Advertisement

Ad code

மோகத்தில் முக்குளிக்க வா அழகே - 8



 மோகம் - 8:


விக்கி, "மச்சி, பெரிய பார்ட்டி அரேஞ் பண்ணு.. பெரிய ப்ராஜெக்ட் வெற்றிகரமா சைன் பண்ணிட்ட.. கண்டிப்பா பார்ட்டி வேணும்.."


"சரி மச்சான், கண்டிப்பா பண்ணிடலாம்.." என்று சிரித்தான் மித்ரன்.


"சரி மச்சி, நான் கிளம்புறேன்.. நாளை பார்க்கலாம்.."


"ஹிம்ம் வாடா.. மதிக்கு அப்படியே ஐஸ்கிரீம் வாங்கிட்டு உன்னை ட்ராப் பண்ணிட்டு போறேன்.."


"மச்சான்.. நான் கார்ல தான் வந்தேன்.. நீ கிளம்பு, நான் போய்க்கிறேன்.. என்ன மச்சான், ஐஸ்கிரீம்லாம் என்ன ஒரே அஜால் குஜால்லா.."


"அட ஏன்டா நீ வேற.. எரியுற நெருப்புல எண்ணெய் ஊத்துற.. நீங்கதான் கல்யாணம் வரைக்கும் கையை கட்டிப் போட்டுட்டீங்களே..."


(இப்போ மட்டும்.. நீ கைய சும்மாவா வச்சிட்டுருக்க.. டேய் விக்கி, இவன நம்பாதடா..)


"சரி சரி மச்சான்.. ஃபீல் பண்ணாத... இருந்தாலும் கொஞ்சம் கஷ்டம் தான் என்று ஃபீல் பண்ணி பாவ்லா காட்டி ஓடிவிட்டான்."


மித்ரன் சிரித்துக்கொண்டே ஐஸ்கிரீம் பார்லர் போய் வாங்கி விட்டு வீட்டிற்கு வந்தான்.


ஆனால் அவன் உயிர் அழுது கொண்டல்லவா இருக்கிறது.


மித்ரன் வீட்டிற்குள் நுழைந்ததும், சனா அவனை நோக்கி வரவும், ஒன்றும் பேசாமல் நின்றான்.


சனா மித்ரனிடம் வசந்தா வந்தது முதல் அனைத்தையும் சொல்லி, மதிக்கு தலைவலி என்று அனைத்தையும் சொன்னார்.


அவர் சொல்ல சொல்ல, கோபத்தில் கைகளை மடக்கிக்கொண்டு வெளியே செல்ல முற்பட்டவனை, கிருஷ்ணன் தடுத்தார்.


"மித்து, அங்க போய் அவங்கள பார்க்குறதுக்கு முன்னாடி மருமகளைப் போய் பாரு.." என்றார்.


"அவள் முன்பே தலைவலி என்று சொன்னாள்.. இந்த அண்ணி இன்னும் என்னென்ன சொன்னாங்களோ.. பாவம் பிள்ளை.. அவளைப் போய் பாருப்பா.." என்றதும் தன் அறைக்கு சென்றான்.


அவன் அறையை திறந்து மெத்தையை பார்த்தான், அங்கும் அவள் இல்லை... பால்கனிக்கு வந்து ஊஞ்சலில் பார்த்தான், அங்கும் இல்லையென்று திரும்பியவன், மண்டியிட்டு தரையில் அமர்ந்தான்.


ஆதரவற்ற குழந்தைப்போல, வெறும் தரையில் கை கால்களை குறுக்கிக் கொண்டு, அழுது வீங்கிய முகத்துடன் உறங்கியவளைப் பார்த்து, "சாரிடா மது.." என்று உள்ளம் கலங்கியவனாக, தன் மதுக்குட்டியை அப்படியே படுத்து அணைத்துக்கொண்டான்.


"சாரிடா மது.. சாரி சாரி.." என்று ஜெபம் போல் முணுமுணுத்துக்கொண்டே அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான்.


அவன் அணைக்கவும், திடுக்கிட்டு எழுந்தவள், அவனை கண்டு கொண்டு, "ஏன் அத்தான், நீங்க அப்போவே வரல.. அந்தம்மா எப்படி எல்லாம் திட்டினாங்க தெரியுமா.. எனக்கு அழுகையா வந்துச்சு.. மனசுக்குள்ளேயே உங்களை வாங்க வாங்கன்னு கூப்டுட்டே இருந்தேன்.. நீங்க வரவே இல்லை.." என்று அழுதாள்.


"சாரிடா மது.. இனி உன்னைவிட்டு எங்கேயும் போகமாட்டேன் டா.. இதுக்கு அவங்க பதில் சொல்லியே ஆகனும்.."


"அவங்க ஏதோ தெரியாம பேசிட்டாங்க அத்தான்.. விடுங்க, நீங்க கோபப்படாதீங்க.."


(சும்மா விட்டுருவானா.....)


"சரி, எழுந்திரு, உள்ளே போகலாம்.." என்று அவளை தன் கைகளில் ஏந்திக் கொண்டவன் உள்ளே வந்தான்.


"அத்தான், கண்ணாடிகிட்ட கூட்டிட்டு போங்க.." என்றதும், அங்கு போய் நின்று இறக்கிவிட்டவன்,


"என்னடா.."


"என்கூட சேர்ந்து நில்லுங்க..."


"எதுக்குடா.."


"உங்க அத்தை சொன்னது உண்மைதான் அத்தான்.."


"என்ன சொன்னாங்க.."


"நான் உங்களுக்கு பொருத்தமே இல்லைனு சொன்னாங்க.. அப்புறம் கருப்பா இருக்கேனு சொ.." அவளை தன்பக்கம் திருப்பியவன்,


"மதுக்குட்டி, இங்க என்னை பாருடா.. எனக்கு நாளைக்கே எதாவது ஒன்னாகி கையோ, காலோ இல்ல இந்த முகமோ சிதைந்து போனா, என்னை விட்டுட்டு போய்டுவியா.."


அவன் வாயில் பட்டென்று அடி ஒன்றுபோட்டு,


"ஏன் அத்தான், இப்படியெல்லாம் பேசுறீங்க.. நான் எப்படி உங்களை விட்டுட்டு போவேன்.."


"பின்ன என்னடா மதி, யாரோ ஏதோ சொன்னாங்கன்னு நீ அழலாமா.. நீ கருப்புன்னு யாரு சொன்னா.. இந்த ஒரு வாரத்துலயே முன்னைவிட என் மதுக்குட்டி கலராய்ட்டாங்க... இன்னும் கொஞ்சநாள் போனா, நான்தான் உன் பக்கத்துல நிக்க முடியாது."


"அதெல்லாம் முடியாது.. நான் உங்களை எப்பொழுதும் ஒட்டிக்கிட்டே தான் இருப்பேன்.." என்று அணைத்துக்கொண்டாள்.


அப்படியே அவளை தூக்கியவன், மெத்தையில் படுக்க வைத்து, தானும் படுத்துக்கொண்டான்.


அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டவன், அவள் தலையை வருடிக் கொண்டே,


"மது, யாரு எது சொன்னாலும் காதுல வாங்க கூடாது சரியா.. நான் தானே உனக்கு முக்கியம்.."


"ஹிம்ம்.."


"அப்போ நான் எதாவது சொன்னாதான் நீ வருத்தப்படனும் சரியா.. நீ எப்படி இருந்தாலும், எனக்கு உன்னை மட்டும்தான் மதுக்குட்டி பிடிக்கும்.. அதனால, அடுத்தவங்க எதாவது சொன்னா, அதெல்லாம் கண்டுக்ககூடாது சரியா.."


"உங்க அத்தை தலைவலின்னு சொன்னாங்க.. என்னடா ஆச்சு.." என்று அவள் நெற்றியை வருடிக் கொடுத்தான்.


"ஆமாம் அத்தான்.. இப்போ ரொம்ப வலிக்குது.."


"அழுதா இன்னும் தான் வலிக்கும்.. மதுக்குட்டி, கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தா சரியா போயிடும் டா..."


"தூங்க வைங்க.." என்றதும், அவளை தன்னோடு அணைத்து தட்டிக்கொடுத்தான்.


அவள் கண்கள் மூடியிருந்தாலும், ஏதோ யோசிக்கிறாள் என்று கருமணிகள் அசைந்து காட்டி கொடுத்தது.


உடனே, அவளின் இதழை சிறைப்பிடித்து சப்பி இழுத்து, அவன் நாக்கை உள்ளே அனுப்பி, அவள் நாக்கோடு சண்டையிட்டுக் கொண்டே, அவளின் மாராப்பை உறுவி, ரவிக்கையை அவிழ்த்து, திராட்சையை கைகளால் அழுத்தி கசக்கி, அவள் உதட்டில் இருந்து பிரித்துக்கொண்டு, திராட்சையை கவ்வி கொண்டான்.


அவன் தரும் சுகத்தின் பிடியில், அனைத்தையும் மறந்து, தன்னோடு அவனை அணைத்து கொண்டாள்.


அவளிடமிருந்து வந்த சீரான மூச்சுக்காற்று, அவள் தூங்கி விட்டதை உணர்த்த, அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு, போர்வையை அவளுக்கு போர்த்தி விட்டவன்.. எழுந்து, தன் அலைபேசியில் யாருக்கோ தொடர்பு கொண்டு பேசியவன், முகம் கோபத்தில் ஜொலித்தது.


பின்பு, கதவு தட்டப்பட, யாரென்று பார்த்தான், முத்து தான் சாப்பாடு அடங்கிய ட்ரேயுடன் நின்றிருந்தார்.


அதனை வாங்கிக்கொண்டு, சிறிது நேரம் அவரிடம் பேசியவன், உள்ளே வந்து டேபிளில் ட்ரேவை வைத்துவிட்டு, மதியை அணைத்துக் கொண்டு படுத்தான்.


போனில் யாரிடம் பேசியிருப்பான்...


அந்த ஜந்து வீட்டில் குண்டுவெடிக்குமா?


மறுநாள் காலையில், அனைவரும் வீட்டில் தான் இருந்தனர்.


"அத்தான், நான் கோதுமை பர்பி செஞ்சிருக்கேன்.. எப்படி இருக்குனு சாப்ட்டு பாத்துட்டு சொல்லுங்க.."


அங்கு சோஃபாவில் அமர்ந்து செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்த கிருஷ்ணனிடம், "மாமா, இங்க பாருங்க.. ஒரு ஸ்வீட் செஞ்சிருக்கேன்.. சாப்பிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க.."


அவர் சாப்பிட்டு, "ரொம்ப பிரமாதமா இருக்குமா.. உங்க அத்தைக்கு இந்த மாதிரிலாம் செய்ய தெரியல.. அவளுக்கும் கொஞ்சம் சொல்லி குடுமா, எப்படின்னு.."


சனா, அவரை முறைத்துக்கொண்டே,

"இனி சுலோ குலோன்னு (குலோப் ஜாமூன்) வந்தீங்க.. அப்புறம் இருக்கு.."


"ஐயோ!!! நீ இருக்குறத மறந்துட்டு வாய் விட்டுட்டேனா.." என்று நினைப்பதாக வெளியே சொன்னவர், மதியின் சிரிப்பிலும் சனாவின் முறைப்பிலும், கப்பென்று வாயை மூடிக்கொண்டார்.


மதி சிரித்துக் கொண்டே திரும்பியவள், அங்கு நின்றிருந்தவரைக் கண்டு, கைகள் நடுங்க, தன் கணவனை திரும்பி பார்த்தாள்.


மதி சிரித்ததை பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் முகம் மாறவும், அவள் பார்க்கும் திசையில் பார்த்தவன், உடனே எழுந்து தன் மனைவியிடம் வந்தவன், "ஸ்வீட் நல்லாருக்கு மதி.." என்று அவளை அணைத்து, அப்பொழுதுதான் வாசலைப் பார்ப்பது போல பார்த்து, "அடடடே அத்தை, வாங்க வாங்க.. என்ன இவ்வளவு காலையிலேயே வந்துருக்கீங்க.. அப்போ ஏதோ குட் நியுஸ் இருக்கு.. வாங்க, என் பொண்டாட்டி ஸ்வீட் செஞ்சிருக்கா.. எடுத்து சாப்பிடுங்க.."


வசந்தா ஆங்காரமாக,


"போதும், நிறுத்து மித்ரா.." என்றதும், கிருஷ்ணன் எழுந்து,

"என்ன வசந்தா? எதுக்கு அவன் கிட்ட இப்படி பேசுற.. உன்னை ஸ்வீட் தானே சாப்பிட சொன்னான்."


"ஏன் அண்ணா.. உனக்கு தெரியாதா.. ஒன்னும் தெரியாத மாதிரி நிக்குறானே உன் பிள்ளை, அவன் கிட்டயே கேளு.."


"என்னப்பா மித்ரா, அத்தை என்ன சொல்றா.."


"எனக்கெப்படி தெரியும்.. அவங்க எதை பத்தி பேசுறாங்கனு.."


"எங்க உணவு தொழிற்சாலை மூடினது தெரியாதா உனக்கு.."


"அதெப்படி தெரியாம இருக்கும்.. ஏன்னா புகார் குடுத்ததே நான் தானே.."


"அதான் ஏன் குடுத்த.. நைட்டோட நைட்டா மூடிட்டானுங்க.. இனி எல்லாத்தையும் சோதனை பண்ணிட்டு தான் திறக்க முடியும்னு சொல்றாங்க.."


"பாருடா.. நம்ம அரசாங்கம் நைட்டோட நைட்டா வேலை முடிச்சிருக்காங்க.. பாராட்டக்கூடிய விஷயம் தான்.."


"எதுக்கு மித்ரா இப்படி பண்ண.."


"உப்ப திண்ணவங்க தண்ணி குடுச்சுத்தான் ஆகனும்.."


"இந்த அன்றாடங்காட்சிக்காக.." என்று சொல்ல வந்தவரை,

"நிறுத்துங்க.." என்று கத்தினான்.


"என் பொண்டாட்டிக்கு நான் இருக்கேன்.. இனி எப்பொழுதும் இருப்பேன்.. நேத்து நீங்க பேசிட்டு போனதுக்கு தான் இப்போ இந்த புட் இண்டஸ்ட்ரிய மூட வச்சேன்.. இன்னும் ரெண்டு நாள்ல்ல, அவங்களே ஓபன் பண்ணிடுவாங்க..

நீங்க என் மனைவிக்கிட்ட மன்னிப்பு கேட்டே ஆகனும்.."


"என் வீட்டுக்கே வந்து என் பொண்டாட்டிக் கிட்டயே அசிங்கமா பேசுவீங்க, நான் அதை பாத்துட்டு சும்மா இருக்கனுமா.."


"அதான் ஹெல்த் டிப்பார்ட்மண்ட்க்கு ஒரு கால் பண்ணினேன்.. இதே நீங்க தொடர்ந்து பண்ணினா, உங்க மற்ற பிஸ்னஸ்யும் எப்படி முடக்கனும்னு எனக்கு தெரியும்.. எல்லா இடத்திலேயும் எனக்கு ஆளிருக்கு.. சும்மா இருப்பேன்னு மட்டும் நினைக்காதீங்க.."


"நீங்க எப்போ வேணாலும் இந்த வீட்டுக்கு வரலாம் போகலாம். எல்லாம் உங்க அண்ணன் அண்ணியோட நிறுத்திக்கனும்.. என் பொண்டாட்டி இருக்குற பக்கம் கூட நீங்க திரும்ப கூடாது.." என்று மதியை அழைத்துக் கொண்டு மேலே தங்கள் அறைக்கு சென்றுவிட்டான்.


வசந்தா தன் அண்ணனிடம், "பார்த்தீங்களா.. உங்க பிள்ளை எப்படி பேசிட்டு போறானு.. நல்லா மயக்கி வச்சிருக்கா மாயக்காரி.."


"இப்போதானே மித்ரன் சொல்லிட்டு போனான், திரும்ப மதுவை திட்டுற நீ, நேற்று மதியை பேசியதற்குதான் அவன் இப்படி செஞ்சிருக்கான்.. இதுல நான் சொல்றதுக்கு ஒன்னும் இல்ல.."


அவர் வந்த வழியே கிளம்பிவிட்டார்.


ஆனால் உள்ளுக்குள் மதியைப் பொருமித்தள்ளினார்.


இங்கு அறையில், மித்ரனிடம் மதி,


"ஏன் அத்தான், பாவம் தானே அவங்க.. நீங்க பேச பேச, அவங்க முகத்துல பயத்தை பார்த்தேன்.. பாவம் அத்தான், அவங்க.."


(உன்னை யாரும் பாவம்னு பார்க்கலை, நீ எல்லாருக்கும் பாவம் பார்த்துட்டு இருக்க லூசு)


"நான் என்ன வேணும்னா பண்ணினேன்.. என் பொண்டாட்டிய பத்தி, என் வீட்டுக்கே வந்து பேசுவாங்க.. நான் பார்த்துட்டு சும்மா இருக்கனுமா.. நீ இதெல்லாம் கண்டுக்ககூடாது மதுக்குட்டி.. உன் அத்தான மட்டும்தான் நினைக்கனும் சரியா.."


"ஹிம்ம் சரி அத்தான்.."


இங்கு, சிவகாமி ராமரை நச்சரித்துக் கொண்டிருந்தாள்.


நல்லவள் போல், "சென்னைக்கு போய் பிள்ளைய பார்த்துட்டு வருவோம்.." என்று,


"நீ அங்க வந்து எதாவது ஏழரைய கூட்டுவ.. நான் மட்டும் போய்ட்டு வரேன்.." என்றவர், மித்ரனிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டார்.


சென்னைக்கு தான் வருவதாக.. அவனும் அனுமதி அளிக்க, அன்றிரவே புறப்பட்டனர். ஆம், சிவகாமியும் தான்..


ராமர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். ஆனால் சிவகாமி கேட்கவில்லை, விடாப்பிடியாக தானும் கிளம்பினார்.


'சரி, மாப்பிள்ளை பார்த்துக்கொள்வார்' என்ற தையிரியத்தில், ராமரும் கிளம்பினார்.


(ஒரு குண்டு போய், இன்னொரு குண்டு வந்தது, டும் டும் டும்.....)


Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments