Advertisement

Ad code

மோகமுள் - 11


 மோகமுள்-11:

சற்று நேரம் அந்த ஈரக்காற்றில் நின்றவன் மனதில் ஏதேதோ எண்ணங்கள் சூழ நேரே சென்றது டாக்டர் முல்லை நாதன் வீட்டுக்குத்தான்.

அங்கு சென்று கதவை தட்டவும், சத்தம் கேட்டு எழுந்த டாக்டர் பக்கத்தில் பார்க்க, அவரது மனைவி அவரை கர்ண கொடூரமாக முறைத்தபடி இருந்தார்.

டாக்டருக்கு பக்கென்று இருந்தது. பின்பு இருக்காதா.. ஏற்கனவே என் கூட நேரம் செலவழிக்க மாட்டேங்குற.. எப்போ பார்த்தாலும் ஹாஸ்பிடல் பேஷண்ட்னு அதே கதியா இருக்கீங்க.

இப்படியே இருந்தீங்கன்னா நான் என் வீட்டுக்கு போய்டுவேன் என்று மிரட்டிய மனைவியை இப்பொழுதுதான் சமாதானம் செய்து வைத்திருந்தார்.

இப்பொழுது கதவு தட்டும் சத்தம் கேட்டதும் அவரது மனைவி உக்கிரமான காளியாகவே மாறியிருந்தார்.

அவரை பாவமாக பார்த்த டாக்டரிடம் நீங்க மட்டும் இப்போ வெளியே போனா அவ்வளவுதான் பார்த்துக்கோங்க என்று திரும்பி படுத்துக்கொண்டார்.

இல்லம்மா நான் போகல இங்க பாரு படுத்துட்டேன் என்னை விட்டு மட்டும் போய் விடாதே என்று அவரை அணைத்துக் கொள்ள ஒன்னும் வேணாம் போங்க என்று தள்ளி விட்டு படுக்க அப்படியெல்லாம் சொல்லக்கூடாது என்று மீண்டும் தன்னுடன் இறுக்கிக் கொள்ள ஒருவாறு சமாதானம் அடைந்தார்.

இங்கு வெளியே இருந்தவனுக்கு அதற்கு மேல் பொறுமை இல்லாமல் டாக்டரின் போனுக்கு அழைக்க இங்கு இருவரின் தூக்கம் தொலைந்தது.

டாக்டரின் வாழ்க்கையும் தான் இருளில் தொலைந்து போனது.

(தொலைந்து போனதை கண்டுபிடிக்குறதுக்குள்ள டாக்டருக்கு சொட்டை விழாமல் இருக்கணும்.)

இந்த போனை சைலன்ட்ல போடாமல் விட்டுட்டேனே என்று புலம்பியபடியே அழைப்பை ஏற்க அவரது மனைவி எழுந்து வேறு ஒரு அறைக்கு சென்று படுத்துக் கொண்டார்.

இங்கு ஆதி அழைப்பதை எடுத்தவர் ஹலோ என்று விரக்தியாக அழைக்கவும் டாக்டர் எங்க இருக்கீங்க உடனே வாங்க நான் உங்களை பார்க்கணும் உங்க வீட்டுக்கு முன்னாடி தான் நான் நிக்கிறேன் என்றுவிட்டு அணைத்து விட்டான்.

ஐயோ என்று தலையிலடித்துக் கொண்ட டாக்டர் தன் மனைவி இருந்த அறை மூடி இருக்கவும் போச்சு என்று பெருமூச்சுடன் வெளியே சென்றார்.

ஆதி டாக்டரை அழைத்து கொண்டு சென்றது மித்ராவின் வீட்டிற்குத்தான்.

என்ன மித்ராவின் வீட்டிற்கா என்று நீங்கள் அதிர்ச்சியாக வினவுவது எனக்கு நன்றாக கேட்கிறது.

ஆம் மித்ராவின் வீட்டிற்கு தான்.. இதற்கு முன்பு கம்பெனியில் இருந்து கிளம்ப தாமதம் ஆனால் ஆது மித்ராவை அவள் வீட்டில் வந்து கொண்டு விடுவது வாடிக்கையான ஒரு விஷயம் தான்.

ஆனால் இப்பொழுது வந்தது வேடிக்கையான ஒரு விஷயத்திற்கு.

வாங்க நாம போய் வேடிக்கை பார்க்கலாம்.

மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்த சமயம்.. கிட்டத்தட்ட அனைவரும் தூங்கிய நிலையில் அந்த தெருவே அமைதியாக இருந்தது.

டாக்டர் வீட்டின் கதவைத் தட்டி அவரின் வாழ்க்கையை கெடுத்தது போல இப்பொழுது மித்ராவின் வீட்டுக்கதவை தட்டி யார் வாழ்க்கையைக் கெடுக்க போறான் என்பது என்னுடைய மைண்ட் வாய்ஸ் அல்ல..

டாக்டரோட மைண்ட் வாய்ஸ் ..

அவருக்கும் வலிக்கும்ல.. மனுஷன் வெளியே காமிக்கல அவ்வளவுதான் உள்ளே அடி பலம் கதறுகிறார்.

தாமுவும் பிரேமாவும் சக்கரவர்த்தியின் வருகைக்குப் பின் தங்கள் பெண்ணின் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்ற நிம்மதியுடன் அப்பொழுது தான் கண்ணயர்ந்தனர்.

அது இவனுக்கு பொறுக்கவில்லை போலும் கதவை டொம் டொம் என்று தட்ட உறக்கம் கலைந்த தாமு வந்து கதவை திறந்தார்.

சத்தம் கேட்டு பின்னாடியே வந்த பிரேமா அங்கு நின்றவனைப் பார்த்து நினைத்ததெல்லாம் இதுவே..

காலைல உங்க அப்பா வந்தார் வந்து நம்பிக்கை சொல்லிட்டுப் போனாரு இப்போ பிள்ளை வந்து என்ன சொல்ல போறாரோ என்ற திகிலுடன் அவனை பார்க்க அவனின் வரவை நிச்சயமாக இருவரும் எதிர்பார்க்கவில்லை என்று அவர்களின் பார்வையில் இருந்தே தெரிந்தது.

வாங்க என்று தாமு அழைத்ததும் டாக்டருடன் உள்ளே வந்தவன் நீங்க ரெண்டு பேரும் என்ன மன்னிச்சிடுங்க நான் தாலி கட்டினது மித்ராவுக்கு தான்னு எனக்கு இப்போதான் தெரியும் என்றான் வருத்தத்துடன்.

உங்க மகளோட வாழ்க்கை என்னால அழிந்து போக நான் ஒருநாளும் சம்மதிக்க மாட்டேன் உங்க மக வாழ்க்கையை நினைத்து கவலைப் படாதீங்க உங்க பொண்ணுக்கு நல்ல மாப்பிள்ளையை பார்த்து நானே கட்டி வைக்கிறேன் என்று தன் வாழ்க்கைக்கு அவனே சூனியம் வைத்துக் கொண்டான்.

உங்க பொண்ணு வாழ்க்கைக்கு எந்த ஒரு பங்கமும் வராமல் நான் பார்த்துக்குறேன் நீங்க நிம்மதியா தூங்குங்க என்று அவர்களின் நிம்மதியை குழி தோண்டிப் புதைத்தது தெரியாமல் கிளம்பிவிட்டான்.

இப்போ எதுக்கு என்னை கூட கூட்டிட்டு வந்தான் என்று மண்டையில் இருக்கும் நாலு முடியை பிக்காத குறைதான்.

வேற யாரு எல்லாம் நம்ம டாக்டர் தான்.

இப்படி ஒப்புக்குச் சப்பாணியாக வச்சிக்கவா என் வாழ்க்கையை அழித்து உன்னோட கூட்டிட்டு வந்த என்று உள்ளுக்குள் புலம்ப மட்டுமே முடிந்தது அவரால்.

டாக்டரை அழைத்து கொண்டு அவரின் வீட்டில் விட்டவன் இப்போதுதான் டாக்டர் எனக்கு பாரம் குறைந்தது போல இருக்கு என்றவன் குட் நைட் சொல்லி கிளம்பி விட இனிமே எங்க எனக்கு குட்நைட் இனி எல்லாம் பேட் நைட் தான் என்று புலம்பிக் கொண்டே உள்ளே சென்றார்.

காரில் சென்று கொண்டிருந்தவன் சீக்கிரம் டிவோர்ஸ் அப்ளை பண்ணனும் அப்போதான் இன்னும் நிம்மதியா இருப்பேன் என்று அவன் வீட்டிற்கு சென்றான்.

(அட எடுபட்ட பயலே டிவோர்ஸ் கொடுக்கிறேன் என்று சொன்னவனா இப்படி இழுத்து வச்சு முத்தம் கொடுக்கிற)

அவள் இதழ் தந்த போதையில் மயங்கியவன் கரங்கள் கட்டுப்பாடின்றி அவள் மேனி முழுக்க வலம் வந்தது.

சற்று நேரம் அவளில் உறைந்திருந்தவன் தன் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு அதிர்ந்து அவளை தள்ளி விட்டு குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டான்.

சத்தியமாக கனவிலும் கூட இப்படி ஒரு செயலை ஆதியிடம் இருந்து மித்ரா எதிர்பார்க்கவில்லை.

அந்த அதிர்ச்சியிலிருந்தவளுக்கு அவன் தொட்ட இடம் அனைத்தும் குறுகுறுத்தது.

சிறிது நேரம் அந்த உணர்வின் பிடியில் இருந்தவள் அவன் வருவதற்குள் தூங்கிவிட வேண்டும் என்றும் மெத்தையின் ஓரத்தில் படுத்து தலை முதல் கால் வரை போர்வையில் தன்னை பொதிந்து கொண்டு கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

தூக்கம் தான் வந்த பாடில்லை.

ஐயோ இந்த தூக்கம் வேற வந்து தொலைக்க மாட்டேங்குது என்று வைதவள் தூங்கு தூங்கு மித்ரா தூங்கு எனவும் ஆதி வரும் அரவம் கேட்கவும் அமைதியானாள்.

மோகமுள் தீண்டும்...

மோகமுள் - 12 படிக்க இங்கே சொடுக்கவும்

Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments