மோகம் :3
தீனா 25 வயது நிரம்பிய இளைஞன் சென்னையில் ஒரு பிரபலமான பொறியியல் கல்லூரியில் படிக்கிறேன் என்று மிதப்பாக கூறிக்கொண்டு திரிவான் .
ஆனால் தான் முன்பு படித்த நான்கு வருட பொறியியல் கல்லூரியில் வைத்த பதினெட்டு அரியர்களைக் கிளியர் பண்ணாமல் தன் இஷ்டம் போல் வாழ்ந்துக் கொண்டிருக்கிறான்.
ஆனால் வெளியில் தான் மேற்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறேன் அதனால் தான் இன்னும் வேலைக்கு செல்லவில்லை என்று கேட்பவரிடம் பொய்யாக கூறுவான்.
ஆனால் அவனுக்கு தெரியாத ஒன்று யாரும் இவன் பேச்சை நம்ப போவதில்லை என்று.
அவனை பற்றி அந்த ஊர் மக்களுக்கு நன்றாக தெரியும் அவனிடம் விசாரிப்பது கூட அவன் அப்பா பண்ணையாருக்காக தான்.
ஏனென்றால் அங்குள்ள மக்களில் பாதி நபர்கள் அவர்களின் பண்ணைகள், வயல்களில் தான் வேலை பார்கிறார்கள் .
.தீனாவிற்கு இல்லாத கெட்டப்பழக்கமே இல்லை என்று சொல்லலாம். மதுவிலிருந்து மாதுவரை அனைத்தும் உண்டு.
முதலில் இவனுக்கு இருக்கும் இந்த பழக்கம் பண்ணைக்கு தெரியாது. ஒரு நாள் குடி விட்டு தள்ளாடிக்கொண்டே வந்த பொழுது பார்த்து விட்டார்.
அப்பொழுது இந்த பழகத்தை இனிமேலும் தொடர்ந்தால் இந்த வீட்டிலும் உனக்கு இடமில்லை சொத்திலும் பங்கில்லை என்றார்.
அதனால் கொஞ்ச நாள் அடக்கி வாசித்தவன் நேற்றிரவு தன் நண்பனுடன் முட்ட முட்ட குடித்து விட்டு வரும் போது முத்தமிழ் வீட்டைக் கடந்து போகையில் அவள் அம்மா இறந்தது நியாபகம் வர அவள் மட்டும் தான் வீட்டில் இருப்பாள் என்று தெரிந்து கொண்டு அவள் வீட்டுக் கதவைத் தட்டினான்.
அன்று கதிரின் அப்பத்தாக்கு இடுப்பு வலி இருந்தது அதனால் கதிரிடம் "அய்யா கதிரு போய் முத்தமிழ இங்க கூட்டிட்டு வாயா எனக்கு இடுப்பு வலிக்குது அலைய முடியலை நீ போய் அழைச்சிட்டு வாயா" என்று அனுப்பி வைத்தார்.
அதே நேரம் முத்தமிழின் வீட்டுக் கதவைப் படபடவென தட்டிக் கொண்டிருந்தான்தீனா .
முத்தமிழ் யாரு இப்படி கதவைத் தட்டுறது என்று நினைத்துக்கொண்டு கதவருகில் வந்து தாழ்ப்பாளில் கை வைக்கப் போக தீனாவின் குரல் கேட்டது.
திடுக்கிட்டு கையை எடுத்தவள் பயந்து இரண்டடி பின்னால் சென்றாள்.தீனாவோ "ஏய் கதவைத் திறடி என்ன டி பண்ற இப்போ திறக்குறியா இல்லை கதவை உடைக்கவா " என்று கத்தி கொண்டு வேகமாக கதவைத் தட்டினான்.
தமிழுக்குப் பயத்தில் என்ன செய்வது என்றே தெரியவில்லை. உடனே கதிர் நியாபகம் தான் வந்தது.
"அத்தான் வாங்க அத்தான் இன்னைக்கு கூட வீட்டுக்குக் கூப்டீங்க நான் தான் வரலை சாரி அத்தான் வந்து என்னை அழைச்சிட்டு போங்க அத்தான்" என்று மனதுக்குள்ளே வேண்டினாள்.
அப்பொழுது பைக் சத்தம் கேட்கவும் தீனா போய் மறைந்து கொண்டான். ஏனென்றால் அந்த ஊரில் கதிரிடம் மட்டும் ராயல் என்பீல்டு பைக் இருந்தது.
அந்த வண்டியின் சத்தம் கேட்கவும் கதிர் தான் வருகிறான் என்று தெரிந்து கொண்டு மறைவில் ஒளிந்து கொண்டான்.
அதுவரை அழுது கொண்டிருந்தவள் காதில் பைக் சத்தம் விழவும் கண்ணை துடைத்தாள்.
"தமிழ்" என்று கதவைத் தட்டவும் அவன் குரலை கேட்டதும் சிறிதும் அவள் தாமதிக்கவில்லை வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல கதவைத் திறந்து கொண்டு சென்றாள்.
தன் முன்னால் நின்றவனை இறுக அணைத்துக் கொண்டு "அத்தான் ..அத்தான் .." என்று அவன் நெஞ்சில் முகம் புதைத்து அழுதாள்.
அவள் திடீரென்று அணைக்கவும் ஒன்றும் புரியாமல் "தமிழ் என்ன ஆச்சு எதுக்கு அழுகுற " என்று உள்ளே அழைத்தப் போனான்.
அவள் கண்களைத் துடைத்து அவளுக்கு தண்ணீரைக் கொடுத்தான். இன்னும் தேம்பிக் கொண்டே இருக்க "ஒன்னும் இல்லை தமிழ் என்ன ஆச்சு அம்மா நியாபகம் வந்துருச்சா" என்று கேட்டதும் இல்லை என்று தலையசைத்தவள் கண்கள் திரும்ப அழுகையை ஆரம்பிக்க "ச்சு என்ன ஆச்சு அழுகாத " என்று அவள் கண்களைத் துடைத்து விட்டு அவளைத் தன்னோடு அணைத்துக்கொண்டு "என்ன ஆச்சு சொன்னாதானே தெரியும்" என்றான்.
அவள் இன்னும் அழுகையை நிறுத்தாமல் அழுது கொண்டே இருக்கவும் "தமிழ் இப்போ அழுகையை நிறுத்திட்டு சொல்லப்போறியா இல்லையா" என்று கடுமையாக கேட்கவும் அவனை விட்டு தள்ளி நின்றவள் கண்களைத் துடைத்துக் கொண்டு அவனை கண்டுக் கொள்ளாமல் சுவற்றில் சாய்ந்து அமர்ந்தாள்.
அவன் பக்கத்தில் வரவும் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பினாள்.
"ஓ உனக்கு கோபமெல்லாம் வருமா" என்று நினைத்தவன் அவள் அருகில் போய் அமர்ந்தான்.
"ஏய் தமிழ் இப்போ எதுக்கு மூஞ்சிய இப்படி தூக்கி வச்சிருக்க" என்றதும் தான் தாமதம் அவனை பார்த்து " கல்யாணம் பண்ணின பொண்டாட்டி தனியா இருக்காளேன்னு அக்கறை இருக்கா.. நீங்க வீட்டுக்கு நான் வரலைன்னு சொன்னாலும் இழுத்துட்டுப் போயிருக்கலாம்ல ..நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா அந்த பெரிய பண்ணையோட பையன் கதவை தட்டினான் தெரியுமா வெளிய வாடி இல்லனா கதவை உடைப்பேன்னுலாம் சொன்னான் ...சரி அதெல்லாம் விடுங்க நான் அழுதேன்ல என்ன சமாதான படுத்தாம என்கிட்ட கத்தி கோபமா பேசுறீங்க..." என்று அவனிடம் பொரிந்து தள்ளியவள் "கொஞ்சமாச்சும் பொண்டாட்டின்னு அக்கரை இருக்கா உங்ககிட்ட இப்படி இருந்தா ஒரு சக்கரையையும் எதிர்பார்க்க முடியாது போல ஜடம் ஜடம்..." என்று திட்டி தான் அவனுக்கு பொண்டாட்டி என்பதை நிருபித்தாள்.
அதுவரை அவள் பேசுவதைக் கேட்டு அதிர்ச்சியில் இருந்தவன் அவள் ஜடம் என்கவும் "யாருடி ஜடம் நானா "என்றவன் அவள் முகத்தை பற்றி அவள் இதழை வன்மையாக சிறை செய்தான்.
அவள் தன்னிடம் கோபம் கொண்டதும் சுவரஸ்யமாக அவளைப் பார்த்து அருகில் அமர்ந்தவன்.
அதன்பிறகு அவள் பேசிய பேச்சில் அதிர்ந்தான்.
இவள் இப்படி கூட பேசுவாலா அமைதின்னுல்ல நினைச்சேன் என்று நினைக்கவும் அவன் மனசாட்சியோ டேய் கதிரு அவ உன் பொண்டாட்டியா மாறிட்டா உன்னை புருஷனா ஏத்துக்கிட்டா அதான் கோபப்படுறா தன்னை கூட்டி போகவில்லையே என்று உரிமை இருக்குற இடத்துல தான் கோபத்தையும் காமிப்பாங்க .
அதன்பிறகு அவள் ஜடம் என்று தன்னை சொல்லவும் பொங்கி எழுந்துவிட்டான்.
அவன் தன் இதழை சிறை செய்வான் என்று சத்தியமாக அவள் நினைக்கவில்லை.
" சும்மா இருந்த சிங்கத்தை தூண்டி விட்டுட்டோம் போல " என்று நினைத்தவள் அவனிடம் இருந்து விலக எத்தனித்தாள் .
ஆனால் அவன் விடவில்லை.
அவனோ அவள் உதட்டில் நின்று நிதானமாக வந்த தேனை ஒரு சொட்டு விடாமல் பருகிக்கொண்டிருந்தான்.
சிறிது நேரம் கழித்து விட்டவன் அவ்வளவு நேரம் இருந்த மென்மை மறைய "நீ வீட்டுலையே இரு என் பொண்டாட்டிக்கிட்டேயே வாலாட்டிட்டு எப்படி அவன் இந்த ஊருல இருக்கான்னு பாக்குறேன்" என்று அவளிடம் சொன்னவன் கிளம்பவும் அவன் கையைப் பிடித்து தடுத்தவள் "வேண்டாம் அத்தான் வாங்க வீட்டுக்குப் போலாம் இப்போ எதுவும் பிரச்சனை வேண்டாம் ப்ளீஸ்" என்று கெஞ்சவும் "சரி கெளம்பு நாளைக்கு வந்து துணியெல்லாம் எடுத்துக்கலாம்".
"வா போலாம் வீட்டுக்கு" என்றவன் வண்டியில் ஏறி அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்து அமர சொன்னான்.
0 Comments