மழை - 9 :
"அம்மா எங்க..?" என்று சாதாரணமாகத்தான் கேட்டான்.. ஆனால் இவளோ 'அம்மாக்கிட்ட சொல்லிடுவானோ..!' என்று பயந்தவள் "தென்னமரம் சார்.. எங்க அம்மாக்கிட்ட சொல்லிடாதீங்க.. அம்மா திட்டுவாங்க.." என்று பயந்துக்கொண்டே கூறியவள் "சார்.. தென்னமரம் சார்.. சொல்லிடாதீங்க.." என்று கெஞ்சினாள்.
"ஓய்.. என்ன பார்த்தா உனக்கு தென்னைமரம் போல இருக்கா.. (பனைமரம்போல இருக்கு) ஹ்ம்ம்..?"என்று சின்ன பிள்ளையை மிரட்டும் தொனியில் கேட்க அவள் 'இல்லை'என்று தலையாட்ட "இல்லை.. உன் கண்ணுக்கு என் மண்டைல தென்னைமரம் நட்டு வச்ச மாதிரி இருக்கா..?" என்கவும் அவள் அவன் தோற்றத்தைக் கற்பனையில் நினைத்து பார்த்து அவன் இருப்பதை மறந்து தன்னையும் அறியாமல் கலகலவென சிரித்து விட்டாள்.
"பார்த்து.. பார்த்து.. தென்னைமரம் நட்டு வச்சு தண்ணியெல்லாம் சிறப்பா ஊத்தியாச்சு போல..!" என்று அவள் தன்னை கற்பனையில் அந்த தோற்றத்தில் நினைத்து தான் சிரிக்கிறாள் என சரியாக ஊகித்தான். "ஹா.. ஹா.. ஆமா தென்னமரம் சார்.." என்று வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தவள் அவன் தன்னை பார்த்து முறைக்கவும் கப்பென்று மூடிக் கொண்டு ஆடுத் திருடியவள் போல் திருத்திருவென முழித்தாள்.
தன் கைகளால் வாயைப் பொத்தியவாறு அவன் முகத்தைப் பார்த்தவள் மீண்டும் சிரிக்க "ஏய்.. என்ன டி..? சொல்லிட்டு சிரி நீ சிரிக்கிறதை பார்த்தா வேற ஏதோ வில்லங்கமா என்னை வச்சு யோசிச்சிருக்க..? சொல்லு…!" என்கவும் அவளோ "ம்ஹம்" என்று வாயைப் பொத்தியவாறு முடியாது என்று சொல்ல "ஓய் இப்போ சொல்லப் போரியா இல்லையா..?" என்கவும் அவள் சொன்ன பதிலில் எந்தளவுக்கு அவள் கற்பனை குதிரைத் தறிக்கெட்டு ஒடியிருக்கிறது அதுவும் தன்னை வைத்து என்று கடுப்பானான்.
"இல்லை.. இந்த சின்னப் பிள்ளைகளுக்கு முடியெல்லாம் சேர்த்து உச்சியில் ஒரு சிண்டு போடுவாங்க.. அதை தென்னைமரம் என்று தான் சொல்லுவாங்க.. அதான் உங்களுக்கு அப்படி போட்டா எப்படி இருக்குமென்று யோசிச்சேன்..? அந்த கெட்டப்பில் நீங்க ரொம்ப காமெடியா இருக்கவும் சிரிப்பு வந்துடுச்சு.." என்று சிரித்தவளிடம் "ஏன் அதோட விட்டுட்ட..? அப்படியே நெற்றியில் கன்னத்தில் மங்கமா சைஸ் கருப்பு திருஷ்டி பொட்டு வைக்க வேண்டியது தானே..?" என்று கடுப்பாகக் கூறினான்.
(வீரு உன் முடிக்கு வந்த சோதனையைப் பார்த்தியா.. நெற்றியில் புரளும் கேசத்தை ஜெல் தடவி அடக்கி வச்சிருக்க.. உன் முடிக்கா இந்த சோதனை.. ஐயோ இந்த கூத்தை நீ யாருக்கிட்ட போய் சொல்லுவ.. ஐயோ ஐயோ..)
"ஹா.. ஹா.. ஹிமம் அதுவும்.." என்று ஏதோ மேலும் கூற வந்தவள் அவன் முறைக்கவும் வாயைக் கப்பென்று மூடிக்கொண்டாள். "இரு உங்க அம்மாக்கிட்டயே சொல்றேன்.. அப்போதான் சரிப்பட்டு வருவ.." என்று மிரட்டவும் "ஐயோ..! சாரி தென்னமரம் சார்.. ச்சீ தென்னமரம்னே வருது.. சாரி சார் மன்னிச்சுக்கோங்க.." என்று அவனிடம் மன்றாடினாள்.
கண்களில் குறும்புடன் பார்த்தவன் அவளிடம் "ஓகே.. உங்க அம்மாக்கிட்ட சொல்லக்கூடாதுன்னா என்னன மாமான்னு கூப்பிடு..!" என்று கூறவும் "என்னது..?" என்று அதிர்ந்து விழித்தாள் "நீங்க யாரு..? என்னன்னு தெரியாம எப்படி மாமான்னு கூப்பிட முடியும்..? அதெல்லாம் நான் கூப்பிட மாட்டேன்.. நான் எங்க அம்மாக்கிட்ட அடியே வாங்கிப்பேன்.. நகருங்க.. நான் போகனும்.." என்று அவனை தள்ளச் சொல்ல அவனோ தன் நீளக் கால்களை அகட்டி வைத்தவாறு தன் கைகளை மார்பின் குறுக்காக கட்டிக்கொண்டு ஐய்யனார் சிலைப் போல் அவள் செல்ல வழிவிடாமல் அந்த சந்தை அடைத்துக் கொண்டான்.
"இப்போ எப்படி போவ..?" என்று தன் புருவங்களை ஏற்றியவாறு கேட்க "வழி விடுங்க.. எங்க அம்மா தென்னந்தோப்பு வரைக்கும் போயிருக்காங்க.. அவங்களைத் தானே பார்க்க வந்தீங்க.. தோ தெரியுது பாருங்க.. அந்த தோப்பு.. அங்கே தான் இருக்காங்க.. போங்க காலையிலேயே வம்பு பண்றீங்க.." என்று சற்று தூரத்தில் தெரிந்த தோப்பைக் காட்டி விட்டு அவனை தள்ளி விட்டு செல்லப் பார்த்தாள்.
நடக்கும் காரியமா அது.. அவனோ தேக்கு மர தேகம் கொண்டவன்.. அவளோ கொடிப் போன்ற உடலமைப்பைக் கொண்டவள்.. அவள் தள்ளியா அவன் நகரப் போகிறான்.. இம்மியளவும் நகராமல் அவன் அப்படியே இருக்க.. அவன் நெஞ்சில் தன் கையை பதித்திருத்தவளோ 'இது என்ன கல்லு மாதிரி இருக்கு' என்று தன்னை அறியாமல் மேலும் கையை அவனது நெஞ்சில் பதிக்க "என்ன உன் ஆராய்ச்சியெல்லாம் முடிஞ்சிருச்சா..?" என்கவும் தான் "சாஹி என்ன காரியம் டி பண்ற..?" என்று அதிர்ந்தவாறு தன் கையை எடுத்துக் கொண்டாள்.
"ஓய்.. மாமான்னு கூப்பிட முடியுமா முடியாதா..? இரு உங்க அம்மாக்கிட்ட சொல்றேன்.." என்று மிரட்டவும் "சொன்னா சொல்லிக்கோங்க.. எனக்கென்ன..? என்ன அடிப்பாங்க.. நான் வாங்கிப்பேன்.. தேச்சுவிட்டா சரியா போய்டும்.. அதுக்காகவெல்லாம் யாருன்னே தெரியாத உங்களை மாமான்னு கூப்பிட முடியாது.." என்கவும் "சரி நான் எங்க அத்தைக்கிட்டையே பேசிக்கிறேன்.." என்றவனை கைப் பிடித்து நிறுத்தியவள் "யாரு உங்க அத்தை..?" என்று வினவவும் "உங்க அம்மா தான்.. அத்தை மகளே.." என்று சிரிப்புடன் கூற "நீங்க.. நீங்க.." என்று திக்கினாள்.
"நான்.. நான்.." என்று ராகம் பாட "நீங்க.. அந்த அமெரிக்கன் அர்னால்டோட தம்பியா..?" என்று கேட்கவும் "யாரு அமெரிக்கன் அர்னால்டு..?" என்று யோசித்தவன் மகேனை தான் அவள் சொல்கிறாள் என புரிந்துக்கொண்டவன் "டேய் மகேன்னு.. உனக்கு வச்சிருக்காங்கப் பாரு பேரு.." என்று அடக்க மாட்டாமல் சிரித்தான்.. தன்னை அறியாமலே அவன் சிரிப்பதைப் பார்த்து ரசித்தாள்.
தன் சிரிப்பை அடக்கியவன் "யாரு..? எங்க அண்ணனுக்கு இந்த பேரு வச்சது.." என்று கேட்கவும் "செளமி தான்.." என்று அவன் கேட்கவும் பேச்சு வாக்கில் கூறிவிட்டாள்.. அவள் கூறியப் பிறகுதான் நியாபகம் வந்தது தன் அக்கா இதனைப்பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என்று கூறியது நினைவு வர "ஐயோ போச்சி.. என் ஓட்ட வாய் இருக்கே.. இப்படி உளறிட்டேனே.." என்று தன்னை தானே கடிந்துக்கொண்டாள்.
"செளமி.. ஏன் எங்க அண்ணனுக்கு இந்த பேரை வச்சா..? நாங்க இங்க சின்ன வயசுல வந்ததோட சரி.. அதுக்கப்புறம் மீட் பண்ணியதே இல்லையே.." என்று கேள்விகளால் அவளைத் துளைத்தெடுத்தான். "அது.. அது.." என்று திக்கினாள் 'சொன்னால் அக்கா திட்டுவாள்.. சொல்லவில்லையென்றால் இந்த தேக்கு மரம் விடாது..' என்று மனதிற்குள் நினைத்தவள் அவனிடம் "நான் போகனும்.." என்று உதட்டைப் பிதுக்கி அழுகைக்கு தயாராக அவள் பிதுக்கிய உதட்டை தன் விரல்களால் பற்றினான்.
(தேக்கு மரமா.. நீயும் அவனுக்கு பட்டுப்பட்டுன்னு பேரு வைக்க ஆரம்பிச்சுட்டியா.. விளங்கிடும் தென்ன மரம்.. தேக்கு மரம்.. இன்னும் என்னன்ன லிஸ்ட்ல இருக்கு அவுத்து விடு..)
அவள் சதைப்பற்றான கீழுதட்டைப் பற்றியதும் தன் கண்களை விரித்தவள் "விடுங்க" என்று அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளவும்.. தன் மற்றொரு கையால் அவள் இருக்கையைப் பற்றிக் கொண்டவன் "சாக்கிக்குட்டி" என்று அவள் கண்களை பார்த்து மயங்கியவன் "நீ சொல்லு பேபி.. எப்படி செளமி எங்க அண்ணனுக்கு பேரு வச்சா..? நீ சொன்னா என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்ணுவேன்.. சொல்லு நீ என்னை தாரளமா நம்பலாம்.." என்று கூறவும் "விடுங்க விடுங்க.." என்று அவனிடமிருந்து பிரிந்தவள் "யாருக்கிட்டையாவது நீங்க சொல்லிட்டா.. என்ன பண்றது..?" என்று பயத்துடன் கேட்டாள்.
"நான் சொல்ல மாட்டேன் சாக்கிக் குட்டி.. நீ சொல்லு.. தாராளமா என்னை நீ நம்பலாம்.." என்று அவளிடம் கூறவும் "அது அக்கா மாமாவை பேஸ்புக்கில் பார்ப்பா.. அவரோட போட்டோஸ் எல்லாம் சேவ் பண்ணி வச்சுப்பா.. இது யாருக்கும் தெரியாது.. என்கிட்ட மட்டும் சொன்னா.." என்று கூறவும் "ஓ.. அப்போ லவ்வா..?' என்று கேட்கவும் "தெரியலை.. ஆனால் அவங்க போட்டோஸ் சேவ் பண்ணி வச்சு.. அதனை பார்த்து ரசிப்பா.." என்று கூறவும் "இது காதல் தான்.." என்று ஊர்ஜிதமானது வீருக்கு.
அவன் மனமோ "அப்பாடி.. அப்போ நம்ம ரூட்டும் க்ளியர்.." என்று ஆசுவாசமாக உணர்ந்தவன் "ஓய்.. அவன் மாமான்னா நானும் மாமா தானே.. என்னையும் மாமான்னு கூப்புடுற.. இல்லை உன்னை காக்காவுக்கு தூக்கிப் போட்டுடுவேன்.." என்கவும் "என்னை உங்களால் தூக்க முடியாது.. நான் எவ்ளோ கிலோ தெரியுமா.." என்று பேசிக் கொண்டிருக்கும் போதே தன் ஒற்றைக் கையாலேயே அவளைத் தூக்கி தன்னோடு அணைத்து பின் இரண்டு கைக்கொண்டு குழந்தைப் போல் அவளைத் தன் கைகளில் ஏந்தியவன் அவள் "விடுங்க விடுங்க.." என்று கத்துவதைப் பொருட்படுத்தாமல் தலைக்கு மேல் தூக்கினான்.
(ஏய்.. வாங்கோ வாங்கோ.. சாமியோவ் சர்க்கஸ் வித்தை வாங்க சாமியோவ்... யாருக்கிட்ட எங்க வீரு நூறு கிலோவா இருந்தாலும் அசால்ட்டா தூக்கும் என் சிங்கக்குட்டி..)
அப்பொழுது "லொள் லொள் " என சத்தம் கேட்க திரும்பிப் பார்த்தவன் ஒரு நாய் ஓடி வரவும் அவளை பட்டென்று கீழே இறக்கி விட்டான்.
ஒரு நாய்க்குட்டியைப் பார்த்து என் சிங்கக்குட்டி ஆபாயிடுச்சே..
இதென்னடா என்
சிங்கத்துக்கு வந்த சோதனை..
மழை பொழியும்...
0 Comments