Advertisement

Ad code

வாழ்வு - 7

 

வாழ்வு - 7:


அவன் தருணிடம் சொல்லவும் என்ன சின்ன பிள்ளைப் போல தருண் கிட்ட சொல்லிக்கிட்டு இருக்காரு ஐயோ என்று நினைத்தவள் இருக்கையில் அமர்ந்தாள்.


அவள் அமரவும் அவளிடம் வந்த தருண் பிளீஸ் சந்தும்மா நீங்க எவ்ளோ நாள் எனக்கு ஊட்டி விட்டுருக்கீங்க நானும் அப்பாவும் ஊட்டி விடுறோம் என்று அவள் தாடையைப் பிடித்துப் பாவமாக கேட்டான்..


சரிடா தருக்குட்டி வாங்க அம்மாக்கு ஊட்டுங்க என்றதும் குஷியாக அப்பா வாங்க என்று அபியைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டான்.


பின் அபி தட்டில் சாப்பாடை பரிமாறி பிசைந்தான்... தருணிடம் திரும்பி தருண் அம்மாக்கு பர்ஸ்ட் நீங்கதான் வாங்க ஊட்டுங்க என்றதும் குதூகலித்தவன் தன் பிஞ்சுக் கைகளில் சாதத்தை எடுத்து அவளுக்கு ஊட்டி விட்டான்.


தான் ஊட்டி விட்டதும் அபியிடம் திரும்பி அப்பா இப்போ நீங்க என்று கூறியதும் தான் அவளுக்கு ஊட்டி விட்டான்.. அவளுக்கு ஊட்டி விடும் போது அவன் விரல்கள் அவள் உதட்டில் பட்ட நொடி இவ்ளோ சாஃப்ட்டா இருக்கு என்று உள்ளுக்குள் ஜொள்ளினான்..


தருண் சந்தியாவிற்கு இரண்டு வாய் ஊட்டியவன் தன் கைகளைக் கழுவிக் கொண்டு நான் உங்களுக்கு ஊட்டிவிட்டத எல்லாருக்கிட்டையும் சொல்லிட்டு வரேன் என்று குடுகுடுவென்று அந்த அறையை விட்டு வெளியே சென்று விட்டான்.


அவன் வெளியே சென்றதும் குஷியாகிப் போன அபி அவளுக்கு ஊட்டி விடுகிறேன் என்று அவள் உதட்டை ஒவ்வொரு தடவையும் வருடிக் கொண்டும் சதைப் பற்றான கீழ் உதட்டை இழுத்தும் உதட்டின் வரிகளை விரல்களால் வருடிக் கொண்டிருந்தான்.


சந்தியா ஹர்ஷியை தன் மடியில் வைத்துக் கொண்டு அவனிடம் படாதப்பாடுப் பட்டுக் கொண்டிருந்தாள்…சந்தியாவோ அவனிடம் எதுவும் சொல்ல முடியாமல் மறுத்தும் கூற முடியாமல் அமர்ந்திருந்தாள்.


தட்டில் சாதம் ஒரு கவளமே இருக்க அதை பார்த்த சந்தியா அப்பாடி முடியப் போகுது என்று அவள் பெருமூச்சு விடும் அளவுக்கு அபியின் சேட்டை இருந்தது..


கடைசிக் கவளத்தையும் அவளுக்கு ஊட்டியவன் அவளுக்கும் ஒரு படி மேலே போய் அவளுக்கு தண்ணீர் எடுத்துக் குடிக்கத் தெரியாதது போல தண்ணீரை

எடுத்துப் புகட்டினான்.


பின் தண்ணீரை பக்கத்தில் வைத்து விட்டு அவனுக்கு அவள் துடைத்து விட்டது போலவே அழுத்தமாக மிக அழுத்தமாக அந்த சுலை இதழ்களைத் தன் விரல்கள் கொண்டுத் துடைத்தான்.


டேய் அபி இதெல்லாம் உனக்கு ஓவரா தெரியலை...நேற்று பெரிய இவன் மாதிரி தாத்தாக்கிட்ட வீராப்பா பேசின... இப்போ அப்படியே உல்டாவா எல்லாம் செய்ற... இங்க என்னடா நடக்குது என்று கேள்வி எழுப்பியது…


நான் என்ன தாத்தாக்கிட்ட பேசினேன் என்று தான் எதுவும் பேசாதது போல் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல இல்ல இல்ல பூசணிக்காய், பரங்கிக்காய், சொரக்காய் எல்லாவற்றையும் மறைத்தான்.


டேய் பொய் கூட சொல்ல ஆரம்பிச்சுட்டடா...அப்போ உறுதியா நான் நினைச்சது தான் என்று அவன் மனசாட்சி சொல்ல நீ என்ன நினைச்ச என்று கேட்டான்.


இந்த காதல் கத்திரிக்காய் வரும் போது இலவச இணைப்பா பொய் சொல்ற பழக்கமும் கூட சேர்ந்து வந்துருமாம்...என்று கூறியது.


நான் சந்தியாவ அப்போ லவ் பண்றேனா என்று கேட்டதும் அப்படி தான் சிம்டம்ஸ் எல்லாம் சொல்லுது... கூடிய சீக்கிரம் உனக்கு டிரிட்மண்ட் பண்ண கீழ்பாக்கத்துல ஹர்ஷாக்கிட்ட (அபியின் நண்பன்) சொல்லி ஒரு பெட்டை புக் பண்ண சொல்லனும் என்று அவனை கேலி செய்தது.


ச்சே ஓடு என்று முறைத்து தன் மனசாட்சிய அடக்கியவன் இங்கு தன் தியா பேபியைப் பார்த்தான்.


அவளோ தன் கைப்பையை எடுத்து மாட்டிக் கொண்டு இவனை நோக்கி தான் வந்தாள். உடனே தன் கையைக் கழுவியவன் ஹர்ஷியை வாங்க அவளை நோக்கிக் கையை நீட்டினான்.


ஹர்ஷியோ நான் வரமாட்டேன் என்று தலையை ஆட்டி அவள் தோள் வளைவில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.அதை பார்த்து சிரித்தவன் ஹர்ஷிக்குட்டிக்கு அப்பா வேண்டாமா என்று கேட்டதும் தன் இரண்டு பற்கள் தெரிய அவனைப் பார்த்து சிரித்து அவனிடம் கையை நீட்டித் தாவினாள்..


தன் மகளை வாங்கிக் கொண்டு சந்தியாவைப் பார்த்தான்.அவள் அவனை நிமிர்ந்து பார்த்து ஏதோ சொல்ல வரவும் அவளைப் பார்த்து கண்ணடித்தான்.


(ஏன் டா நீ வேற பட்டு பட்டுன்னு கண்ணாடிக்கிற புள்ளை பயப்படுது பாரு…)


அவன் கண்ணடிக்கவும் தலையைக் குனிந்து கொண்டவள் தரையைப் பார்த்துக் கொண்டே வாங்க பிள்ளைகளப் போய் பார்த்துட்டு வருவோம் என்றதும் ம்ம் என்று கூறியதும் அவள் முன் சென்றாள்.


அப்பொழுதுதான் கவனித்தான்... அவள் தலைமுடியைப் பார்த்தான் கருகருவென்று இடுப்பைத் தாண்டி வளர்ந்திருந்தது..


அவள் நடக்கும் போது அதுவும் ரிதமாக அசைய அந்த தலை முடியா நான் இருக்கக் கூடாதா என்று நினைத்த மறுநொடி அவன் மனசாட்சி ச்சீ வழியாத வாயத் தொடை என்றதும் ஹி ஹி ஹி என்று அசடு வழிந்தவன் அவள் பின் சென்றான்.


அங்கு பிள்ளைகளின் அறைக்குள் நுழைந்ததும் அவளை கண்ட அனைவரும் சூழ்ந்து கொண்டனர்..அபி வந்ததும் அவனை அறிமுகப் படுத்தினாள்.


அந்த குழந்தைகள் அவனை அப்பா அப்பா என்கவும் அவர்களின் பாசத்தில் காற்றில் கரைந்து போனான்.அவனிடம் வந்து அனைவரும் வந்து எனக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க என்றதும் திருத்திருன்னு விழித்தவனைக் கண்டு சந்தியா பிள்ளைகளிடம் அப்பா உங்களுக்கு என்ன பிடிக்கும்னு என்கிட்ட கேட்டாங்க செல்லங்களா சாக்லேட்ஸ்னு சொன்னதும் நிறைய வாங்கி இருக்காங்க 


என்கிட்ட தான் வெயிட் பண்ணுங்க எடுத்துத் தரேன் என்று தன் கைப்பையில் உள்ள சாக்லேட்ஸை எடுத்துப் பிள்ளைகளிடம் குடுத்தாள்.


அனைவரும் அபியிடம் வந்து தாங்க்ஸ் ப்பா என்று கூறியதும் அவனுக்கு கலங்கி விட்டது. அவன் உணர்ச்சிவசப்படவும் அவன் கைகளைத் தன் கரங்கள் கொண்டு அழுத்தி ஆறுதல் படுத்தினாள்.


ஜெயா அபி அருகில் வந்து ப்பா இந்த பாப்பா ரொம்ப அழகா இருக்கு நான் தூக்கவா என்கவும் அவளிடம் ஹர்ஷியைக் கொடுத்தான்.சிறிது நேரம் ஹர்ஷியைக் கொஞ்சியவர்கள் நாங்க வெளியே பாப்பா கூட விளையாடுறோம் என்றதும் அவன் தலையசைக்கவும் பிள்ளைகள் அனைவரும் விளையாட சென்றனர்.


தருண் மட்டும் சந்தியாவைப் பார்த்துக் கொண்டே நிற்கவும் தருக்குட்டி நீங்க விளையாடப் போகலையா என்று அபி கேட்டான்.


இல்லை என்று தலையாட்டியவன் சந்தியாவைப் பார்த்தான். அவள் சிரித்துக் கொண்டே தன்னிடம் அவனை அழைத்தவள் தன் பையில் இருந்த டைரி மில்க் சாக்லேட்டை எடுத்தவள் அவனிடம் நீட்டினாள்.


அதை வாங்கி ஆர்வத்துடன் பிரித்தவன் பாதியைத் தன் வாயில் போட்டுக் கொண்டு சுவைத்தவன் மீதியை சந்தியாவிடம் கொடுத்து தாங்க்ஸ் சந்தும்மா என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு வெளியே ஓடி விட்டான்.


தருண் சென்றதும் மீதி சாக்லேட்டை ஆசையாக எடுத்து வாயில் போட்டதும் அவளுக்கு நியாபகம் வந்தது அபி இருக்கிறான் என்று. ஐயோ இவருக்கு தராமா நான் மட்டும் வாயில் போட்டுக் கொண்டேனே என்று வருந்தியவள்…


அவனிடம் திரும்பி சாரிங்க எனக்கு இந்த சாக்லேட் என்றால் ரொம்பப் பிடிக்கும் ஆசையா இருந்துச்சா அதான் அப்படியே சாப்டுட்டேன்..அப்புறம் உங்களுக்கு வாங்கித் தரேன் என்றதும் எனக்கு இப்போ வேணும் என்றான் பிடிவாதமாக.


அவன் கேட்கவும் என்கிட்ட இப்போ வேற சாக்லேட் இல்லையே என்று கையை விரித்துத் தலையை சரித்து கூறிய பாவத்தில் சொக்கியவன் அவள் கன்னத்தை நோக்கி கையை நீட்டினான்..


அவள் தன் கன்னத்தில் கை வைத்து பார்த்தவள் தருண் முத்தமிட்ட போது அவன் வாயில் ஒட்டியிருந்த சாக்லேட் அவள் கன்னத்தில் ஒட்டியிருந்தது..


அதை தடவியவள் தருண் முத்தம் கொடுத்தான்ல அப்போ ஒட்டிருச்சுப் போல என்று தன் கையைக் கொண்டு சென்று துடைக்கப் போனவளைத் தன் கைக் கொண்டு தடுத்தவன் அவளை நெருங்கி அவள் உதட்டைப் பதித்தான்.


அதற்கு மேல் அவன் தாமதிக்கவில்லை தன் நாவால் கன்னத்தில் இருந்த சாக்லேட்டை நக்கி எடுத்தான்... தான் செய்த செயலில் வாயில் வைத்திருந்த சாக்லேட்டை சாப்பிடாமல் கண்களை இறுக மூடி அதிர்ச்சியில் இருந்தவளின் உதட்டை சிறை செய்திருந்தான்.


சாக்லேட் சாப்பிடுகிறேன் என்று அவள் உதட்டை மென்று கொண்டிருந்தான்..அவன் மனசாட்சியோ டேய் நீ ரொம்ப மோசம்டா என்கவும் அதைக் கண்டுக் கொள்ளாமல் அவள் இதழில் மூழ்கினான்..


வாழ்வு சிறக்கும்….


Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments