மோகம் - 6 :
மித்ரன் தான் தூக்கத்தில் அவளது ஒரு பக்க மார்பை விடாமல் பிடித்துக் கொண்டு சப்பினான்.
நைட் புல்லா வாயிலேயாவா வச்சிருந்தாங்க என்று நினைத்தவள் தன் நெஞ்சோடு அவனை இறுக்கிக்கொண்டாள்.
அவள் அணைக்கவும் தூக்கம் கலைந்து எழுந்தான், "என்னடா சீக்கிரம் எழுந்துட்டியா..." என்று தன் வாய் அருகில் இருந்த திராட்சையைக் கவ்வி சுவைத்தான்.
"தூக்கம் வரலை அத்தான்.. சீக்கரம் எழுந்துதான் பழக்கம்.. அதான் முழிப்பு வந்துடுச்சு..."
"தினமும் காலையில் என் பொழுது இப்படியே விடியனும்" என்று சொல்லிக் கொண்டே அவள் மார்பை ஒரு கையால் பிடித்துக் கொண்டு அந்தக் கருநிற திராட்சை விதையை மற்றொரு கையால் நிமிண்டி கசக்கினான்.
"ஹா.. அத்தான்.. நைட் ஃபுல்லா வாயில் வைத்து கொண்டே தூங்கியதால் அது பெருசாயிடுச்சு அத்தான்.. எனக்கு எப்பொழுதும் இவ்ளோ பெருசா இருக்காது.." என்று வருத்தத்துடன் கூற, அவனை உசுப்பேத்திக் கொண்டிருப்பதைப் பாவையவள் அறியவில்லை.
அவன் உடனே மற்றொரு மார்பை அழுத்தி,
"இன்னைக்கு நைட் இதை வாயில் வைத்துக் கொண்டே தூங்கினா, இதும் இந்தளவுக்குப் பெருசாயிடும், மதுக்குட்டி.." என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.
"போங்க அத்தான்.. நீங்க இப்படிப் பேசாதீங்க.. எனக்கு ஒரு மாதிரியா இருக்கு.."
அவள் மேல் தன் காலைப் போட்டு இழுத்து தன் ஆளுகைக்குள் கொண்டு வந்தவன்,
"என்ன மாதிரியா இருக்கு, மதுக்குட்டி..?"
"தெரியலை..." என்று அவன் மார்பில் தன் முகத்தைப் புதைத்து கொண்டாள்.
"சரி... எழுந்து குளி.. நான் ஜாகிங் போய்ட்டு வரேன்.." என்று கீழே சென்றான்.
வெளியே வந்தவன், "என்ன ரமேஷ், எங்க போயிருந்த ஆளைப் பாக்க முடியல..?"
"சார், நான் ஊருக்குப் போயிருந்தேன்.. இப்போதான் வந்தேன்.. சார்க் கிட்ட சொல்லிட்டுதான் போனேன்.."
"சரி, வேலைய பாரு ரமேஷ்..."
அவர்கள் வீட்டில் டிரைவராக வேலைப் பார்க்கிறான். இங்கு வேலைக்குச் சேர்ந்து மூன்று மாதங்கள் தான் ஆகிறது.
மதி குளித்துக் கீழே வந்து சாமியறையில் விளக்கேற்றி விட்டு வரும் போது, சனா
(சுலோச்சனா இனி சனா என்று அழைக்கப்படுவார்)
"அதுக்குள்ள எழுந்துட்டியாடா..?"
"ஆமாம் அத்தை.."
"சரி, இரு வரேன்" என்று சொல்லிவிட்டு, அவர் அறையில் இருந்து நகைப் பெட்டி ஒன்றை எடுத்துக் கொண்டு வந்தார்.
அதில் வைரத்தால் ஆன தோடும், அழகிய வேலைப்பாடு கொண்ட ஒரு செயின் இருந்தது.
அதை எடுத்து மதியைப் போட சொன்னார்.
மதி, "வேண்டாம் அத்தை, அத்தான் குடுத்தது இருக்கு.."
"அதைக் கழட்டிட்டு இதைப் போட்டுக்கோடா.."
அப்பொழுது, மித்ரனும் இதைக் கேட்டுக் கொண்டே வந்தவன்,
"அதான் சொல்றாங்களே, மதி போட்டுக்கோ.."
அவன் சொல்லவும் போட்டுக் கொண்டவள்,
"நல்லார்க்கா அத்தை.."
"அழகா இருக்குமா..?" என்கவும், தலையைக் குனிந்து கொண்டு வெட்கிச் சிரித்தாள்.
அதைப் பார்த்துக் கொண்டே மேலே தன் அறைக்குச் செல்ல படிகளில் ஏறியவன்,
"மதி, மேலே வா.." என்றான்.
"போமா? கூப்டுறான் பாரு... நான் காபி போட்டு அனுப்பி வைக்கிறேன்..."
தங்கள் அறைக்கு வந்தவள், குளியலறையில் சத்தம் கேட்கவும், நேற்று அவன் வாங்கிவந்த உடைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் வரவும்,
"என்ன அத்தான், கூப்டீங்க..?"
"நான் ஆபிஸ் போய்ட்டு வரேன்.. நீ ஏதாவது வேணும்னா கால் பண்ணு, சரியா.." என்றான், அவள் கன்னத்தை வருடிக்கொண்டே.
"ஹம்ம, சரி அத்தான்..."
"நீ கார்டனில் செடி வைக்கிறேனு சொன்னல்ல.. கீழே ரமேஷ்ன்னு ஒருத்தன் இருப்பான், அவன உதவிக்குக் கூட வச்சிக்கிட்ட செய், சரியா.."
(இங்கு தான் மித்ரன் தப்பான ஆளைச் சூஸ் பண்ணிட்டானோ..)
"ஹிம்ம்.."
அவள் டிரெஸைக் கையில் வைத்திருக்கவும்,
"டிரெஸ்லாம் எப்படி இருக்கு..? பிடிச்சிருக்கா...? இல்லை, வேற வேணுமா..?"
"எப்படி அத்தான், என்னோட அளவு உங்களுக்குத் தெரியும்.. கரெக்டா இருக்கு.."
(ஆடு தானா போய் சிக்கிடுச்சு.. ஏன் மா, மதி சும்மா இருக்குறவனை நீயே ஏத்தி விடுற..?)
அவள் சொல்லவும்,
"கரெக்டா இருக்கா, மது.. எல்லாம்.." என்று அவள் காது மடலை உரசிக் கொண்டே, குரல் கரகரக்கக் கேட்டான்.
அவன் அப்படிக் கேட்கவும், தான் "ஐயோ.. மதி, உனக்கு அறிவே இல்லையாடி.. சும்மாவே இழுத்து வச்சு கடிப்பாரு.. இப்போ போச்சு, சொல்லவே வேணாம்..." என்று அவள் நினைத்தது போலத்தான், மித்ரன் அவளை உருட்டிக் கொண்டிருந்தான்.
"அத்தான், ஆபிஸ்க்குப் போகணும்னு சொன்னீங்க.."
"போயே ஆகனுமா, மது..."
அவள் ஏதோ சொல்ல வருவதற்குள், மித்ரனின் கைப்பேசி அழைக்க, யாரென்று பார்த்தான்.
விக்கித் தான் அழைத்தான்.
"என்ன மச்சான், நல்ல தூக்கமோ....."
"ம்ம், செம தூக்கம்.." என்று மதியைப் பார்த்துக் கண்ணடித்தான்.
அவள் தலையைக் கீழே குனிந்து கொண்டாள்.
"அப்பா கால் பண்ணிருந்தார்.. மதியைப் பத்தி கேட்டார்..."
"சொல்லிட்டியா..?"
"ஹிம்ம், சொன்னேன்... எதும் சொல்லல்ல.. கல்யாணம்... அடுத்த மாதம் தான் நல்ல நாள் இருக்காம்..."
"என்னது, அடுத்த மாதம் தானா..? டேய் மச்சான்.. என்ன டா.. இன்னும் எவ்வளவு நாள் டா..?"
"இவ்ளோ நாள் பொருத்துட்ட.. இன்னும் கொஞ்ச நாள் தான் டா.." என்று அடக்க மாட்டாமல் சிரித்துக் கொண்டே சொன்னான்.
"ஹம்ம், சரி.. நீ சிரிக்கிறியா.. கன்னி பையன் சாபம் உங்களச் சும்மா விடாதுடா.." என்று சொல்லிப் போனை அனைத்தான்.
"என்னங்க, அடுத்த மாதம்..?"
"ஹிம்ம்.. ஒன்னும் இல்லை.."
கதவு தட்டப்படவும், யாரென்று மித்ரன் பார்த்தான். முத்து தான், கையில் காஃபி ட்ரெயுடன் நின்றிருந்தான்.
"சார், உங்க இருவரையும் ஐயா கீழே வரச் சொன்னார்.."
"ஹிம்ம், வரோம் அண்ணா....."
இருவரும் கீழே வந்ததும், ராதாகிருஷ்ணன் வீட்டில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் தன் மருமகளை அறிமுகப்படுத்தினார்.
பின்பு, மதி பரிமாற, அனைவரும் சாப்பிட்டனர்.
மதியை அமர்த்தி, அவளைச் சாப்பிட வைத்து விட்டே, மித்ரன் தன்னுடைய ஆபிஸ்க்குச் சென்றான்.
அனைத்தும் நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது..
அவள் வரும் வரை..
அந்த அவள் யார்? சிவகாமியா? இல்லை, வேறு நபரா??
சனா மதியை அழைத்து,
"மதிம்மா, கோவிலுக்குப் போய்ட்டு வருவோம்டா..."
"சரி அத்தை.. போகலாம்... எதாவது விஷேசமா அத்தை..?"
"கோவிலுக்குப் போய் ரொம்ப நாட்கள் ஆச்சுடா.. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்... என் பையன் கொஞ்சக் கொஞ்சமா மாறிட்டு வரான்.. எல்லாம் உன்னாலதான் மா... இன்னும் கொஞ்ச நாட்கள்ல்ல, என் பிள்ளை எனக்கே கிடைச்சிடுவான்... அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு..."
"கவலைப்படாதீங்க அத்தை... அத்தான் உங்ககிட்ட கண்டிப்பா பேசுவாங்க.."
"நீ இப்படிச் சொன்னதே ரொம்ப சந்தோஷமா இருக்குடா.."
"ஏன் அத்தை? என்ன ஆச்சு? ஏன் உங்க கிட்ட அத்தான் பேச மாட்டேங்கிறார்..?"
"நானே என் பிள்ளையை நம்பாமல் போய்ட்டேன்.."
இதைச் சொல்லிக்கொண்டே அவர்க் கண் கலங்கவும்,
"சரி, விடுங்க அத்தை... அதைப் பற்றி நினைக்காதீங்க… வாங்க, நாம கிளம்பலாம்..."
இங்கு, சிவகாமி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் அளவுக்கு சூடாக இருந்தார்.
அப்பொழுது, வானு, "அம்மா, உன் முகத்தைக் கண்ணாடில பாத்தியா..."
"ஏன்டி..?"
"பாத்துடாத மா.. காலையிலேயே இப்படி முகத்தை வச்சிருந்தா, ஒரு வேலையும் ஆகாது.. நாம வேலைச் செஞ்சாதான் வேலை எல்லாம் முடியும்.."
(ஏன் வானு, எரியுற எண்ணெயில் நெய்ய ஊத்துற..?)
"ஏன் மா, நேத்து வரைக்கும் வேலைச் செய்ய ஆளு இருந்துச்சு.. இப்போ அக்கா இல்லாம, எல்லா வேலையும் செய்ய உனக்கு இடுப்பு வலைய மாட்டேங்குதோ...?" என்று நக்கலாகச் சிவகாமியை பார்த்துக் கூறினாள்.
"நாளை மறுநாள், நான் ஹாஸ்டல் கிளம்புறேன்.. அதுக்கப்பறம், அங்கபோய் எதாவது கோல்மால் பண்ணன்னு தெரிஞ்சுது... நான் பொல்லாதவள் ஆயிடுவேன் மா.." என்று கூறிவிட்டுச் சென்றாள்.
சிவகாமி தன் மனதில், "நீ கிளம்புடி.. உன் அக்கா காரிய என்ன பண்ணனும்னு, எனக்குத் தெரியும்.." என்று நினைத்துக்கொண்டாள்.
(சிவகாமி, நீ ஒன்னு மறந்துட்ட.. மித்ரன் தான் கூட இருப்பானே, அவக்கிட்ட உன்னை நெருங்கவே விட மாட்டான்.. ஹா ஹா, ப்ளான் போடுற முகறக்கட்டைய பாரு.. ஹாஹா..)
இங்கு, இருவரும் கோயிலுக்குக் காரில் சென்று கொண்டிருந்தனர்.
ரமேஷ் தான் கார் ஓட்டி கொண்டிருந்தான்.
அவ்வபொழுது, கண்ணாடி வழியாக மதியைப் பார்த்துக் கொண்டு வண்டி ஓட்டினான்.
(உன் கண்ணுல கொசு வத்தியை வைக்க..)
"பொண்ணு நல்லாதான் இருக்கா.. மாநிறமா இருந்தாலும், தளதளன்னு நச்சுனு இருக்கா.. பார்க்க அப்பாவியா.. ஒன்னும் தெரியாத மாதிரி தான் இருக்கா.. ஈஸியா மடிஞ்சிடும்.. ரமேஷு, உன் காட்டுல மழைதான்டா.."
ரமேஷ் ஆள் கொஞ்சம் பார்க்க அழகாக இருப்பான். இதற்கு முன்பு வேலைச் செய்த வீட்டில் உள்ள பெண்களிடம் பேசி நெருக்கமாகி, பழகி, போட்டோ எடுத்துக் கொண்டு, அவர்களிடம் இருந்து பணம் பறிப்பது தான் இவனின் வேலையே.
மது இவனிடமிருந்து தப்புவாளா???
மாமியாரும் மருமகளும் தங்களுக்குள் சலசலத்துக் கொண்டு வர, சனாக்கும் செடி வளர்க்கப் பிடிக்கும் என்று சொன்னதால், சாமி தரிசனம் முடித்துவிட்டு, வரும் வழியில் ஒரு நர்சரியில் செடிகள் வாங்கி வந்தனர்.
"நீ கொஞ்ச நேரம் ஓய்வு எடுடா.. நான் மதியம் சாப்பிட கூப்பிடும் போது வா, சரியா.."
"சரி அத்தை..."
தங்கள் அறைக்கு வந்ததும், தன் கைப்பேசியை எடுத்துக் கணவனுக்கு அழைக்கலாமா என்று யோசித்தாள். பின்பு, வேண்டாம், அவங்க வேலையா இருப்பாங்க, எதுக்குத் தொந்தரவு பண்ணனும் என்று நினைத்துக் கொண்டே கீழே வைத்தாள்.
திடீரென்று அலைப்பேசி அழைக்கவும், திடுக்கிட்டுப் பயந்தவள் கைப்பேசியை எடுத்து, "ஹலோ" என்றாள்.
"என்ன, குரல் நடுங்குது.. பயந்துட்டியா, மதுக்குட்டி..?"
"ஆமாங்க, இப்போதான் உங்களுக்குப் போடலாம் நினைச்சு போனை எடுத்தேன்.. அப்புறம் வேலையா இருப்பீங்கன்னு வச்சுட்டேன்.. திடீர்னு சத்தம் கேட்கவும் பயந்துட்டேன்.."
"ஹிம்ம், சரிடா.. இன்னும் கொஞ்ச நேரத்துல வரேன்.."
"ஹிம்ம, சரிங்க..."
அவனிடம் பேசிவிட்டு வைத்ததும், எழுந்து பால்கனிக்கு வந்து, அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்தாள்.
சிறிது நேரத்திலே, கண்கள் சொக்க நித்திரையில் ஆழ்ந்தாள்.
மித்ரன் வீட்டிற்கு வந்தவன், தன் அறைக்கு வந்து பார்க்கவும், மதி எங்கே என்று தேடிக்கொண்டே வர, அவள் ஊஞ்சலில் அமர்ந்து கம்பியில் தலைசாய்த்துத் தூங்குவதை பார்த்து,
"என் தேவதைத் தூங்குறாங்களா..?"
சொல்லிக்கொண்டே, மெதுவாக அவளைத் தன் கைகளில் அள்ளிக்கொண்டு, மெத்தைக்கு வந்தான்.
அவளைப் படுக்க வைக்கவும், திடுக்கிட்டு எழுத்தவள்,
"அத்தான், நீங்கதானா..?"
"ஹிம்ம்..." என்று அவள் உதட்டில் ஒரு முத்தம் வைத்தான்.
"என்ன தூக்கம்..?"
அவன் சாதாரணமாகத் தான் கேட்டான். அவள் திட்டுவான் என்று பயந்து நடுங்கிகொண்டே,
"இல்லை அத்தான், கோயிலுக்கு நானும் அத்தையும் போய்ட்டு வந்தோம்.. அப்புறம் ஊஞ்சல்ல உட்காந்து ஆடிட்டு இருக்கும் போது, நல்லா காத்தும் அடுச்சுதா.. அதுல அப்படியே தூக்கம் வந்துருச்சு.. இனிமே தூங்கமாட்டேன், சாரி அத்தான், என்னை மன்னிச்சிடுங்க.." என்றாள்.
"ஏய் மதுக்குட்டி... உன்ன தூங்கக்கூடாதுன்னு சொல்லல.. பயப்புடுதா..?" என்று அவளை அணைத்துகொண்டான்.
"நான் கூட பயந்துட்டேன் அத்தான்... நான் தூங்குனதுக்கு நீங்க திட்டுவீங்கன்னு... நான் தூங்குனா, சித்தி திட்டுவாங்க.. அதான் அந்த நினைப்புல பயந்துட்டேன்.." என்று அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு, அவன் சட்டைப் பட்டனை திருகியபடி கூறினாள்.
"உன் சித்திய பத்தி பேசாதடா, மதுக்குட்டி.. எனக்குக் கோபமா வருது.."
"இனிமே பேசமாட்டேன்.."
"ஹிம்ம்..."
"சரி, வா, நாம சாப்பிட்டுட்டு, நான் ஆபீஸ்க்குப் போகனும்.."
அவன் சாப்பிட்டுக் கிளம்பவும், மாமியாரும் மருமகளும் செடி வைக்கும் வேலைக்கு ஆயத்தமாகினர்.
ரமேஷ், "இவர்களுக்கு உதவுகிறேன்" என்று எடுத்து வைத்து கொண்டிருந்தான்.
இப்படியே நேரம் போக, சனா மதியிடம், "நான் கொஞ்சம் ஓய்வெடுக்குறேன்மா.." என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
மதியும், "சரி அத்தை" என்று வேலையைக் கவனித்தாள்.
இவளுக்கு உதவி பண்ணுவதுபோல், "நான் பண்றேன், சின்னம்மா..." என்றான்.
"பரவாயில்லை, அண்ணா.."
"அட, குடுங்க சின்னம்மா..." என்று அவன், அவள் கையில் இருந்த தொட்டியை வாங்கி, செடியை வைத்தான்.
இவளும், அவன் கள்ளத்தனம் புரியாமல், இவனுடன் பேசி சிரித்துக் கொண்டு வேலைச் செய்தாள்.
அப்பொழுது, மித்ரன் வரவும், இந்தக் காட்சி அவன் கண்ணில் பட்டது.
"மதுமதி!" என்று கோபத்துடன் அழைத்தான்.
அடுத்து என்ன நடந்திருக்கும்.
0 Comments