Advertisement

Ad code

மோகமுள் - 9


 மோகமுள் தீண்டாதோ தீரனே

மோகமுள்-9:

இங்கு மித்ரா வீட்டில் பிரேமா இடிந்து போய் அழுத படி ஒரு தூணில் சாய்ந்தபடி அமர்ந்திருக்க பக்கத்தில் ஈஸி சேரில் கண்களை தன் இடது கரத்தால் மறைத்தபடி படுத்திருந்தார் தாமு.

பெற்றவர்களுக்கு இன்னும் மனது ஆறவில்லை..

தன் பெண் இப்படி ஒரு காரியத்தை செய்வாள் என்று இன்னும் அவர்களால் நம்ப முடியவில்லை.

தன் பிள்ளையின் மனம் பெற்றோருக்கு தெரியாதா? எப்பொழுதும் அலுவலகத்தில் இருந்து வந்ததும் தன் சாருடைய புராணத்தை தொடங்குபவள் இரவு அவள் அறைக்கு செல்லும் வரை பேசிக் கொண்டே இருப்பாள்.

அவனை தன் காதலித்திருந்தால் தங்களிடம் கூறியிருப்பாள்.. இதுவரை அவள் அவர்களிடம் ஒன்றையும் மறைத்ததில்லை.

அவளால் மூடி மறைக்கவும் முடியாது.

(அப்படி ஒரு ஓட்ட வாயா மித்து நீ..)

மனதில் உள்ளதை அப்படியே வெளிப்படையாக கூறிவிடுபவள் மற்றவர் மனம் புண்படும்படி கூட பேசமாட்டாள்.

ஆனால் யாரோ ஒருவனுக்காக தங்களை எதிர்த்து அவள் ஒரு முடிவு எடுத்திருக்கிறாள் என்று நினைக்கும் போது மனம் பொறுக்கவில்லை.

அவன் நலமாக இருந்திருந்தாலும் அவள் செயலுக்கு தலையாட்டி இருக்கலாம்.. 

எல்லாவற்றிலும் சிறந்தவனாக இருப்பவனுக்கு தடை சொல்லவும் முடியாது..ஆனால் அந்த குறையில் எல்லாம் அடிபட்டு போகிறதே.. தன் பெண் வாழக்கை எப்படி இருக்குமோ என்ற பயம் அவர்களை கவ்விக்கொண்டது.

மண்டபத்தில் தங்களின் பேச்சை கேட்காமல் பிடிவாதமாக நிற்க கோபத்தில் அந்த வார்த்தையை கூறினார்களே ஒழிய மனதறிந்து சொல்லவில்லை.

அப்படி கூறியிருந்தால் அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் இப்படி இடிந்து போய் அமர்ந்திருக்க மாட்டார்கள்.

அவர்களின் பயமே தங்கள் பெண்ணின் வாழ்க்கையை பற்றி தான்.

கதவை தட்டும் சத்தம் கேட்கவே கண்களை துடைத்து கொண்டு எழுந்த பிரேமா யாரு இந்த நேரத்துல என்று நினைத்தவர் கதவை திறக்க அங்கு நின்றிருந்தவரை கண்டு அதிர்ந்தார் இவர் எதுக்கு இங்க வந்துருக்கார் என்று..

அங்கு நின்றது யாராக இருக்கும் சக்கரவர்த்தி தான்.

சக்கரவர்த்தி மண்டபத்தில் நிருவிடமும் ஆசியிடமும் பொறுப்பை ஒப்படைத்தவர் மித்ராவின் வீட்டிற்கு வந்தார்.

கதவை திறக்க சென்ற பிரேமா இன்னும் வராமல் அங்கேயே நிற்பதை பார்த்து என்ன பிரேமா யாரு வந்துருக்கா?

ஒருவேளை தன் மகள் மித்ரா தான் வந்திருக்கிறாள் என்ற நப்பாசையுடன் எழுந்து வர சக்கரவர்த்தி நிற்கவும் உள்ளே வரலாமா என்று அவர் கேட்க தலையசைத்து வாங்க என்று அழைத்தார்.

தாமு வரவுமே பிரேமா உள்ளே சென்றிருந்தார்.

தாமுவை தொடர்ந்து உள்ளே வந்த சக்கரவர்த்தி எப்படி எங்கிருந்து ஆரம்பிக்க என்று தெரியாமல் நின்றிருக்க உட்காருங்க என்று தாமு கூறினார்.

பிரேமா காபி எடுத்து வரவும் நல்லது தங்கச்சி என்று எடுத்து கொண்டவர் வந்த விஷயத்தை பற்றி கூறினார்.

மித்ரா மேல கோபம் இருக்க தான் செய்யும்.. உங்க பொண்ணை பற்றி உங்களுக்கு தெரியாதது எதுவும் இல்லை.

என் பொண்ணை பற்றி நல்லாவே தெரியும்.. உங்க பையனை ஒன்னும் அவ காதலிச்சு கல்யாணம் செய்யலை.. அப்படி காதலிச்சுருந்தா எங்ககிட்ட சொல்லிருப்பா என்கவும்

அதைத்தான் மச்சான் நானும் சொல்றேன் காதலைச்சுருந்தா சொல்லிருப்பா ஆனால் என் பையனை அவள் காதலிக்குறது அவளுக்கே தெரியலையே பின்ன எப்படி அவ உங்ககிட்ட சொல்லிருப்பா..

அவள் அவன் மீதான காதலை இன்னும் உணரலையே..

(உங்களுக்கு தெரியுது சக்கு புரியவேண்டியவளுக்கு புரியலையே)

அப்படி ஒருவேளை இருக்குமோ என்று யோசித்த தாமு தன் பிள்ளையின் நடவடிக்கையும் அப்படித்தானே இருந்தது என்று அந்த கோணத்தில் பார்க்க தொடங்கினார்.

அப்படியே இருந்தாலும் உங்க பையனுக்கு என்று பிரேமா ஆரம்பிக்க உங்க மனசு எனக்கு புரியுதுமா தங்கச்சி.. என் பொண்ணை அப்படி ஒருத்தவனுக்கு கட்டிக் கொடுக்க யோசிப்பேன்.

ஆனால் நீங்க நினைக்கிற மாதிரி இல்லை என்றவர் அவர்கள் நம்பாமல் பார்க்கவும் தான் கூடவே அழைத்து வந்த முல்லைநாதனை அழைத்தார்.

அவர் வந்து இருவரிடமும் ஆதியின் ரிப்போர்ட் அனைத்தையும் காண்பித்து இப்பொழுது எவ்வளவோ மெடிக்கல் பீல்டில் குழந்தை பெறுவதற்கான வழிமுறைகள் இருக்கு..

அதுமட்டுமில்லாமல் ஆதி அவரின் உடல்நிலை சரியாவதற்காக மருந்துகள் எடுத்துக்கிட்டு வரார் அதனால் இது குணமடையும்.. இதில் நீங்க ஐயப்பட தேவையில்லை என்று தன் பங்கிற்கு கூறியவர் வந்த வேலை முடிந்தது என்பது போல் கிளம்பி விட்டார்.

முல்லைநாதன் கிளம்பியதும் சக்கரவர்த்தி தான் கொண்டு வந்த பார்சலை பிரேமாவிடம் நீட்டி தங்கச்சி நீங்க சாப்பிட்டுருக்க மாட்டீங்க..

கவலை படாதீங்க உங்க பொண்ணு சந்தோஷமா வழப்போறதை பார்க்கத்தான் போறீங்க அதுக்கு நான் உத்தரவாதம் தரேன்..

ரெண்டு பேரும் சாப்பிடுங்க நான் வரேன் என்றவர் கிளம்பட்டுமா மச்சான் என்கவும் இப்பொழுதும் ஒரு தலையடைப்பு தான் தாமு..

இவர்கள் இருவருக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. குழப்பத்தில் இருந்தனர் முல்லைநாதன் சொன்னதை கேட்டதிலிருந்து.

இவர்கள் சொல்வது போல் மித்ரா சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற நப்பாசை இருக்க தான் செய்தது.

மணி ஏழாகியதும் வீட்டிற்கு போயே ஆகவேண்டுமா என்ற சிந்தனை தோன்ற அங்க தானே அவளும் இருப்பாள்.

என்னை எப்படி கல்யாணம் செய்து கொள்ள ஒத்துகிட்டா இன்னும் என்னால நம்ப முடியலையே..

அம்மா அவகிட்ட என்னைப்பற்றி எல்லாம் சொன்னதா சொன்னாங்களே.. எல்லாம் தெரிஞ்சும் எப்படி ஒத்துகிட்டு இருப்பா.

ஒருவேளை பணத்துக்காக என்னை கல்யாணம் செய்து இருப்பாளோ.. இல்லை நம்ம எதிரி யாராவது பிளான் பண்ணி இவளை இது போல செய்ய சொல்லிருந்தால் என்று அனைத்து கோணங்களிலும் யோசித்து பார்த்தான்.

அவனும் காலையில் இருந்து எத்தனை நபரின் பரிதாப பார்வையும் சிலரின் ஏளன பார்வையும் கண்டு உள்ளுக்குள் கொதித்து போயிருந்தான்.

ஆதிக்கு கோபம் என்றால் வெளியில் காட்டுவதை விட தனக்கு நெருக்கமானவர்களிடம் தான் காட்டுவான்.

இதில் மாட்டுவது எப்பொழுதும் சுமதி தான்..

தனக்கு ஒரு துயரமோ இல்லை பிஸ்னஸில் இறக்கம் கண்டால் வந்து ஒப்பாரி வைப்பது சுமதியிடம் தான்.

வீட்டுக்கு போய்ட்டு அந்த பொண்ணுக்கிட்ட எல்லாத்தையும் தெளிவா கேட்டுடணும்.. பணம் தேவை என்றால் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுத்தரலாம்..

ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுக்க நான் விரும்பல.. அவகிட்ட பேசிட்டு டைவர்ஸ் அப்ளை பண்ணுவோம்.. என்று ஒரு முடிவுக்கு வந்தவனாக வீட்டிற்கு கிளம்பினான்.

இங்கு வீட்டில் அவன் வரவிற்காக அனைவரும் காத்திருக்க ஒருத்தி மட்டும் இன்னைக்கு சார் கொஞ்சம் லேட்டா வந்தால் நல்லாருக்கும் என்று மனதில் கூற அவள் மனசாட்சி எவ்வளவு லேட்டா மித்து என்கவும்

ஒரு பன்னிரெண்டு மணிக்கு வந்தா நல்லாருக்கும்.. அதுக்கு மேலன்னாலும் சிறப்பு என்கவும் ஹுக்கும் எனக்கு என்னமோ இன்னைக்கு நீ செவிலு கிழிய அடி வாங்க பொறியோன்னு தோணுது..

இதனை பற்றிய தங்களின் கருத்து என்ன மித்ரா என்று பட்டிமன்றம் நடத்த ஐயோ எனக்கு இப்போவே மயக்கம் வருது நான் தூங்க போறேன்..

ச்சீ இப்படி அசிங்கமா பொய் சொல்லி மாட்டிக்காத..

உணக்கென்னப்பா நீயா அடி வாங்க போற.. நான் தானே 

அது கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லும் போது இருந்துருக்கணும்

ஹான் அப்போ சார் கஷ்டப்பட்டாரு அதான்..

அப்போ நீ கஷ்டப்படு என்றுவிட்டு சென்றது.

என்ன அண்ணி இன்னும் ஆதியை காணல.. ஒருவேளை இந்த கல்யாணம் பிடிக்காததால் எங்கயாவது குடிக்க போய்ட்டானா என்று ஊர்மிளா கூற அவரை ஒரு பார்வை பார்த்தவர் மித்துவிடம் நீ உன் ரூமுக்கு போடா ஆதி வந்ததும் உன்னை கூப்பிடுறேன் என்கவும் தன் அறைக்கு சென்று விட்டாள்.

என்ன ஊர்மிளா பேச்சு இது.. அதுவும் மித்து இருக்கும் பொழுது..

ஆதியை பற்றி உனக்கு தெரியாதா அந்த பழக்கம் எல்லாம் அவனுக்கு கிடையாதுன்னு..

அதில்லை அண்ணி விரக்தியில் குடிச்சுட்டு வந்துருவானோன்னு

தான் சொன்னேன் என்று பம்மினார்.

ஆதி அலுவலகத்தில் இருந்து வந்தவன் இருவரும் ஏதோ பேசிக் கொண்டிருந்ததை பார்த்தவன் சுமதி மேல் உள்ள கோபத்தினால் அவரை முறைத்து விட்டு முகத்தை திருப்பி கொண்டு தன் தம்பியை அழைத்தான்.

ஆசீ.. டேய் ஆசீ..

(அப்போ இன்னைக்கு கோபத்துல எட்டி உதைக்குற பந்து ஆசீ தானா)

தன் அண்ணனின் குணம் அறிந்தவன் ஐயோ என்று உள்ளுக்குள் அலறி கொண்டு வந்தவன் அவன் முகத்தை பார்த்ததும் பாவமாக முகத்தை வைத்து கொண்டான்.

சொல்லுங்க அண்ணா என்று நல்ல பிள்ளையாக வந்து நிற்க அவனை கடிய மனமில்லாமல் எனக்கு சாப்பிட எதுவும் வேண்டாம் பால் மட்டும் கொண்டு வர சொல்லு என்று விட்டு தன் அறைக்கு விரைந்தான்.

படியில் ஏறியவன் நீ எடுத்துட்டு வா வேற யாரும் வேண்டாம் என்று தன் அன்னையை பார்த்து கூறிவிட்டு சென்றான்.

அப்பாடி தப்பிச்சோம் என்று நினைத்தவனிற்கு அடுத்த ஆப்பு ரெடி என்பது போல் கூறிவிட்டு செல்ல தன் அன்னையை பாவமாக பார்க்க ரொம்ப நல்லவன் மாதிரி மூஞ்சை வச்சுக்காத போடா நான் கொடுத்துகிறேன் என்று அனுப்பி வைத்தவர் மித்ராவை அழைத்தார்.

இங்கு அவளை அம்மே பூதம் வந்துருச்சா போச்சு என்று அலறியவள் கீழே வந்தாள்.

சொல்லுங்க அத்தை என்கவும் இந்த பாலை அஆதிக்கு எடுத்துட்டு போடா..

அவன் ஏதாவது பேசினால் மனசுல வச்சுக்காத.. அவன் ரொம்ப அவமானமா பீல் பண்றான் போல.. அவன் எது சொன்னாலும் கொஞ்சம் பொறுத்து போ என்று அனுப்பி வைக்க வாய் பேசுனா பரவாயில்லை..

கை பேசுனா நான் என்ன ஆவேன்.. ஐயோ அவர் ஒரு அடிக்கே ஒன்பது கிரகம் தாண்டி போய் விழுவேனே.. இதுல கூப்பிட்டு வச்சு கும்மாங்குத்து குத்துனா சோலி முடிஞ்சுது..

பேயறைந்தது போல் இருந்த அவளின் முகத்தை கண்டவர் பயப்படாதே மித்ரா தைரியமா போ ஒன்னும் சொல்ல மாட்டான் என்று அனுப்பி வைக்க அத்தை இப்படி பேய் குகைக்குள் தள்ளி விடுறீங்களே என்று உள்ளுக்குள் குமுறியவள் ஹிஹி என்று வெளியே சிரித்து வைத்தாள்.

அறை வாசல் வரை வந்தவரிடம் உள்ளேயும் அப்படியே நீங்களே போய் இந்த பாலை குடுத்துட்டு வந்தா எவ்வளவு நல்லா இருக்கும்..

அவரிடம் கூறவில்லை மனதுக்குள் தான் நினைத்தாள்.

சுமதி சென்றதும் தன் நிலையை நினைத்து பார்த்தாள்.

சும்மா இருந்த முதலைகிட்ட குரங்கு டிங்கு டிங்குன்னு தன் வாலை ஆட்டி ஆட்டி காமிச்சுச்சாம்.. 

அதை பார்த்து வெறியான முதலை நேரம் பார்த்து குரங்கோட வாலை கவ்வி இழுத்துட்டு போன கதையா ஆக போகுது மித்ரா உன் கதை.

எவ்வளவு நேரம் தான் வெளியே நிற்பது கால் வலிக்கும்ல..

கதவை இருமுறை டொக் டொக் என்று தட்டியவள் உள்ளே செல்ல அப்பொழுது தான் குளித்து விட்டு வந்த ஆதி நிமிர்ந்து பார்க்க மித்ரா நிற்கவும் இடையில் ஒரு டவல் மட்டுமே கட்டி இருந்தவன் அங்கிருந்த இன்னொரு டவலை எடுத்து தன் மேல் போட்டுகொண்டு என்ன மித்ரா இந்த நேரத்துல..

அதுவும் வீட்டுக்கு வந்துருக்கீங்க.. ஏதாவது சைன் வேணுமா என்றவாறு அவளை பார்க்க அவள் கையில் பால் இருந்தது.

அவள் கையில் பாலிருக்க காலையில் அவன் கட்டிய மஞ்சள் கயிறு தாலி கழுத்தில் இருக்க அவனுக்கு புரிந்த நிதர்சனத்தை அவனால் நம்ப முடியவில்லை..

நோ என்று அந்த அறை அதிர கத்தினான்.

அவன் கத்திய கத்தில் சார் இப்போ எதுக்கு இப்படி கத்துறீங்க.. துண்டா அவிழ்ந்து விழுந்துருச்சு.. நல்லா டைட்டா தானே கட்டிருக்கீங்க..

இப்போ எதுக்கு கத்துறீங்க காது ஜவ்வு கிழிஞ்சு போச்சு போல அச்சோ என்று தான் கொண்டு வந்த பாலை அங்கிருந்த மேஜையில் வைத்தவள் தன் காதுகளை தேய்த்து விட்டு கொண்டாள்.

மித்ரா நான் நினைக்கிறது பொய்யுன்னு சொல்லு மித்ரா என்கவும் 

நீங்க என்ன நினைச்சீங்கன்னு எனக்கு எப்படி சார் தெரியும்..

(அதானே அவ என்ன நினைக்கிறான்னு அவளுக்கே தெரியாது.. என்ன ஆதி நீ)

காலையில் உனக்கு தான் நான் தாலி கட்டினேனா என்கவும்

அது நானே தான் சார்..

ஆனா பாருங்க சார் எனக்கு தான் நீங்க தாலி கட்டுறீங்கன்னு தெரியாமலே தாலி கட்டி இருக்கீங்க..

முன்னாடியே பாத்துருக்கலாம்ல இப்போ இப்படி ஷாக் ஆகுறீங்க என் காது ஜவ்வு தப்பிச்சிருக்கும்ல என்கவும் நான் எதை பத்தி யோசிக்கிறேன் இவ என்ன பேசுறா..

எங்கயாவது போய் முட்டிக் கொள்ளலாம் போல் இருந்தது.

அவன் சுற்றிலும் பார்க்க சார் என்னை அடிக்க கம்பு தேடுறீங்களா.. ஐயோ அந்த விபரீத முடிவு எடுக்காதீங்க சார்..

நான் உங்களை விட சின்ன பிள்ளை நீங்க அடிச்சா நான் தாங்குவேனா.. நான் பாவம் தானே.

சின்ன பாப்பா பாவம்னு விட்டுடுங்க சார்.. 

நீங்க இருக்குற உசரத்துக்கு நான் பழனி படிக்கட்டு தான் ஏறி வரணும்… இதுல உங்க நீட்டமான கையை வச்சு அடிச்சா என் நிலைமை பற்றி யோசிச்சு பாருங்க என்று இவள் பாட்டுக்கு பேசி கொண்டே செல்ல இது என்னடா தலைவலி என்று தன் தலையை தேய்த்து கொண்டவன் 

வில் யூ ப்ளீஸ் ஸ்டாப் இட் மித்ரா என்று கத்தினான்..

அதற்கும் வாயை மூடினாளா அவள்..

இல்லை இல்லவே இல்லை..

ஆபிஸில் இப்படி எல்லாம் நீங்க கத்த மாட்டீங்க.. இங்க தான் இப்படி கத்துறீங்க..

ஒருவேளை வாஸ்து சரியில்லையா.. அதான் இப்படி கத்துறீங்களோ வீட்டை மாத்திடுவோமா என்று ஒவ்வொன்றுக்கும் ஒன்னு ஒன்னு சொல்ல அவன் பேச வந்ததையே மறந்து போனான்.

அந்த பெண்ணிடம் எல்லாவற்றையும் விரிவாக கூறி பணம் வேண்டுமென்றால் செட்டில் செய்து டிவோர்ஸ் வாங்கி விட வேண்டும் என்று வந்தால் இங்கு பெண்ணை பார்த்ததுமே ஒரு ஷாக் என்றால் அவள் தன்னை பேசவே விடாமல் ஏதேதோ லூசு போல பேசுவதை கண்டு இன்னும் எரிச்சல் ஆனான்.

ஒரு முடிவு எடுத்தவன் சட்டையை எடுத்து மாட்டி கொண்டு அவளை கண்டுகொள்ளாமல் வெளியில் சென்றான்.

அவன் வேகமாக செல்வதை பார்த்த ஊர்மிளா சும்மா இல்லாமல் வந்த அன்னைக்கே எங்க ஆதியை இப்படி கோபமா வெளிய போக வைச்சுட்டாளே என்று பழியை போட மித்ரா என்ன செய்வதென்று புரியாமல் வேகமாக செல்வபனையே பார்த்தாள்.

மோகமுள் தீண்டும்..

மோகமுள் - 10 படிக்க இங்கே சொடுக்கவும்..


Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments