Advertisement

Ad code

மோகமுள் தீண்டாதோ தீரனே - 15



 மோகமுள் -15:


எல்லாரையும் போய் எழுப்பி விட்டுட்டு வரேன் நீ கொஞ்சம் ஓய்வெடு என்று நிலவிடம் கூறிவிட்டு பகலவன் தன் பணியை திறம்பட செய்ய விடியற்காலையில் வந்து விட்டான். 


இங்கு ஆதியின் அறையோ நேற்று இரவுக்கு மாறாக சத்தமில்லாமல் அமைதியாக இருந்தது.. வாங்க வாங்க நாமும் பார்க்கலாம்.


மித்ராவும் ஆதியும் நல்ல உறக்கத்தில் இருந்தனர். குயிலின் சத்தம் கேட்டு விழிப்பு வரவே ஆதி தூக்கம் கலைந்து கண்களை திறந்தான்.


அப்பொழுது தான் அவனுக்கு நேற்று நடந்தது அனைத்தும் நினைவுக்கு வரவே எங்க இவள என்று மித்ராவை பார்க்க அம்மணியோ பாதி உடலை அவன் மேல் போட்டுக் கொண்டு நல்ல உறக்கத்தில் இருந்தாள்.


மித்ரா எழுந்திரு விடிஞ்சுருச்சு நகரு நான் ஆபிஸ் கிளம்பணும் என்று அவள் கண்ணம் தட்ட அவன் கையைப் பிடித்து தன் கழுத்தடியில் வைத்துக் கொண்டு சோட்டு நைட்டெல்லாம் நம்ம சார் என்னை தூங்கவே விடல.. நீயாவது என்னை தூங்க விடு என்றவள் தன் டெடியின் நியாபகத்தில் ஆதியை இறுக்கி கட்டிக்கொண்டு தன் தூக்கத்தை தொடர்ந்தாள்.


ஏதே நான் தூங்க விடலையா.. யாருடா இவ எங்க இருந்துடா பிடிச்சீங்க.. தலையில் அடித்து கொண்டவன் காலையிலே என்னை வச்சு செய்கிறாளே இவளோட முடியல என்னால .. கால் வேற படக்கூடாத இடத்துல படுது ஐயோ என்று புலம்ப மட்டுமே அவனால் முடிந்தது.


அனுபவி ராஜா ஏன் இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி புலம்பி தள்ளுற என்று அவன் மனசாட்சி ஆஜர் ஆகி விட்டது.


நான் எழுந்து வந்ததும் உனக்கு தான் முதல்ல சங்கு ஊதுவேன் ஓடிரு..


அப்பொழுது தான் அவள் சாவகாசமாக அவன் முகத்தோடு தன் முகத்தை வைத்து தேய்த்து ஏய் என்ன டெடி பஞ்சு போல சாப்ட்டா இருப்ப இப்போ என்ன முள்ளு போல குத்துது என்று கண்களை திறக்க ஆதி அவளை முறைத்து கொண்டிருந்தான்.


குட் மார்னிங் சார் என்று தூக்க கலக்கத்தில் உளறி கொண்டே என்ன சார் என் ரூமுக்கு எப்போ வந்தீங்க.. முன்னமே சொல்லிருந்தா அம்மாட்ட சொல்லி வேற ரூம் ரெடி பண்ணிருபேன்ல என்று கொட்டாவி விட்டு கொண்டே அவன் மேலிருந்து எழ 


அடிங்க நீ எங்க இருக்கன்னு கொஞ்சம் பாத்துட்டு பேசு என்கவும் தான் சுற்றி முற்றி பார்க்க நேற்று நடந்தது அத்தனையும் நியாபகத்திற்கு வந்தது.


அய்யயோ எப்படி மறந்தேன்.. சாருக்கு பிள்ளை வேற பெத்து கொடுக்கணும் அதை விட்டுட்டு நீ என்னடான்னா எங்க இருக்கன்னு கூட நியாபகம் இல்லாம இப்படி தூங்கி இருக்கியே.. உன்னை பற்றி சார் என்ன நினைப்பாரு ச்செய் என்று மானசீகமாக அவள் பாட்டிற்கு திட்டிக்கொள்ள எதிரே இருந்தவனோ 


உனக்கென்ன மித்ரா தூங்கினா எல்லாம் மறந்து போயிடுமா ? எனக்கும் அந்த மாதிரி இருந்திருக்கலாம் என்று குரல் கம்ம கூறவும் அதுவரை அமைதியாக இருந்தவள் அவன் மனநிலையை மாற்றும் பொருட்டு அய்யய்ய என்ன சார் நீங்க இப்படி பண்ணிக்கிட்டு இருக்கீங்க நல்ல வேலை ஞாபகப்படுத்துனீங்க


ஒரு குழந்தை வந்துட்டா எல்லாமே சரியாகும் சார் நீங்க பாத்துட்டே இருங்க இன்னும் எண்ணி பத்து மாசத்துல குழந்தை வந்துரும் பாத்துக்கலாம் விடுங்க அதுக்கு நான் கேரண்டி என்று தன் சுடிதாரில் இல்லாத காலரை தூக்கி விட்டு கொண்டாள்.


உன்கிட்ட போய் சொன்னேன் பாரு என்னை சொல்லணும் ஒழுங்காக உங்க வீட்டுக்கு கிளம்பிற வழியை பாரு எனக்கு இந்த கல்யாணம் எதுவும் வேண்டாம் கடைசி வரைக்கும் எனக்கு நான் மட்டும் போதும் நான் அம்மா அப்பா தம்பி இலங்க மட்டும் போதும்…


போய் உன் வாழ்க்கையை வாழுற வழியை பாரு என்று பொறுமையாக எடுத்துக் கூறினான்.


எதிரில் இருந்த அம்மணி அவன் பேச்சைக் கேட்டால் தானே அவன் பேசி முடிக்கும் வரை சரி சரி என்று நன்றாக தலையை ஆட்டியவள் சார் நேத்து நைட்டு நீங்க தானே சொன்னீங்க ஒரு மாதம் டைம் தரேன்னு அப்பறம் என்ன காலையிலே திரும்ப அந்த நாய் கடிச்சக் கதையை சொல்லி என் கழுத்தை அறுக்குறீங்க..


நான் சொன்னது சொன்னதுதான் உங்களுக்கு பிள்ளை பெத்துக் கொடுத்துட்டு போயிருவேன் சரியா என்றவள் அவன் முறைப்பதைக் கண்டு சார் காலையில எழுந்ததும் குளிக்கணும் வேலையைப் பார்க்க போகணும் அதை விட்டுட்டு கிளாஸ் எடுத்துட்டு இருக்கீங்க டூ பேட் என்று அவன் தலையை செல்லமாக களைத்து விட்டவள் சிட்டாக அங்கிருந்த குளியறைக்குள் சென்று தாழ்ப் போட்டுக் கொண்டாள்.


ஏய் மித்ரா என்று இவன் கத்த சார் ஒரு அக்ரிமெண்ட் எடுங்க முதல்ல சைன் பண்ணுங்க ஒரு மாதத்திற்கு நான் வாயைத் திறக்க மாட்டேன்னு என்று உள்ளுக்குள் இருந்து கொண்டே இவனிடம் வாயாட இவள அடியேய் நீ வெளிய வந்துதான ஆகணும் வா உனக்கு அப்போ இருக்கு என்று இங்கிருந்து கத்த அவன் குரலில் அரண்டவள் வெளியே மெதுவாக தலையை மட்டும் நீட்டிப் பார்க்க கதவுக்கு பக்கவாட்டில் இருந்து அவள் காதினை பற்றியவன் உனக்கு குசும்பு ஜாஸ்தி ஆகிடுச்சு என்று அவளை இழுக்க அவனை தள்ளி விட்டவள் ஐயோ சார் விடுங்க விடுங்க என்கவும் 


முடியாது 


சார் வலிக்குது விடுங்க என்று அலற உண்மை என்று நம்பியவன் அவளை விட்டுவிட அவனிடமிருந்து நகர்ந்தவள் அவனுக்கு வக்களம் காட்டியவாறே ஓட ஒரே எட்டில் பிடித்தவன் 


என்கிட்டையே உன் வேலையைக் காமிக்கிற பாத்தியா என்று அவளை பின்னாலிருந்து அணைத்தவாரு பிடித்துக் கொள்ள சார் விடுங்க நான் போய் குளிக்கணும் என்று அவனிடமிருந்து திமிர இருவரும் தடுக்கி ஒருவர் மேல் ஒருவர் கீழே விழுந்தனர்.


அவளை எழ விடாமல் தன்னுடன் சேர்த்து அணைத்தவாரே அவளிடம் மித்ரா சொன்னா புரிஞ்சிக்கோ என்னை விட்டு போயிடு அதான் உனக்கு நல்லது என்கவும்


சார் இந்த தேஞ்சு போன பழைய டேப் ரிக்காடர் பாத்துருக்கீங்களா 


ஏன் பாத்துருக்கேன் என்னாச்சு


அதுவும் இப்படித்தான் சார் திரும்ப திரும்ப பாடிட்டு இருக்கும் என்று தன் முத்துப்பல் தெரிய சிரிக்கவும் அதில் கவர்ந்திழுக்கப்பட்டவன் அவள் செவ்வரியோடிய இதழைக் கவ்விக் கொண்டான்.


ஹக் என்று ஒலி மட்டுமே அவளிடம் அவனை தள்ளவும் இதழை விட்டவன் நான் உனக்கு வேண்டாம் மித்ரா என்னை விட்டுப் போயிடு என்று திரும்ப ஆரம்பிக்க கொஞ்சம் வாயை மூடுங்க சார் என்று அவள் அவன் இதழைக் கவ்விக் கொண்டாள்.


ஆரம்பம் மட்டுமே அவளது.. ஆட்சி செய்தது என்னவோ அவன் தான்..


அவளை தன்னுடன் இறுக்கிக் கொண்டவன் தேனூரும் இதழில் தன் பசியை ஆற்றிக் கொள்பவன் போல் மென்றுத் தின்று கொண்டிருந்தான்.


டேய் நீ தான் வேண்டாம் என்று சொன்னவனா என்று அவனது மனசாட்சி இடித்துரைக்கவே நிதர்சனம் உரைக்க அவளிடமிருந்து பிரிந்தவன்


நீ எதுக்கு மித்ரா என்னை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்ட அந்த பொண்ணு என்னை வேண்டான்னு சொல்லிட்டு போயிட்டாங்க அத்தனை நபர்கள் முன்னாடி நீ எதுக்கு ஒத்துக்கிட்ட உனக்கு என்கிட்ட இருந்து என்ன வேணும் சொல்லு.. பணமா? ஆனா பணத்துக்காக நீ இப்படி பண்ணி இருப்பன்னு என்னால இன்னமும் நம்ப முடியல சொல்லு உனக்கு என்ன வேணும் எதனால என்னை மேரேஜ் பண்ணிக்க ஒத்துக்கிட்ட 


பணம் தான் வேணும்னா சொல்லு மித்ரா என்கிட்ட நீ தயங்காதே. பணம் வேணும்னா சொல்லு நான் எவ்ளோ பணம் வேணாலும் உனக்கு நான் தரேன்.. இன்னும் ஒரு ஆறு மாசம் வெயிட் பண்ணினா நான் டைவர்ஸ் கொடுத்துடுவேன் அதுக்கப்புறம் எல்லாமே சுமூகமா முடிச்சுக்கலாம்…


நானே நல்ல பையனா பார்த்து உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன் சரியா..


என்னை பற்றி எல்லாம் தெரிஞ்ச நீயே வந்துட்டு உன் வாழ்க்கையை வீணாக்கிக்காத புரிஞ்சுக்கோ திரும்ப திரும்ப சும்மா குழந்தை பெத்துக்கிட்டா எல்லாம் சரியாயிடும் அப்படி இப்படிங்காத கல்யாணம் என்பது குழந்தை பெத்துக்கிறது மட்டும் கிடையாது


கல்யாணம்குறது என்னை பொருத்தவரைக்கும் இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்து அன்பு ஒரு லவ் இருக்கணும் ஆனால் நமக்குள்ள இது எதுவுமே இல்லை சொன்னா புரிஞ்சிக்கோ என்கவும் அவனை விட்டு எழுந்தவள் 


சூப்பர் சார் புருஷனே தன் மனைவிக்கு இன்னொரு நல்ல பையனா பார்த்துக் கட்டி வைக்கிறேன்னு சொல்றதெல்லாம் இப்போதான் புதுசா பார்க்கிறேன் யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம் நான் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டஷாலி என்று ஆச்சரியப் பட்டது போல் பாவனை செய்தவள் கல்யாணம் என்பது வாழ்க்கையில் ஒரு முறை தான் நடக்கும் அது எனக்கு இனிதே நடந்து முடிஞ்சி போச்சு.


சோ இது போல இனிமேல் என்கிட்ட பேசாதீங்க சரியா இதுக்காகவா நான் என் அம்மா அப்பாவை எதிர்த்துக்கிட்டு உங்களை கல்யாணம் கட்டிக்கிட்டேன்.


நேத்து நைட்டு ஃபுல்லா கண் முழிச்சி ஒரு பிளான் கண்டுபிடிச்சு இருக்கேன்.. நீங்க என்ன காலையில ஒப்பாரி வைக்கிறீங்க சீக்கிரம் எழுந்து கிளம்பி ஆபீஸ் போற வேலையை பாருங்க சார் சும்மா அதையே சொல்லிக்கிட்டு என்று தன் மாற்றுடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.


ஷிட் என்று தரையில் கைகளால் குத்தியவன் எழுந்து ஜாகிங் செல்ல வெளியே வந்தான்.


இங்கு ஹாலில் சுமதி தன் மகனின் அறையையே பார்த்துக் கொண்டிருந்தவர் கதவு திறக்கப் படவும் அருகில் அமர்ந்திருந்த தன் கணவரிடம் ஏதோ பேசுவது போல் திரும்பிக் கொண்டார்.


தன் தாயையும் தகப்பனையும் முறைத்துக் கொண்டே படிகளில் இறங்கி வந்தவன் ஆசீ ஜாகிங் போறேன் வரியா டா இல்லனா நான் கிளம்பவா என்று குரல் கொடுக்க இதோ வந்துட்டேன் அண்ணா என்று ஆசீ வெளியே வர நிரஞ்சனும் அவர்களுடன் இணைந்து கொண்டான்.


மூவரும் வெளியே வர ஆசீ திரும்பி மேலே பார்க்க அங்கு பால்கனியில் நிரஞ்சனா நின்று கொண்டு வைத்த கண் வாங்காமல் இவனைத்தான் பார்த்து கொண்டிருந்தாள்.


வீட்டுக்கு அருகிலேயே ஒரு பார்க் இருந்தது. அதில்தான் ஜாகிங் வழக்கமாக சென்று வருவார்கள்.


மூவரும் சிறிது நேரம் ஜாகிங் சென்றவர்கள் சிறிது நேரம் இளைப்பாற அங்கிருந்த 

கற்பாறையில் அமர ஆசீ பேச்சை தொடங்கினான்.


அண்ணா எல்லாம் ஓகே தானே என்று தயங்கி தயங்கி கேட்க எதுவுமே சரி இல்லைடா எனக்கு எதுவும் பிடிக்கலை.. என்று புலம்பினான்.


அண்ணா


அம்மா இப்படி பண்ணுவாங்கன்னு நான் நினைக்கவேயில்லை. தேவையில்லாம் இப்போ கல்யாணம் பண்ணி மித்ராவோட வாழ்க்கையும் கேள்விக்குறியா இருக்கு.


அப்படி இல்லை அண்ணா டாக்டர் தான் சொன்னாரே எல்லாம் குணமாகிடும்னு.. குழந்தை தான் பிரச்சனை என்றால் இப்போ அதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை விடுங்க ரொம்ப யோசிச்சு குழப்பிக்காதீங்க..


அண்ணி பாவம் அவங்க அம்மா அப்பாவும் இனி சேத்துக்க மாட்டாங்க போல நீங்களும் அவங்களை ஏதாவது சொன்னால் அவங்க என்ன அண்ணா பண்ணுவாங்க கொஞ்ச நாள் போகட்டும் அண்ணா பார்த்துக்கலாம் என்று தமயனுக்கு ஆறுதல் கூறினான்.


நிரஞ்சனோ ஆதி கையைப் பிடித்து தன் கையில் பொத்தி வைத்துக் கொண்டவன் ஆதி மித்ரா நல்ல பெண் போல தான் தெரிகிறாள்.. அந்த பொண்ணு பேரென்ன ஹான் நந்தினி அவள் அந்த சபையில அத்தனை பேரு முன்னாடியும் அப்படி பேசியது தப்பு தான்.


ஆனால் அதே சபையில தான் மித்ரா உன்னை கல்யாணம் செஞ்சிக்கிட்டதும் கூட எனக்கு என்னமோ மித்ரா உன்னை லவ் பண்றாளோன்னு தோணுது நீ வேணும்னா பாரு அவள் உனக்காக தான் அவங்க அப்பா அம்மாவை எதிர்த்து கல்யாணம் பண்றது சும்மா கிடையாது..


எல்லாத்தையும் நல்லா யோசிச்சு பாரு எனக்கு தெரிஞ்சி நீ தேர்வு பண்ணினது தோற்று போனாலும் உன்னை தேடி வந்தது என்னைக்கும் உன்னை விட்டுப் போகாது உன்னை தோற்கவும் விடாது..


எல்லாம் நல்லாதாவே நடக்கும் .. இது போல முகத்தை வச்சிட்டு அலையாதடா பார்க்க சகிக்கலை அப்புறம் சொல்ல மறந்துட்டேன் பாரு நான் ஊருக்கு கிளம்புறேன் கொஞ்சம் வேலை இருக்கு அப்பா வேற வர சொல்றாங்க நான் என்னன்னு போய் பார்த்துட்டு வரேன் என்கவும் அதுக்குள்ள போகணுமாடா என்று ஆதியும் ஆசீயும் ஒரே நேரத்தில் கேட்டு வைக்க வேலை முடிஞ்சதும் வந்துருவேன்டா…


நிருவும் வரதா சொன்னா ரெண்டு பேரும் ஈவ்னிங் போல கிளம்புறோம் என்று நமட்டு சிரிப்புடன் ஆசீயைப் பார்த்துக் கொண்டே கூறினான்.


கேட்டுக் கொண்டிருந்த ஆசியோ போறாளா என்று அதிர்ந்தவன் முகத்தில் எதையும் காட்டாமல் இருக்க பெரும்பாடு பட்டான்.


சரி வாங்க போகலாம் என்று வீட்டிற்கு சென்றனர்.


மூவரும் உள்ளே வர சுமதி எல்லாரும் போய் குளிச்சிட்டு சாப்பிட வாங்கப்பா அப்பறம் ஆதி இன்னைக்கு குலதெய்வக் கோவிலுக்கு போகணும் ஆபிஸ் போக வேண்டாம் என்று கூற


எனக்கு முக்கியமான வேலை இருக்கு நான் வர முடியாது என்று எங்கோ பார்த்துக் கொண்டு கூற சுமதி சும்மா இருப்பாரா?


புதுசா கல்யாணம் ஆனது எனக்கில்லை அவனுக்குத்தான் என்று சொல்லு நிரஞ்சா ரொம்ப எல்லை மீறி போறான். என்ன நினைச்சிட்டு இருக்கான் என்று அவர் பங்குக்கு கத்த ஆரம்பிக்க அத்தை விடுங்க நீங்க ஏன் இப்போ டென்ஷன் ஆகுறீங்க அவன் வருவான்


என்னடா ஆதி என்கவும் 


வரேன் எல்லாம் உங்க இஷ்டத்துக்குத்தானே நடக்குது என் இஷ்டத்துக்கா நடக்குது என்றவன் விறுவிறுவென தன் அறைக்கு சென்றுவிட்டான்.


மோகமுள் தீண்டும்…

மோகமுள் - 16 படிக்க இங்கே சொடுக்கவும்..









Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments