Advertisement

Ad code

வாழ்வு - 22


 வாழ்வு- 22 :


காலையில் அனைவரும் ஹர்ஷியை வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்து விட்டனர். ஹர்ஷி ம்மா ம்மா என்று சந்தியாவிடம் இருந்து யாரிடமும் போகாமல் அவளிடமே இருந்தாள். அவளை விட்டு இங்கும் அங்கும் நகர விட வில்லை. அவள் நெஞ்சில் சாய்ந்து கொண்டு அவள் மாராப்பின் மடிப்பை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு விடவில்லை.


அபியிடம் கூட வரவில்லை அவளுக்கு பால் புகட்ட பால் புட்டியை எடுத்துக் கொண்டு வந்தவன் குட்டி மா வாடா அப்பா கிட்ட பால் குடிக்கலாம் என்றதும் வரவில்லை ஹர்ஷியை மடியில் போட்டு அவனிடம் இருந்து வாங்கி ஹர்ஷிக் குட்டி கொஞ்சம் ரு டிங்க என்று அவளைக் ெகாஞ்சி எப்படியோ பாதி பாட்டில் காலி ஆனதும் அவனிடம் கொடுத்தாள்.


போதும் மாமா கொஞ்ச நேரம் கழிச்சு கொடுக்கலாம் என்றவள் தன் தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்து பாலை இறக்கி அவளைத் தட்டிக் கொடுத்துத் தூங்க வைத்தாள். அப்பொழுது தான் அபிக்கு சதாசிவம் போன் செய்தார் அபி சந்தியா கொஞ்சம் இந்த AA ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டு வாப்பா என்றதும் என்ன தாத்தா யாருக்கு என்ன ஆச்சு என்று பதறினான்.


இவன் பதறவும் அருகில் வந்தவள் என்ன மாமா என்று கேட்டவள் அவன் போனை வாங்கி தாத்தா என்கவும் தருணை ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ணிருக்கு மா வாடா கொஞ்சம் சீக்கிரம் கரு ஒன்னும் இல்லை இப்போ நல்லாருக் கான் உன்னை தேடுறான் என்றதும் நான் வந்துட்டேன் தாத்தா என்று வைத்து வேகமாக கீழே இறங்கினாள்.


அபி சந்திராவிடம் ம்மா ஹர்ஷிய பார்த்துக்கோங்க நாங்க கொஞ்சம் வெளியே போயிட்டு வரோம் என்று அவசர அவசரமாகக் கூறிவிட்டு தியாவை அழைத்துக் கொண்டு சென்றான். மருத்துவமனைக்கு சென்று எந்த அறை என்று கேட்டுக் கொண்டு சென்றனர். அங்கு தருண் அழுது அழுது முகம் வீங்கி சிவந்து எனக்கு சந்தும்மா வேணும் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தவனை கண்டு தருக்குட்டி என்று அவனை அணைத்துக் கொண்டாள்.


அவன் உடம்பு சுடவும் அழாத தருக்குட்டி அம்மா தான் வந்துட்டேன்ல பீவர் வேற இருக்கு இன்னும் அதிகமாகிடும் டா என்று அவனை தட்டிக் கொடுத்தவள் என்ன தாத்தா ஆச்சு என்று சதாசிவத்திடம் கேட்டாள் உன்னை மூணு நாளா பார்க்கலைன்னு ஒரே அடம் இரண்டு நாள் எப்படியோ சமாளிச்சிட்டேன் இன்னைக்கு வேணும் பார்க்கனும் என்று அழுதுக்கிட்டே இருந்தான்.


தருண் அழுதா தான் வெட்டி வெட்டி இழுக்கும்ல அதுப்போல வந்துருச்சு காலையிலேயே இங்க தூக்கிட்டு வந்துட்டோம் என்று கூறிக் கொண்டிருந்த போது டாக்டர் வரவும் அவரிடம் சென்றனர். அவர் வந்து தருணை பரிசோதித்தவர் ஒன்னும் இல்லை ஹி இஸ் பெர்பெக்ட்லி ஆல்ரைட் அழ விடாம பார்த்துக்கோங்க, வீட்டுக்கு அழைச்சிட்டுப் போகலாம் என்று சில மாத்திரைகளை இரண்டு வேளைக்கு கொடுக்குமாறு கூறிவிட்டு சென்றார்.


அவனை கைகளில் தூக்கிக் கொண்டே ஏன் அழுத தருக் குட்டி நேற்று தான் அப்பா வந்து பார்த்தாங்க தானே என்று கேட்டுக் கொண்டிருந்தவளை பேபி என்று தன் பக்கம் திருப்பியவனை என்ன மாமா என்று கேட்க பேபி நான் நேற்று அவனை போய் பார்க்கலை ஏதோ வேலையில் மறந்துட்டேன் என்று கூற எங்கிருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ தெரியவில்லை.


(ஏன் டா நீயா போய் மாட்டுற ...)


நீங்க போய் பார்க்கிறேன்னு சொன்னதால் தானே நான் போகலை என்று கேட்டவள் நான் போயிருந்த இப்போ பிள்ளைக்கு இந்த நிலைமை வந்துருக்காது என்று கூறியதும் பேபி போகனும்னு தான் மா கிளம்பினேன் ஒரு வேலை அவசரமா வந்துச்சு அதான் அதை பார்க்க போனதுல மறந்துட்டேன் என்று பரிதாபமாக கூறினான்.


அவள் கோபத்தில் அவனை முறைத்தவள் தருணை தன்னோடு அணைத்துக் கொண்டு சாரி தருக்குட்டி என்னை மன்னிச்சிடுடா என்று அவன் உச்சந்தலையில் முத்தமிட்டவள் அபியைக் கண்டுக் கொள்ளாமல் தாத்தா வாங்க போகலாம் வீட்டுக்கு என்றதும் அவர் அபியை பார்த்தார். அவர் பார்வையைப் பார்த்தவள் விடுவிடுவென நடந்து சென்று சதாசிவம் வண்டியில் போய் அமர்த்துக் கொண்டாள்.


அபி சதாசிவத்திடம் நீங்க கூட்டிட்டுப் போங்க தாத்தா தியா வருவா என்றதும் சரி அபி நான் கிளம்புறேன் என்றவர் தன் வண்டியின் அருகே சென்றார். அவர் வண்டியில் அமர்ந்து டிரைவரை கிளம்ப சொன்னவர் அபியைப் பார்த்து தலையசைத்தார்.தியா ஓரக்கண்ணால் அபியைப் பார்த்தவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.


அதில் சிரித்தவன் அவளை நெருங்கி கோபமா பேபி என்றான் சிரித்துக் கொண்டே அவள் எதுவும் பேசாமல் இருக்கவும் வீட்டுக்கு வர மாட்டியா என்று லூசு போலவே வேண்டுமென்றே அவள் வாயைப் பிடுங்கக் கேட்டான். நான் ஏன் வரனும் வர மாட்டேன் போடா என்றாள் கோபத்தில் சதாசிவம் பாவமாக இருவரையும் பார்த்தார்.


அபியோ அவள் பதிலில் சிரித்தவன் வண்டியைக் கிளப்ப சொன்னான். பின் அவர்கள் கிளம்பியதும் வீட்டிற்கு கால் பண்ணி ஹர்ஷி என்ன செய்கிறாள் என்று கேட்டு விட்டு தன் கடைக்கு சென்றான். அவன் மனசாட்சியோ அவ திட்டுறா நீயும் கேட்டுட்டு சிரிச்சுட்டு நிக்குற என்று கேள்வி எழுப்பவும்

என்னோட தியா பேபி கோபப்படும் போது சூப்பரா இருக்கா என்று கூறவும் அட வெட்கங்கெட்டப் பயலே என்று திட்டிவிட்டுச் சென்றது.


இங்கு வீட்டுக்கு வந்து தருணுக்கு சாதம் கொஞ்சம் ஊட்டியவள் அவனை தன் மடியில் போட்டுத் தட்டிக் கொடுத்துத் தூங்க வைத்தாள். அவன் தூங்கியதும் ஜெயாவை அழைத்து தம்பியைப் பார்த்துக்கோ ஜெயா அங்க ஹர்ஷி பாப்பாக்கும் உடம்பு சரியில்லை நான் காலையில் வரேன் என்று கூறியவள் மற்ற பிள்ளைகளுடன் சிறிது நேரம் செலவழித்தாள்.


கிளம்புவதற்கு முன்பு தருணை பார்க்க வந்தவள் இப்பொழுது கொஞ்சம் பீவர் குறைந்து இருக்கவும் அவன் தலையை வருடினாள் அவன் எழுந்து சாக்லேட் தா ம்மா என்று கேட்கவும் பீவர் குறையட்டும் நாளைக்கு வாங்கி தரேன் என்று கூறியதும் ம்ம் என்று சமத்தாகப் படுத்துக் கொண்டான்.


அவன் தலையைத் தடவிக் கொண்டே தருக்குட்டி நான் இப்போ அங்க வீட்டுக்குப் போறேன் ஹர்ஷி பாப்பாக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை நான் உன்னை நாளைக்கு வந்து பார்க்கிறேன் தடுக்குட்டி வரும் போது சாக்லேட் வாங்கிட்டு வரேன் சரியா அது வரையும் இங்க சமத்தா இருக்கனும் சரியா என்றதும் ம்ம் என்று தலையாட்டினான்.


சிறிது நேரம் இருந்து விட்டு ஆயிரம் முறை சொல்லி விட்டு மதைே இல்லாமல் கிளம்பிச் சென்றாள். தருணை விட்டுச் செல்ல மனதே இல்லை ஆனால் அங்கு ஹர்ஷி தான் இல்லாமல் இருக்க மாட்டாள் என்று கிளம்பினாள்..


இங்கு வீட்டுக்கு வந்ததும் என்ன மா என்று கேட்ட சந்திராவிடம் தருணுக்கு உடம்பு சரியில்லை அத்தை அதான் போய்ட்டு வந்தோம் இப்போ நல்லா இருக்கான் என்று கூறி விட்டு ஹர்ஷிக்கு பாலை எடுத்துக் கொண்டு தன் அறைக்கு தூக்கி சென்றாள்.


அபி மதிய உணவிற்கு வீட்டுக்கு வந்தவன் தன் அறையில் ஹர்ஷி சத்தம் கேட்கவே சென்று பார்த்தவன் தியா இருக்கவும் அடக்க மாட்டாமல் சிரித்தான்... அவள் தன்னிடம் வர மாட்டேன் என்று சொல்லி விட்டு விரைவாக வந்து தன் மகளுக்கு பால் புகட்டி கொண்டிருப்பதை பார்த்தவன் உருகி போனான்…


தன் தியா பேபியின் மேல் கொள்ளை கொள்ளையாக ஆசை வந்தது…


வாழ்வு சிறக்கும்...


Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments