Advertisement

Ad code

மோகமுள் - 10


 மோகமுள் தீண்டாதோ தீரனே

மோகமுள்-10:

தன்னை கண்டு கொள்ளாமல் சென்றவனை பார்த்து அப்பாடி ஒரு வழியா இன்னைக்கு தப்பிச்சுட்ட மித்ரா.

இனிமே வர நாட்களும் இது போல பேசி பேசியே அவரோட வாய அடைச்சிடனும்.. என்று ஒரு மனம் நினைக்க 

ஆனா மித்ரா இப்படி லூசு போல ஓவரா பேசினாலும் கோபத்துல பட்டுன்னு அடிச்சுட்டா என்ன பண்றது என்று இன்னொரு மனம் எடுத்துரைக்க ஆமாமில்ல பொசுக்குன்னு அடிச்சுப்புட்டா அவ்ளோதான் என்று பதறியவள் சமாதானமாகி சரி எதுக்கும் கொஞ்சம் அடக்கியே வாசிப்போம்.

ஐயோ இந்த வழியும் கூடிய சீக்கிரம் ஊத்திக்குமா.. அப்போ வேற வழி யோசிக்கணும் என்று யோசித்தாள் அவர் வரத்துக்குள்ள நாம சாப்பிட்டு இழுத்து போத்திட்டு தூங்கிவிட்டால் நல்லா இருக்கும் அப்புறம் எப்படி அவர் என்கிட்ட பேசுவாரு எப்படி என் ஐடியா என்று காலரே இல்லாத சுடிதாரில் காலரை தூக்கி விடுவது போல ஆக்ஷன் செய்தாள்.

ஹூக்கும் இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.. உனக்கெல்லாம் வாய் இல்லன்னு வச்சிக்கோ மித்ரா நாய் கூட மதிக்காது.

ஐடியாவாம் ஐடியா.. உன் ஐடியாவுல தீய வைக்க.. உன்னை எழுப்பி கேட்க அவருக்கு எவ்வளவு நேரம் ஆகப்போகுது லூசு ஒழுங்கா யோசிச்சு ஒரு நல்ல ஐடியாவா செலக்ட் பண்ணி வை அதுல எது பெஸ்ட்டோ அதை பண்ணலாம் அது வரைக்கும் நான் இந்த இடத்தை விட்டு காலி பண்றேன் என்று எஸ் ஆகிவிட்டது.

இவரு வேற இவ்வளவு வேகமா.. அதுவும் என்னை கண்டும் காணாமல் போனாறே ஒருவேளை அத்தை கிட்ட போட்டு கொடுத்துட்டா ஐயோ என்ன பண்றது எப்போ பார்த்தாலும் என்னை பீதியில் வச்சிருக்கணும்னு கங்கணம் கட்டிருக்கார் போல என்று தலை தெறிக்க அவன் பின்னால் சென்றாள் இல்லை ஓடினாள்.

அங்கு ஹாலில் அனைவரும் அமர்ந்து உண்டு கொண்டிருக்க ஆதி வருவதை கண்டதும் சுமதி ஆதி கொஞ்சம் சாப்பிடுப்பா என்கவும் அவன் அவரை முறைத்து விட்டு வெளியே விறுவிறுவென வெளியே சென்று விட்டான்.

அவன் பார்வை அவரை குற்றம் சாற்றியது.. இதுக்கெல்லாம் நீங்கதான் ம்மா காரணம்.. நான் இப்படி குற்றவுணர்ச்சியில் தவிக்கணுமா ம்மா..

மித்ராவும் பின்னாடியே ஓடி வரவும் அவளை கேள்வியாக பார்க்க அவன் வெளியே செல்வதைப் பார்த்து அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

 

ஐயோ என்ன இவர் இந்த நேரத்துல வெளிய போறார்.. ஐயோ கோபமா வேற போறார்.. இப்போ என்ன பண்ணுவது என்ற பரிதவிப்புடன் அவன் கார் அருகே செல்ல காரில் அமர்ந்து வண்டியை கிளப்ப இவள் காரில் கையை வைக்கவும் அவளை தீயாக முறைத்தான்.

அவன் முறைத்ததை கண்டதுமே சட்டென்று அவள் பயத்துடன் கையை விலக்கிக் கொண்டாள். 

இதுதான் உனக்கு கடைசி முறை மித்ரா இனி என் லைப் குள்ள வராத.. எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு.

தேவை இல்லாம எனக்காக பார்த்து உன் லைஃபை கெடுத்துக்காத அண்ட் இப்ப இதுக்கு கொஞ்சம் முன்னாடி நடந்தது பாரு லூசு போல பேசறது இதுதான் கடைசி முறையா இருக்கணும் என்று கடுமையுடன் கூறியவன் வண்டியை சர்ரென்று கிளப்பிக் கொண்டு சென்று விட்டான்.

சார் சார் என்று அவனது கார் பின்னாடியே ஓடினாள். அவன் அவள் ஓடி வருவதை கண்ணாடி வழியே பார்த்தவன் ஷிட் என்று காரின் ஸ்டீயரிங்கில் கைகளால் குத்தி வேகமெடுத்து சென்று விட்டான்.

அவள் கண்ணை விட்டு மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்த மித்ராவிடம் வந்த சுமதி என்னமா ரொம்ப கோபப்பட்டானா என்று அவள் தலையை தடவியவர் அவள் கண்கள் கலங்கவும் நீ வா உள்ள போகலாம் என்று அவர் அழைக்கவும் அத்தை அவர் கோவத்துல வண்டியை வேகமாக ஓட்டிட்டு போகிறார் அதான் என்று தவிப்புடன் சொல்ல நீ வாடா நான் போய் பார்க்க சொல்றேன் என்று அவளை உள்ளே அழைத்து வந்தவர் ஆசியிடம் ஆசீ நீயும் நிருவும் போய் ஆதியை பார்த்துட்டு வாங்க என்று கூறினார்.

உடனடியாக இருவரும் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினர். 

அப்பொழுது ஊர்மிளா வாயை வைத்துக்கொண்டு சும்மா இராமல் வந்த அன்னைக்கே இப்படி நம்ம ஆதியை வீட்டை விட்டு வெளியே போக வச்சுட்டாளே படுபாவி என்று கூற மித்ராவோ ஏற்கனவே ஐயோ என்னால தான் இவ்வளவு கோவமா போகிறார் என்று குற்ற உணர்ச்சியுடன் இருக்க ஊர்மிளா கூறியது வேறு மனதுக்கு மிகவும் கஷ்டமாக உணர்ந்தாள்.

ஊர்மிளா கொஞ்ச நேரம் சும்மா இரு என்று அவரை அடக்கிய சுமதி நிரஞ்சனாவிடம் நிரும்மா அம்மாவை அவங்க அறைக்கு கூட்டிட்டு போம்மா என்கவும் ஏன் ம்மா உன் வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா என்று தன் அன்னையை கடிந்தபடி அழைத்து சென்றாள்.

நான் என்னடி இல்லாததையா சொல்லிட்டேன் ரொம்ப தான் சிலிர்த்துக்குறீங்க..

இந்த அண்ணியும் அவளுக்கு தான் சப்போர்ட் பண்றாங்க.. இன்னைக்கு வந்த அவளுக்காக என்னையே சத்தம் போடுறாங்க.. இருக்கட்டும் எவ்ளோ தூரம் தான் இந்த டிராமா போகுதுன்னு நானும் பார்க்கத்தானே போறேன் என்று முன்பாதியை வெளியே சொல்லிவிட்டு பின்பாதியை தனக்குள் சொல்லிக் கொண்டார்.

இங்கு சுமதி மித்துவிடம் நீ எதுவும் தப்பா நினைக்காத டா போய் உன்னோட அறையில் தூங்கு.. அவங்க ரெண்டு பேரும் போயிருக்காங்க இல்லையா அவங்க கூட்டிட்டு வருவாங்க.. நீ போ என்று அனுப்பி வைத்தார்.

என்னங்க இந்த ஆதி இப்படி பண்ணுறான் என்று புலம்ப மட்டுமே முடிந்தது அவரால். எல்லாம் சரியா போயிடும் மதி நீ ஏன் டென்ஷன் ஆகுற

இங்கே வா வா வந்து உட்காரு அதான் அவங்க ரெண்டு பேரும் போய் இருக்காங்களே என்று சக்கரவர்த்தி கூற அது இல்லங்க இன்னைக்கு தான் கல்யாணம் ஆச்சு அந்த பொண்ணு கிட்ட பேசி இருக்கலாமில்ல இப்படி கோவப்பட்டுட்டு போறான்.

மித்து என்ன நினைப்பா என்று கவலைப்பட்டார்.

அவ எங்கமா உன் பிள்ளையை பேச விட்டா? பேச விட்டால் தானே அவன் பேச முடியும்.

இங்கு தன் காரில் வேகமாக வந்தவனுக்கு மிகுந்த வேதனையாக இருந்தது. அவனுக்கு எப்படி யோசித்தும் ஒன்றும் விளங்கவில்லை.

 மித்ரா உன்கிட்ட இருந்து இப்படி ஒரு செயலை நான் எதிர்பார்க்கவே இல்லை.

நீயே உன் வாழ்க்கையை ஏன் இப்படி கெடுத்துக்கிற? நல்லா வாழவேண்டிய பொண்ணு இப்படி என்னால சீரழியிறது பாக்குறதுக்கு கஷ்டமா இருக்கு.

இவளுக்கு யாரு இவ்வளவு தைரியம் கொடுத்தது.. அவங்க அப்பா அம்மா எப்படி இதுக்கு ஒத்துகிட்டாங்க என்று யோசித்துக் கொண்டு வந்தவன் பீச் அருகில் வந்ததும் காரை நிறுத்திவிட்டு இறங்கி மணலில் கால்கள் புதைய நடந்தான்.

அவன் மனதைப் போலவே கடலும் கொந்தளித்ததுவோ! அலைகள் ஓயாமல் அவன் கால்களை வந்து ஆரத்தழுவி அவனுக்கு ஆறுதல் சொன்னதுவோ!

சில்லென்ற காற்றில் சற்று நேரம் நிற்க மனது சிறிது சிறிதாக சாந்தமானது. 

ஆதி கடற்கரைக்கு தான் வந்திருப்பான் என்று அறிந்து ஆசீ நிருவுடன் கடற்கரைக்கு வந்தான்.

அங்கு தொலைவில் இருட்டை வெறித்தபடி நின்று கொண்டிருந்த ஆதியிடம் வந்தவன் அவன் கரங்களை இறுக பற்றிக் கொண்டான்.

சிறிது நேரத்திற்கு மூவரும் எதுவும் பேசவில்லை.

என்ன அத்தான் எதுக்கு இவ்வளவு வேகமாக வந்தீங்க? மித்துவோட முகமே சரியில்ல.. உங்க ரெண்டு பேருக்கும் இப்ப தான் கல்யாணம் ஆகியிருக்கு.

அதுவும் அவளோட அப்பா அம்மா சம்மதம் இல்லாமல் இந்த கல்யாணத்தை பண்ணிக்கிட்டா.. இந்த நேரத்தில் அவளுக்கு நீங்கதான ஆதரவாக இருக்கணும்.

நீங்களும் இப்படி அவக்கிட்ட கோபப்பட்டு வந்துட்டா அவளுக்கு யார் இருக்கா நீங்களே சொல்லுங்க என்று வருத்தத்துடன் கூறினான்.

என்னது அவங்க அம்மா அப்பா சம்மதமில்லாமல் என்னை கல்யாணம் பண்ணி இருக்காளா?

இவ மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க இவளை என்று பல்லை கடித்துக்கொண்டு உள்ளுக்குள் அவளை வறுத்தெடுத்தவன் அவர்கள் இருவரிடமும் சரி நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு போங்க எனக்கு கொஞ்சம் வெளிய வேலை இருக்கு..

நான் வந்துடுறேன் போங்க என்று அவர்களை அனுப்ப அண்ணா என்ன வேலை நானும் உங்க கூட இருக்கேன் எங்க போகணும் என்று அவனை தனியாக விட மறுக்க ஆசீ நிருவை கூட்டிட்டு போ நான் வந்து விடுவேன் என்று அழுத்தமாகக் கூறினான்.

உங்களை எப்படி தனியா விட முடியும் என்று தயங்கி நிறுத்தவும் ஆதி ஆசீ என்று கோபமாகக் கத்த நீங்க கிளம்புங்க அத்தான் நான் ஆசீயை கூட்டிட்டு போறேன் என்று ஆசீயை அழைத்துச் சென்று விட்டான்.

அவர்கள் கிளம்பியதும் சற்றுநேரம் அந்த ஈரக்காற்றில் நின்றவனின் நினைவெல்லாம் மித்துதான் நிறைந்திருந்தாள்.

ஆதி வீட்டுக்கு வர நடுசாமம் ஆகிவிட்டது.

அந்த இரவில் எங்கோ சென்று விட்டு வந்தவனுக்கு இப்பொழுது தான் தன் மனதில் இருந்த பாரம் சற்று குறைந்தது போல் இருந்தது.

வீட்டில் அனைவரும் உறங்கியிருக்க ஹாலில் கிடந்த சோபாவில் அமர்ந்து ஆதியை எதிர்பார்த்து தூங்கியும் முழித்தும் வாசலையே பார்த்து கொண்டிருந்தவள் அப்பொழுது தான் கண் அசந்தாள்.

ஆதி வீட்டிற்கு வந்து பார்த்ததென்னவோ சோபாவில் தலை சாய்த்து சற்று வாயை பிளந்தபடி தூங்கும் மித்ராவை தான்.

அவளை பார்த்தவன் இது இவளுக்கு தேவையா என்று நினைத்தவன் அவளை தன் கைகளில் அள்ளி கொண்டான்.

அவன் தூக்கியதும் தூக்கத்தில் அவன் கழுத்தை சுற்றி கையை போட்டவள் மார்பில் தலை சாய்த்து கொண்டு தன் உறக்கத்தை தொடர்ந்தாள்.

தன் அறைக்கு தூக்கிக்கொண்டு வந்தவன் அவள் தூக்கம் கலைக்காமல் படுக்கையில் போட உடனே முழித்தவள் நெருக்கத்தில் அவன் முகத்தை கண்டதும் சார் என்று அலறி நகர்ந்து கொண்டாள்.

இப்போ எதுக்கு இந்த அலறல் என்பது போல் அவளை பார்க்க எப்போ சார் வந்தீங்க என்று நகர ஒஹ் நான் கிட்ட வந்தால் உனக்கு பயமா.. 

இரு உன்னை என்ன பண்றேன்னு பாரு என்று மனதுக்குள் அவளிடம் சவால் விட்டவன் அவளை நெருங்கினான்.

அவன் தன் அருகில் நெருக்கமாக வர என்ன சார் கிட்ட வராரு என்று பின்னே நகர்ந்து கொண்டே சென்றவள் ஏய் எங்க ஓடுற என்று அவளை அங்கும் இங்கும் நகர விடாமல் அவளை பிடித்து கொண்டான்.

என்னடி எங்க ஓடுற? என்று அவள் தாடையை வருடியவாறு அவள் கண்களை பார்த்து கொண்டே கேட்டான்.

ஏனோ டி அவனுக்கு சரளமாக வந்தது.

அவன் கட்டிய மாங்கல்யம் அந்த உரிமையை தந்ததுவோ..

அதை அவனே உணரவில்லை.

அவனின் இந்த பரிணாமத்தை அவள் எதிர்பார்க்கவில்லை என்பதை விட அவள் அதனை யோசித்தது இல்லை.

அவளுக்கே உரிய அவளின் நறுமணமும் அவளின் மிருதுவான தேகத்தின் தன்மையும் அவனை ஓர் மாய சுழலுக்குள் இழுத்து சென்றது.

அவனின் மூச்சு காற்று அவளின் முகத்தில் படவே அவளின் இதழ்கள் சார் என்று தந்தியடித்தது.

பாவம் புது வித மயக்கத்தில் இருந்தவனுக்கு அந்த தந்தி சென்றடையவில்லை போல.

கொஞ்சம் கொஞ்சமாக அவனது விரல்கள் அவள் தாடையை தாண்டி செவ்விதழ்களில் தஞ்சம் அடைந்தது.

இந்த வாய் தானே என்னை பேச விடாமல் பேசிக்கிட்டே போச்சு.. இனிமேல் அப்படி பேசுவியா.. இதுக்கு ஏதாவது தண்டனை கொடுத்தே ஆகணுமே..

ஹிம்ம் சொல்லு டி என்ன பண்ணலாம் என்று அவளிடமே கேட்டான்.

சார்.. என்று இழுக்க

ஹிம்ம் இழுக்காத சொல்லு டி

சார் டேப் போட்டு ஒட்டிடலாம் என்கவும் அப்படியா சொல்ற என்று அவள் இதழ்களை வருடியபடி கேட்டான்.

ஹிம்ம்..

ஒஹ்ஹ் டேப் வேண்டாம்.. வேற ஒரு ஐட்டம் இருக்கு என்கவும்

என்.. என்று அவள் ஆரம்பித்த வார்த்தைகள் அவன் இதழ்களுக்குள் அமிழ்ந்து போனது.

மோகமுள் தீண்டும்..

மோகமுள் - 11 படிக்க இங்கே சொடுக்கவும்..


Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments