வாழ்வு -19:
அறையில் எந்த ஒரு அலங்கராமும் செய்யவில்லை.. அபி இதெல்லாம் எதுக்கு? ஒன்னும் வேண்டாம் என்றதால் எதுவும் செய்யவில்லை..
கோகிலா ரெண்டாவது தானே அதெல்லாம் தெரியும் என்றதும் சுருக்கென்று தைத்தது சந்தியாவிற்கு.. அர்ஜூன் என்றுமே அவளிடம் கணவனாக ஒரு நாளும் ஒரு பார்வை கூட பார்த்ததில்லை.. சந்தியாவை பொறுத்த வரையில் அர்ஜூன் அவளுக்கு தெய்வம்..ஆம் தன்னை காத்த தெய்வமே..
ஒரு முத்தம் கூட அவன் இருந்த வரையில் இருவரும் பரிமாறிக் கொண்டதில்லை.. ஆனால் இவர் என்னவென்றால் இப்படி சொல்கிறார் என்று மிகவும் வேதனை அடைந்தாள்.. பின் சந்திரா சமாதானம் செய்து அவளை அபி அறைக்கு அழைத்து சென்று விட்டார்..
அவளை எதிர்பார்த்து தன் அறையில் காத்து கொண்டு இருந்தவன் அவள் அறையின் உள்ளே வரவும் எழுந்து சென்று அவளிடம் இருந்து பால் சொம்பை வாங்கி மேசையில் வைத்தவன் அவளை தூக்கி சுற்றினான்.. பேபி என்று அவள் முகத்தில் முத்தமழை பொழிந்தான்.
அவளை இறக்கி விடும் போது தான் பார்த்தான் அவள் கண்கள் கலங்கி இருப்பதை கண்டு என்ன பேபி ஆச்சு.. என்று கேட்டதும் அதற்கு மேல் அடக்க முடியாமல் அவனை கட்டி கொண்டு அழுதாள்..அவள் அழுவது பொருக்காமல் பேபி என்று அவளை தன்னிடம் இருந்து பிரித்தவன் என்ன ஆச்சு என்று கேட்டான்.
ஒன்னும் இல்லை மாமா தலை வலி என்று எதோ சொல்லி சமாளித்தவள் பின் தன் கண்களை துடைத்துக் கொண்டவள் மாமா ஹர்ஷி எங்கே எனவும் அவள் படுத்திருந்த இடத்தை காட்டி விட்டு சந்தியாவை தான் கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான்..
ஹர்ஷி தன் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருக்க அவள் தலையை வருடி விட்டவள் கட்டிலில் வந்து அமர்ந்தாள்.அவளையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் அருகில் அமர்ந்து என்ன ஆச்சு பேபி என்று கேட்டான்.
அவள் குனிந்த தலையை நிமிர்த்தவே இல்லை.. இப்போ சொல்ல போறியா இல்ல நான் அம்மா கிட்ட போய் கேட்கவா என்று கோபமாக வந்தது அவன் வார்த்தைகள்..அவன் கோபத்தில் பயந்தவள் ( இதுக்கே பயந்தா என்ன பேபி நாளைக்கு இது சும்மா டிரெய்லர் தான் நாளைக்கு தான் மெயின் பிக்சரே…)
கோகிலா கூறியதை சொன்னதும் பற்களை கடித்து கொண்டு விருட்டென்று எழுந்தவனை பிடித்துக் கொண்டு மாமா அவங்க சொன்னது உண்மை தானே நா ரெண்டாவது தானே என்று எங்கு அவன் கோபப்பட்டு எதாவது செய்து விடுவானோ என்ற பயத்தில் அவ்வாறு சொன்னாள்…
அதை கேட்டு அவள் கைகளை உதறியவன் அவங்க சொன்ன மாதிரி பாத்தா நானும் தான் ரெண்டாவது என்று கத்தியவனை தன்னுடன் அனைத்து கொண்டு மாமா மாமா பிளீஸ் மாமா அவங்க எதாவது சொல்லிட்டு போறாங்க விடுங்க இதனால பிரச்சனை வேண்டாம் என்று சொன்னவள் அவனை இழுத்து கொண்டு வந்து மெத்தையில் படுக்க வைத்து தானும் படுத்து கொண்டாள்..
இங்கு வெளியில் பரமனும் சதாவும் தோட்டத்தில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.. பரமா இப்போதான் டா நிம்மதியா இருக்கு அர்ஜூன் போன பிறகு இந்த சின்ன பிள்ளை வாழாம இருக்கே என்ன பண்றதுன்னு யோசிச்சுட்டு இருந்தேன் அப்போதான் நீ வந்த கடவுள் மாதிரி எப்படியோ இப்போ கல்யாணமும் நடந்துடுச்சு என்று நெகிழ்ந்து போய் அவர் கையைப் பிடித்துக் கொண்டு கூறினார்.
அவர் அப்படி கூறவும் பரமனுக்கு தான் பொய் சொல்லியதை நினைத்து குற்றவுணர்ச்சியாக இருந்தது..சதா நான் உன்கிட்ட ஒரு உண்மையை மறைச்சு பொய் சொல்லிட்டேன் டா என்று கூறியதும் நெற்றி சுருக்கியவர் பின் தெளிந்தவராக மேல சொல்லு என்பது போல பார்த்தார்.
பின் சதாசிவத்திடம் பரமன் அபியின் கடத்த காலத்தைப் பற்றிக் கூறினார்.அபி கல்லூரியில் படித்து முடித்து விட்டு தன் அப்பா விருத்தாசலத்தில் துணிக்கடை வைத்திருக்க சென்னையில் தான் சொந்தமாக ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்று அவன் கல்லூரி காலங்களில் இருந்தே அந்த ஆசை அவன் மனதில் வேரூன்றி இருந்தது.
கல்லூரி முடித்தவுடன் இரண்டு மாதம் தன் தந்தையுடன் கடைக்கு சென்று அனைத்து நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டவன் சென்னையில் பல கனவுகளுடன் தன் கடையைத் திறந்தான் அவன் கடையும் நன்றாகவே போய் கொண்டிருந்தது அபிக்கு 28 வயது ஆகவே அவன் வீட்டில் கல்யாண பேச்சை ஆரம்பித்தனர்.அபியிடம் கேட்டதுக்கு உங்க விருப்பம் போல பண்ணுங்க தாத்தா என்று சொல்லவும் பெண் பார்க்க ஆரம்பித்தனர்.
விருத்தாசலத்திலே மண்டி வைத்திருக்கிற ராமசாமியின் மகள் பேஷன் டெக்னாலாஜி படித்து விட்டு ஆடை வடிவமைப்பாளராக சென்னையில் பணி புரிகிறாள் என்று கேள்வி படவே ஊரில் அவர்களின் குடும்பத்தை பற்றி விசாரித்தனர். கல்யாண தரகரிடம் பொண்ணு நல்ல பெண்ணா சண்டை சச்சரவு இல்லாம குடும்பம் பண்ணனும்பா என்கவும் அதல்லாம் நல்ல பெண் ஐயா சென்னையில் வேலை பார்க்குது அதோட உத்தியோகம் நம்ம பையனுக்கும் உதவியா இருக்கும் என்று கூறினர்.
பின் பெண்ணை பற்றி அபியிடம் சொல்லவே ஹிம்ம் உங்க இஷ்டம் தாத்தா என்றவன் பெண் உள்ளூர் என்றதும் கண்ணை மூடிக் கொண்டு ஓகே சொல்லி விட்டான். பக்கத்து வீட்டினரிடம் மற்றும் ஊரில் விசாரித்த போது பொண்ணு நல்ல பொண்ணு வரும் அது வேணையப் பார்க்கும் அமைதி அப்படி இப்படி என்று கூறவும் நல்ல பெண் என்று பேசி முடிக்க அபியை வரவழைத்தனர்.
அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை லதா ஊரில் நல்ல பெண் என்ற பிம்பத்தை உருவாக்கி இருந்தாள். இங்கு இருந்த வரை எதுவும் தெரியாமல் அக்மார்க் கிராமத்து பெண்ணாக தான் இருந்தாள் .என்று அவள் பேஷன் டெக்னாலஜி படிக்க சென்னைக்கு சென்றாளோ அங்கு இருந்த நாகரீகத்துக்கு தன்னை மாற்றிக் கொண்டாள்..
இப்பொழுது எல்லாம் ஏதாவது விஷேச நாளில் அவள் அப்பா அம்மா கெஞ்சிக் கூத்தாடி கூப்பிடுவார்கள் வந்து ஒரு நாள் இருந்து விட்டு சென்னை கிளம்பி விடுவாள். இதில் ஊருக்கு வரும் போது மட்டும் தன் உடையை சுடிதாராக மாற்றி கொள்வாள்.
சென்னையில் அவள் வடிவமைத்த ஆடைகள் தான் அணிவாள் அதுவும் அந்த உடைகள் மிகவும் தாராளமாக அவள் உடல் எழில்களை நெளிவு சுளிவுகளை அப்பட்டமாக எடுத்து காமிக்கும்..அதுவும் இப்பொழுது பிரபல நடிகர் விதியுத்தின் ஆடை வடிவமைப்பாளர் ஆனதில் இருந்து ரொம்ப தாராள மயமாக்க பட்டது ஒவ்வொரு ஆடையும்..
அவள் அணியும் ஒவ்வொரு ஆடையும் விழுந்து விடுமோ என்ற நிலைமையில் விளிம்பில் நிற்கும்.. அதையும் அவன் ரசித்து அவள் ஒவ்வொரு உடல் பாகங்களையும் ஒவ்வொரு முறையும் விதவிதமாக வர்ணிப்பதற்காகவே அவனை கவர இன்னும் கவர்ச்சியாக அணிந்து செல்வாள்.அவனுடன் சேர்ந்து இரவானால் பப்பிற்கு சென்று அவனுக்கு நிகராக குடித்து மட்டையாகி விடுவது வழக்கமாக இருந்தது.
இந்த நிலையில் தான் அபி வீட்டில் பெண் பார்க்க வருவதாக கூற இதை வித்யுத்திடம் கூறினாள் அதற்கு அவன் பேப் இப்போ நான் கல்யாணம் பண்ணினா மார்கெட் இறங்க வாய்ப்பு இருக்கு சோ நீ இந்த கல்யாணத்தைப் பண்ணிக்கோ ஒன் இயர் கழிச்சி டிவோர்சு கொடுத்துடலாம் என்று கூலாக கூறினான்.
(அப்பொழுது தெரியவில்லை அவளுக்கு எவ்வளவு பெரிய சொர்க்கத்தை இழக்கப் போகிறோம் என்று…)
அவன் சொல் படியே ஊருக்கு வந்தவள் பெண் பார்க்க வரும் போதும் சரி ஒன்றும் தெரியாத அப்பாவி பெண் போல் தன்னை சித்தரித்துக் கொண்டாள்.. அபி வீட்டினரும் பெண் ரொம்ப அழகா அமைதியா இருக்காள் என்று அவள் வெளி தோற்றத்தை வைத்து முடிவுக்கு வந்து விட்டனர்.பின் பெண் பார்க்க வந்த அன்றே நிச்சயத் தாம்புளம் மாற்றிக் கொண்டனர்.
உற்றார் உறவினர் என அனைவரையும் அழைத்துக் கோலாகலமாக கல்யாணத்தை நடத்தினர்.கல்யாணம் முன்பு லதாவிடம் பேச அபி அவள் நம்பரைக் கேட்க லதாவின் அம்மா அவ கொஞ்சம் கூச்சப் படுறா தம்பி என்று மழுப்பி விட்டார். தன் தாயிடம் கல்யாணம் ஆனப் பிறகு பேசிக்கிறேன் நம்பர் தர முடியாது என்று கூறி விட்டாள்…
அபி பேச வெட்கப் படுகிறாள் என்று நினைத்துக் கொண்டான் பாவம் அவனுக்கு தெரியவில்லை அந்த பேக்கு வெட்கம் எந்த கடையில் கிடைக்கும் என்று கேட்கிற ரகம் என்று..கல்யாணம் முடிந்ததும் அன்றிரவு இருவருக்கும் சடங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அவளை அபியின் அறையில் விட்டுவிட்டு செல்ல தலை வலிப்பது போல படுத்துக் கொள்ளலாம் என்று நினைத்துப் படுத்துக் கொண்டாள்…
அபி தன் அறைக்கு வந்தவன் அவள் படுத்திருக்கவும் இருமுறை அவளை அழைத்தான் ஆனால் அவள் எழவில்லை என்றதும் அவள் அருகில் சிறு இடைவெளி விட்டு படுத்துக் கொண்டான்.அவள் முழித்திருந்தால் கூட அவன் தன் வாழ்க்கையை அப்பொழுது தொடங்கி இருக்க மாட்டான்.அவளை எழுப்பியதே பேசலாம் என்று தான்.
பின் காலை எழுந்தவுடன் அவளிடம் நமக்கு முன்பே அறிமுகமில்லை கொஞ்ச நாட்கள் நம்மை ஒருவரை ஒருவர் தெரிந்து கொண்டு நம் வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்று கூறவும் சரி என்று தலையை ஆட்டினாள்.
அன்று இரவே எனக்கு சென்னையில் வேலை இருக்கு என்கவுமே இருவரையும் சென்னையில் அபி தங்கி இருந்த அப்பார்ட்மண்டில் தங்க வைத்து விட்டு வந்தனர். முதல் நாள் அவள் வெளியில் போக வில்லை வீட்டில் தான் இருந்தாள். அடுத்த நாள் அவள் உடையைப் பார்த்த அபிக்கு கோபம் கட்டுங்கடங்காமல் வந்தது..
வாழ்வு சிறக்கும்...
0 Comments