Advertisement

Ad code

மோகமுள் - 8


 மோகமுள் தீண்டாதோ தீரனே

மோகமுள்-8:

இருவரும் சைட்டுக்கு வந்ததும் அங்கு வேலை அனைத்தும் ஒழுங்காக நடக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தவன் இங்கு பில்டிங் வேலை நடந்து கொண்டிருக்க பக்கத்தில் ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது..

சிறிது நேரத்தில் அந்த சத்தமும் நின்றுவிட்டது.

அதனை கேட்டவன் மித்ராவிடம் மித்ரா உங்களுக்கு ஏதாவது குழந்தை அழர சத்தம் கேட்டுச்சா என்கவும் ஆமா சார் எனக்கும் கேட்டுச்சு ஆனால் கொஞ்ச நேரத்துல நின்னுடுச்சு என்று பதிலளித்தாள்.

சரி மித்ரா இங்க வேலை ஒழுங்கா நடுக்குதான்னு பாருங்க நான் கொஞ்சம் சூப்பர்வைசர் கிட்ட பேச வேண்டியது இருக்கு.. போய் பேசிட்டு வந்துடுறேன் என்றவன் அங்கிருந்த தலையுரையை அவளுக்கு தானே மாட்டிவிட்டு சூப்பர்வைசரை காண சென்றான்.

என் சார்ன்னா சார் தான் எவ்ளோ கேரிங் என்று நினைத்தவளுக்கு தெரியவில்லை..

தான் அவனிடம் மாட்டிக்கொண்டு முழிக்கப்போவது தெரியாமல் அவனை ஆஹா ஓஹோவென்று தலை மேல் தூக்கி வைத்து ஆடிக்கொண்டிருந்தாள்.

கையில் கிடைத்த பூமாலையாய் இவள் அதனை பிய்த்து எறிய போகும் குரங்கா இல்லை அம்மாலையை சூடி கொள்ள போகும் மன்னனா என்று தெரியவில்லை பார்ப்போம் என்ன நடக்கிறது என்று..

அவன் சென்றதும் மறுபடியும் குழந்தை அழும் சத்தம் கேட்கவே சத்தம் வந்த இடம் நோக்கி சென்றாள்.

இங்கு வேலை செய்யும் ஒரு வடநாட்டுப் பெண் தன் அழும் குழந்தையை சமாளிக்க முடியாமல் திண்டாடி கொண்டிருந்தாள்.

அவளிடம் சென்று ஏன் குழந்தை அழுது..

தெரியல என்றது அந்த வடநாட்டு பெண்..

இவள் வயது தான் இருக்கும் அந்த பெண்ணுக்கு பார்த்ததுமே தெரிந்தது..

குழந்தைக்கு பசிக்குமா இருக்கும்..அவளுக்கு பால் கொடுங்க என்று கூறினாள்.

அந்த பெண் அவளுக்கு எதிர்புறம் பார்க்கவே மித்ராவும் என்ன என்று பார்த்தாள்.

அங்கு பக்கத்தில் நிறைய ஆடவர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அந்த வடநாட்டு பெண்ணிற்கு எங்கு அமர்ந்து பிள்ளைக்கு அமுது புகட்டுவது என்று தெரியாமல் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இதனை கண்ட மித்ரா அங்கிருந்த ஒரு பெரிய மரத்தின் அருகே சென்று அப்பெண்ணை அழைத்து அங்கு அமருமாறு கூறினாள். மரத்தின் அடியில் அந்த பெண் அமர்ந்து குழந்தைக்கு பாலூட்ட மித்ரா அவளிடம் பேச்சு கொடுத்தாள்.

நீங்க எந்த ஊரு? இங்க  எங்க தங்கி இருக்கீங்க? என்கவும் நாங்க ஹரியானா பக்கம் மா இங்க தங்குறதுக்கு இடம் இல்லை.

இங்க பக்கத்துல ஒரு பார்க் இருக்கு அங்க தான் படுப்போம் என்று அந்த பெண் கூற இந்த பச்சை குழந்தையை வச்சுக்கிட்டு பார்க்லயா என்று பதறியவள் உங்க கூட யார் யாரெல்லாம் இருக்கா என்று கேட்டாள்.

நான் என் வீட்டுக்காரரு அப்புறம் இன்னும் ஒரு நாலஞ்சு பசங்க இருக்கோம் என்கவும் எல்லாருமே அங்கதான் படுத்துப்பீங்களா என்று கேட்க ஆமா எல்லாருமே அங்கே தான் என்று அந்த பெண் பதில் கூறினாள்.

இங்கு சூப்பர்வைசரிடம் பேசிவிட்டு வந்தவன் மித்ராவை காணாமல் தேட அங்கு மரத்தடியில் நின்று கொண்டிருந்தவளை கண்டவன் அவள் அருகே வர இவர்கள் பேசுவதை கேட்டான்.

தன் குரலை செருமி மித்ரா என்று அழைக்க ஹான் சார் என்று திரும்பியவள் கைகளை நீட்டி போகாதே என்பது போல் தலையை ஆட்டினாள்.

வாட் என்கவும் அச்சோ என்று மானசீகமாக தலையில் அடித்து கொண்டவள் சார் என்று தயங்கவும் இவ வேலைக்கு ஆக மாட்டா என்று புரிந்தவன் அவள் கையை பிடித்து இழுத்து கொண்டு சற்று தள்ளி வந்தவன் என்ன பேசிட்டு இருந்தீங்க என்று கேட்கவும் அந்தப் பெண் கூறிய அனைத்தையும் சொன்னாள்.

இவங்களுக்கு தங்குறதுக்கு இடம் இல்ல சார்.. இங்க பக்கத்துல இருக்குற பார்க்குல தான் தங்கி இருக்காங்களாம். இந்த பொண்ணு கை குழந்தை வச்சுட்டு ரொம்ப கஷ்ட படுறாங்க போல சார்.

அவங்க வீட்டுக்காரரோட இருக்காங்களாம் கூட இன்னும் ஒரு நாலஞ்சு பசங்களும் இருக்காங்க போல.. 

அவங்க எல்லாருமே அந்த பார்க்குல தான் படுத்துப்பாங்களாம் என்று கூற உடனே அங்கிருந்த சூப்பர்வைசரை அழைத்தான்.

மணி இங்க பக்கத்துல ஒரு லேண்ட் விலைக்கு வருதுன்னு சொன்னீங்க இல்லையா அதை பேசி முடுச்சிடுங்க..

ஓகே சார்.. என்கவும் லேட் பண்ணாதீங்க மணி இன்னைக்கே பேசி முடிங்க.. அப்பறம் ஷெட் போடுறதுக்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்கிடுங்க..

நாளைக்கு அந்த இடத்துல ஷெட் இருக்கணும் என்கவும் ஷெட் எதுக்கு சார் என்கவும் ஏன் எதுக்குன்னு கேக்காதீங்க இங்க வேலை செய்றவங்க தங்குறதுக்கு சீக்கிரம் ரெடி பண்ணுங்க..

சார் அதுக்கு இங்க காலியா இருக்கே அந்த இடத்துல பண்ணிடலாம் என்கவும் இங்க சேப் இல்ல மணி அண்ட் இது போல கேள்வி கேட்டு இரிடேட் பண்ணாதீங்க..

இங்க நான் தான் உங்க பாஸ் நான் சொல்றதை தான் நீங்க கேட்கணும்.. என்ன நான் சொல்றது உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன்.

சொன்ன வேலையை சீக்கிரம் முடிக்க பாருங்க என்றவன் கம் மித்ரா லெட்ஸ் கோ என்றவன் தன் நீண்ட கால்களால் விறுவிறுவென நடக்க இவள் தான் ஓட வேண்டியதாகி விட்டது.

இங்கு வண்டியில் ஏறியதும் சார் நான் கூட அந்த குழந்தையை வச்சுக்கிட்டு அந்த பொண்ணு கஷ்ட படுமேன்னு நினைச்சிட்டு இருந்தேன்.. இப்போ வேற மழை காலம் ஸ்டார்ட் ஆக போகுது..

எப்படியோ நீங்க ஒரு வழி கண்டு பிடுச்சீங்க.. இதனால தான் சார் இந்த சின்ன வயசுல இத்தனை உயரம் தொட்டுருக்கீங்க என்று மனதார பாராட்டினாள்.

இதழ் கடையோரம் சிறு சிரிப்புடன் வண்டி ஓட்டி கொண்டிருந்தவன் இதுவும் பிசினஸ் டேக்டிக்ஸ் தான் மித்ரா..

வீடு இல்லாதவங்கன்னு சொன்னீங்க.. சோ தங்க இடம் இருந்தால் இன்னும் அதிக நேரம் வேலை செய்வாங்க.. ஷெட் போட்ட அதை ஈசியா டிஸ்மேண்டில் பண்ணிட்டு வேற இடத்துலையும் போட்டுக்கலாம்.

இதுல நமக்கும் லாபம் அவங்களுக்கும் லாபம்..

ரெண்டு சைடும் ப்ரோபிட் இல்லையா.. நமக்கு தங்க கொடுத்துருக்காங்கன்னு இன்னும் அதிகமா வேலை செய்வாங்க என்று சிரித்தான்.

அவன் கூறவும் தான் அவளுக்கு  தோன்றியது இப்படி ஒரு கோணம் இருக்கிறது என்று..

தான் அதனை யோசிக்கவில்லையே என்று நினைத்தவளிடம் அவளின் மனசாட்சி அதான் மித்து நீ இங்க இருக்க அவன் அங்க இருக்கான் என்று அவள் காலை வாரியது.

ச்சீ போ என் சார் இன்னும் இன்னும் மேல மேல வளரணும் என்கவும் பாத்து வானத்தை பொலந்துட்டு மேல போய்டாம என்று அதுக்கும் வார பேஹ் என்று விரட்டினாள்.

பின் கம்பெனிக்கு வந்த இருவரும் அவரவர் வேலையை பார்த்து கொண்டிருந்தனர்.

எப்பொழுதும் வீட்டிற்கு செல்லும் நேரம் வரவே தன் வீட்டின் நியாபகம் வர அப்பா சாரி ப்பா எனக்கு வேற வழி தெரியல.. ம்மா நீ என் மேல செம கோவத்துல இருப்பனு தெரியும் ரெண்டு பேரும் என்னை மன்னிச்சிடுங்க என்று மனதார அவர்களிடம் மன்னிப்பை யாசித்தாள்.

மணி ஐந்தாக சுமதி மித்ராவிற்கு அழைத்தார்.

தன் அலைப்பேசி அழைக்கவும் எடுத்தவள் என்ன புது நம்பரா இருக்கு யாரு இது என்று நினைத்து கொண்டே எடுத்து காதில் வைக்க அந்த பக்கம் மித்ரா என்கவும் 

யாரு

நான் சுமதி பேசுறேன் மித்ரா

சுமதியா அப்படி யாரையும் எனக்கு தெரியாதே

நல்ல பிள்ளை போ உனக்கு இன்னைக்கு கல்யாணம் நடந்ததாவது தெரியுமா தெரியாதா என்றவர் நான் உங்க சாரோட அம்மா தான் பேசுறேன் என்கவும் தான் 

அத்தை என்று இந்த பக்கம் குதித்தாள்.

எப்படி அத்தை என் நம்பர் உங்களுக்கு தெரியும் என்கவும் நம்ம கம்பெனில போன் போட்டு கேட்டேன் டா.

சரி நேரம் ஆயிடுச்சு வெளிய கார் வெய்ட் பண்ணுது பார் அதுல வந்துடு என்கவும் சரிங்க அத்தை என்றவள் அத்தை சார் என்று இழுக்கவும் அவன் எப்பொழுதும் போல ஏழு மணிக்கு வருவான் நீ வாம்மா என்கவும் சரி என்று வைத்தவள் வீட்டிற்கு கிளம்பினாள்.

மித்ரா வீட்டிற்கு வந்ததும் சுமதி அவளுக்கு தேவையான உடைகளை கடையிலிருந்து நேரடியாக வீட்டிற்கு வரவழைத்திருக்க இவள் வரவும் மித்து இதுல உனக்கு தேவையான ட்ரெஸ்ஸை எடுத்துக்கோ டா என்றவரிடம் அண்ணி இப்படி எல்லாம் இடம் கொடுக்காதீங்க அப்பறம் மேல ஏறி உட்காந்துப்பாளுங்க என்று ஊர்மிளா மித்ரா மேலான வன்மத்தை மேலோட்டமாக கூற சுமதி அமைதியாக எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார்.

அங்கு வந்து நிரஞ்சனா நிரஞ்சன் ஆசீ மூவரும் ஹே சூப்பர் ட்ரெஸ்ஸா எங்களுக்கு இதெல்லாம் தோணவே இல்லை பாருங்களேன் அம்மான்னா அம்மா தான் என்று ஆசீ சுமதியை அணைத்து கொள்ள நிரஞ்சனா மித்ராவிடம் சென்று அமர்ந்து ட்ரெஸ்ஸை பார்த்து கொண்டிருந்தாள்.

நிரு மாமா எங்க டா என்று சக்கரவர்த்தியை பற்றி கேட்க வெளியே ஏதோ வேலை இருக்கிறதா சொன்னாரு அத்தை என்றவன் சோபாவில் அமர்ந்தான்.

இங்கு நிரஞ்சனா ஹே இந்த ட்ரெஸ் பார்க்கவே அழகா இருக்கு என்று ஒரு நீல வண்ண ஆடையை எடுத்து கையில் வைத்து பார்த்தாள்.

அதனை வாங்கிய மித்ரா அவள் மேல் வைத்து பார்த்து அழகா இருக்கு நிரஞ்சனா இதை உங்களுக்கு போட்டா அழகா இருப்பீங்க என்று கள்ளம் கபடம் இல்லாமல் கூறியவளை பார்த்த சுமதி ஊர்மிளாவை கண்டன பார்வை பார்த்தார்.

உண்மையாவா சொல்ற மித்து என்றவள் இது நான் போட்டா அழகா இருப்பேனா என்று கேட்க கேட்டதென்னவோ இவளிடம் இருந்தாலும் பார்வை என்னவோ ஆசீயிடம் தான் இருந்தது.

அவனும் அவளை தான் பார்த்து கொண்டிருந்தான்.

ஆனால் எவ்வித உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் அவளை பார்த்தபடி இருந்தான்.

உங்க செலக்ஷ்ன் சூப்பரா இருக்கு நிரஞ்சனா என்கவும் அப்போ நானே உனக்கு எடுத்து தரேன் மித்ரா என்றவள் உடைகளை அள்ளி குவிக்க எனக்கு நாலு ட்ரெஸ் போதும் எதுக்கு இவ்வளவு என்று அனைத்தையும் வாங்க மறுத்தாள்.

வாங்கிக்கோங்க அண்ணி என்று ஆசீ கூற சுமதியும் எடுத்துக்கோடா உனக்கு இது பிடிக்கலன்னா சொல்லு நாளைக்கு கடையில் போய் எடுத்துக்கலாம் என்கவும் இல்லை இல்லை அத்தை இதுவே போதும் என்று வாங்கி கொண்டாள்.

என்கிட்ட பேச மாட்டுறான் மித்து கிட்ட பேசுறான் ஆசீயாம் ஆசீ பேர பாரு..

போடா ஆசீ தூசி நீ எனக்கு ஓசியா கிடைச்சாலும் வேண்டாம் போடா பாசி விக்குறவனே…

என்னை பார்த்தா மட்டும் மூஞ்சை மூணு முழத்துக்கு தூக்கி வச்சுட்டு திரிவான்.

ஒருத்தி நாய் மாதிரி இவன் பின்னால் வராளே எங்கயாவது கண்டுக்குறானா பாரு போடா ஓசி மணி.

பாசி மணி கூட வித்துடலாம் இவனை ஓசியா கொடுத்தா கூட எவனும் வாங்க மாட்டான் என்று உள்ளுக்குள் அவனை கழுவி கழுவி ஊற்றினாள்.

தன்னை தான் ஏதோ கேவலமாக நினைக்கிறாள் என்று அவனுக்கு புரிந்ததோ என்னவோ இவளை பார்த்து முறைத்தான்.

உடைகளை எடுத்ததும் மித்ரா நீ போய் பிரஷ் ஆயிட்டு வாடா ஆதி வந்துருவான் என்றதும் தான்..

ஐயோ போச்சு.. நாம இன்னைக்கு செத்தோம் என்று நினைத்தவளுக்கு பயத்தில் அடிவயிற்றில் தண்டவாளம் இல்லாமல் ரயில் ஓடியது.

இன்னைக்கு அவரு கையில சிக்குனோம் சிதறு தேங்காய் தான் கடவுளே காப்பாத்து என்றவாறு உடனடியாக கடவுளுக்கு ஒரு விண்ணப்பத்தை வைத்தவள் அப்படியே நிற்க சுமதி அவளை அழைத்து சென்றார்.

முதல் மாடிக்கு அழைத்து சென்றவர் இது தான்மா ஆதியோட ரூம் என்கவும் அவனது அறையே அவளை மிரட்டுவது போல் இருந்தது.

பயத்துடன் அந்த அறையை நோட்டம் விட பயப்படாதே மித்து ஆதி வரட்டும் அப்பறம் நீ இங்க வரலாம் அதுவரைக்கும் நீ பக்கத்து அறையில் இரு என்கவும் சரி அத்தை என்று சீராக மூச்சு விட்டாள்.

க்குளிச்சிட்டு வா மித்து உனக்கு நிரஞ்சனா கெல்ப் பண்ணுவா என்று விட்டு கீழே சென்றார்.

ஹேய் ஆதி அத்தான் வந்தாச்சு வா மித்து என்ற நிரஞ்சனாவின் குரல் கேட்க ஐயோ வந்துட்டாரா போச்சு..

வரான் வரான் பூச்சாண்டி ரயிலு வண்டியில என்று அவளுக்கு மட்டும் பாட்டு கேட்டது.

அவள் அறைக்கு வந்த சுமதி வாடா ஆதி வந்துட்டான் போ அவனுக்கு இந்த பாலை கொண்டு குடு என்கவும் கால்கள் பின்ன அவன் அறைக்குள் செல்ல அவளுக்கு ஏதோ பேய் வீட்டிற்குள் செல்வது போலவே ஒரு பிரம்மை..

போச்சு உன்னை தூக்கி தலை கீழ தொங்க விட்டு அடிக்க போறாரு என்று பயத்துடன் அவன் முன்னே சென்று நிற்க இவளை கண்டு கொள்ளவில்லை.

சார் என்று அழைக்க அவளை நிமிர்ந்து பார்க்காமல் என்ன என்ற ஒரு சொல் மட்டும் உருமலாக வெளிவந்தது..

அந்த ஒரு சொல்லுக்கே பேஸ்மெண்ட் ஆடி போய்விட்டது இவளுக்கு..

(ஒஹ் இதுதான் பாடி ஸ்ட்ரோங்  பேஸ்மெண்ட் வீக்கோ)

சார் பால் என்கவும் இவளை நிமிர்ந்து பார்த்தவன் அதிர்ந்தான்.

மித்ரா நீயா..

நானே தான் சார்..

உங்களை கல்யாணம் கட்டிக்கிட்ட அந்த அப்பாவி புள்ளை நான் தான்..

அவன் அவளை முறைக்கவும் ஐயோ சார் அந்த நேரத்துல எனக்கு பைத்தியம் பிடுச்சுருச்சு போல சார்.. அதான் உங்களை கல்யாணம் பண்ணிட்டேன் என்னை விட்டுடுங்க சார் என்று அவள் தான் அவன் கையை பிடித்து கொண்டு உலுக்கி எடுத்தாள்.

ஏய் என்று அவன் கத்த இவளுக்கு அவ்வளவு தான் இதுவரை சேகரித்து வைத்திருந்த டேம்மை திறந்து விட பொல பொலவென கண்ணீர் கொட்ட ஆரம்பித்து விட்டது.

இப்போ எதுக்கு அழுது சீன் போடுற போ இங்கிருந்து என்று கர்ஜிக்க

ஐயோ சார் என்னை மன்னிச்சிடுங்க சார்..

நான் தெரியாம உங்களை கல்யாணம் பண்ணிட்டேன் உங்களை பார்த்தாவே பயமா இருக்கு..

அவளை முறைக்கவும்

ஐயோ அப்படி முறைச்சி பாக்காதீங்க சார்.. எனக்கு பயமா இருக்கு.

இந்த படத்துல வர கொடூர அனக்கொண்டா போல நீங்களும், நீங்க கடிச்சு திங்க போற அப்பாவி மனுஷ ஜென்மம் போல நானும் இருக்குற மாதிரி இருக்கு சார்.

நான் ஒரு மூலையில் இருந்துக்குறேன் சார் நீங்க எப்போதும் போல இருங்க.. என்றவள் அவன் கிட்டே வரவும்

சார் எக்கு தப்பா எதும் செஞ்சிறாதீங்க.. நீங்க கிட்ட வரதை பார்த்தா என்னை வௌவால் போல கட்டி தொங்க விட்டுடுவீங்கன்னு பயமா இருக்கு நீங்க தூங்குங்க நான் போறேன் என்று ஒரே ஓட்டமாக ஓடி வந்து விட்டாள்.

அங்கிருந்து ஓடி வந்து யப்பா தப்பிச்சோம் என்று மூச்சு வாங்கியவள் எப்படியோ இப்போ ஏதோ நமக்கு தெரிஞ்ச சில பல குரங்கு வித்தைகளை வச்சு தப்பிச்சாச்சு..

இனி வர போற நாளுக்கெல்லாம் என்ன சொல்லி தப்பிக்கலாம் என்று யோசிக்க ஹேய் என்ன ஆச்சு மித்ரா ஒழுங்கா தலையை காட்டு என்று சத்தம் வர திடுக்கிட்டு ஐயோ எல்லாம் கனவா?

இல்லையே நிஜமா நடந்தது போல இருந்துச்சே.. ஐயோ நான் என்ன பண்ணுவேன் போச்சே இந்த சாரு அடி செமையா வெளுக்க போறாரு என்று உள்ளுக்குள் பதறி கொண்டிருக்க வெளியே திடமாக அமர்ந்திருப்பது போல காட்டிக் கொண்டாள்.

என்ன நிரும்மா ஒரு ஜடை பின்றதுக்கு இவ்வளவு நேரமா? இவளுக்கு இதுவே ஜாஸ்தி போதும் வா போய் தூங்கலாம்.

எப்படியும் ஆதி இவளை அடிச்சி விரட்ட போறான்.. ரூம் உள்ளேயே சேர்க்க மாட்டான் எதுக்கு இவ்வளவு பில்டப்பு என்கவும் அம்மா கொஞ்சம் சும்மா இரு இப்போ எதுக்கு மித்ராவை பயம் காட்டுற..

நீ சும்மாவே இருக்க மாட்டியா போம்மா இங்க இருந்து.. என்று தன் தாயை விரட்டியடித்தாள்.

நான் என்னடி வேணும்னா சொல்றேன் நடக்க போறதை சொன்னேன்.. அதுக்கு இப்படி எகுருற என்று தன் மகளை குறைப்பட்டுக்கொண்டு வந்த வேலை முடிந்தது என்பது போல் கிளம்பி விட்டார்.

மோகமுள் தீண்டும்…

மோகமுள் - 9 படிக்க இங்கே சொடுக்கவும்..

Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments