Advertisement

Ad code

வாழ்வு - 5

 

வாழ்வு - 5


தருண் சொன்னதைக் கேட்டு சிரிப்பு வந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் அவனிடம்"அவர் என்னை பார்க்கலை டா தரு.. நம்ம குட்டிம்மாவ தான் பார்த்தாரு.. நம்ம அப்பாதான் அவர்.." என்றதும் இங்கு ஒருவனின் முகம் வெலக்கெண்ணெய் குடித்தது போல் ஆனது.


தருணிடம் மெல்லிய குரலில் கூறிக் கொண்டிருந்தவளை ஆசையாகப் பார்த்துக்கு கொண்டிருந்தவன் நம்ம அப்பா என்றதும் "அவங்களுக்கு தான் தியா அப்பா.. உனக்கு நான் வேற டி.."என்று அவன் மனது சிணுங்கியது அவளிடம்.


தருண் அவனை நெருங்கி அவன் கால்களைக் கட்டிக் கொண்டதும் தான் நினைவுக்கு வந்தான். தன் கால்களை தன் சிறு பிஞ்சுக் கரங்களால் அணைத்துக்கொண்டு தன்னை நிமிர்ந்து பார்த்த அவனைக் கண்டதும் உருகிப்போயிற்று.


அதுவரையில் இருந்த ரோமியோ உள்ளே சென்று.. உள்ளே இருந்த தகப்பன் வெளியில் வந்து விட்டான்.அய்யோ இவன் அப்பா என்றால் ரொம்ப பாசத்தைப் பொழிவானே.



அவனை தன் கைகளில் தூக்கியவன் அவனைப் பார்த்து சிரிக்கவும் தருண் "உங்க பேரு என்ன?" என்று கேட்டதும் "அபிமன்யு " என்றான். "அப்போ இன்னையில் இருந்து நீங்க அபிப்பா.." என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டான்.


பிறகு இருவரும் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.. அபிமன்யு அவனிடம் உனக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டதும் அவன் அடுக்கிக் கொண்டே போனான்.


பின் அவர்கள் உலகத்தில் பிசியாகி விட இங்கு சந்தியா அவனை பற்றி தான் யோசித்துக் கொண்டிருந்தாள் நல்லவங்க தான் போல தருக்குட்டிக்கிட்ட உடனே ஒட்டிக்கிட்டாங்க என்று நினைத்துக் கொண்டிருந்தவளை ஹர்ஷி அவள் கன்னத்தைக் கடித்து நினைவுலகத்திற்கு கொண்டு வந்தாள்.


உடனே நேரம் கடப்பதை உணர்ந்து அபியிடம் சென்று தயங்கிக் கொண்டே ஹர்ஷியைக் கொஞ்சம் பிடிங்க தருணைக் குளிக்க வைக்கனும் என்றதும் தன் வலது கையில் அவளை வாங்கிக் கொண்டான்.


 தருண் ஹர்ஷியின் கன்னத்தில் தன் ஆள்காட்டி விரல் கொண்டு தீண்டி இந்த பாப்பா அழகா இருக்கு என்று கூறினான்.


உன்னோட பாப்பா தான் தருண் நீ எப்போ வேணாலும் வந்து நம்ம வீட்டுக்கு வந்து பார்த்துட்டுப் போகலாம். அபிமன்யு இருவரையும் தன் இருக்கைகளில் தாங்கியிருக்க அதை பார்க்க அத்தனை அழகாக இருந்தது.


 கம்பீரமாக தன் பிள்ளைகளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து தன்னை அறியாமலே அவனை ரசித்தாள்.


பின் தருண் அபியிடமிருந்து கீழே இறங்கி சந்தியாவிடம் வந்தான். அவன் வந்ததும் சுடு தண்ணீரை அங்கிருந்த டப்பில் வெதுவெதுப்பாக கலந்தாள். தருணை அருகே அழைத்து அவன் உடையைக் கலைக்கக் கை வைக்கவும் அவள் கையைப் பிடித்து தடை செய்தான்.


அபியிடம் திரும்பி அபிப்பா திரும்புங்க என்று கூறினான்.அதை பார்த்து பக்கென்று சிரித்து விட்டாள். டேய் தருண் நான் இங்கதான் இருப்பேன் குளிடா ரொம்ப பண்ற என்று அவன் அருகில் வந்து அவன் தலையைக் கலைத்து விட்டான்.


பின் சந்தியா அவனை சமாளித்து அவன் உடையைக் கலைந்தாள். தண்ணீரைக் கண்டதும் அதில் இறங்க வேண்டும் என்ற உந்துதல் வர ஹர்ஷி அபியின் கையில் கைக்கால்களை ஆட்டி நழுவினான்.


என்னடா குட்டி மா என்ன வேணும் என்று மென்மையாக தன் மகளிடம் கேட்டான். அவள் தண்ணீரைக் கைக்காட்டவும் வேண்டாம் டா அண்ணா குளிக்கட்டும் நம்ம சும்மா பார்க்கலாம் என்று கூறியதும் அழ உதடைப் பிதுக்கினாள்.


அவள் விளையாடட்டும் கொஞ்ச நேரம் தானே இது ஹாட் வாட்டர்தான் என்றதும் ஹிம்ம் சரி என்று ஹர்ஷியின் உடைகள் கலைந்து அந்த டப்பில் உள்ள தண்ணீரில் அமர வைத்து அவளைப் பிடித்துக் கொண்டான்.


தண்ணீரில் இறங்கியதும் ஒரே குஷிதான் ஹர்ஷிக்கு தன் கைகளைத் தண்ணீரில் அடித்துக் காட்டித் தன் சந்தோஷத்தை வெளிப் படுத்தினாள்.அப்படியே அவளைக் கொஞ்சிக் கொண்டே தருணைக் குளிக்க வைத்தாள். 


இருவருக்கும் சிறு இடைவெளிதான் இருந்தது.அருகருகே தான் அமர்ந்திருந்தனர் சந்தியா தருணைக் குளிக்க வைப்பதற்காக தன் புடவையை இழுத்து சொருகி இருந்தாள்.


எதேர்ச்சியாக அபி திரும்ப அங்கு கண்ட காட்சியில் அவனால் அவன் கண்களை அந்த இடத்திலிருந்து விலக்க முடியவில்லை. 


புடவையை இழுத்து சொருகியதில் அதில் கிடைத்த இடைவெளியில் தன்னை பார்த்து பளிச்சென்று சிரித்த வெண்ணிற இடையைக் கண்டு தன்னை கட்டுப்படுத்த முடியாமல் சித்தம் மொத்தமும் கலங்க எழுந்த மோகத்தில் உள்ளுக்குள் தகித்துக் கொண்டிருந்தான். 


தன்னை பார்த்து வா வாவென்று என்று அழைத்ததைக் கண்டு சுற்றும் புறம் மறந்து தன் கையை அவள் பக்கம் நீட்ட சென்றவனை தண்ணீர் தெளித்து மகள் அவனை இந்த உலகிற்கு அழைத்து வந்தாள்.


தன் மேல் தண்ணீர் பட்டதும் திடுக்கிட்டவன் அப்பொழுதுதான் உணர்ந்தான் அவன் செயலை அய்யோ மானத்தை வாங்காதடா அபி என்றதும் திரும்ப அவள் பக்கம் போன பார்வையை இவனால் கட்டுப்படுத்த முடியவில்லை..


 ஒன்றரை வருடமாக தூங்கிக் கொண்டிருந்த ஒன்று தன் தலையை வெளியே நீட்டி விஷ்வரூபம் எடுத்து ஆடியது தனக்கு இப்பொழுதே வேண்டுமென்று அவனை ஆட்டுவித்தது.


கண்களை மூடித் தன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்தவன் சிறிது நேரத்தில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டான்.


சந்தியா தருணைக் குளிப்பாட்டி அவன் உடம்பைத் துடைத்து விட்டு அவனுக்கு உடையை அணிவித்தாள். ஹர்ஷியிடம் திரும்பி குட்டிம்மா நீங்க தண்ணியில் போட்ட ஆட்டத்துல நாங்க ரெண்டு பேரும் நனைஞ்சிட்டோம் என்று கூறிக் கொண்டே இயல்பாக அவனிடம் இருந்து ஹர்ஷியைத் தூக்கி அவளைத் துண்டு கொண்டு துடைத்தாள்.


அப்பொழுது தான் பார்த்தான் தான் பாதி நனைந்து விட்டதை உடனே எழுந்து கொண்டவன் ஹர்ஷியின் உடையை அவளிடம் கொடுத்தான்.


அதை வாங்கிப் போட்டு விட்டவள் ஹர்ஷியை அவனிடம் கொடுத்து விட்டு நான் சாப்பாடு எடுத்துட்டு வரேன் அதுவரைக்கும் பார்த்துக்கோங்க என்று அவனைப் பார்க்காமல் ஹர்ஷியின் மேல் பார்வையைப் பதித்துக் கூறிவிட்டு சென்றாள்.


அப்பொழுதுதான் அவன் கவனித்தான் வந்ததில் இருந்து அவள் தன் முகத்தைப் பார்த்துப் பேசவில்லை என்று. ஏன் இவள் என்னை பார்த்துப் பேச மாட்டுறா என்று நினைத்ததும் அவன் மனசாட்சியோ பின்ன உன்னை மாதிரி வச்சக் கண்ணை எடுக்காமல் பார்த்துக்கிட்டு இருப்பாளா என்று கேலி செய்து அவன் மானத்தை வாங்கியது.


அது தியாக்கு கொஞ்சம் கூச்சமா இருக்கும் அதான் பேசாமா இருக்கா என்றதும் என்னாது தியாவா ஆமாம் நீ முன்னாடியும் தியான்னு தான் சொன்ன இப்பொழுதும் தியான்னு சொல்ற பிக்ஸ் பண்ணிடியா என்றதும் ஆமாம் அவ எனக்கு மட்டும் தியா என்னோட தியா என்றதும் இவனுக்கு முத்திடுச்சு என்று அவனுக்கு சான்று வழங்கி விட்டுச் சென்றது.


பின் ஹர்ஷியுடன் தருணையும் அழைத்துக் கொண்டு அருகில் இருந்த கல் மேடையில் அமர்ந்தான். சந்தியா சிறிது நேரத்தில் ஒரு கிண்ணத்தில் பால் சாதத்தை நன்றாகக் குழைத்து எடுத்து வந்தாள்.


 இவர்கள் மூவரும் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தவள் தருணிற்கு ஒரு வாய் ஊட்டியதும் ஹர்ஷி இவளிடம் தன் கையைத் தூக்கிக் கொண்டு தன்னை தூக்குமாறு தாவினாள்.


அதை உணர்ந்தவள் அவளை அவனிடமிருந்து வாங்கிக் கொண்டு தன் இடுப்பில் வைத்துக் கொண்டவள் அவளுக்கு கொஞ்சமாக சாதத்தை ஊட்டினாள்.அவள் ஊட்டவும் ஹர்ஷிக்குட்டி இதெல்லாம் சாப்பிடலாமா என்று கேட்டுப் பதறினான்.


அவன் பதறுவதைப் பார்த்து முகம் கனிந்தவள் அதெல்லாம் ஒன்னும் ஆகாதுங்க சாப்பாடு குடுக்கலாம் பால் சாதம் தான் குடுத்தேன் என்று அவன் கண்களைப் பார்த்துக் கூற அபி கிளீன் போல்ட்.அவள் கூறியதற்கு மந்திரத்திற்கு கட்டுப்பட்டவன் போல் ம்ம் என்று தலையை ஆட்டினான்.


இருவருக்கும் ஊட்டி முடித்தவள் தன் கையைக் கழுவிக் கொண்டு ஹர்ஷியின் உதட்டில் ஒட்டியிருந்த சாதத்தைத் துடைத்துவிட்டு அதுப்போல தருணுக்கும் துடைத்து விட்டாள்.


அதை கண்ட அபிக்கு இனி தன் மகளைப் பூப்போல் பார்த்துக் கொள்வாள் என்று நம்பிக்கைக் கொண்டான்.ஆனால் வெகுவிரைவிலே அந்த நம்பிக்கை உடைக்கப் படப்போவதை அவன் அறியவில்லை.


அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு விட்டு வெளியே வந்தனர். அங்கு ஒரு குடும்பாக அவர்கள் அங்கு அமர்ந்து பிள்ளைகளுக்கு ஊட்டுவதைப் பார்த்துக் சந்திராவிற்கு கண்ணீரே வந்துவிட்டது.


தன் மகன் இப்படி குடும்பமாக வாழ மாட்டானா என்று ஒவ்வொரு நாளும் ஏங்கிக் கொண்டிருந்தவர் இப்பொழுது இந்த காட்சியைப் பார்த்ததும் இனி தன் மகனை பற்றிக் கவலைப் படத்தேவையில்லை என்ற எண்ணம் தான் தோன்றியது.


மற்றவர்களும் இந்த காட்சியைப் பார்த்து நெகிழ்ந்துப் போயிருந்தனர். பிறகு சதாசிவம் பரமனிடம் பரமா அந்த வீட்டுக்குப் போய் பேசலாம்டா கொஞ்சம் முக்கியமான விஷயம் பேசனும் என்றதும் போகலாம்டா என்றதும் இவர்கள் இருவரை நோக்கி அனைவரும் வந்தனர்.


தேவி ஹர்ஷியை வாங்கிக் கொள்ள பரமன் நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டு வாங்கப்பா..நாங்க போய் கல்யாணம் பற்றி பேசிட்டு இருக்கோம் என்றார். 


இருவரும் ஆமோதிப்பாக தலை அசைக்கவும் இவர்கள் வீட்டிற்குப் போக நகர்ந்தனர். அப்பொழுது ஹர்ஷி தன்னை விட்டுத் தன் அம்மா போகிறாள் என்றதும் உதட்டைப் பிதுக்கி தன் கைகளைச் சந்தியாவை நோக்கி தன்னைத் தூக்குமாறு அழுதாள்.


உடனே தேவியிடம் இருந்து வாங்கியவள் ஒன்னும் இல்லடா அழக்கூடாது என்று தன் தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்தாள். ஹிம்ம் இப்போவே அம்மாவ விடமாட்டேங்கிற சீக்கிரம் கல்யாணத்தை முடிக்கனும்ங்க என்று சேகரிடம் சந்திரா கூறினார்.


அவர் அப்படி கூறியதைக் கேட்டு ஒருவன் உள்ளுக்குள் அத்தனைப் பற்களையும் காட்டிக் கொண்டு வெளியே ஒன்றுமே தெரியாதது போல் நின்று கொண்டிருந்தவனைக் கண்டு அவன் மனசாட்சி யப்பா டேய் தாங்க முடியலைடா உலகமகா நடிப்புடா என்று அவனை கண்டுத் தலைத் தெறிக்க ஓடியது. வேறு யாராக இருக்க முடியும் நம் அபிமன்யுவே தான்..


வாழ்வு சிறக்கும்…


Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments