வாழ்வு-21:
சதா தனக்கு தெரியும் என்று சொல்லவும் எப்படிடா சதா என்று அதிர்ந்து கேட்டார். அபிதான்டா என்கிட்ட சொன்னான் கல்யாணத்துக்காக நீங்க எல்லாரும் நம்ம வீட்டுக்கு வந்தீங்க இல்லையா அப்போ மொபைல் விட்டுட்டேன்னு சொல்லி அபி வந்தான். நான் இங்க பசங்க இருந்த வீட்டுக்கு நான் போயிட்டேன். அப்போ போனை எடுத்துட்டு இந்த வீட்டுக்கு வந்தான்
வந்ததும் உங்க கூட பேசனும்னு சொன்னான் சொல்லுப்பா என்று சொன்னதும் தாத்தா உங்ககிட்ட ஏற்கனவே சொன்னது தான் தாத்தா என் கடந்த கால வாழ்க்கை சரியா அமையலை அந்த பெண்ணுக்கும் என் கூட இருக்க பிடிக்கலை நம்ம கூட இருக்க முடியாதுன்னு சொல்றவங்களை பிடிச்சா வைக்க முடியும் அதான் மியுச்சுவலா டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ணினோம்.
அவர் கைகளைப் பிடித்துக் கொண்டவன் தாத்தா சந்தியாவை நான் நல்லா பார்த்துக்கிறேன் நீங்க அவளை பற்றி கவலைப் படாதீங்க என்றதும் உள்ளுக்குள் அதிர்ந்தவர் நீ என் பேத்தியை நல்லா பார்த்துக்குவேன்னு தான் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணிக் கொடுக்கிறேன் என்றவர் அவனை அனுப்பி வைத்துவிட்டு ஏதோ காரணத்தோட தான் மறைச்சிருப்பேன்னு எனக்கு தெரியும் பரமா அதான் நான் அந்த விஷயத்தை நான் கண்டுக் கொள்ளவில்லை.
அபி நல்ல பையன் பரமா ரெண்டு பேரும் சந்தோஷமா இருப்பாங்க நாம அதைப் பார்க்க தான் போறோம் நீ பார்த்துக்கிட்டே இரு என்று கூறியவர் சரி நீ போய் தூங்கு பரமா நானும் படுக்குறேன் என்றதும் இருவரும் விடைப் பெற்றுக் கொண்டு அவரவர் வீட்டுக்குச் சென்றனர். இங்கு அபியை இழுத்து மெத்தையில் படுக்க வைத்துத் தானும் படுத்தவள் என்ன மாமா உங்களுக்கு இவ்வளவு கோபம் வருது என்ற பெரும் கேள்வியை அவனை பார்த்து ஒருக்களித்து படுத்தவாரு கேட்டாள்.
அவள் அருகே இருக்க தன் கோபம் தணிந்தவன் அவளை நோக்கி திரும்பி வலது கையை தன் தலைக்கு முட்டுக் குடுத்தவாறு அவளைப் பார்த்து படுத்தவன் தன் இடது கைக் கொண்டு அவள் முகவடிவை அளந்தவாரு என் அத்தையாகவே இருந்தாலும் என் பொண்டாட்டியைப் பேச அவங்களுக்கு உரிமை இல்லை பேபி என்று கூறினான்.
அதுப்போல யாராவது எதாவது தேவை இல்லாமல் பேசினா அதையெல்லாம் சீரியஸா எடுத்துக் கூடாது சரியா நான் சொன்னது மட்டும் தான் நீ கேட்கனும் செய்யனும் சரியா என்றவன் நான் சொல்றதை செய்வியா என்று கண்களில் குறும்புடன் கேட்டான். அவன் பார்வையிலேயே ஏதோ விவகாரமாக சொல்லப் போகிறான் என்று நினைத்தவள் தன் கண்களை விரித்து ம்ஹூம் என்று நாலா பக்கமும் தலையை ஆட்டினாள்.
பின் அவள் தலையை அசையாதவாறு பிடித்துக் கொண்டவன் அவள் இதழ் நோக்கி குனிய ஹர்ஷி வீறிட்டுக் கத்த சட்டென்று எழுந்தவன் ஹர்வியைத் தூக்கி குட்டி மா என்னடா ஆச்சு என்ன பண்ணுது என்று பதட்டமாகக் கேட்டவன் ஹர்ஷி உடம்பு நெருப்பென தகிக்க மூச்சு விட முடியாமல் சிரமப்படுவதைப் பார்த்துக் கண்கள் கலங்க குட்டி மா என்னடா ஆச்சு என்று அவளைத் தட்டிக் கொடுத்துக் கொண்டே தியா போய் ஹர்ஷாவ எழுப்பு என்றதும் கீழே விரைந்தாள்.
அபி ஹர்ஷியைத் தூக்கிக் கொண்டு கீழே வர தியா ஹர்ஷாவின் அறை கதவைத் தட்ட திறத்தவன் பதட்டத்துடன் தன் முன் நின்ற தியாவைப் பார்த்தவன் அபி ஹர்ஷியைத் தூக்கிக் கொண்டு வருவதைப் பார்த்தவன் அவனிடம் விரைந்தான்.
ஹர்ஷியைத் தொட்டுப் பார்த்தவன் ஹாஸ்பிட்டல் சீக்கிரம் கிளம்பலாம்டா ஒன்னும் இல்லை பயப்படாத ஒன்னும் ஆகாது என்றவன் காரை எடுத்தான். இவர்களின் சத்தம் கேட்டு அனைவரும் வெளியே வர பதறியவர்கள் ஹாஸ்பிட்டல் விரைந்தனர்.மாமா ஹர்ஷிக்கு ஒன்னும் ஆகாது என்று அவன் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள அவன் அவள் கைகளை கெட்டியாக இறுக்கிக் கொண்டான்.
ஹாஸ்பிட்டல் வந்ததும் ஹர்ஷா ஹர்ஷியைத் தூக்கிக் கொண்டு டாக்டரிடம் சென்று காட்டியதும் வைரல் பீவர் என்று ICU-ல் அட்மிட் செய்தனர்.அபி அதை கேட்டதும் அங்கிருந்த இருக்கையில் தன் கைகளைத் தலையில் வைத்துக் கொண்டு இடிந்துப் போய் அமர்ந்தான்.
அவன் அருகே அமர்ந்தவள் அவன் கைகளைத் தட்டிக் கொடுத்தாள் மாமா ஒன்னும் ஆகாது ஹர்ஷிக்கு என்று அழுதாள்.அனைவரும் டாக்டர் வைரல் பீவர் என்று கூறவும் பதறினர். கோகிலா சும்மா இல்லாமல் தன் தொண்டையைத் திறந்தார்.
இவ வந்த நேரம் தான் பிள்ளைக்கு முடியாம போயிடுச்சு... ராசி இல்லாதவ என்று எப்படியாவது அவள் மனதைக் கஷ்டப் படுத்தி விட வேண்டும் என்றே அவர் பேசினார் போலும். அவர் கூறியதைக் கேட்டதும் உடல் இறுகியவள் தன் கையை அபியின் கைகளில் பிரித்தெடுக்க முயன்றவளை அபி விடாமல் இறுக்கிக் கொண்டான்.
கோகிலா கூறியதைக் கேட்டவன் அமைதியாக இருந்தான் சந்தியாவின் உடல் இறுகுவதை உணர்ந்தவன் அவள் கெட்டியாக பிடித்துக் கொண்டவன் விடவில்லை.
பின் ஹர்ஷா வெளியே வரவும் அவனிடம் சென்று என்னடா ஆச்சு என்று கேட்கவும் ட்ரிட்மெண்ட் போயிட்டு இருக்கு டா நாளைக்கு காலையில் ஹர்ஷிய பார்க்கலாம் நீங்க எல்லாம் வீட்டுக்குப் போங்க என்று கூற இல்லை நான் இங்கேயே இருக்கேன் என்று விடாப்பிடியாக அமர்ந்துக் கொண்டான்.
பின் ஹர்ஷா தேவியிடம் திரும்பி கூட்டிட்டு போ தேவி பாப்பாக்கு ஒன்னும் இல்லை நாளைக்கு வந்து பார்க்கலாம் அழாத எல்லாரையும் கூட்டிட்டு வீட்டுக்குப் போ காலையில் வரலாம் என்று அனுப்பி வைத்தான். ரேவதி சந்தியாவை அழைக்கவும் அபி சந்தியா இங்கேயே என் கூட இருக்கட்டும் என்றதும் அனைவரும் கிளம்பினர்.
பேபி வீட்டுக்குப் போறியா என்று தியாவிடம் கேட்க இல்லை அத்தான் நான் இங்கேயே இருக்கேன் ஹர்ஷி தேடுவா என்றதும் அவளைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டவன் அவள் தலை மேல் தன் தலையை வைத்துக் கொண்டவன் இருவருமே தான் பெறாத மகளுக்காக விழித்தேக் கிடந்தார்கள்...
அதிகாலை நான்கு மணியளவில் வந்த டாக்டர் உங்க பொண்ண போய் பார்க்கலாம் ஆனால் இன்னும் ரெண்டு நாள் அப்ஸர்வேஷன்ல இருக்கட்டும் இரண்டு நாட்கள் கழித்து டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டுப் போகலாம் என்றதும் சரி என்று ஹர்ஷியைப் பார்க்க விரைந்தனர்.
அங்கு வாடி வதங்கிய மலர் போல படுத்திருந்த தன் மகளை கண்டதும் கண்கள் கலங்க ஹர்ஷியின் பாதங்களை கைகளில் ஏந்தி முத்தமிட்டவன் குட்டி மா என்று அழுகையில் தொண்டை கரகரக்க அழைத்தான்.
மாமா ஹர்ஷிக்கு சரி ஆயுடுச்சுனு டாக்டர் சொன்னாங்கள்ள எதுக்கு இப்போ கலங்குறீங்க என்று அவன் தலை முடியை வருடவும் அவள் இடுப்பை கட்டிக்கொண்டு அழுதான்.. சிறிது நேரம் அப்படியே இருந்தவன் நான் ரொம்ப பயந்துடேன் பேபி ஹர்ஷிக்கு எதாவது ஆயிடுமோனு என்று கூறியவன் தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தான்.
பின் இருவரும் பக்கத்தில் இருந்த கட்டிலில் சிறிது நேரம் படுத்திருந்தவர்கள் காலையில் அனைவரும் வந்து பார்க்க ஹர்ஷி விழித்தாள்.. தியாவை பார்த்து கைகள் இரண்டையும் தூக்கி அழ உடனே கட்டிலில் அமர்ந்து ஹர்ஷியை மடியில் போட்டு தட்டிக் கொடுத்தாள்.
இது போலவே இரண்டு நாளும் தியாவை அங்கும் இங்கும் நகர விட வில்லை.. இரண்டாம் நாள் மாமா ஹர்ஷியைக் கொஞ்சம் பார்த்துக்கோங்க நான் தருணை பார்த்துட்டு வரேன் அவன் நான் சாப்பாடு கொடுக்கலைன்னா சாப்பிட மாட்டான்.. நான் போய் பார்த்துட்டு வரேன் என்று கூறியவளிடம் நான் போய் பார்த்துட்டு வரேன் தியா..
நான் கூட்டிட்டு வரேன் தியா ஹர்ஷி நீ அவளை விட்டு நகர்ந்தாலே அழறா நான் போய் பார்த்துட்டு வரேன் என்றவன் கிளம்பினான். ஆனால் நடுவில் ஏதோ வேலை வர தருணை பார்க்க போவதை மறந்து விட்டான்.
இரண்டு தியா வராததால் சதாசிவம் தான் தருணுக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்து சாப்பிட வைத்தவர் மூணாவது நாள் அவனை சமாளிக்க முடியவில்லை..அவன் அழ ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டான்..தேம்பிக் கொண்டே பிட்ஸ் வந்தது போல் இழுக்கும்.
அபி வேலையால் மறந்து போக தியாவும் அபி போய் பார்த்திருப்பான் என்று நினைத்திருக்க சதாசிவமும் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறினார். அன்று ஹர்ஷியை டிஸ்சார்ஜ் செய்து கூட்டிப் போக அனைவரும் வந்திருக்க கோகிலா இந்த இரண்டு நாட்களாக வரவில்லை அதை கவனிக்கும் நிலையில் சந்தியாவும் இல்லை..
தருண் இங்கு சந்தியா வேணும் என்று அழுதுக் கொண்டிருந்தான். அனைவரும் சமாதானப் படுத்தியும் கேட்க வில்லை ஒரு கட்டத்தில் தேம்பிக் கொண்டிருந்தவனின் உடல் வெட்டி வெட்டி இழுக்கவும் அங்கிருந்தவர்கள் பயந்து ஹாஸ்பிட்டலிற்கு அழைத்து சென்றனர்.
இதை கேள்வி பட்ட சந்தியா அபியிடம் நான் நீங்க போய் பார்த்திருப்பீங்கன்னு நினைச்சு தானே நான் இங்க இருந்தேன் என்கிட்ட பேசாதீங்க என்றவள் தருணிடம் சாரி சாரி தருக்குட்டி என்று வாய் முணுமுணுத்துக் கொண்டே இருக்க முகம் சிவக்க அவனை அணைத்துக்கொண்டு அழுதாள்..
வாழ்வு சிறக்கும்...
0 Comments