மோகம் - 9:
நீ உதவி செய்ய வேற மேட்டர் இருக்கு அதை செய் தமிழ் அதை செய்தால் உன் அத்தான் அப்படியே காத்துல பறப்பேன்னா பாத்துக்கோயேன் என்று கண்ணடிக்கவும் ஆஹா ஏதோ வில்லங்கம் இருக்கு இந்த அத்தான் செய்கையே சரியில்லை என்று தன்னுள் நினைத்தவள் அவன் சுடுத்தண்ணீரைத் தூக்கவும் அதனைப் பார்த்து அத்தான் என்று அலறினாள்.
அவள் அலறியதும் என்னவோ ஏதோ என்று அண்டாவை பட்டென்று கீழே வைத்தவன் அவளிடம் வந்து என்ன தமிழ் இப்போ அதுக்கு கத்துன என்னாச்சு என்று சுற்றும் முற்றும் பார்த்தவாறு கேட்டவனிடம் அத்தான் எலிக்குட்டி என்கவும் இங்க எலி இருக்காதுடா என்று எலிக்கு பயந்து கத்துகிறாள் என்று நினைத்துக் கொண்டு கூறினான்.
அட மடசாம்பிராணி அத்தான் உங்க எலிக்குட்டிய சொனேன் என்று அவனது கையைப் பிடிக்கவும் என் எலிக்குட்டியா என்று ஙே என்று விழித்தான்.அத்தான் இங்க பாருங்க உங்க கையில இவ்வளவு மஸ்ஸில் வச்சுருக்கீங்க என்று தன் பூங்கரங்கள் கொண்டு அவன் கையை அழுத்திப் பார்க்க கல்லு போல் இருந்தது.
அத்தான் கல்லு மாதிரி இருக்கு செமையா இருக்கு என்று உற்சாகமானவள் தன் இருக்கைகள் கொண்டு இன்னும் அழுத்த அவளைப் பார்த்து சிரித்தான்.
சரி அதை அப்புறம் அழுத்திக்கலாம் நேரம் ஆகுது நான் குளிச்சிட்டு வரேன் என்கவும் சரி அத்தான் நீங்க குளிங்க நான் போறேன் என்று விலகப் போனவளை விடாமல் பிடித்தவன் ஹேய் எங்க போற உனக்கு வேற வேலை இருக்குன்னு சொன்னேன்ல மறந்துட்டியா வா வந்து என்னை குளிப்பாட்டி விடு என்கவும் ஐயோ நான் எப்படி என்று அதிர்ச்சியில் கூவினாள்.
அதெல்லாம் முடியாது நீ தானே உதவுறேன்னு சொன்ன அப்போ வா வந்து குளிப்பாட்டி விடு என்றான் பிடிவாதமாக. ஐயோ ஏதோ வில்லங்கமா சொல்லப் போறார்ன்னு நினைச்சேன் அதுப்போலவே சொல்றாரு இப்போ என்ன பண்றதுன்னு கையைப் பிசைந்துக் கொண்டிருந்தாள்.
கதிரோ அவளை இன்று ஒரு வழி ஆக்க வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தான் போல. என்ன செய்வது என்று தெரியாமல் கூச்சத்தில் நெளிந்தவாறு தன் கைகளைப் பிசைந்துக் கொண்டிருந்தவளைப் பிடித்து தன் பக்கம் இழுத்தவன் அவள் முன்பே அவன் அணிந்திருந்த பனியன் லுங்கியை கழற்றி இடுப்பில் துண்டை கட்டிக் கொண்டவன் வா தமிழ் வந்து குளிப்பாட்டி விடு சீக்கிரம் ஜில்லுன்னு காத்து வேற அடிக்குது எனக்கு குளிருது வா வா என்று அவசரப் படுத்தினான்.
அவன் அருகில் வந்தவள் அத்தான் என்று திக்க என்ன தமிழ் உன் புருஷன் தானே இதுக் கூட செய்ய மாட்டியா என்று கேட்க எனக்கு கூச்சமா இருக்கு அத்தான் என்று உதடுகள் நடுங்கக் கூற அவள் வெண்டைப் பிஞ்சு விரல்களைப் பற்றியவன் தன் முடியடர்ந்த நெஞ்சில் வைக்க சிலிர்த்தவள் அத்தான் என்று எதோ சொல்ல வர வெறும் காற்று தான் வந்தது.
என்ன தமிழ் இதுதான் உன் டக்கா சரி இரு நானே குளிச்சுக்கிறேன் ஆனால் முதுகுக்கு நீ தான் சோப்பு போடனும் ஓகே வா என்று கேட்க இந்தளவுக்காவது கீழிறங்கி வந்தானே என்று நினைத்தவள் அவனிடம் ஹிம்ம் ஹிம்ம் என்று எல்லாப் பக்கமும் தலையை ஆட்டி வைத்தாள்.
அவன் தண்ணியை எடுத்து மேல் ஊற்ற அவன் மேல் வைத்தக் கண்களை எடுக்காமல் அவனை பார்த்துக் கொண்டிருக்க அவள் பார்வையை உணர்ந்தவன் தண்ணீரைக் கைகளில் அள்ளி அவள் மேல் தெளித்தான்.
அதில் ஸ்மரனை வரப்பெற்றவள் பேந்த பேந்த விழிக்க வா தமிழ் வந்து சோப்பு போட்டு விடு என்கவும் மெதுவாக அவனை நோக்கிச் சென்றாள். தன் அருகே வந்தவளின் கைகளில் நமட்டுச் சிரிப்புடன் சோப்பைத் திணித்தான்.
கைகள் நடுங்க அவன் முதுகில் சோப்புப் போட அவள் கைகள் நடுங்குவதை அவன் மேனி உணர்ந்தது..தன் பின்னாலிருந்து சோப்புப் போட்டவளிடம் என் தமிழ் நேற்று என்னமோ எல்லாத்தையும் தாங்குவேன் தூக்குவேன்னு அவ்வளவு வீரவசனமெல்லாம் சொன்ன இப்போ சோப்பு போடுறதுக்கே இப்படி கையெல்லாம் நடுங்குது என்று வாரினான்.
அதில் காண்டானவள் பர்ஸ்ட் டைம் இல்லையா அதான் அப்படி நடுங்குது என்று பழைய துடுக்குத்தனத்துடன் சோப்பைப் பரப்பரவென தேய்க்க பட்டென்று தன் கைகளைப் பின்னால் நீட்டி முதுகில் சோப்புப் போட்டுக் கொண்டிருந்தக் கைகளை அவள் சுதாரிப்பதற்குள் பிடித்திழுத்திருந்தான்.
அவன் இழுப்பான் என்று கனவா கண்டாள்.. அவன் இழுத்ததும் நிலைத் தடுமாறி அவன் முதுகோடு தன் முன்புறம் நச்சென்று மோத அவன் மேலேயே விழுந்தாள். தன் முதுகில் மோதிய மென்பந்துகளை உணர்ந்தவன் தன்னுள் எழுந்த உணர்வலைகளை அடக்க வழித் தெரியாமல் திக்குமுக்காடிப் போனான்.
அதிலிருந்து வெளிவர விரும்பாதவன் போல் அவளைத் தன்னுடன் மேலும் இறுக்க ஏற்கனவே அவஸ்தையில் இருந்தவள் அவன் தன்னுடன் இறுக்கவும் யாராவது வரும் அபாயம் இருந்ததால் விடுங்க அத்தான் என்று சட்டென்று அவனிடம் இருந்து பிரிந்தவள் குளிச்சிட்டு வாங்க என்று சிட்டாக வீட்டுக்குள் ஓடிவிட்டாள்.
கைகளால் தலையைக் கோதியவாறு தன்னை சமன்படுத்தியவன் உள்ளுக்குள் புகுந்து ஏதோ பண்றா என்று தனக்குள் புலம்பியவாறு குளித்தான். இங்கு அவனிடமிருந்து ஓடி வந்தவளை சசியும் பார்த்தியும் சூழ்ந்துக்கொண்டு ஒரு வழி ஆக்கினர்.
என்ன முத்து மேலெல்லாம் சோப்பு நொரையா இருக்கு என்று நமட்டுச் சிரிப்புடன் கேட்கவும் ஐயையோ யானைக்கு பயந்து பூனைக்கிட்ட மாட்டிக்கிட்டோமே என்ன பண்றது என்று திருத்திருத்தவளை அப்பத்தா தான் தக்க சமையத்தில் வந்து காப்பாற்றினார்.
என்ன பிள்ளைகளா தூங்காம என்ன பண்றீங்க போங்க போய் நேரத்துலேயே படுங்க என்று விரட்ட தமிழ் அவர்களிடம் இருந்து தப்பித்து தங்கள் அறைக்குள் போய் பதுங்கிக் கொண்டாள்.
தங்கள் அறைக்கு வந்தவள் தன் மேல் நுரை அப்பியிருக்க ஐயோ இப்படியே இருக்க போய் தான் அவங்க ஒரு மாதிரி கேட்டாங்களா எல்லாம் இந்த அத்தான் தான் வரட்டும் இருக்கு அவருக்கு..என்று தன் உடைகளை மா
ற்றி கொண்டாள்..
மோகம் மையம் கொள்ளும்…
0 Comments