மோகம் 8:
கதிர் பார்த்திபனுடன் சென்று நாளை குல தெய்வக் கோவிலுக்கு செல்ல பூஜைக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்கிக்கொண்டு ஒரு பெரிய ஜவுளி கடைக்குள் நுழைந்தனர்.சாமிக்கு துணிகள் எடுத்துக் கொண்டு தமிழுக்கு புடவை எடுக்க புடவை செக்க்ஷனுக்கு சென்று ஒவ்வொரு புடவையாய் பார்த்துக் கொண்டிருக்க கதிர் பார்த்தியிடம் பார்த்தி நீ போய் அப்பாவுக்கு உனக்கு எனக்கு எல்லாருக்கும் வேஷ்டி சட்டை எடுத்துட்டு வா உனக்கு வேஷ்டி வேண்டாம்னா பேண்ட் எடுத்துக்கோ நான் புடவை எடுத்துட்டு வரேன் என்று அவனை அனுப்பி வைத்தான்.
பார்த்தி சென்றதும் உடனே தன் கைப்பேசியை எடுத்து தமிழுக்கு அழைத்தான். இரண்டு ரிங்கிலே எடுத்தவள் சொல்லுங்க அத்தான் என்கவும் தமிழ் உனக்கு என்ன கலர் டா பிடிக்கும் என்று கேட்க பேபி பிங்க் கலர் பிடிக்கும் அத்தான் என்று கூறினாள்.
ஓ சரிடா என்று இவன் வைக்கப் போக ஏன் அத்தான் எதுக்கு என்று கேட்டாள் புடவை எந்த கலரில் எடுக்குறதுன்னு தெரியலைடா அதான் கேட்டேன் என்கவும் ஹிம்ம் அப்படினா எனக்கு எல்லாக் கலரிலும் வேணும் அத்தான் என்று விளையாட்டுக்கு கூற அப்போ நான் ஆண்டியாதான் போகனும் என்று சிரித்துக் கொண்டே கூறி சரிடா நான் எடுத்துட்டு வரேன் என்று வைத்தான்.
போனை அனைத்து பாக்கெட்டில் போட்டவன்
ஒவ்வொரு புடவையாக எடுத்துப் பார்த்தவன் எது தமிழுக்கு பொருத்தமாக இருக்குமோ அனைத்தையும் எடுத்தான்.. பின் தமிழுக்கு எடுத்து விட்டு தன் அம்மா தங்கை அப்பத்தா என அனைவருக்கும் எடுத்தவன் வர பார்த்தியும் சட்டைகளை எடுத்துக் கொண்டு வந்தான்.
கதிரைக் கண்டு என்ன அண்ணா செம பர்சேசிங் போல வாங்கி குமிச்சிருக்க என்று கிண்டலடிக்கவும் இல்லடா பார்த்தி அவக்கிட்ட புடவை இருக்கா என்னன்னு தெரியலை அதான் ஒரு பத்து புடவை வாங்கினேன் என்று கூறவும் அண்ணா அப்பத்தா ஒரு புடவை தான் எடுக்க சொன்னுச்சு நீ பத்து புடவை எடுத்துருக்க தெய்வமே நீங்க எங்கேயோ போய்டீங்க…
சரி சரி ஓட்டாதடா.. தமிழுக்கு நம்மை விட்டா யாரு இருக்கா நாம தான் எடுத்துக் கொடுக்கனும் என்றவாறு பில் போடும் கவுண்டரில் பில் போட்டு விட்டு அனைத்தையும் வாங்கிக் கொண்டு வெளியே வந்தனர். வரும் வழியில் பூக்கடையில் மல்லிகைப்பூ வாங்கவும் கதிரைப் பார்த்தி ஓட்டி எடுத்துவிட்டான்.
கதிர் வண்டியை நிறுத்திப் பூ வாங்கவும் பார்த்தி நமட்டுச் சிரிப்பு சிரிப்பதைப் பார்த்து டேய் எதுக்கு இப்போ சிரிக்கிற நான் என் பொண்டாட்டிக்கு வாங்குறேன் அதுக்கெதுக்குடா சிரிக்கிற போடா என்று அவனை அதட்டினான். அண்ணா பூ மட்டும் தானா இல்லை இந்த அல்வா எதும் இருக்கா என்று பார்த்தி சிரித்துக் கொண்டே கேட்டான்.பார்த்தி சிரிக்க சிரிக்க கதிருக்கு கூச்சமாக இருந்தது.
(அல்வால்லாம் பழைய மேட்டரு லட்டு ஜாங்கிரி தான் புது மேட்டரு..)
பின் வீடு வந்து சேர மாலை ஆறு மணியாகவும் அனைவருக்கும் வாங்கியதைக் கொடுக்க எதுக்குப்பா எங்களுக்கெல்லாம் என்று கேட்டவர்களிடம் புதுத்துணி எப்போவாச்சும் தானே எடுக்குறோம் இதுல என்ன இருக்கு நாளைக்கு கோவிலுக்கு வேற போகனும்ல அதான் எடுத்தேன் என்று கூறினான்.
வரவேற்புக்கு எல்லாருமா போய் சேர்ந்து எடுத்துக்கலாம் என்கவும் சரிப்பா என்றனர்.பின்பு தமிழுக்கு வாங்கிய புடவைகளை அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனர் பின் இரவு உணவை முடித்துக் கொண்டு வர தமிழ் புடவைகளைப் பார்த்துக் கொண்டிருக்க கதிர் குளிப்பதற்காக தோட்டத்து பக்கம் சென்றான்.
கதிர் மட்டும் கொல்லை புறம் குளிக்க செல்வதைப் பார்த்தப் பாட்டி கதிர் அறைக்கு வர அங்கு முத்தமிழ் புடவைகளைப் பார்த்துக் கொண்டிருக்க ஏட்டி கூருக்கெட்ட சிறுக்கி என் பேரை முதுகுல சவாரி செய்வேன்னு சொன்னா மட்டும் பத்தாது செயலில் காட்டணும்.. உனக்கெல்லாம் வாய் மட்டும்தான் டி எட்டூருக்கு கிழியும் செயலில் ஒன்னும் இல்லையே என்று வேண்டுமென்றே அவளை வம்பிழுக்கிழுத்தார்.
என்ன கிழவி நீ சொன்னாலும் சொல்லலைனாலும் உன் பேரன் மேல சவாரி செய்றது உறுதி நீ வேணும்னா பார்த்துக்கிட்டே இரு நான் சொன்னது செய்து காட்டுவேன் என்று சவால் விட்டாள்.
நீ சவால் விடுறதுலாம் இருக்கட்டும் என் பேரன் குளிக்கப் போயிருக்கான் போ போய் என்னன்னு கவனி மசமசன்ன உட்காந்துருக்கா என்று தோளில் தாவாங்கட்டையை இடித்தவாறு கூற ஹூக்கும் ஆமா இவங்க பேரன் ரெண்டு வயசு குழந்தை குளிக்க வைக்கனுமாமில்லை என்று ஏற்ற இறக்கத்துடன் இழுத்துக் கூற ஏய் இப்போ விட்டாக் கூட என் பேரன் பத்து மாசத்துல ரெட்டைப் புள்ளையைப் பெத்துக் கொடுப்பான் டி என்று பெருமையாகக் கூறினார்.
வெட்கமாக இருந்தாலும் இதற்கு பதில் சொல்லாமல் இருந்தால் அவள் தமிழ் இல்லையே.. ஆமா ஆமா உன் பேரன் நான் இல்லாம எப்படி பத்து மாசத்துல பெத்துப்பாரு என்று கூறிவிட்டு சிட்டாக கொல்லை புறம் நோக்கிப் பறந்து விட்டாள். அப்பத்தாவோ அடியாத்தி நீ பொழைச்சுப்படி விவரம்தான் என்று நினைத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்றார்.
பின் கட்டிற்கு வந்த தமிழ் கதிரைத் தேட அவன் பெரிய அண்டாவில் தண்ணீர் ஊற்றி விறகு அடுப்பை எரிய விட்டுக் கொண்டிருந்தான்.அவன் அருகில் சென்று நகருங்க அத்தான் நான் எரிய விடுறேன் என்று கூற நான் விறகு வச்சுட்டேன் தமிழ் அதுப்பாட்டுக்கு எரியும் நீ உள்ளப் போ எதுக்கு பணியில் இப்போ வெளியில் வந்த உள்ளப் போ நான் குளிச்சிட்டு வரேன் என்று கூறி அவளை உள்ளே அனுப்பப் பார்த்தான்.
அதெல்லாம் ஒன்னும் இல்லை அத்தான் நான் இருக்கேன் என்று அங்கிருந்த துணி துவைக்கும் கட்டையில் அமர்ந்தாள். அப்பொழுது சில்லென்று காற்று அடிக்கவும் கைகளைத் தேய்த்தவாறு கட்டிக்கொண்டவள் கதிர் தோளில் கிடந்த தேங்காய்ப்பூ துண்டை இழுத்து தன்னை போர்த்திக் கொண்டாள்.
இதுக்குதான் சொன்னேன் உள்ளேப் போன்னு சொல்ற பேச்சையே கேட்கிறது இல்லை என்றவாறு கடிந்துக் கொண்டவனை தாய் எவ்வளவுதான் திட்டினாலும் குழந்தை சிரிக்குமே அதுப்போல தமிழும் ஹிஹி என தன் பற்களைக் காட்டி சிறுபிள்ளைப் போல் சிரிக்க தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் பின்னாலிருந்து தன்னுடன் அப்படியே அணைத்துக் கொண்டான்.
அவன் தன்னை அணைத்ததும் அதிர்ந்தது என்னவோ தமிழ் தான் ஐயோ அத்தான் யாராவது வந்துரப் போறாங்க நகருங்க என்று அவனை தள்ள தமிழ் உனக்கு குளிரும் அதான் கட்டிப் பிடிச்சிருக்கேன் இப்போ குளிரலை தானே என்று கேட்க குளிரலை அத்தான் நீங்க நகருங்க வெளியே என்ன காரியம் பண்றீங்க என்று கேட்க நீ தான தமிழ் சொன்ன பொது இடமெல்லாம் பார்க்கக் கூடாதுன்னு என்று அவள் கூறியதையே அவளிடம் கூறினான்.
அவனிடம் இருந்து விடுப்பட முடியாமல் அவனை திசைத்திருப்ப அத்தான் தண்ணி கட்டுடுச்சு போங்க போய் குளிங்க வாங்க நான் தண்ணி எடுத்து வைக்கிறேன் என்று விலக இதற்கு மேல் சோதிக்க வேண்டாம் என்று நினைத்தவன் அவளை விட்டான்.
அவள் தண்ணியைத் தூக்கப் போகவும் இரு தமிழ் நான் தூக்கிக்றேன் இந்தப் பக்கம் வா நெருப்பு பக்கத்துல போகாத என்று அவளை விலக்க இருங்க அத்தான் நான் உதவி பண்றேன் என்று கூற நீ உதவி செய்ய வேற இருக்கு என்று
கண்ணடித்தான்.
மோகம் மையம் கொள்ளும்...
0 Comments