Advertisement

Ad code

வாழ்வு - 2

 

வாழ்வு - 2


"இந்த உலகத்துலையே நான் அதிகமா வெறுக்கிறது அவளை தான் தாத்தா.. தனக்குப் பிறந்த குழந்தைக்குப் பால் கூடக் கொடுக்காம தன் சுயநலம் தான் முக்கியம் என்று நினைத்து எங்க ரெண்டு பேரையும் விட்டுட்டுப் போனவள் நமக்கு வேண்டாம் என்று தான் ஒதுக்கி வச்சோம்…"


"என் பிள்ளை அன்று பாலுக்கு எப்படி அழுதா தெரியுமா தாத்தா ஒரு நிமிஷம் என்ன பண்றதுன்னு தெரியாம தவிச்சோம் எல்லாரும்..ஆனால் மனசாட்சியே இல்லாம விட்டுட்டுப் போனாலே.. அந்த ராட்சசிய நான் என் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது…"


"என் பிள்ளை அழுதது இன்னும் என் கண்ணுக்குள்ளேயே இருக்கு தாத்தா.." என்று கோபமாக கூறினான்.


"அவளுக்கு நான் என்ன குறை வச்சேன் தாத்தா.. கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் அப்படியே விட்டுட்டுப் போனாலே அன்றோடு அவளோட அத்தியாயம் என் வாழ்க்கையில் முடிஞ்சிப் போச்சு.. அவ பொண்ணே இல்ல தாத்தா பெண் உருவத்தில் இருக்கும் ராட்சசி.."


"இனி என்கிட்ட யாரும் கல்யாணம் பத்தி பேசாதீங்க.. என்னால யாரையும் நம்பமுடியலை.. அவ விட்டுட்டுப் போனதுதான் நியாபகம் வருது.. தயவுசெஞ்சு என்னை வற்புருத்தாதீங்க தாத்தா.. எனக்கு கஷ்டமா இருக்கு நீங்க கல்யாணத்தைப் பற்றி பேசும்போதெல்லாம் உங்ககிட்ட ரொம்பக் கோபப்படுறேன்.. என்னை இப்படியே விடுங்க தாத்தா.."


"எங்க மேல கோபப் படுறதுக்கு உனக்கு எல்லா உரிமையும் இருக்கு அபி.. உனக்கு ஒன்னும் வயசு ஆகிடலையே அபி அதுமில்லாம நீ உன்னை பற்றி மட்டும் யோசிக்கக் கூடாது.. இதுல நம்ம ஹர்ஷிய பத்தி நீ கண்டிப்பா யோசிக்கனும் அபி பெண்பிள்ளைகளுக்குக் கண்டிப்பா அம்மா வேணும்ப்பா.. இப்போ உனக்குப் புரியாது ஹர்ஷி வளர்ந்த பிறகுதான் தெரியும்.."


"தாய் பாசம் இல்லாம வளர வேண்டாம்டா அபி.. நீ இப்போ ம்ம் என்று ஒரு வார்த்தை சொல்லு தங்கமாட்டம் நான் பெண் பார்க்கிறேன்" என்று கூறிக்கொண்டே வந்தவர் அவனை வேதனையுடன் பார்த்து "லதா இப்படி இருப்பான்னு எங்களுக்கு தெரியாது அபி.. முன்பே தெரிஞ்சிருந்தா உன்னை அவளைக் கட்டிக்கச் சொல்லிருக்க மாட்டோம் அபி.." என்று கண்கள் கலங்கக் கூறினார்.


"அய்யோ..தாத்தா அவள் அப்படி இருப்பான்னு உங்களுக்கு எப்படி தெரியும்.. விடுங்க தாத்தா முடிஞ்சத பற்றி பேசினா நமக்குதான் வருத்தம்.." என்று அவருக்கு ஆறுதல் கூறினான்.


"அபி இந்த ஒரு முறை நான் சொல்றதைக் கேளுப்பா.." என்றதும் "தாத்தா புரிஞ்சிக்கோங்க தாத்தா.. எனக்கு கல்யாணம் வேண்டாம்"என்று விடாப்பிடியாகக் கூறினான்.


"அபி உனக்கு மனைவி வேண்டாம் என்று நீ நினைக்கலாம்.. ஆனால் இன்னும் கொஞ்ச நாள் போனா நம்ம ஹர்ஷி உன்கிட்ட அம்மா எங்கேன்னு கேட்பா அப்போ அவளுக்கு என்ன பதில் சொல்ல போற.."


" அவ படிக்கப் போகும் போது கூடப் படிக்கிற பிள்ளைகள் தன் அம்மாக்களுடன் வரும் போது அவளுக்கு ஏக்கமா இருக்காதா.. அது மட்டுமில்லாம அவ எல்லாத்தையும் உன்கிட்ட ஷேர் பண்ணிக்க முடியாது அபி.."


"இன்னும் கொஞ்ச நாட்களில் தேவியும் கல்யாணம் ஆகி வேற வீட்டுக்குப் போயிடுவா.. அப்படி இருக்குறப்ப ஹர்ஷி ரொம்ப தவிச்சு போயிடுவா அபி.. நான் சொல்றதைக் கொஞ்சம் யோசிச்சுப் பாரு அப்படி உன் பிடிவாதம் தான் பெருசுன்னு நினைச்சின்னா நம்ம ஹர்ஷிதான் ஏங்கிப் போவா பார்த்துக்கா.."


"இப்போ நீ தான் முடிவு பண்ணனும் உனக்கு உன் பிடிவாதம் முக்கியமா இல்லை.. உன் பொண்ணு முக்கியமான்னு.. சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டேன் இனி நீ எடுக்குறதுதான் முடிவு உன்னை யாரும் நாங்க கட்டாயப்படுத்தலை.."


அவனிடம் பேசிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.அவன் மனமோ உனக்கு உன் பொண்ணு ரொம்ப முக்கியம் அபி அதனால கல்யாணம் பண்ணிக்கோ வரப்போறவ ஹர்ஷிக்கு அம்மாவ மட்டும் இருந்தா போதும் என்று கூறியது.


இன்னொரு மனமோ அப்போ உனக்கு பொண்டாட்டி வேண்டாமா என்று கேட்டதும் எனக்கு யாரும் வேண்டாம் எனக்கு என் பொண்ணு மட்டும் போதும் நான் யாரை நம்பியும் இல்லை என்று தன் மனதிடம் திட்ட வட்டமாக கூறினான்.


(விதியோ இப்போ வேணாம் வேணாம்னு சொல்ற வாய் அப்புறம் வேணும் வேணும்னு சொல்லப் போகுது என்று அவனைக் கண்டு சிரித்தது.)


இங்கு உள்ளே வந்த பரமனோ ஒத்துக்குவானா என்று யோசித்துக்கொண்டிருந்தார். அவர் வந்ததை அறிந்து சந்திரா வந்து "என்ன மாமா சொன்னான் ஒத்துக்கிட்டானா.." என்று கேட்டதும் "பயல் பிடிக் கொடுக்காமல் பேசுறான் மா.. பாவம் பழசை நினைச்சுப் புள்ளை ரொம்ப வருத்தப் படுறான்..அந்த பாவி இப்படி பாதியிலே போவான்னு தெரிஞ்சிருந்தா நான் அவளைக் கட்டியே வச்சுருக்க மாட்டேன்.." என்று வருந்தினார்.


"நம்ம ஹர்ஷிய சாக்கா வச்சுத்தான் நம்ம வழிக்குக் கொண்டு வரனும் அதான் பேசிருக்கேன்.. அநேகமா ஓகே சொல்லிடுவான்.." என்று சொல்லிக் கொண்டிருந்தவர் அவன் வரும் சத்தம் கேட்கவும் அமைதியானார்.


ஒரு முடிவுடன் உள்ளே சென்றவன் அனைவரும் ஹாலில் அமர்ந்திருக்க எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் தவித்தான்.பின் கண்களை மூடி ஆழ மூச்சை இழுத்து விட்டு "தாத்தா.." என்று அழைத்தான்.


அவன் வந்ததுமே அவன் தயங்கவும் வேலைய ஆரம்பிச்சுடலாம் என்று நினைத்து அவனையே பார்த்தார். பின் அவன் அழைக்கவும் "என்ன அபி.." என்று ஒன்றும் தெரியாதது போல கேட்டார்.


"தாத்தா எனக்கு ஓகே.." என்று மொட்டையாக கூறினான் "என்னப்பா ஓகே.." என்று ஒன்றும் தெரியாதது போல கேட்டார். அவர் பதிவில் பல்லைக் கடித்தவன் "எனக்கு கல்யாணத்துக்கு சம்மதம் தாத்தா.. நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிறேன்.." என்று கூறியதும் அனைவரும் சந்தோஷப் பட்டனர்.


உடனே அடுத்தக் குண்டை கண்டிஷன் என்று ஒன்றை போட்டான். "தாத்தா வரப் போற பொண்ணு வர்ஷிக்கு அம்மாவா இருந்தா போதும்.. எனக்கு மனைவி தேவையில்லை நான் ஹர்ஷிக்காக தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.." என்று திட்டவட்டமாகக் கூற அனைவரும் அதிர்ந்தனர்.


சந்திரா ஏதோ சொல்ல வர அவரைக் கண்களால் அடக்கியவர் "சரிப்பா நீ கல்யாணத்துக்கு சம்மதிச்சதே பெரிய விஷயம் இப்போவாச்சும் நல்ல முடிவு எடுத்தியே நல்லது அபி.." என்றதும் "பொண்ணு பார்த்துட்டீங்களா இல்லை இனிமே தானா.." என்று கேட்டான்.


"என் நண்பனோட பேத்தி பேரு சந்தியா வயசு 22.." என்றதும் "என்ன தாத்தா இவ்ளோ சின்ன வயசு பொண்ண சொல்றீங்க.." என்றதும் வயசுலாம் என்ன வயசு உன்னைவிட எட்டு வயசுதான் கம்மி அதுமில்லாமல் உன் கூட கல்லூரியில் படிச்சானே அர்ஜுன் உன் நண்பன் அவனோட பொண்டாட்டி தான்.." என்று கூறினார்.


"நம்ம கூட அவனோட இறுதி சடங்குக்கு போனோமேப்பா.." என்று நினைவுப் படுத்தினார். அவனுக்குக் ஏழு வருஷத்துக்கு முன்னாடியே கல்யாணம் ஆச்சே என்று யோசித்தவன் அதை அதற்கு மேல் யோசிக்கவில்லை.


"நம்ம பெரிய கோயில்ல என் நண்பனை சந்திச்சேன் அப்போதான் சொன்னான் இந்த மாதிரி பொண்ணு சின்ன வயசுதான் நல்ல குணம்னு சொன்னான்.. அதான் உன்கிட்ட பேசிட்டு சொல்றேன்னு" சொன்னேன். 


"சரி தாத்தா அவங்ககிட்ட சொன்னீங்களா எனக்கு டிவோர்ஸ் ஆயிருச்சுன்னு.." என்று கேட்டதும் திருத்திருவென விழித்தவர் "ம்ம் சொல்லிட்டேன் அபி" என்று பொய்யை உரைத்தார்.


"ம்ம் சரி அப்புறம் இந்த கல்யாணத்துக்கு முன்னாடி நிச்சயம் எதும் வேண்டாம் சிம்பிளா நாம மட்டும் கோவில்ல வச்சுக்கலாம் சரியா தாத்தா" என்று கேட்டான்.


ஊரக்கூட்டி சொந்தபந்தத்தை எல்லாரையும் அழைத்து பண்ணிய கல்யாணமே ஒன்னும் இல்லாம போச்சு என்று நினைத்தவர் "சரி அபி அப்படியே பண்ணிடலாம்.." என்று கூறினார்.


"சரி தாத்தா நான் என் ரூமுக்குப் போறேன்" என்று சொன்னவன் தேவியின் அறைக்கு சென்று தன் மகளைத் தூக்கிக் கொண்டு தன் அறைக்கு சென்றான். படிக்கட்டில் ஏறியவன் பாதி வழி சென்றி திரும்ப நன் தாத்தாவிடம் வந்து "தாத்தா அந்த பொண்ணுக்கு குழந்தை இருக்கா.." என்று கேட்டான்.


"இல்லை அபி" என்றதும் எதையோ யோசித்துக் கொண்டு அறைக்கு சென்றான்.


சேகர் தன் தந்தையிடம் "ஏன்ப்பா குழந்தை இருக்கா.." என்று கேட்டுட்டு போறான் என்று கேட்டதும் "அந்த பெண்ணுக்கு குழந்தை இருந்தா.. எங்க நம்ம ஹர்ஷிய ஒழுங்கா பார்த்துக்க மாட்டாளோ என்ற பயத்துல கேட்டுட்டுப் போறான்…" என்று கூறினார்.


தன் அறையில் அபியும் தன் மகளிடம் "உனக்காக தான்டா அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிறேன்.." என்று திரும்ப திரும்ப கூறினான். தன் மகளிடம் கூறினானா இல்லை தனக்கே கூறிக் கொண்டானா என்பது அவனுக்கே வெளிச்சம்.


இங்கு பரமனிடம் சந்திரா "மாமா நீங்க பொய் சொன்னதா தானே சொன்னீங்க அப்புறம் ஏன் அபி கேட்டதுக்கு டிவோர்ஸ் ஆனத சொல்லிட்டேன்னு சொல்றீங்க.." என்றதும் "எல்லாம் காரணமாதான் மா அவள் போனது செத்தப் போனதாவே இருக்கட்டும்.." என்று கூறினர்.


"பிள்ளை பிறந்த பத்து நாட்களிலேயே யாராவது இன்னொரு கல்யாணம் பண்ணுவாங்களா ஆனால் அவள் பண்ணினாளே.. என் பேரனுக்கு என்ன குறை சொத்துக்கு ஆசைப்பட்டு இப்படி பெத்தப்புள்ளைய விட்டுட்டுப் போனவளைச் செத்து போய்ட்டான்னு சொல்றதுல தப்பில்லை.."


"என் பேரனை பொறுத்த வரைக்கும் அவள் இறந்து போனவள்தான்.." என்று கூறிவிட்டு தன் நண்பனுக்கு அழைத்தார்.


"ஹலோ சதா.." என்றதும் "சொல்லுடா பரமா.."


"டேய் சதா.. என் பேரன் கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டான்டா நாளைக்கு நாங்க வீட்டுக்கு வரோம் டா நாளைக்கு பேசலாம்டா கல்யாணம் எப்போ எங்கே வச்சுக்கலாம்னு" என்று சந்தோஷத்தில் கூறியதும் "சரிடா பரமா இப்போதான் எனக்கு நிம்மதியா இருக்கு.." என்று மனநிறைவுடன் கூறினார்.


"அப்புறம் பரமா ஒரு விஷயம் அங்கே உங்க வீட்டுக்கிட்ட பக்கத்துல எதாவது ஒரு வீடு பாருடா வாடகைக்கு.. என் பேத்தி நான் பக்கத்துலையே இருக்கனும்னு சொல்றா.." என்றதும் "சதா என்னடா.. வா இனி நீ நம்ம பேத்தி எல்லாரும் ஒரே வீட்டுலதான் இருப்போம் எதுக்கு நீ தனியா இருக்கனும்.." என்று கேட்டார்.


"அதில்லை டா உங்களுக்கு கஷ்டம்..அதுமில்லாம மரியாதையா இருக்காதுடா.. என்னை கட்டாயப் படுத்தாதடா.. "என்றதும் "சரி முதலில் கல்யாணம் முடியட்டும் அப்புறம் பேசிக்கலாம்.." என்று போனை அனைத்தார்.


சதாசிவம் பேசிவிட்டு போனை அணைக்கவும் "யாரு தாத்தா போன்ல.." என்றதும் "என் நண்பன் தான் மா அவனோட பேரன் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டானாம்.."


" நாளைக்கு நம்ம வீட்டுக்கு வராங்கலாம்.." என்று கூறினார்.


"மாப்பிள்ளை அதுக்குள்ள பார்த்துட்டீங்களா.." என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் அவள் கேட்ட விதமே இவ்வளவு விரைவில் எதிர்ப்பார்க்கவில்லை என்று தெரிந்தது.


வாழ்வு சிறக்கும்….


Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments