Advertisement

Ad code

Mazhai-12


 மழை - 12:


தன் மகன் கண்டுபிடித்த மருந்து முதல் கட்ட பரிசோதனையில் வெற்றிப் பெற்ற செய்தி கேட்டதும் தலைகால் புரியவில்லை. அவனின் எத்தனை நாள் உழைப்பு அது.. அந்த சந்தோஷத்தைக் கொண்டாட ஸ்வீட்ஸ் செய்து எடுத்து வந்தவர் மகேனுக்கு ஊட்டி விட்டு வீருக்கும் ஊட்டி விட்டார்.


வீரோ தன் மனதுக்குள் சக்ஸஸ் ஆயிடுச்சிங்குற குஷியில நம்ம விஷயத்தை மறந்துடுவானோ ஐயோ நான் எவ்வளவு ஃபீல் பண்ணிட்டு இருக்கேன் இவன் என்னடான்னா லட்டு ஜாங்கிரியை இதுவரை பார்க்காதது போல இப்படி சாப்பிடுறான்..ஏன்டா என் வயித்தெரிச்சலை வாங்கிக் கொட்டிக்கிற என்று உள்ளுக்குள் புலம்ப அதுவரையும் அவனை ஓரப்பார்வையில் பார்த்துக் கொண்டிருந்தவன் அவனிடம் என்னடா வீரி லட்டு சாப்பிடல சாப்பிடு செமையா இருக்கு என்று எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றினான்.


போடா கிராதகா என் லவ்வுக்கு ஹெல்ப் பண்ணுவன்னு பார்த்தா இப்படி உட்கார்ந்து தின்னுட்டு இருக்கான் ச்சே இந்த அமெரிக்கன் அர்னால்டை எப்படியாவது கவுக்கனுமே என்று அவனை பாவமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்..


நிமிர்ந்து பார்த்த மகேன் அவன் பார்வையை உணர்ந்தாலும் வேண்டுமென்றே ஒன்றும் தெரியாதது போல என்னடா வீரி எனி ப்ராபளம் என் லட்டுன்னா அப்படி சாப்பிடுவ இப்போ ஏன் என்னோட மூஞ்ச மூஞ்ச பார்க்கிற வயிருல எதாவது பிரச்சனையா இல்லை கேஸ் டிரபுளா என்று சிரித்துக் கொண்டே அவன் மானத்தை வாங்கினான்.


மகேன் கூறியதைக் கேட்ட ஐஸ்வர்யா அடக்க முடியாமல் சிரிக்க வீர் இருவரையும் முறைத்தான். வீர் முறைப்பதைக் கண்ட ஐஸ்வர்யா இதுக்குத்தான் நான் முன்னாடியே சொன்னேன் பூரி சாப்பிடாதன்னு கேட்டியா இப்போ உன் வயிரும் பூரிப் போல உப்பிட்டு நிக்குது என்று அவளும் ஓட்ட வீர் காண்டாஸ்ட்டான்.


ஓய் என்னடி உலகழகி வாய் ஓவரா இருக்கு இரு என் மச்சான் கிட்ட சொல்லி உன்னை அரெஸ்ட் பண்ணி உள்ள வைக்க சொல்றேன் என்றதும் ஹூக்கும் நீ ரொம்ப லேட்டு அதெல்லாம் உன் மச்சான எப்போவோ அரெஸ்ட் பண்ணி என் கைக்குள்ள வச்சிக்கிட்டேன் உன்னால ஒன்னும் பண்ண முடியாது பூரி ச்சீ வீரி என்று அவன் தலையைக் கலைத்து விட்டு தன் அறைக்கு ஓடி விட்டாள்.


ஏய் நில்லுடி ஓடாத என்று துரத்த ஏன் ஓடி வர முடியலையா இதுக்கு தான் அதிகமா சாப்பிடக் கூடாது என்றவாறு தன் அறை கதவை சாத்திவிட்டாள். ஓய் வெளிய வாடி என்று கத்த முடியாதுடா என்று உள்ளேயிருந்து பதில் கொடுத்தாள்.


டேய் விடுறா வா வந்து சாப்பிடு என்று மகேன் அழைக்க ஒருத்தி பேசிப் பேசியே சாவடிக்கிறா ஒருத்தன் பேசாம சாவடிக்கிறான் ஐய்யயோ இதுங்க கூட எப்படி என் காலத்தை ஓட்டுவேன் கடவுளே என்று புலம்பியவாறு சோஃபாவில் அமர்ந்தான்.


வீரின் அருகில் அமர்ந்த ஜெயா நாளைக்கு ஊருல இருந்து எல்லாரும் வராங்கடா எனக்கு சந்தோஷமா இருக்கு தெரியுமா எனக்கு பேசுறதுக்கு ஆள் கிடைச்சிடுவாங்க தனியா இருக்குற எவ்வளவு போர் தெரியுமா என்று கூறியவர் தன் மகன்களை நோக்கி ஒரு கல்யாணத்தை பண்ணிக்கோங்கடான்னு சொன்னா எவனும் என் பேச்சையே கேட்க மாட்டுறீங்க..


காலாகாலத்துல ஒரு கல்யாணம் பண்ணினோமா பிள்ளைக் குட்டியைப் பெத்து போட்டோமான்னு இல்லாமா எவ்வளவு நாளைக்கு தான் இப்படியே இருக்கிறதா பிளான் பண்ணிருக்கீங்க எனக்கும் ஆசை இருக்காதாடா என்று வருத்தமாகக் கேட்கவும் இப்போ கல்யாணத்துக்கு என்னம்மா அவசரம் என்று மகேன் கேட்டதும் இங்கு ஒருவனுக்கு ஹார்ட் அட்டாக் வந்து விடுவது போல் இருந்தது.


டேய் எருமை மாடு என் ஆசையில் மண்ணாளி போடவே வரிஞ்சிக் கட்டிக்கிட்டு வருவியாடா டேய் வீரி இவன் இருக்குற வரைக்கும் உனக்கு கல்யாணம் நடந்த மாதிரிதான் என்று மனதிற்குள் புலம்பியவன் தன் அன்னையிடம் யம்மா அவனுக்கு கல்யாணம் வேண்டாம்னா விடு ம்மா நான் பண்ணிக்க ரெடி என்றதும் ஆமாம்மா பொண்ணு கூட பார்த்து வச்சிட்டான் என்று மகேன் தன் மனதிற்குள்ளேயே சொல்லிக் கொண்டான்.


அதெப்படிடா கண்ணா பெரியவன் இருக்கிறப்ப உனக்கு பண்ண முடியும் என்கவும் எம்மோவ் உனக்கு ரெட்டைப் பிள்ளை பிறந்துச்சு நியாகம் இருக்கா ஜஞ்சு செகண்ட் முன்னாடி பிறந்தா அவன் பெரியவனா இதென்ன போங்கு போங்க போங்க நான் இந்த ஆட்டத்துக்கே வரலை என்று தன் கைக்கால்களை உதறினான்.


அப்பொழுது தான் தன் ஆஃபிசில் இருந்து வந்த விஜயன் இங்க என்ன இவ்வளவு ரணகளமா இருக்கு ஏன் வீர் என்று சு என்கவும் அவனை முந்திக் கொண்டு ஹிம்ம் உங்க பிள்ளைக்கு கல்யாணம் கட்டி வைக்கனுமாம் என்று கிண்டலாகக் கூறினார்.


அட என்னடா நீ என் மகனா இருந்துக்கிட்டு பெர்மிஷன் கேட்டுட்டு இருக்க இந்நேரம் பொண்ண பார்த்தோமா கல்யாணம் பண்ணினோமான்னு இல்லாம நீங்க ரொம்ப ஸ்லோவா இருக்கீங்க டா என்று கூற யாரு நான் ஸ்லோவா நானெல்லாம் பொண்ணு பார்த்துட்டேன் இவன் தான் கல்யாணம் வேணாம் எனக்கு காவி வேட்டி தான் வேணும்னு அடம் பிடிக்கிறான் என்று உளறிவிட்டான்.


என்னது பொண்ணு பார்த்துட்டியா என்று ஜெயாவும் விஜயனும் அதிர்ந்து கேட்க அப்பொழுதுதான் தான் உளறிக்கொட்டியதை உணர்ந்தான். ஐயோ போச்சு இப்படி சொதப்பிட்டியே வீர் என்று மானசீகமாக தன் தலையில் அடித்துக் கொண்டான்.


சரி சமாளிப்போம் என்று தனக்கு கூறிக் கொண்டவன் ஹூக்கும் ஏன் ம்மா நீ வேற எனக்கு யாரு ம்மா மாட்டுவா இப்போல்லாம் பொண்ணுங்க உஷார் ஆயிட்டாங்க அது ஏதோ ஃப்லோல வந்துச்சு நீ வேற என்று சலிப்புடன் கூற என்னடா கண்ணா இப்படி சொல்லிட்ட உங்க ரெண்டு பேருக்கும் பொண்ணு தர எத்தனை பேரு ரெடியா இருக்காங்க தெரியுமா என்று பெருமையாக விஜயன் கூற என் பிள்ளைங்க அழகென்ன படிப்பென்ன இப்போ நீங்க ஹிம்ம்னு சொல்லுங்க உடனே உங்களுக்குப் பிடிச்சது போல பொண்ணு நான் பார்க்கிறேன் என்று கூற ஹிம்ம் சரி சரி பார்க்கலாம் பார்க்கலாம் என்று கூறி 

மகேனை பார்த்துக் கண்ணடித்தான்.

Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments