Advertisement

Ad code

மோகமுள் - 13


 மோகமுள்-13:

இங்கு ஆசி அறைக்கு நடு இரவில் ஒரு உருவம் பதுங்கி பதுங்கி சென்றது.

ஐயோ ஒருவேளை ரூமை பூட்டி வச்சுருந்தா நான் என்ன பண்றது இப்படி கஷ்டப்பட்டு போறதெல்லாம் வீணா போய்டுமே என்று நினைத்து கொண்டவள் கதவை மெதுவாக திறக்க கதவு திறந்து கொண்டது.

அப்பாடி கதவு திறந்து தான். இருக்கு என்று சந்தோஷம் வேறு பட்டு கொண்டாள் கள்ள பூனை..

பூனை போல் அரவமே எழுப்பாமல் மெல்ல நடந்து வந்தவள் தன்னவன் தூங்கும் அழகை ரசித்து பார்த்து கொண்டே சற்று நேரம் நின்று விட்டாள்.

அவன் தூக்கத்தில் புரண்டு படுக்கவும் தான் தன் தலையில் தட்டி கொண்டவள் மட்டி மட்டி இப்படியா ஜொள்ளு விடுவ..

அவன் உன்னை திரும்பி கூட பார்க்க மாட்டேங்குறான்.. நீ என்னடான்னா வாயில் வாட்டர் பால்ஸ் திறந்து விட்டுட்டு நிக்குற என்று தன்னை தானே நொந்து கொண்டவள் அவன் அருகே நெருங்கி அவன் நெற்றியில் முத்தமிட போக கண்களை திறந்தவன் அவளை இழுத்து படுக்கையில் தன்னருகே போட்டு சிறைப்பிடித்தான்.

மாட்டி கொண்ட திருடி போல் திருத்திருவென விழிக்க அவள் பார்வையில் ஒரு நொடி மயங்கினாலும் அதனை அவளிடம் காட்டிக்கொள்ளமல் எதுக்கு டி இங்க வந்த என்று காட்டமாக அவன் குரல் வெளிவந்தது.

அவள் ஒன்றும் கூறாமல் அவன் கண்களை பார்த்து கொண்டிருக்க இங்க ஒன்னும் அவன் இல்லை.. அவனை பார்க்க தானே வருவ என்று அவன் வார்த்தைகள் அவளை குத்தி கிழித்தாலும் அதை ஒதுக்கி தள்ளியவள் 

மாமா இன்னுமா என்னை உனக்கு புரியலை.. என்றவளுக்கு தன் காதலை அப்பொழுதும் சொல்ல தோணவில்லை.. 

அவளை பார்த்து இகழ்ச்சியாக இதழை வலைத்தவன் அதான் அன்னைக்கு அவனை பிடிக்கும்னு சொன்னியே அப்பறம் எதுக்கு இங்க வந்துருக்க அவன் ரூமுக்கு தானே நீ போயிருக்கணும் என்று வார்த்தையை விட அதுவரை அமைதியாக இருந்தவள் பளாரென்று அவன் கன்னத்தில் அறைந்து காளி அவதாரம் எடுத்திருந்தாள்.

அவனை பிடுச்சிருக்குன்னு சொன்னது உண்மை தான் நான் இல்லன்னு சொல்ல மாட்டேன்.. உன்கிட்ட விளையாட அப்படி சொன்னேன்..

ஆனால் ரெண்டு வருஷமா அதையே பிடுச்சுக்கிட்டு தொங்கிட்டு இருக்க என்னை பார்த்து எப்படி அந்த வார்த்தை நீ சொல்லலாம் என்று கத்தியவளுக்கு கண்ணீர் நிற்காமல் ஆறாக பெருகியது.

எப்போ இவ்வளவு கேவலமா என்னை சொன்னியோ இனி நீ எனக்கு வேண்டாம் உன்னை தேடி நான் இனி வர மாட்டேன்.. நீயும் என்னை தேடி வராத.. உன்னை போய் இவ்வளவு நாளா என்று நிறுத்தியவள் ச்சீ என்று கத்த அவன் கைகள் தன் மேல் விழ கண்களை திறந்தவள் கண்டது என்னவோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஆசியை தான்.

ச்சே அப்போ அது உண்மை இல்லையா என்று நினைத்தவள் ஒருவேளை தன்னை அவன் அப்படி உண்மையாகவே கூறிவிட்டால் அதனை தன்னால் தாங்க இயலாது என்று நினைத்தவள் உடனடியாக அங்கிருந்து கிளம்ப நினைக்க அவள் கைகளை அவன் தூக்கத்தில் பிடித்திருந்தான்.

தூக்கத்தில் அவளின் கையை விடாமல் பிடித்து இருந்தவன் இன்னும் கையை இழுத்து கன்னத்தில் வைத்து உறங்க

ஐயோ இவன் வேற எழுந்துட்டா கேவலமா பேசிருவானோ என்று நினைக்க அவள் மனமோ இரண்டு வருஷமா உன் கிட்ட வாயைத் திறக்காமல் இருந்தவன் இன்னைக்கா பேசப் போறான் என்று இடித்துரைக்க 

ஒருவேளை அவன் அசிங்கமா பேசிட்டா என்னால் தாங்க முடியாது என்று மனதிற்குள் பல போராட்டம் நடத்திக்கொண்டிருக்க

தூக்கத்தில் இருந்தவனுக்கோ தனக்கு கிடைத்த டெடி பியரை விடுவது போல் எண்ணமே இல்லை போலும்..

எப்பொழுது அவளை இழுத்து தன் நெஞ்சில் போட்டுக்கொண்டான் என்று அவளுக்கே தெரியவில்லை.

அவள் தன் யோசனையில் இருக்க அவன் தூக்கத்திலே பிள்ளை பெற்று விடுவான் போல அவளை தன் நெஞ்சில் சாய்த்து கொண்டவன் தூக்கத்திலேயே அவள் முதுகில் தூங்கு என்னும் விதமாக தட்டிக்கொடுக்க யோசனையில் இருந்தவள் யார் என்னை அடிக்கிறது என்று சுயநினைவுக்கு வந்தவள் தன் கரடிக்குட்டி செய்யும் இம்சையை கண்டு சோ ஸ்வீட் ஆசீ என்று கண்ணம் கிள்ளி முத்தம் வைத்து 

உன் நிரு தப்பு பண்ண மாட்டான்னு உனக்கு தெரிஞ்சிருக்கணும் ஆசீ..

என்கிட்ட பேசாம இருக்காத டா எனக்கு கஷ்டமா இருக்கு எதிலும் என்னால கான்செண்ட்ரேட் பண்ண முடியலை..

எங்க பார்த்தாலும் நீ தான் இருக்க.. அப்படியே முகத்தை தூக்கி வச்சுட்டு சுத்துர..

உன் நிரு பாப்பா தானே நானு.. என்னை பழைய படி கொஞ்ச மாட்டியா.. எனக்கு நீ வேணும்டா மாமா என்று அவனை கட்டி கொண்டே தன் மனதில் உள்ளதை கொட்ட இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்ததை நினைத்து பார்த்தாள்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு 

அப்பொழுது தான் ஆசீ தன் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு தன் நண்பனுடன் சிங்கப்பூருக்கு சென்றான்..

நண்பன் என்றால் நெருங்கிய நண்பன் எல்லாம் இல்லை கூட படித்தவன் அவ்வளவே..

கல்லூரி முடித்த கையோடு தன் நிரு பாப்பாவை பார்க்க சிங்கப்பூருக்கு செல்ல ஏர்போர்ட் வந்தவன் தன்னுடன் பயின்ற நவீனை அங்கு கண்டவன் என்னடா இந்த பக்கம் எங்க கிளம்பிட்ட..

சும்மா தான் டா இங்க ஒரே போரிங் டா.. அதான் சிங்கப்பூர் போலாம்னு ஒரு ஐடியா வந்துச்சு அதான் கிளம்பிட்டேன்..

ஹே நானும் அங்க தான்டா போயிட்டுருக்கேன்.. அங்க உன் சொந்தம் இருக்காங்களா என்று கேட்கவும்

வெட்க படுவது போல் ஒரு விதமாக சிரித்து கொண்டு ஆமா டா என் லவ்வர் என்கவும்

ஹே காங்கிரட்ஸ் டா எப்படி லவ் சொல்லவே இல்ல என்ன கதை என்கவும் facebook ல தான்டா முதலில் அவளை பார்த்தேன் அப்பறம் ரெண்டு பேரும் பேசினோம்..

ரெண்டு பேருக்கும் பிடிக்கவும் செஞ்சுது அதான் இப்போ வர சொன்னா அதான் கிளம்பிட்டேன் என்றவன் அவளின் புகைப்படத்தை ஆசியிடம் காண்பிக்க அதிர்ந்தான்.

டேய் மச்சி எப்படி டா என் ஆளு செமையா இருக்கா தானே என்று அவன் முன்பே அவளின் புகைப்படத்திற்கு முத்தம் கொடுக்க வந்த கோபத்தை கையை முறுக்கி கட்டு படுத்தினான்.

 ஏனென்றால் அப்படத்தில் இருந்தது நிரஞ்சனா..

தன் நிரு அப்படி இருக்க வாய்ப்பே இல்லை என்று நினைத்தவன் எப்படி டா நீங்க ரெண்டு பேரும் பேசுனீங்க என்று கேட்க அவன் உடனே அவள் நவீனுக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளை ஆசியிடம் காட்டினான்..

அதனை கண்டவன் என்ன நினைத்தானோ சிங்கப்பூருக்கு செல்வதை நிறுத்தி விட்டு தன் வீட்டிற்கு வந்து விட்டான்.

அவன் வந்த அடுத்த நொடி வாய்ஸ் மேசேஜ் வந்து கொண்டே இருந்தது.. மாமா கெளம்பிட்டியா.. சீக்கிரம் வா.. 

அவளுக்கு உடனடியாக அழைத்தவன் நிரஞ்சனா அந்த பக்கம் எடுத்ததும் ஃபேஸ்புகல நவீன்ன்னு யாராவது உனக்கு பிரின்ட் இருக்காங்களா என்கவும் ஹிம்ம் ஆமா மாமா இருக்காங்க.. அவங்க கிட்ட நான் பேசுவேனே என்று கூறவும்

ஒஹ் பிடிக்குமோ என்ற கேள்வி தொக்கி நிற்க ஆமா மாமா பிடிக்கும் ஆ.. என்ற வார்த்தையோடு அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று கேட்காமல் கூட போனை வைத்து விட்டான்..

அன்று அவளிடம் பேசியவன் தான் அதன் பிறகு இந்த இரண்டு வருடத்தில் அவன் அவளிடம் பேசுவதே இல்லை..

ஆதி அறை..

பக்கத்தில் உள்ள அறைக்கு சென்று தன் உடையை மாற்றி கொண்டு வந்தவன் மித்து போனில் ஏதோ மும்பரமாக நோண்டி கொண்டிருக்க 

மித்து இந்த நேரத்தில் தூங்காம என்ன போன் நோண்டிட்டு இருக்க போனை வச்சுட்டு தூங்கு என்று அவளருகில் படுத்து கொண்டான்.

அதையெல்லாம் அவள் உணரும் நிலையில் இல்லை..

அவள் தான் போனில் பிஸி ஆகி விட்டாளே..

மித்து என்று அதட்ட

போனில் இருந்து கண்ணை எடுக்காமல் சார் இருங்க சார் முக்கியமா ஒரு விஷயம் பார்த்துட்டு இருக்கேன் நீங்க அது தெரியாம பேசிட்டு இருக்கீங்க..

மணி எத்தனைன்னு பாரு மித்து.. ரெண்டு ஆச்சு.. காலையில் எழ வேண்டாமா எவ்ளோ பெரிய தலை போற காரியமா இருந்தாலும் காலையில் பார்த்துக்கோ இப்போ தூங்கு என்று அவளிடம் போனை பிடுங்க வர

அட என்ன சார் நீங்க வேற காதுல புகுந்த கொசு மாதிரி நொய் நொய்ன்னுட்டு என்று சலித்தவள் 

நீங்களும் ஒரு முடிவு சொல்ல மாட்டீங்க.. நான் முயற்சி பண்ணினாலும் தடுக்குறீங்க என்கவும்

மேடம்க்கு என்ன முடிவு தெரியணும் சொல்லு நல்லா விளக்கிறலாம்..

அதான் சார் நீங்க தானே இப்போ முப்பது நாள் டாஸ்க் குடுத்துருக்கீங்க.. அதை பற்றி தான் பார்த்துட்டு இருந்தேன் என்று கூறவும்

என்னது போன்ல அதையா பார்த்துட்டு இருந்த.. என்று அதிர்ந்தவன் ஓ காட் மித்ரா உன்னை எந்த லிஸ்ட்ல சேர்கிறதுன்னே தெரியலையே என்று நெற்றியை நீவி விட்டு கொண்டான்.

மோகமுள் தீண்டும்..

மோகமுள் - 14 படிக்க இங்கே சொடுக்கவும்..


Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments