Advertisement

Ad code

வாழ்வு - 27


 வாழ்வு - 26:


பால்கனியில் நின்று தன் முடியை உலர்த்திக் கொண்டிருந்த தியா இருவரும் வெளியே வரும் சத்தம் கேட்டு வந்தவள் அபிக்கு தலை துவட்ட ஒரு துண்டை அவனிடம் கொடுத்தவள் மற்றொரு துண்டை எடுத்து தருணின் தலையைத் துவட்டியவாரு அபிமன்யுவை திரும்பிப் பார்த்தவளுக்கு இப்போ எதாவது பண்ணணுமே என்று தோன்றியது.


தருணின் கண்களை மறைத்தவாரு துண்டை போட்டவள் அபியின் இடுப்பில் கிள்ளி அவனை துள்ள விட்டு அவன் இடுப்பில் கட்டியிருந்த துண்டை அவிழ்ப்பது போல கையைக் கொண்டு சென்றாள்.


அவள் கையைத் தட்டி விட்டவன் தருண் கண்ணா பாப்பாக்கு பாட்டிக்கிட்ட பால் வாங்கிட்டு வா டா என்று அனுப்பி வைத்தவன் அவள் இடைப்பற்றி தன் அருகில் இழுத்துக் கைவளைவில் வைத்துக் கொண்டவன் என்ன டி காலையில் இருந்து ஒரு மார்கமாவே இருக்க என்று அவள் கூந்தலில் தன் முகத்தை புதைத்தவாறு கேட்டான்.


ம்ம் என் புருஷன் தான் எதும் பண்ண மாட்டேங்கிறாரு நானாவது டிரைப் பண்ணலாம்னு தான் என்று உதட்டைச் சுழித்து கேலியாகக் கூறியவளைப் பார்த்து பேபி ஒரு நைட்ல உனக்கு என்னடி ஆச்சு இப்படி இருக்க என்றதும் நான் என் புருஷன்கிட்ட தானே இப்படி இருக்கேன் என்னை யாரு என்ன கேட்க முடியும் என்றவளைப் பார்த்து இதை நான் எதிர்ப்பார்க்கவே இல்லையே…என்று கூறினான்.


இனி அப்படி தான் இன்னும் இருக்கு என்றவள் இடுப்பில் இருந்த துண்டில் கைவைத்துக் கொண்டே அது என்ன சர்ப்ரைஸ்னு சொல்லுங்களேன் என்று கேட்டாள் சொல்ல மாட்டேன் பேபி என்றவன் ஷார்ட்ஸை எடுத்து அவள் முன்பே துண்டை அவிழ்த்து விட்டு மாற்றினான்.


தியாவும் முகத்தை திருப்ப வில்லை அப்படியே அவனை தான் பார்த்துக கொண்டிருந்தாள். அவள் தன்னையே பார்ப்பதைக் கண்டவன் தேறிட்ட பேபி என்று சிலாகித்தவன் அவள் இதழில் முத்தம் வைத்தான்.


அவன் லேசாக ஒற்றி மட்டுமே எடுக்க என்னதிது..இது முத்தமா.. நேத்து கடிச்சு தின்னுட்டு இப்போ இப்படி கொடுக்குறீங்க மாமா என்று புகார் வாசித்தவளை ஏய் இதுலாம் அநியாயம் டி கடைக்கு கிளம்பனும் நான் நைட் வந்து மொத்தமா தரேன் என்றவனை எதாவது சீண்டனுமே என்று நினைத்தவள் அட என்ன மாமா நீங்க எதாவது சாக்கு சொல்லிக் கிட்டே இருக்கீங்க …


அவனை மேலும் கீழும் பார்த்தவள் ஒரு வேலை உங்களுக்கு எதுவும் தெரியாதோ அதான் மேம்போக்கா செஞ்சிட்டு விட்டுறீங்களோ என்று நக்கலாகச் சிரித்துக் கொண்டே கேட்டவளை என்ன வாயி டி இது என்று இதழைக் கடித்தவன் எல்லாத்துக்கும் எதாவது சொல்லி என்னை உசுப்பேத்தி நீ ஜெயிச்சிடலாம்னு பார்க்குறியா என்றவன் அவளை மெத்தையில் இழுத்து தள்ளினான்.


பொத்தென்று விழுந்தவளின் மேல் படர்ந்தவன் கன்னத்தைக் கடித்து எனக்கா எதும் தெரியாது சொல்லு டி என்றவனை பார்த்து ஆமாம் உங்களுக்கு தான் ஒன்னும் தெரியாது என்று கூறி மீண்டும் அவனிடம் இருந்து பலக் கடிகளை இலவசமாகப் பெற்றுக் கொண்டாள்.


என் கூட சேர்ந்து ரொம்ப கெட்டுப் போயிட்டடி என்று மீண்டும் மீண்டும் கடித்தான்.அவனிடம் கடி வாங்கிக் கொண்டே புருஷனுக்கு ஏத்த பொண்டாட்டியா இருக்குறது தப்பா..ஐயோ உங்களை வச்சுக்கிட்டு என்னப் பண்ணப் போறேன்னு தெரியலையே என்று சோக கீதம் பாடியவளைப் பார்த்து சிரித்தான்.


அவளை விட்டு எழுந்தவன் இருடி நைட் இருக்கு அப்போ உன்னை வச்சுக்குறேன் என்றதும் இப்போ கூட வச்சுக்கோங்கன்னு தான் சொல்றேன் நீங்க தான் அப்படியே பறக்குறீங்க என்று குறைப்பட்டுக் கொண்டாள்.


அப்படி என்ன பெரிய சர்ப்ரைஸ் இருக்கப் போகுது என்று தோண்டித் துருவியவளிடம் சொல்ல மாட்டேன் போடி...என்றான் ஹூக்கும் எவ்ளோ நாளைக்கு மறைப்பிங்கன்னு நானும் பார்க்கத் தானே போறேன் என்று அவன் ஷார்ட்ஸ் பாக்கெட்டில் கையை விட்டு அழுத்தமாகக் கிள்ளியவள் வெளியில் ஓடி விட்டாள்.


ஆஹ் என்ற அலறல் சத்தம் அவளைத் தொடர்ந்து வர சிரித்துக் கொண்டே கீழே வந்தாள்.


அபி கடைக்கு கிளம்பி சென்று விட்டு மதிய சாப்பாட்டிற்கு வீட்டுக்கு வந்தவனிடம் ஹர்ஷா மச்சான் வாடா இங்க இன்னைக்கு சாப்பிட வேண்டாம் வீண் விஷப்பரிட்சை வேண்டாம் டா என்கவும் என்ன டா என்ன ஆச்சு என்று தன் நண்பனிடம் கேட்டான். உன் தங்கச்சி தான் மதியத்துக்கு சமைச்சிருக்கா ஹாஸ்பிட்டலில் இருந்தவனை போன் போட்டு கூப்பிடுறா டா என்று கூறினான்.


ஹர்ஷா கூறியதைக் கேட்டு என்னடா மச்சி சொல்ற இனத முன்னாடியே சொல்றதுக்கு என்ன துரோகி என்று முறைக்க யான் பெற்ற இன்பம் நீயும் பெறனும் அல்லவா என்று சிரித்துக் கொண்டே கூறினான் நல்லா வருவ டா என்றவன் வந்து தொலை என்ன நடக்குதுன்னு பார்ப்போம் என்று அழைத்து சென்றான்.


அங்கு தேவியோ சமையற் கட்டில் யாரையும் விடாமல் நான் இன்னைக்கு சமையல் செய்யுறேன் என்று கூறியவள் ரேவதியை மட்டும் துணைக்கு வைத்துக் கொண்டு தன் திறமையை சமையலில் காட்டியிருந்தாள். அனைத்து பதார்த்தங்களையும் எடுத்து அடுக்கியவர்கள் அனைவரையும் சாப்பிட அழைத்தனர்.


பரிமாறுகிறேன் என்று கூறிய சந்திராவையும் தியாவையும் அமர வைத்து விட்டு ரேவதியும் தேவியுமே பரிமாறினர்... நன்றாக தான் சமைத்திருந்தாள் அனைவரும் நன்றாக இருக்கிறது என்று சாப்பிட ஹர்ஷா எதுவும் சொல்லவில்லையே என்று வருத்தமாக இருந்தது தேவிக்கு .இங்கு ஹர்ஷாவோ நல்லா தான் இருக்கு என்று சாப்பிட்டவன் எதிரில் அமர்ந்திருந்த அபியைப் பார்த்தான்.


அபியோ மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் கஷ்டப்பட்டு சாப்பிடுவது போல் இருந்தது... என்னடா என்று கண்களால் கேட்க ஒன்றும் இல்லை என்று தலையாட்டியவன் சாப்பிட ஆரம்பித்தான்.அபியின் அருகில் தியா அமர்ந்திருக்க அவன் சாப்பாட்டில் கை வைக்க இவள் அவன் வலது கால் தொடையில் தன் கரத்தை வைத்து அழுத்த ஐயோ சேட்டையை ஆரம்பிச்சுட்டா ராட்சசி என்று திரும்பி அவளை பாவமாகப் பார்த்தான்.


அவனை கண்டுக் கொள்ளாதவள் போல் சாப்பாட்டில் கவனமானாள். அங்கு ஒரு கை சாப்பிட இங்கு அவன் தொடையில் இருந்த இடது கை ஆள்காட்டி விரலை வைத்து நெட்டுக்குக் கோடு இழுக்க அவனுக்கு எதுவோ தொடையில் ஊறுவது போல் இருந்தது. ரெத்த நாளங்கள் வெடித்து சிதறியது.தன் இடது கையை மடக்கி தன்னை கட்டுப் படுத்தியவன் அவள் கையைத் தட்டி விட்டான்.


அவன் தட்டி விட்டதில் கோபமானவள் சற்று மேலேறி ஒரு கிள்ளு கிள்ள முடிந்தது மொத்தமாக.. மூச்சை இழுத்து விட்டவனுக்கு சாப்பாடு இறங்குவேனா என்றிருந்தது... அப்பொழுது தான் ஹர்ஷா என்னவென்று கேட்க அதை பார்த்தவள் போதுமென்று தன் சேட்டையை நிறுத்திக் கொண்டாள். இது போலவே இரண்டு வாரம் அவனை துடிக்க விட்டு துள்ள விட்டுத் தன் சேட்டையைத் தடையில்லாமல் செய்துக் கொண்டிருந்தாள்.


எப்பொழுதும் மாலை ஆறு மணிக்கு வருபவன் இன்று நான்கு மணிக்கே வந்திருக்க அறைக்குள் நுழைந்தவனை அப்பொழுது எதிர்ப் பார்க்காததலால் மாமா என்று கூவினாள்.அவளின் உற்சாகம் அவனையும் தொத்திக் கொண்டது போல அவளை தன் கை வளைவிற்குள் கொண்டு வந்தவன் என்ன பேபி செம எனர்ஜிய இருக்கீங்க என்று அவள் முக வடிவை அளந்தவாறு கேட்டான்.


அவன் தொடுகையில் மயங்கியவள் அவன் கைவிரல் உதட்டருகே வரவும் நடுக்கென்று கடித்து டயர்ட் ஆக்குற மாதிரி வேலை ஏதாவது செஞ்சாதானே சேர்ர்ந்து போய் இருப்பாங்க..இங்க ஏதோ ஒர்க்கவுட்னு சொன்ன மனுஷன் ஒன்னுமே செய்ய மாட்டுறாரு என்று நொடித்தவள் அவனை இன்னும் நெருங்கி வந்தாள்.


ஆஹா ஏதோ செய்யப் போறா என்று நினைத்துக் கொண்டே கண்ணை மூடி அவள் செயலுக்காக அவன் காத்திருக்க அதை கண்டு சிரித்தவள் இவரு எதும் பண்ண மாட்டாராம் நாங்க பண்ணனுமா என்று கொனட்டிக் கொண்டவள் அவன் கன்னத்தை நறுக்கென கடிக்க தேய்த்து விட்டவன் அவளைப் பார்த்து முறைத்தான்.


என்ன முறைப்பு நீங்க மட்டும் எதும் செய்யாமா இருப்பீங்களாம் நான் கொடுக்கனுமா போயா என்றவளை எங்க டி இதெல்லாம் கத்துக்கிட்ட உனக்கு வர வர கொழுப்பு ஜாஸ்தி ஆகிடுச்சு இரு அடக்குறேன் என்றான்.அவன் கழுத்தில் தன் கைகளைக் கோர்த்தவள் அவன் முகத்தை தன் முகம் அருகே நெருங்குமாறு இழுத்தவள் நானும் அடக்குன்னு தான் சொல்றேன் மாமா என்று கூறினாள்.


அவ்வா என்று வாயில் கை வைத்தவனை கையை எடுத்து விட்டு அவன் இதழை முற்றுகையிட்டுப் அவன் நாவோடு போர் புரிந்தாள்.சிறிது நேரம் கழித்து அவனிடம் இருந்து பிரிந்தவள் நான் போய் துணி எடுத்துட்டு வரேன் மாமா பாப்பாவ பார்த்துக்கோங்க என்றதும் தருண் எங்கே என்று கேட்டான்.


அவன் தாத்தா கூட இருக்கான் மாமா என்று துணி எடுப்பதற்காக சென்றாள். ஹர்ஷி தரையில் விளையாடிக் கொண்டு இருந்தாள் அப்பொழுது அபிக்கு ஒரு போன் வரவே பால்கனியில் சென்று பேசிக் கொண்டு இருந்தான்.


அப்பொழுது அங்கிருந்த டேபிளைப் பிடித்து ஆட்டினாள் ஓரத்தில் இருந்த வாஸ் கீழே விழுந்து உடைய அந்த சத்தத்தில் இருவருமே ஓடி வந்தனர்.தியா பார்த்து வா என்று கூறியும் கீழே உடைந்த துகல்களில் தெரியாமல் கால் வைத்து விட்டாள்.


குழந்தையைத் தூக்கியவன் தியாவை கைத்தாங்கலாக பிடித்து மெத்தையில் அமர வைத்தவன் குழந்தையைக் கிடத்தி விட்டு அவள் கால்களை ஆராய்ந்தான் லேசாகக் கிழித்து இரத்தம் வந்துக் கொண்டிருக்க பர்ஸ்ட் எய்டு பாக்ஸ் எடுத்து வந்து கிளீன் பண்ணி கட்டுப் போட்டு விட்டான்.


நான் உங்களைக் குழந்தையை தானே பார்த்துக்க சொன்னேன்..எங்கே போனீங்க..


கால் வந்துச்சு பேபி இங்க தான் நின்னு பேசிட்டு இருந்தேன் என்கவும் அமைதியானாள்.


இரண்டு நாட்கள் கழித்து அபி கடைக்கு சென்றிருக்க வீட்டைச் சுற்றி இருந்த காம்பவுண்ட் சுவற்றில் இடது பக்கத்தில் ஜெ.சி.பி வைத்து இடித்துக் கொண்டிருக்க என்னவென்று கீழிறங்கி வந்து பார்த்தாள்.


என்ன தாத்தா எதுக்கு இதை இடிக்கிறீங்க என்றதும் சதாசிவம் அபி தன்னிடம் கூறியது அனைத்தையும் அவளிடம் கூறினார்.பின் பிள்ளைகளைத் தத்தெடுத்திருப்பதையும் கூறினார்.


அதை கேட்டு என்ன மாதிரி உணர்கிறாள் என்றே தெரியவில்லை..தனக்காக தன் கணவன் அனைத்தும் செய்திருக்கிறான் என்று நினைக்கவே மிகவும் சந்தோஷமாக இருந்தது.


அன்று வீட்டிற்கு வந்த அபி ஹர்ஷியின் அழுகைக் குரல் கேட்கவும் வேகமாக அறைக்கு சென்றவன் அங்கு கண்ட காட்சியில் அதிர்ந்தான்.


அதன் பிறகு ஒரு பெரிய சம்பவமும் நடந்தேறியது..


வாழ்வு சிறக்கும்...



Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments