வாழ்வு -18:
பிள்ளைகள் அனைவரும் ஒரே உடை அணிந்து அத்தனை அழகாக இருந்தனர்...அபி கல்யாணம் முடிந்ததும் அனைவரையும சரவண பவன் உணவகத்திற்கு அழைத்து சென்றான்..
குடும்பமாக அமரும் நீடை டேபிளை ஏற்கனவே அபி பதிவு செய்திருக்க அதில் பெரியவர்களை அமர வைத்து ஹர்ஷாவை அவர்களைப் பார்த்துக் கொள்ளும் படி சொல்லி விட்டு இங்கு பிள்ளைகளுக்கென பதிவு செய்திருந்த தனி அறைக்கு அனைவரையும் அழைத்து சென்றான்.
ஹர்ஷி சந்தியாவை விட்டு இறங்க மாட்டேன் என்று ஒற்றே அடம்.. அவள் இடுப்பை விட்டு இறங்க மாட்டேன் என்று அடம்பிடித்தாள் அவள் நெஞ்சில் தலை சாய்ந்து கொண்டு யாரிடமும் வா மாட்டேன் என்று தலையை ஆட்டி அடம் பிடித்துக் கொண்டிருந்தாள்.
காலையில் இருந்து பிள்ளை சோர்ந்தார் போல் தான் இருந்தாள்.. எதுவும் சாப்பிடவும் சந்தியா பாட்டிலில் இருந்த பாலைக் கொடுத்தாலும் குடிக்க வில்லை. ஹர்ஷாவிடம் காட்ட ஒன்றுமில்லை என்று கூறினான் அதிகாலையில் எழுந்ததாக இருக்க வேண்டும் தூங்கினால் சரியாகி விடும் என்றான்.
பின் பிள்ளைகளை அமர வைத்து அனைவருக்கும் கொஞ்சமாக உணவை ஆர்டர் பண்ணி சாப்பிட சொன்னவன் பின் அவர்களுக்கு பிடித்த இனிப்பு என்னவென ஒவ்வொருவரிடமும் கேட்டு அதை ஆர்டர் செய்து சாப்பிட வைத்தான்.
பின் சந்தியாவை அமர வைத்து அவர்களுடனே சாப்பிட வைத்தவன் நீங்களும் சாப்பிடுங்க மாமா என்று அவனையும் அமர வைத்து உண்ண வைத்தாள். ஹர்ஷிக்கு ஊட்ட போனவனின் கையை தன் கைகளில் தள்ளி கை சந்தியாவின் நெஞ்சில் முகத்தைப் புதைத்துக் கொண்டான்.
குட்டிமா அது என்னோட இடம்.. என்கவும் மாமா.. என்று பிள்ளைகளைக் காட்டி அடக்கினாள்.அப்போ ஊட்டி விடு பேபி என்கவும் பிள்ளைகளை பார்க்க அவர்கள் தங்களுக்குள் பேசி சிரித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.பின் அவனுக்கு ஊட்ட இவன் அவளுக்கு ஊட்ட என்று அந்த நேரம் அழகாக சென்றது.
பின் பிள்ளைகளையும் அங்கு சமைத்து போரும் இரண்டு பெண்களையும் அவர்களுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தவன் தன் குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்கு சென்றான். வீட்டிற்கு வந்தவுடன் சந்திரா ஆரத்திக் கரைத்து எடுத்து வந்து ரேவதியிடம் கொடுக்க அவள் எடுத்தாள்.
அபி அத்தான் பெருசா போடனும் எடுங்க எடுங்க என்று இருவருக்கும் திலகமிட்டவள் கையை அவனை நோக்கி நீட்டினாள். சந்தியாவும் சிரிக்க அபி தன் பர்சை எடுத்து அப்படியே தட்டில் போட்டான். வாவ் வாலட் செம உள்ள இருக்கிற பணம் கிரடிட் கார்ட் எல்லாம எனக்கு தான் என்று சிரித்துக் கொண்டே வெளியில் கொட்ட சென்றாள்.
பின் சந்தியாவை வலது கால் எடுத்து உள்ளே வருமாறு கூறிய சந்திரா அவள் வந்ததும் பூஜை அறைக்கு சென்று விளக்கேற்ற சொன்னார். பின் அவள் விளக்கேற்றிவிட்டு இருவரும் இறைவனை வணங்கி விட்டு வந்தனர்.பின் பாலும் பழமும் கொடுக்க இதையெல்லாம் வேண்டா வெறுப்பாக பார்த்துக் கொண்டிருந்தார் கோகிலா.
பின் இருவரையும் கொஞ்ச நேரம் தூங்குங்க என்று அறைக்கு அனுப்பி வைத்தனர் ஹர்ஷியை அபி வாங்கிக் கொண்டு மூவரும் அபியின் அறைக்கு சென்றனர். அவர்கள் சென்றதும் பரமன் சதாசிவத்துடன் அவர் வீட்டுக்கு சென்று வருவதாகக் கூறிவிட்டு சென்றார். இங்கு கோகிலாவும் சண்முகமும் ஓய்வெடுக்க தங்கள் அறைக்கு வந்தனர்.
என்ன கோகி உன் முகமே சரி இல்லையே என்ன ஆச்சு என்கவும் ஒன்னும் இல்லைட்க என்றவரைப் பார்த்து அவர் மனதை சரியாக கணித்தவராக கோகி உன் ஆசை புரியுது ஆனால் பிள்ளைகளுக்கு பிடிக்காம கல்யாணம் பண்ணி வச்சு எதுக்கு அவங்க வந்க்கையை வீணாக்கனும்.. நீயே பார்த்த தானே அபி எவ்ளோ சந்தோஷமா இருக்கான்னு அவன் முகத்தைப் பார்த்தாலே தெரியலையா உனக்கு..,
ஹர்ஷியும் அந்த பெண்ணை விட்டு யாருக்கிட்டயும் போக மாட்டுற நம்ம ரேவதி கிட்டக் கூட அவ்ளோ க்ளோஸா இல்ல ஆனால் சந்தியா கிட்ட இயல்பா ஒட்டிக்கிட்டா.. சந்தியாவும் நம்ம பொண்ணு மாதிரி தான் உன் பெண்ணா அவளை நினைச்சுக்கோ எல்லாம் சரியா போய்டும் என்று கூறவும் ம்ம் என்று தலையை ஆட்டிக் கொண்டார்.
இங்கு ஹர்ஷாவும் தேவியும் அத்தான் நீங்க இந்த டிரஸ்ல செமயா இருக்கீங்க என்று அவன் ஷேவ் செய்த தாடையை விரல்களால் வருடியவாறு கூறினாள். ஏய் ஜாங்கிரி நீ மட்டும் என்னவாம் இந்த லெகங்கால்ல நச்சுன்னு இருக்க என்று அவள் இடையில் கைக் கொடுத்து இழுத்து தன்னுடன் சேர்த்தணைத்தவன் நான் எப்போ இந்த ஜாங்கிரிய சாப்பிடுறதுன்னு ஆவலா இருக்கேன்டி என்று அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.
அவனோடு இன்னும் ஒண்டியவள் ரேவதி கல்யாணம் முடிஞ்சதும் நம்ம கல்யாணம் வைக்கலாம்னு அம்மாவும் அத்தையும் சேபிக்கிட்டாங்க அத்தான் என்று அவனிடம் கூறினாள்.. ஹிம்ம் சீக்கிரம் அவளுக்கு கல்யாணத்தை முடிக்கனும் அப்போ தான் நான் சிக் ஜாங்கிரி சாப்பிட முடியும் என்று அவள் ஆப்பிள் கன்னத்தைக் கடித்து சுவைத்தான்.
அத்தான் சென்னை எப்போ கிளம்புறீங்க என்று சோகமாக கேட்டதும் அவள் முகத்தை வருடிக் கொண்டே இனி போக மாட்டேன் டா இனிமே இங்க தான் ஹாஸ்பிட்டல் கட்டலாம்னு பிளான்ல இருக்கேன். அதும் இல்லாம இனிமே உன்னை பிரிஞ்சு இருக்க முடியாது சோ இங்கேயே ஹாஸ்பிட்டல் கட்டுற வரைக்கும் வேற ஹாஸ்பிட்டலில் பிராக்டிஸ் பண்ணனும் என்று கூறியதும் ஐய் சூப்பர் மாமா இனிமே நீங்க இங்க தான் இருப்பீங்களா என்று அவனை தன்னுடன் அணைத்துக் கொண்டு தன் சந்தோஷத்தை அவனுக்கு உணர்த்தினாள்.
இங்கு அபியின் அறைக்குள் வந்தவர்கள் ஹர்ஷி சந்தியாவிடம் தாவ இருடா அம்மா டிரெஸ் மாத்திட்டு வரேன் என்று அவள் கன்னத்தில் முத்தமிட அபியும் தன் கன்னத்தைக் காட்டவும் ஆனா நீங்க ரொம்ப பண்றீங்க மாமா என்று சலித்தவள் இரண்டு கன்னத்திலும் கொடுத்து விட்டு தன் பெட்டியில் இருந்த உடைகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு ஓடி விட்டாள்.
அவள் செயலில் சிரித்தவன் ஹர்ஷியிடம் என்னடா செல்லம் பண்ணது என்று கேட்கவும் உதட்டைப் பிதுக்கி கையைத் தூக்கி ஆட்டியவள் அவன் நெஞ்சில் சாய்த்து கொண்டாள்.தியா பட்டுப் புடவையைக் கலைந்து விட்டு வேறு சாதாரணப் புடவைக்கு மாறியவள் வெளியில் வந்து ஹர்ஷியை வாங்கிக் கொண்டாள்.
நான் போய் பிரஷ் ஆகிட்டு வந்துடுறேன் பேபி என்று கூறிவிட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான். ஹர்ஷியைத் தன் தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்துக் கொண்டே அந்த அறையைப் பார்த்தாள். ஒரு சோஃபா செட்டுடன் டீபாயும் ஒரு கபோர்டும் ஒரு சைடில் இருக்கவே கொஞ்சம் தள்ளி ஹர்ஷி விளையாட அனைத்து விளையாட்டு பொருட்களும் இருக்கவே அங்கே சென்று அதனை காட்டி கொஞ்சம் புட்டியில் இருந்த பாலை புகட்டினாள்.
சிறிது நேரத்தில் அபி வரவும் அவனிடம் தாவிய ஹர்ஷி மெத்தையைச் சுட்டிக் காட்டி பா.. பா.. என்கவும் தூங்கனுமா டா என்றவன் படுக்கப் போக மாமா இப்போதான் பால் ருடிச்சா இருந்த கொஞ்ச நேரம் என்றவள் சிறிது நேரம் கழித்து படுங்க என்கவும் தான் படுத்து ஹர்ஷியை நெஞ்சில் படுக்க வைத்து சுட்டிக் கொடுத்தான்.
இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தவளை இழுத்து தன் பக்கத்தில் படுக்க வைத்துக் கொண்டான். தூங்கு பேபி காலையிலேயே எழுந்தது டயர்டா இருக்கும் என்று தன் கைங்களில் படுக்க வைத்துக் கொண்டான்.பின் சிறிது நேரத்தில் களைப்பிலும் அவன் அருகாமையிலும் நிம்மதியான உறக்கம் அவளைத் தழுவிக் கொண்டது. சிறிது நேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் அவளை தன்னுடன் இறுக்கிக் கொண்டு நித்திரையில் ஆழ்ந்தான்.
ஒரு மணி நேரம் சென்று எழுந்தவன் ஹர்ஷியை மெதுவாக மெத்தையில் கிடத்தி விட்டு தன் பக்கத்தில் படுத்திருக்கும் தன் மனைவியின் முகத்தை வருடியவன் அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.தியா தூக்க தன்னை வருடியக் கைகளைப் பிடித்துக் கொண்டு மாமா என்று முனகியவள் தன் தூக்கத்தைத் தொடர்ந்தாள்.அபிக்கு தன்னை தூக்கத்திலும் உணர்ந்து கொள்கிறாள் என்று மிகுந்த மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தான்.
மீண்டும் ஒரு முத்தமிட்டு தன் அசைவில் எழ முயன்றவளை தட்டிக் கொடுத்து ஒன்னும் இல்லைடா தூங்கு என்று அறையை விட்டுக் கீழே வந்தான்.
கீழே வந்தவனை என்ன மச்சான் அதுக்குள்ள வந்துட்ட என்று கிண்டல் பண்ணியவனை வயிற்றில் ஒரு குத்து விட்டு அடங்குடா என்றவன் மச்சான் நான் நம்ம வீட்டுக்குப் பக்கத்தில் இருக்குற இடத்தை வாங்கப் போறேன் டா பேசி வச்சிருக்கேன் என்று தன் திட்டத்தை கூற ஹர்ஷா சூப்பர் டா மச்சி என்று கட்டி அனைத்துக் கொண்டான்.
சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவர்கள் வெளியில் கொஞ்சம் போயிட்டு வருவதாகக் கூறி விட்டு இருவரும் வெளியில் சென்று விட்டு வந்தனர்.
அவர்கள் வரும் பொழுது சந்தியா ஹர்ஷிக்கு சத்து மாவு ஊட்டிக் கொண்டிருந்தவள் அபியைப் பார்த்து எங்க மாமா போயிட்டு வரீங்க என்று கேட்டவளிடம் ரிஜிஸ்டர் ஆபீஸ் வரைக்கும் போயிட்டு வந்தோம் டா என்று கூறியவன் இரண்டு பார்ம்களை அவளிடம் நீட்டிக் கையெழுத்துப் போடுடா என்று சொல்லிவிட்டு சென்றான்.
ஹர்ஷிக்கு ஊட்டி முடித்து விட்டு ரிஜிஸ்டர் பண்ணுவதற்கு என்று நினைத்தவள் அனைத்திலும் கையெழுத்திட்டு அபியிடம் கொடுத்தாள்..அதை வாங்கி பத்திரப் படுத்தியவன் ஹர்ஷாவிடம் திரும்பி மச்சி சாப்டுட்டு இதை அந்த ஆபிஸ்ல கொடுத்துட்டு வந்துடு மச்சி என்றான்.
பின் அனைவரும் மதிய உணவை சாப்பிட்டு முடித்ததும் சண்முகம் அங்கு ஊரில் வேலை இருப்பதாகிக் கூறி கிளம்பினார். இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டுப் போகலாமே மச்சான் என்று சேகர் கேட்க இல்ல மச்சான் ஏற்கனவே மூணு நாள் ஆச்சு அதான் கோகியும் ரேவதியும் இருக்காங்களே சரி அப்போ நான் கிளம்புறேன் என்று அனைவரிடமும் சொன்னவரை அபி வாங்க மாமா போகலாம் என்று அவரை அழைத்துச் சென்றான்.
அவரை விட்டு வந்தவன் சந்தியாவை அழைத்ததன் அறைக்கு சென்று பேபி இன்னைக்கு நைட் இதை போட்டுக்கோடா என்று ஒரு ரவிக்கையை அவள் கையில் திணிக்க அதை பார்த்ததுமே தெரிந்தது அது எவ்ளோவு தாராளம் என்று அவனிடம் சும்மா தலையாட்டியவள் அதனை வாங்கி வைத்துக் கொண்டாள்.
அன்று இரவு ஆவலாக அபி தன் அறையில் காத்துக் கொண்டிருக்க இங்கு கோகிலா அவளிடம் பேசிய பேச்சை அவன் அறியவில்லை.அவன் கனவுகளுடன் காத்திருக்க தன் தியா தன்னிடம் கண்கள் கலங்க வந்து அடைக்கலமாக அதிர்ந்தான்…
ஏன் என்று ….
வாழ்வு சிறக்கும்...
0 Comments