Advertisement

Ad code

மோகமுள் - 7


 மோகமுள் தீண்டாதோ தீரனே

மோகமுள்-7:

தன் பக்கத்தில் அமர்ந்தவளின் முகத்தை கூட பார்க்காமல் தாலி கட்டிவிட்டு இத்தோடு தன் வேலை முடிந்தது என்பது போல் எழுந்தவன் பார்த்தது என்னவோ கீழே தலைகுனிந்து அமர்ந்திருப்பவளை தான்.

பாவம் அவன் அவள் முகத்தை காண இயலவில்லை.

இப்போதைக்கு மித்ரா தப்பித்தாள்.. எத்தனை நாளுக்கு தான் தப்பிக்க முடியும்.

அங்கிருந்த யாரையும் கண்டுகொள்ளாமல் எழுந்தவன் தன் தாயிடம் வந்து பிளாக் மெயில் பண்ணி கல்யாணம் தான் உங்களால் பண்ணி வைக்க முடியும்..

அதுக்கு பிறகு நான் நினைத்தால் தானே எல்லாம் நடக்கும்..

அதுல ஏதும் நீங்க தலையிட முடியாதே மாம்.. என்று நிறுத்தியவன் ஒரு பொண்ணோட வாழ்க்கையை இப்படி கெடுத்துடீங்களே மாம்.. என்றவன் தான்பாட்டுக்கு விறுவிறுவென சென்று விட்டான்.

அவன் வேகமாக செல்வதை பார்த்து எழுந்தவள் சுமதியை பார்க்க அதுவரை தன் மகனின் வார்த்தையில் ஆடிப்போய் இருந்தவர் அவள் தன்னை பார்க்கவும் முகத்தை மாற்றிக் கொண்டு அவளிடம் சென்றார் அத்தை சார் என்று அவன் சென்ற வழியே பார்க்க அவன் கொஞ்சம் கோவமா இருக்கான் மித்து நீ அதெல்லாம் கண்டுக்காத சரி ஆயிடுவான் வா என்று அவளுக்கு தைரியம் சொன்னவர் தனக்கும் சொல்லி கொண்டாரோ

சக்கரவர்த்தியிடம் சென்றவர் என்னங்க நான் மித்துவை அழைச்சுட்டு வீட்டுக்கு போறேன் நீங்க இங்க வந்தவங்க எல்லாரையும் சாப்பிட வச்சு அனுப்புங்க.

ஆசீ நிரூ அவரு கூட இருந்து எல்லாத்தையும் பார்த்துக்கோங்க என்று ஆசீயிடமும் நிரஞ்சனிடமும் கூறியவர் மித்ராவை அழைத்து கொண்டு செல்ல ஊர்மிளாவும் அவருடன் சென்றார்.

(எந்த குட்டையை குழப்ப போகுதோ..)

ஊர்மிளா நிரஞ்சனா எங்க? அவளையும் அழைச்சிட்டு வா என்கவும் அவள் எங்க என்கூட இருந்தா அவளுக்கு தான் ஆசீ இருக்குற இடத்துல தானே இருப்பா அண்ணி என்று பல்லை இளித்து கொண்டு கூற சரி சரி அவனுங்களை பிள்ளையை பார்த்து அழைச்சுட்டு வர சொல்லு என்றவர் மித்துவை காரில் ஏற சொன்னார்.

பாத்து ஏறுமா.. இதுக்கு முன்னாடி நீ காருல போயிருக்கியோ என்னவோ என்று குத்தலாக கூற ஊர்மிளா என்ன இது என்று சுமதி ஒரு அரட்டு போடவும் வாயை கப்பென்று மூடிக்கொண்டார்.

ஊர்மிளாவின் பேச்சு வலிக்க செய்தாலும் புன்னகை முகத்துடனே காரில் ஏறினாள்.

இங்கு ஊர்மிளாவிற்கு புகைந்தது.. இன்னைக்கு வந்தவளுக்காக என்னையே சத்தம் போடுறாங்க இந்த அண்ணி ச்சே.. இருங்க இதெல்லாம் எவ்வளவு நாளைக்குன்னு நான் பாக்க தானே போறேன் என்று மனதில் கருவிக்கொண்டார்.

தன் பக்கத்தில் அமர்ந்தவரிடம் திரும்பியவள் அத்தை சார் கோவமா போறாரே.. எங்க போயிருப்பார்? அவன் கோபத்தில்  எங்கு சென்றானோ என்ற அச்சத்தில் வினவ வேற எங்க போயிருப்பான் ஒன்னு வீட்டுக்கு போயிருப்பான் இல்லனா ஆபீஸ் போயிருப்பான்.

சுமதிக்கு தன்னை போலவே தன் மகனின் நலம் நாடும் மருமகளை நினைத்து பெற்ற வயிறு குளிர்ந்தது.

அது என்ன மித்து இன்னும் சார் சார்ன்னு மோர் கடைஞ்சிட்டு இருக்க.. அவன் மனைவி நீ உன்னோட சரி பாதி அவன்.. அவனுக்கும் அப்படித்தான்..

இனி இந்த வீட்டோட மூத்த மருமகள் நீ.. இனி நீ தான் எல்லாத்தையும் பார்த்துக்கணும்..

இங்கு வேலை செய்றவங்களுக்கு எஜமானி.. ஏன் இனி நீ போடுறது தான் சட்டம் உன் வார்த்தைக்கு மறுபேச்சு இல்லை.. ஆதியும் உன் பேச்சை தான் கேட்கணும் என்று சுமதி கூறிக் கொண்டு வர ஐயோ அத்தை எனக்கு அதெல்லாம் தெரியாது.. எனக்கு சார் சந்தோஷமா இருந்தாலே போதும் என்று நிறுத்தி கொண்டாள்.

இங்கு ஒருவருக்கு வயிறு கபகபவென பற்றி எரிந்தது.. வேறு யாராகத்தான் இருக்க முடியும் ஊர்மிளாதான்.

இந்த அன்னகாவடிக்கு வந்த வாழ்க்கையை பார்த்தியா.. இவ வச்சது தான் சட்டமாம்ல நல்ல கதையா இருக்கே..

என் அண்ணா மகன் ராப்பகலா கண் முழிச்சு அவன் உழைப்பால் வந்தது எல்லாத்துக்கும் இவ எஜமானியாம்ல.. இவ்ளோ பணம் இருக்குன்னு தெரிஞ்சிதான் நானே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு வந்து நின்னாளோ என்னவோ யாருக்கு தெரியும்.

இதைப்பற்றி ஆதிக்கு சொல்லணும்.. சும்மா எவளாவது வந்து இப்படி ஒரு குறை இருக்குன்னு தெரிஞ்சும் கல்யாணம் கட்டிப்பாளா..

வந்தவ ஏதாவது பிளானோட வந்துருப்பாளோ.. இருக்கும் இருக்கும் என்று இவர்ப்பாட்டுக்கு இதையும் அதையும் கற்பனை செய்து கொண்டு அமர்ந்திருந்தார்.

அவர்களின் வீடு வந்ததும் மூவரும் இறங்கினார்கள்.

வீடா இது.. இதுக்கு அரண்மனைன்னு தானே பேரு வைக்கணும் என்று அந்த வீட்டை பார்த்தவளுக்கு உள்ளுக்குள் ஏதோ ஒரு பயம்.

அவள் அப்படியே நிற்கவும் என்ன மித்து வா அப்படியே நின்னுட்ட வா வா என்று அழைத்து சென்றவர் தனியா நின்னு ஆரத்தி எடுக்க வேண்டாம் இப்போ வலது காலை எடுத்து வச்சு உள்ள வா மித்து..

நேரே பூஜை அறைக்கு அழைத்து சென்றவர் விளக்கேத்தி சாமியை நல்லா கும்பிட்டுக்கோ மித்து..

விளக்கேற்றி வேண்டியவள் சுமதி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க நல்லா இரும்மா நிறைய நிறைய பிள்ளை பெற்று நீயும் நானும் ஆதியும் சந்தோஷமா இருக்கணும் என்று வாழ்த்தியவர் கடவுளிடமும் அதையே வேண்டினார்.

பக்கத்தில் நின்ற ஊர்மிளா கால்களிலும் என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க ம்மா என்று விழ இதனை எதிர்பார்க்காதவர் ஹிம்ம் ஹிம்ம் நல்லா இரு என்றவர் வெளியில் சென்று விட்டார்.

அத்தை சார் என்று சுற்றும் முற்றும் அவனை தேடியவாறு வினவ அவன் ஆபிஸ் போய்ட்டான் போலமா என்கவும் அத்தை நானும் ஆபிஸ் கிளம்புறேன் அத்தை என்கவும் ஏன் மா இன்னைக்கு ரெஸ்ட் எடுத்துக்கோ நாளைக்கு போகலாம் என்கவும் இல்லை அத்தை என்று கையை பிசைந்து கொண்டு நிற்கவும் சரி போயிட்டு வா..

இங்க வா உன்கிட்ட டிரெஸ் இல்லல இன்னைக்கு நிரஞ்சனாவோட ட்ரெஸ்ஸ போட்டுக்கோ நான் உனக்கு ட்ரெஸ் எடுத்துட்டு வர சொல்றேன் என்றவர் ஆடையை எடுத்து கொடுத்தார்.

அவர் கொடுத்த உடையை அணிந்து கொண்டவள் வெளியில் வர அங்கிருந்த டிரைவரை அழைத்தவர் இந்த கார்ல போம்மா என்கவும் அவள் தயங்கி நிற்கவும் நீ என்ன நினைக்கிறன்னு எனக்கு புரியுது டா மித்து இதுக்கு பழகிக்கோ என்கவும் தலையை ஆட்டியவாறு வண்டியில் ஏறிக்கொண்டாள்.

அதன் பிறகு தான் ஆபிஸ் சென்றதும் அங்கு அவளை கண்டு எப்பொழுதும் போல் அவளிடம் பேசியவர் டெண்டர் விஷயத்தில் கத்தவும் தான் ரெடி செய்த கோப்பை அவனிடம் கொடுத்து விட்டு வந்து அமர்ந்தாள்.

தன் இடத்தில் வந்து அமர்ந்தவள் அப்போ அவரு என்னை பார்க்களையா.. அப்போ நான் தான் இவர் கல்யாணம் செய்துகிட்ட பொண்ணுன்னு இவருக்கு தெரியலையா..

தெரிஞ்சிருந்தா இந்நேரம் கடிச்சு கொதரி வச்சுருப்பாரு.. தெரியாத வரைக்கும் நீ தப்பிச்ச ஹாசினி என்று அவளின் மனசாட்சி பாயிண்ட் எடுத்து கொடுத்தது.

நீ சொல்றதும் சரி தான் தெரியாத வரைக்கும் அடி தப்பிக்கும் என்று நிம்மதி கொண்டாள்.

யாருக்கிட்ட இருந்து அடி தப்பிக்கும் என்றவாறு தன் முன் வந்து நின்றவனை கண்டு மயக்கம் தான் வரவில்லை..

பயத்தில் பேச்சு வராமல் பேந்த பேந்த முழித்து கொண்டிருக்க என்ன வாங்க போகலாம் என்கவும் எங்க சார் என்று அதிர்ந்தாள்.

ஐயோ கண்டுபிடுச்சுட்டாரா என்ற ஐயத்தில் அவளிருக்க எங்கையா வாங்க இன்னைக்கு புதன் கிழமை சைட்டுக்கு போகனுமில்லையா என்கவும் அப்போதுதான் அவளுக்கு உரைத்தது ஒஹ் இன்னைக்கு புதன் கிழமையா என்று அவனுடன் கிளம்பினாள்.

இந்த பொண்ணுக்கு என்ன ஆச்சு எப்பொழுதும் டான்னு வந்து நிக்கும் விசிட்க்கு போகணும்னு இப்போ என்ன ஆச்சு எங்கன்னு கேட்குது என்று அவனே குழம்பி விட்டான்.

எல்லா வாரமும் செல்வது தான் இருவரும் சென்று வாரம் ஒரு விசிட் சைட்டுக்கு போவார்கள்.

எப்பொழுதும் போல் அவன் காரில் ஏறியதும் இவளும் ஏறி அமர்ந்ததும் ஹிம்ம் சொல்லுங்க மிசஸ் மன்மதன்.. ஒரு பத்திரிக்கை கூட தரல.. அட்லீஸ்ட் ஒரு வார்த்தை கூட சொல்லல என்கவும் தங்களின் கல்யாணம் நடந்ததை நினைத்து பார்த்தவள் நானே எதிர்பாக்களை சார் எனக்கு கல்யாணம் ஆகும்னு என்று கூறவும்

என்ன நீங்களே எதிர்பார்களையா அப்போ உங்க வீட்டுல உங்களுக்கு தெரியாமலே மாப்பிள்ளை பார்த்து கட்டி வச்சுட்டாங்களா என்கவும் அவள் என்ன சொல்வதென்று தெரியாமல் திருத்திருவென முழிக்க கார் ஓட்டி கொண்டிருந்தவன் திரும்பி அவளை பார்க்க சார் என்று இழுக்க ஓகே உங்க மன்மதன் என்ன பண்றாரு என்கவும் 

அவன் கார் ஓட்டுவதை கண்டு கார் ஓட்டுறாரு சார் என்று கூறியதும் தான் ஐயோ வாயை விட்டுட்டோமே என்று வாயை இறுக மூடிக்கொண்டாள்.

என்னது காரா என்று அவளை பார்க்கவும் அவள் பயத்தில் தன் முட்டை கண்ணை உருட்டி பார்க்க ஒஹ் டிரைவரா என்று கேட்கவும் ஹிம்ம் என்று நாலா பக்கமும் தலையை ஆட்டி வைத்தாள்.

ஒஹ் பாக்க எப்படி இருப்பாரு..

சூப்பரா இருப்பாரு சார்.. அதுவும் அவர் சிரிச்சா அழகா வரிசையா பல்லு தெரிய சிரிப்பாரு பாருங்க ஐயோ செமையா இருக்கும் என்று கூற

அவள் கொடுத்த பதிலில் என்ன மித்ரா நீங்க லவ் மேரேஜா இல்ல அரேஞ்சுடா என்கவும் ரெண்டுமே இல்லையே என்று மனதில் நினைத்தவள் சார் சைட் வந்துருச்சு என்கவும் வண்டியை நிறுத்தினான்.

அவன் வண்டியை நிறுத்தி விட்டு இறங்கவும் அப்பாடி தப்பிச்சோம் என்று நிம்மதி கொண்டாள்..

பாவம் அவளுக்கு தெரியவில்லை அன்று இரவே அவனிடம் மாட்டப்போவது…

மோகமுள் தீண்டும்..


மோகமுள் - 8 படிக்க இங்கே சொடுக்கவும்..


Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments