங்க வச்சாலும் எப்படியாவது கண்டு பிடிச்சு எடுத்துக் குடிக்கிறார் நான் பணம் குடுக்க முடியாதுன்னு சொன்னா அடிக்கிறான் நான் என்ன தம்பி பண்ண முடியும் நானும் பொம்பளை பிள்ளைய பெத்து வச்சுருக்கேன்..என்று தன் கஷ்டத்தை அவனிடம் கூறிக் கொண்டிருந்தார்.


சரி ம்மா நான் அப்பாவ பேச சொல்றேன் நீங்க பாப்பாவ வெளிய வேலைக்கு அனுப்பாதீங்க பிள்ளை படிக்கட்டும் என்று கூறிவிட்டு சென்றான்.


அன்று இரவே மாதவியின் அப்பா தன் மனைவியிடம் வந்து ஒரு ஐயாயிரம் பணத்தைக் கொடுத்து இனி நான் குடிக்க மாட்டேன் புள்ள சுந்தரேசன் ஐயா செங்கல் சூலைக்கு வேலைக்குப் போறேன் நாளையிலிருந்து..என்று கூறியதும் அவரின் மனைவிக்கு ஆச்சரியம்.


எப்படி இது சாத்தியம் அவர்கள் சொன்னதும் புரிந்துக் கொண்டார் போல என்று நினைத்தார்.ஆனால் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை கதிர் வாயால் பேசியதை விட அவரிடம் அவன் கை தான் அதிகமாக பேசியது என்று..


தன் கணவனின் மாற்றத்தை எண்ணி இப்போவாச்சும் உனக்கு புத்தி வந்துச்சே என்று விட்டு உள்ளே சென்றாள்.



தமிழ் அவன் முதுகில் சாய்ந்துக் கொண்டு அவனுடனான பயணத்தை வெகுவாக ரசித்தாள் அவனிடம் அத்தான் மெதுவா போங்க என்று கூறினாள். அவனிடம் நான் இதுப் போல வண்டியில் போனதே இல்லை அத்தான் இன்னைக்கு உங்கக்கூட போறது அப்படியே காத்துல மிதக்குற மாதிரி இருக்கு என்று கூறினாள்.


நாளைக்கு என்ன டவுனுக்கு ஸ்பீடா கூட்டிட்டுப் போறீங்களா என்று கேட்டதும் ம்ம் போலாம் தமிழ் என்று கூறினான்.


அவனும் அவள் கூறியதும் மெதுவாக வண்டியைச் செலுத்தினான் அந்த பயணத்தை ரசித்தான். அந்த குட்டிப் பிசாசு தன் வசியக் குரலால் அவனைக் கட்டிப் போட்டிருந்தாள்.


இருவரும் இந்த பயணம் இப்படியே நீளாதா என்று ஏங்கினர். எவ்வளவு மெதுவாக வண்டியை செலுத்தியும் வீடு வந்து விட்டது. வீடு வந்ததும் இறங்கியவள் அவன் வண்டியை நிறுத்தி வருவதற்காக உள்ளே செல்லாமல் வெளியே நின்றாள்.


கதிரின் வண்டியின் சத்தம் கேட்டு அனைவரும் வெளியே வந்தனர்.வடிவாம்பாள் ஆளம் சுற்றி முத்து வலது காலை எடுத்து வச்சு உள்ளே போடா இதோ வரேன் என்று ஆளத்தைக் கொட்ட வெளியே சென்றாள்.


Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments