Advertisement

Ad code

மோகமுள் - 14


 மோகமுள் தீண்டாதோ தீரனே -14

ஒரு மாதம் என்று சொன்னது ரொம்ப பெரிய தப்போ இவ என்ன இப்படி தீவிரமா போன்ல ஆராய்ச்சி பண்றா ஐயோ மண்டை வெடிக்குது.

 மித்துவுக்கு ஆதி புலம்பியது எங்கு கேட்டிருக்கும் அவள் தான் போனில் பிஸியாக இருந்தாளே..

அவன் பாட்டுக்கு ஒரு மூலையில் போனை வை என்று கத்திக் கொண்டிருக்க இவள் கேட்டப்பாடு தான் இல்லை

நீ என்ன வேணா கத்து என் காது கேட்காது  என்பது போல கருமமே கண் போல எப்படி ஒரு மாதத்தில் உண்டாவது என்பதை முதலில் கூகுளிடம் கேட்டவள் அது இருக்கிற எல்லாத்தையும் எடுத்து கண் முன்னே வைக்க ச்சீ உவேக் என்றாகி போனது அவளுக்கு..

ச்சீ இது என்ன என்னன்னவோ வருது என்று கூகுள் ஆண்டவருக்கு நாலு கெட்ட வார்த்தை பார்சல் பண்ணியவள் யூடியுப் வந்தாள்..

அங்கு கேட்க சில டாக்டர்களின் வீடியோவை எடுத்து சற்று நேரம் ஓட விட்டவள் கொட்டாவி விட என்னடா இது இப்போவே தூக்கம் வருது என்று மணியை பார்க்க மணி ஒன்று 

ஐயோ இவ்வளவு நேரமா போனை நோண்டிட்டு இருந்தேன் போச்சு சார் வேற திட்டப் போறாரு என்று அவனை திரும்பிப் பார்க்க அவனோ வயிற்றில் ஒரு கையும் கண்களை மறைத்தபடி ஒரு கையும் வைத்து உறங்கி விட்டிருந்தான்.

பாவம் அவரே கத்தி பார்த்துட்டு தூங்கிட்டாரு போல சரி விடு மித்து நாளை காலையில எழுந்ததும் சார்கிட்ட பேசிட்டு ஒரு முடிவு எடுத்துக்கலாம்..

அதான் குழந்தை பிறக்க ஒரு வழி கண்டு பிடிச்சாச்சே என்று வாய் விட்டுக் கூறியவளுக்கு அடுத்த சந்தேகம் வந்தது.

இப்போ நான் எங்கே தூங்குறது என்று கேட்க வெளிய போக முடியாது மித்து இங்கேயே படு என்று சத்தம் மட்டும் வர 

சார் இன்னும் நீங்க தூங்கலையா என்று ஆர்ப்பரித்தவள் நான் குழந்தைக்கு வழியைக் கண்டுப் பிடிச்சிட்டேன் வாங்க எப்படின்னு சொல்றேன் என்கவும் ஜர்க்கானவன் 

ஏய் மித்து ஒழுங்கா தூங்கு சும்மா நொய் நொய்யின்னுட்டு எனக்கு தூக்கம் வருது என்று அவளை கடிந்தவன் போர்வைக்குள் தன்னை மறைத்துக் கொண்டான்.

இவ தெரிஞ்சி செய்றாளா தெரியாம செய்றாளா ஒன்னுமே புரியலையே என்று நினைத்தவனுக்கு தூக்கம் தூரமாகிப் போனது.

அவன் அதட்டவும் ச்சே மித்ரா சாருக்கு உன்னை பிடிக்கலை போல அதான் இப்படி எரிஞ்சி விழுறாரு என்று நினைத்தவளிடம் சரி விடு ஒரு பாப்பா பெத்துக் கொடுத்தா எல்லாம் சரியா போகும் என்று அவளின் மனசாட்சியோ ஒத்து ஓதியது.

அவள் பாட்டுக்கு யோசித்துக் கொண்டு அமர்ந்திருக்க இன்னும் தூங்காம என்ன பண்ற என்று அதட்டல் வரவுமே இதோ இதோ நான் எப்போவோ தூங்கிட்டேன் சார் என்று அவனருகே சற்று இடைவெளி விட்டு படுத்துக் கொண்டாள்.

சற்றுநேரம் கழித்து எதும் பதில் வராததால் தலையை வெளியே நீட்டிப் பார்த்தவன் தன்னை விட்டு தள்ளி படுத்திருப்பவளை கண்டவன் இவதான் ஒரு மாசத்துல பிள்ளை பெக்க போறாளாம் ஆளப்பாரு என்று மனதுக்குள் சிரிக்க ஏன் ராசா உன் பொண்டாட்டி தானே நீ ஒட்டி கட்டி படுக்கிறது என்று காலை வார விரட்டியடித்தான்.

இப்போ ஏன் விரட்டுற என்று வினவிய அவனின் மனசாட்சியோ


ஓ உன் பொண்டாட்டி தூக்கத்துல உன்னை கட்டிப்பிடிப்பா நான் எதுக்கு தேவையில்லாம இடையில வந்துட்டு நீ அனுபவி ராசா என்று எஸ்ஸாகி விட்டது.

மோகமுள் தீண்டும் ...

மோகமுள் - 15 படிக்க இங்கே சொடுக்கவும்...

Post a Comment

2 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments