Advertisement

Ad code

வாழ்வு- 4

 

வாழ்வு - 4


கடைக்கு சென்றவனுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.. தேவி அம்மா பார்க்க போகலாம் என்றதும் ஏதோ ஒரு இனம் புரியா உணர்வு அவனை ஆட்கொண்டது. தன் மனதில் ஒரு குரல் போ போய் பாரு என்று கூறிக்கொண்டே இருக்கவும் அதற்குமேல் அவனால் அங்கு இருக்க முடியவில்லை.


தாத்தா அழைத்ததும் போயே ஆகவேண்டுமா என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் அந்த அம்மா என்ற சொல்லை கேட்டதும் ஹர்ஷிக்கு அம்மா என்றால் நான்தானே அப்பா அப்போ அவள் எனக்கு என்று யோசித்தவன் உடனே லதா நியாபகம் வரவும் ச்சே என்று கோபத்தில் அங்கிருந்த மேசையைக் குத்தினான்.


பிறகு ஒரு முடிவு எடுத்தவனாக கிளம்பினான் சதாசிவத்தின் வீட்டிற்கு.


இங்கு ஆசிரமத்திற்கு வந்தவள் நேரே குழந்தைகள் இருக்கும் அறைக்கு சென்றாள். அனைவரும் குளித்து முடித்துவிட்டு அங்கேயே விளையாடிக் கொண்டிருக்க "குட்டீஸ் என்ன பண்றீங்க எல்லாரும்"என்று கேட்டதும் உடனே அனைவரும் "அவள் அருகில் சந்தும்மா.." என்று ஓடிவந்தனர்.


"என்ன குளிச்சாச்சா குட்டீஸ்.. வாவ் எல்லாரும் குளிச்சு பிரஷா இருக்கீங்க..எங்கே என் அருந்தவாலு தருண்" என்றதும் அனைவரும் ஒரு இடத்தில் கையைக் காட்டினர்.


அங்கு இருக்கும் குழந்தைகள் அனைவரும் பத்து வயதிற்கு உட்பட்டவர்களே. அதில் ஜெயா என்பவள் தான் பெரிய பெண் வயது ஒன்பது மற்றவர்கள் ஆறு, ஏழு, ஐந்து வயதுடையவர்கள்.


தருணிற்கு மட்டும் நான்கு வயது. நான்கு வருடங்களுக்கு முன்பு அர்ஜூன் வீட்டிற்கு வேலை முடிந்து வந்து கொண்டிருந்த நேரம் குழந்தை அழும் சத்தம் கேட்கவும் பைக்கை நிறுத்தி விட்டு திரும்பி பார்த்தான்.


அங்கு யாரும் இல்லை கிளம்ப போனவன் திரும்ப அழுகிற குரல் கேட்கவும் அருகில் இருந்த குப்பைத் தொட்டியைப் பார்த்தான்.


அங்கிருந்து தான் சத்தம் வந்துக் கொண்டிருந்தது. போய் பார்க்கவும் பிறந்து பத்து நாள் கூட ஆகாத குழந்தையை யாரோ போட்டுவிட்டு சென்றிருந்தனர்.


அவன்தான் தருண் தன் அத்தான் தருணை வீட்டுக்கு அழைத்து வந்ததால் சந்தியாவிற்கு எப்பொழுதுமே தருண் என்றால் ஸ்பெஷல் அதிகம் செல்லம் கொடுப்பாள்.


தருணும் கேடிப் பயல் இவளிடம்தான் அனைத்து சேட்டையும் செய்வான். அங்கு தனியே அவன் மட்டும் குளிக்காமல் கோபத்துடன் உர்ரென்று நிற்க முகம் கனிந்தவள் ஜெயாவிடம் அனைவரையும் அழைத்துப் போய் சாப்பிடுமாறு கூறினாள்.


அவர்களை அனுப்பி வைத்து விட்டு அந்த குட்டியிடம் வந்தாள்.அவள் நெருங்கவும் தருண் அவளுக்கு முதுகு காட்டி திரும்பி நின்றான். அவன் அருகே மண்டியிட்டு அமர்ந்து "தருக்குட்டி நீ கேட்டது வாங்கிட்டு வந்துருக்கேன்.. இங்கே பாரு பேக்ல வச்சுருக்கேன்.." என்று குசுகுசுவென அவன் காதில் மெதுவாகக் கூறினாள்.


உடனே ஓரப்பார்வையால் திரும்பிப்பார்த்தான் அவன் பார்க்கவும் பையில் இருந்த சாக்லேட்டை லேசாக எடுத்துக் காட்டி உள்ளே வைத்தாள். உடனே அவளிடம் தாவி "சந்தும்மா சாக்கி தா.." என்று கேட்டதும் அவளுக்கு உருகிப் போயிற்று,


இப்பொழுது குடுத்தால் அவன் சாப்பிடாமல் டிமிக்கி குடுப்பான் என்று தெரிந்ததால் அவனிடம் "என் தருக்குட்டி நான் சொன்னதெல்லாம் கேட்டு நல்லப் பிள்ளையா இருந்தா சாக்கி தருவேன்.." என்று கூறியவள் "இப்போ வாங்க நம்ம குளிக்கப் போகலாம்.." என்று வெளியே தூக்கி வந்தாள்.


அவள் வெளியே தூக்கி வரவும் இவர்கள் அனைவரும் சதாசிவத்துடன் வீட்டின் உள்ளே வந்தனர். அவர்களைப் பார்த்ததும் சிநேகமாக சிரித்தாள். சந்திரா அவள் அருகில் வந்து "எப்படி மா இருக்கே.." என்றதும் "நல்லா இருக்கேன்மா.." என்றதும் அவளிடம் அனைவரும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர்.


தேவி தான் ஹர்ஷியைத் தூக்கி வைத்திருந்தாள். அவளும் என்ன பேசுவது என்று தெரியாமல் முழிக்க சந்தியா அவள் அருகில் வந்து ஹர்ஷியிடம் "ஹே க்யுட் பேபி அழகா இருக்கீங்களே ஏஞ்சல் போல.."என்று அவள் கன்னத்தை வருடவும் ஹர்ஷி வெட்கம் கொண்டு தன் அத்தையின் தோள் வளைவில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.


சந்திரா ஹர்ஷியிடம் "அம்மா டா .. அம்மா பாரு அம்மாவ கூப்பிடு" என்றதும் திரும்பி சந்தியாவை உற்று பார்த்தாள். உடனே தன் அத்தையிடம் இருந்து சந்தியாவிடம் தாவினாள்.அவள் தருணை இடது கையில் ஏந்தி இருக்கவும் ஹர்ஷியை வலது கையில் தாங்கிக் கொண்டாள்.


உடனே அவளிடம் தருண் சமத்தாக தன் சந்துக்கு வலிக்கும் என்று அவளிடம் இருந்து இறங்கிக் கொண்டான்.அதைக் கண்டு "சமத்துக் குட்டியா இருக்கீங்களே உங்க பேரு என்ன குட்டி பையா.." என்றாள் தேவி.


"நான் குட்டி பையன் கிடையாது என் சந்துக்கு மட்டும் தான் நான் குட்டி என் பேரு தருண்.." என்று தன் மழலைக் குரலால் சொல்லவும் "சோ ஸ்வீட்.." என்று தன் பையில் இருந்த சாக்லேட்டை எடுத்து அவனிடம் நீட்டினாள் தேவி உடனே அதை பார்த்து நிமிர்ந்து சந்தியாவைப் பார்க்கவும் "அத்தைதான் தருக்குட்டி வாங்கிக்கோ.." என்றதும் தான் "நன்றி அத்தை" என்று வாங்கிக் கொண்டான்.


சிறிது நேரம் அவர்களிடம் பேசவும் சகஜமாக அனைவரும் பேசவும் சந்தியாவிற்கு எதுவும் அந்நியமாக தெரியவில்லை.அவளும் அவர்கள் பேச்சில் கலந்துக் கொண்டாள்.


பரமனுக்கு கால் வரவும் தன் போனை எடுத்து யாரென்று பார்த்தார் அபிமன்யு தான் அழைத்தான். "சொல்லு அபி எங்க இருக்க" என்று கேட்டார்.அபி என்றதுமே சந்தியா நெஞ்சம் ஏனோ படப்படத்தது. 


"தாத்தா இங்க அர்ஜூன் வீடு சாத்தியிருக்கே..வேற அட்ரஸ்ல இருக்காங்களா" என்றதும் "இல்லை அபி நீ இருக்கிற தெருவில் தான் இருக்கோம்.. காரை அங்கேயே பார்க் பண்ணிட்டு இரண்டு வீடு தள்ளி ஒரு பெரிய வீடு இருக்கும் பாரு அங்க தான் இருக்கோம் வா" என்று போனை அனைத்தார்.


சதாசிவமும் பரமனும் வெளியே போய் அவனை அழைத்து வந்தனர். அப்பொழுது ஹர்ஷி தன் அம்மா நெஞ்சில் ஒய்யாரமாய் சாய்ந்து கொண்டு தன் அத்தை ஏதோ பேசவும் அவளைப் பார்த்து சிரித்தாள்.


 ஹர்ஷி சிரிக்கவும் சந்தியாவும் அதைப் பார்த்து சிரித்துக் "குட்டிப் பொண்ணு அழகா சிரிக்கிறாங்களே" என்று சொல்லிக் கொண்டு அவள் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.


அவள் வைத்த முத்ததில் பித்தம் தலைக்கேற நின்றவனை அவள் அறியவில்லை. அபிக்கு அந்த காட்சியைப் பார்க்கவே அத்தனை இதமாக மனதுக்கு சுகமாக இருந்தது.


 தன் மகளும் தன் மனைவியும் சிரிப்பதைத் தன் மனப்பெட்டகத்தில் சேமித்து வைத்துக் கொண்டான்.


தன் மனைவியா ஆமாம் அவன் மனைவியே தான் அவனுக்கு மட்டுமே அவள்.. ஆனால் அதை அவன் உணரும் நிலையில் இல்லை.


தன்னை யாரோ பார்ப்பது போல் இருக்கவும் சந்தியா நிமிர்ந்து பார்த்தவள் சட்டென்று குனிந்துக் கொண்டாள்.அவள் தன்னைப் பார்த்து உடனே தலையைக் குனிந்துக் கொள்ளவும் அபியின் கண்களில் சுவாரஸ்யம் கூடியது.


அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். சந்தியாவோ அவன் பக்கமே திரும்பவில்லை.அவள் ஹர்ஷியிடம் தீவிரமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தாள் ஹர்ஷியும் அதற்கு தன் பொக்கை வாயில் எச்சில் ஒழுக சிரித்துக் கொண்டிருந்தாள். 


தானும் அந்த சிரிப்பில் கலந்துகொள்ள வேண்டும் என்று எழுந்த ஆவலை தன் தலை முடியைக் கோதி கட்டுப்படுத்திக் கொண்டான்.


பின் அனைவரையும் சாப்பிட சதாசிவம் அழைத்தார். சந்தியா "நீங்க எல்லாரும் போய் சாப்பிடுங்க.. நான் தருணைக் குளிக்க வைத்து விட்டு வந்து சாப்ட்டுக்கிறேன்" என்று கூறியதும் தேவி ஹர்ஷியைத் தூக்க வர தன் அம்மாவை விட்டு வரவில்லை அந்த சின்னக்குட்டி.


"ஹர்ஷிக்குட்டி அம்மா வந்ததும் அத்தையை மறந்துட்டியா" என்று அவள் கன்னத்தை மெதுவாக கிள்ளி தன் உதட்டில் ஒற்றி முத்தமிட்டாள். பரமன் அவசரமாக "சரி சந்தியாவும் அபியும் பிள்ளைகளைப் பார்த்துக்குவாங்க.. வாங்க நாம போய் சாப்பிட்டு வரலாம்" என்றதும் அவர் அதற்காக கூறுகிறார் என்பதைக் கண்டு கொண்டு அனைவரும் சாப்பிடும் அறைக்கு சென்றனர்.


அபி என்ற ஒருவன் அங்கு இருக்கிறான் என்று கண்டுக்கொள்ளாமல் மகளைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு "தருக்குட்டி வாங்க குளிக்கலாம்.." என்று அவனை வெளியே அழைத்துச் சென்றாள்.


அந்த வீட்டின் முன்பு புற்தரையில் ஒரு பக்கம் குழந்தைகள் விளையாட என்று ஒரு பகுதியை ஒதுக்கி இருந்தனர். மறுபக்கம் அமருவதற்காக பென்ஞ் போடப் பட்டு இருந்தது. 


அங்கு இருந்த பெஞ்சில் தருணை அமர்த்தி விட்டு "இரு தருக்குட்டி நான் போய் வெண்ணீ சோப்பு எல்லாம் எடுத்துட்டு வரேன்.." என்று ஹர்ஷியைத் தூக்கிக் கொண்டு போனாள்.


அவள் பின்னால் போக சொன்ன மனதைத் தன் கால்களைத் தரையில் ஊன்றி நின்றுக் கொண்டான். தன்னையே முறைத்துக் கொண்டு இருக்கும் அந்த சின்னவனை நோக்கி ஏன் இவன் இப்படி பார்க்கிறான் கண்டுப் பிடிச்சுட்டானோ என்று நினைத்தவன் சின்ன பையன் இவனுக்கு எப்படி தெரியும் என்று அசால்டாக விட்டு விட்டான்.


அவனுக்கு தெரியவில்லை இன்னும் சற்று நேரத்தில் தன்னவளின் முன்பு தன் மானத்தை அவன் வாங்க போகிறான் என்று.


சிறிது நேரம் கழித்து சந்தியா வரவும் ஒரு வயதானவர் சுடு தண்ணீரைக் கொண்டு வைத்துவிட்டு சென்றார்.அவள் வந்ததும் "சந்தும்மா ஏன் இவர் உன்னை முறைச்சு முறைச்சுப் பார்க்குறார்.." என்று அபியைக் காட்டிக் கூறினான்.


அவன் கூறியதைக் கேட்டுத் திருத்திருவென முழித்தான் அபிமன்யு சின்ன பையன் நினைச்சா இப்படி போட்டு உடைக்கிறான் என்று மனதில் நினைத்தான்.


அவன் மனசாட்சியோ நீ உன் பொண்டாட்டியைப் பார்க்கக்கூட முடியாது போல டா என்று இவனைப் பார்த்துக் கொக்கரித்து சிரித்தது.


நான் என் பொண்டாட்டிய பார்ப்பேன் கட்டிக்கூடப் பிடிப்பேன் இல்லை என்ன வேண்டும்னாலும் பண்ணுவேன் உனக்கென்ன என்று தன் மனசாட்சியிடம் எரிந்து விழுந்தான்.


இன்னும் சிறிது நேரத்தில் உள்ள சூடா வெளியே கூலா அவன் மனநிலையை மாற்றும் ஒரு நிகழ்வு நிகழப் போவதை அவன் அறியவில்லை.


வாழ்வு சிறக்கும்….


Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments