மோகமுள் -12:
குளியலறைக்குள் வந்த ஆதிக்கு சற்று முன் நடந்ததை நினைத்து என்ன சொல்வதென்றே தெரியவில்லை தான் தானா இது என்ற சந்தேகம் வேறு பட்டுக்கொண்டான்.
அவன் தன் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு கொண்டு அப்போ டாக்டர் சொன்னது உண்மையா இருக்குமோ என்று ஒரு நொடி நினைத்தவன் பின்பு அதெல்லாம் எதுவும் இருக்காது.. என்று குழப்பி கொண்டான்.
அவளை தொட்ட அந்த நொடி இத்தனை நாட்களாக தூங்கி கொண்டிருந்த அவனது ஆண்மை உயிர் பெற்றதுவோ.. அவள் செய்த மாயத்தில் இன்னும் உடல் தகித்து கொண்டிருக்க ஷவரை திறந்து விட்டவன் அதன் அடியில் சென்று நின்று கொண்டான்.
அவன் உடலில் அந்த குளிர்ந்த நீர் பட்டும் அவளால் ஏற்பட்ட தகிப்பை குறைக்கவே முடியவில்லை. அவன் ஆண்மையோ உன்னை விடுவேனா பார் என்பது போல் பேயாட்டம் போட தவித்துப் போனான்.
அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.. ஏதோ ஒன்று உந்த ஷவரை நிறுத்தி விட்டு குளியலறையிலிருந்து வெளியே வந்தவன் மெதுவாக அவளை நெருங்கியவன் எட்டிப் பார்க்க அவளும் மெத்தையில் சுருண்டு படுத்துக் கொண்டிருந்தாள்.
அவளை நோக்கி நீண்ட கையை சட்டென்று இழுத்து கொண்டவன் ஆதி இது ரொம்ப தப்பு டா.. என்ற ஒரு மனம் சொல்ல டேய் உனக்கு என்ன பண்ண தோணுதோ பண்ணு டா அவள் உன்னோட மனைவி..
அவள் தலை முடி முதல் பாதம் வரை உனக்கே உனக்கு தான் சொந்தம் என்று மற்றொரு மனம் கூற தலையை பிடித்து கொண்டு தொப்பென்று மெத்தையில் அமர்ந்தான்.
அவன் வரும் அரவம் கேட்டு தூங்குவது போல் போர்வையை இழுத்து போர்த்தி கொண்டு படுத்திருந்தவள் அவன் தொப்பென்று மெத்தையில் அமர்ந்த அசைவில் மெல்ல தலையை தூக்கி பார்த்தாள்.
அவன் தலையில் கை வைத்து அமர்ந்திருக்கவும் மனம் கேளாமல் அவன் தோலை சார் என்று தொட அவள் கையை தட்டி விட்டான்.
மித்ரா தயவு செஞ்சு என்னை தனியா விடு..
ப்ச் சார் ஏன் சோகமா இருக்கீங்க.. இப்போ என்ன நடந்து போச்சுன்னு தலையில் கை வச்சுட்டு உட்காந்து இருக்கீங்க..
எல்லாம் சரியாகிடும் சார் என்று அவனுக்கு ஆறுதல் கூற என்ன ஆகணுமா அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே..உனக்கு சொன்னா புரியாது மித்ரா ஊரே கூடி நிற்கும் பொழுது நீ ஆண்மை இல்லாதவன் டா உனக்கெதுக்கு கல்யாணம்.. என்று கேட்கும் பொழுது ப்ச் விடு என்றவன்
அதுவும் அந்த பொண்ணு என்னை கேவலமா ஒரு பார்வை பார்த்தா பாரு என்று வருந்தியவன் அதெல்லாம் உனக்கு சொன்னால் புரியாது.. விடு என்றவன் மெத்தையில் இருந்து எழ
சார் இப்படி சோகமா இருக்காதீங்க சார்..
நல்லாவே இல்லை.. நீங்க எப்பொழுதும் தலை நிமிர்ந்து கம்பீரமா இருக்கணும்.. அதுதான் உங்களுக்கு அழகு..
இந்த உலகத்துல யாருக்கு தான் பிரச்னை இல்லை.. எல்லாருக்கும் இருக்கு.. இதுவும் கடந்து போகும் என்பது போல எல்லாத்தையும் நம்மால் கடக்க முடியும்..
நீங்க அவள் சொன்னதை பற்றி கவலை படாதீங்க சார்.. இப்போ உங்களுக்கு ஒரு குழந்தை வந்துட்டா எல்லாம் சரியா போய்டும்.. என்று இவள் பாட்டுக்கு கூற
குழந்தை எப்படி மித்ரா வரும் என்று அவன் கேட்ட கேள்வியில் உடனே அதான் நான் இருக்கேனே சார் என்று பட்டென்று அவளிடமிருந்து பதில் வந்தது.
மித்ரா என்று கத்தியவன் லூசு போல உளராத.. நீ வாழ வேண்டிய பொண்ணு நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னதே தப்பு.. இதுல நீயும் அம்மாவும் சேர்ந்து பண்ணி வச்ச வேலையால் இப்போ கல்யாணம் வரைக்கும் முடிஞ்சு போச்சு..
நீ தேவையில்லாம உன் வாழ்க்கையை கெடுத்துக்குற மித்ரா..
நான் உன்னை கேட்டனா எனக்கு வாழ்க்கை கொடு என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு
ஏன் இந்த மாதிரி பண்ற.. இப்ப தேவை இல்லாம உன் வாழ்க்கை தான் அந்தரத்தில் தொங்குது.
அதுவும் உன் அப்பா அம்மாவை எதுத்துகிட்டு இந்த கல்யாணம் பண்ண என்ன அவசியம் சொல்லு டி..
அவள் அப்படியே முகத்தை சுண்டைக்காய் போல சுருக்கி வைத்து கொண்டு அமைதியாக நிற்க உன்கிட்ட தான் கேக்குறேன் எதுக்கு இப்படி பண்ணின..
என்னால உனக்கு எந்த வித சந்தோஷமும் கொடுக்க முடியாதுங்குறது தெரிஞ்சும் எதுக்கு கல்யாணம் பண்ண ஒத்துகிட்ட.. தயவு செஞ்சு நான் சொல்றதை கேளு..
இப்போவும் ஒன்னும் கெட்டு போகல.. நாளைக்கே நான் லாயரை போய் பார்த்து பேசுறேன் டிவோர்ஸ் வாங்கிடலாம்.. நானே நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்குறேன்.. என்னால ஒரு பொண்ணோட வாழக்கை கெட்டு போக விரும்பல..
அவன் பேச பேச கையை கட்டி கொண்டு அவனை பார்த்தவள் பேசி முடிச்சுடீங்களா சார்.. நான் கொஞ்சம் பேசவா என்று பயத்தில் நடுங்கிய கால்களை மறைத்து கொண்டு கேட்க சொல் என்பது போல் தலையசைக்க
நீங்க எல்லார் முன்னாடியும் தலை குனிஞ்சு நின்னது எனக்கு பிடிக்கல.. யார் முன்னாடி தலை குனிஞ்சு நின்னீங்களோ அவங்க முன்னாடி நீங்க தலை நிமிர்ந்து நிக்கிறதை நான் பார்க்கணும்..
அதுக்கு குழந்தை பிறக்கணும்.. உங்களுக்கு வதவதன்னு ஒரு பத்து பிள்ளையாச்சும் பெத்து கொடுக்கணும்னு ஆசையாதான் இருக்கு..
ஆனால் நீங்க ஒன்னுக்கே மூக்கால அழுகுறதால ஒரு பிள்ளை மட்டும் பெத்து கொடுத்துட்டு நான் என் வாழ்க்கையை பார்த்துட்டு போய்டுறேன் என்று லூசு போல உளறினாள்.
பிள்ளை பெத்து கொடுத்துட்டா அப்பறம் எதுக்கு என்னை விட்டு போகணும் என்று யோசித்தவன் லூசு உளறது என்று நினைத்து கொண்டு சரி நீ சொல்றது போலவே வச்சுக்கலாம் ஆனால் ஒரு கண்டிஷன்..
ஹ்ம்ம் சொல்லுங்க சார்
ஒரு மாசம் தான் டைம் அதுக்குள்ள குழந்தை வந்துச்சுன்னா தாராளமா பெத்துக்கலாம்..
ஒருவேளை குழந்தை வரலனா டிவோர்ஸ் வாங்கிட்டு நான் சொல்ற பையனை கட்டிக்கணும் என்கவும் இந்த லூசும் மண்டையை ஆட்டியது.
வெறும் முப்பது நாள் தான் டைமா சார் என்கவும் ஆமாம் முப்பது நாளில் இங்கிலிஷ் படிக்கும் பொழுது குழந்தை உண்டாக முடியாதா என்றவன் அங்கிருந்த மற்றொரு அறையில் நுழைந்து கொள்ள
எப்படி முப்பது நாளில் குழந்தை வந்துருமா.. வரும் முதல்ல அதுக்கான வழியை பார்க்கணும் என்று நினைத்தவள் மனதிற்குள் அச்சோ சீக்கிரம் குழந்தை வந்துருனும் என்று வேண்டுதல் வேறு வைத்து கொண்டாள்.
இங்கு அறைக்குள் வந்தவனோ நான் சொல்ற எல்லாத்தையும் நம்புறாளே எப்படியோ இன்னும் ஒரு மாதம் ஓட்டிட்ட்டா போதும் என்று இவன் ஒரு பிளான் போட கடவுள் வேறு ஒரு பிளான் வைத்திருக்கிறார் என்று இருவரும் அறியவில்லை.
மோகமுள் தீண்டும்..
மோகமுள் - 13 படிக்க இங்கே சொடுக்கவும்..
0 Comments