மோகம்-29:
மாலை நேரம் போல் எழுந்த கதிருக்கு கட்டிலை விட்டு எழ மனதே இல்லை.. அதுவும் தன் கழுத்தைக் கட்டி கொண்டு தூங்கும் தமிழைப் பார்க்க பார்க்க அப்படியே அவளை கட்டிக்கொண்டு இருக்க ஆசை வந்தது..
(பூவாக்கு என்ன பண்ணுவ ராசா..)
ஆனால் அப்படியே இருக்க முடியாதே.. வயிறு வேறு பசித்தது தமிழை விலக்கி மெதுவாக எழுந்தவன் சமயலறைக்கு சென்று சாப்பிட்டு விட்டு சுட சுட காபி போட்டு கொண்டு வந்தான்..
என்ன டா புது பொண்ணு பண்றதை இவன் பண்றான்.. காபியை மேசையில் வைத்து விட்டு மெத்தையில் அயர்ந்து உறங்கி கொண்டிருந்தவளிடம் சென்று அவளை கட்டி பிடித்து கொண்டு பக்கத்தில் படுத்தவன் தன் மீசை முடிகள் குத்த முத்தமிட்டான்..
கூச்சம் தாங்காமல் சிணுங்கியவள் அத்தான் தூக்கம் வருது தூங்கனும் விடுங்க.. அவன் பக்கம் திரும்பி அவன் நெஞ்சில் முகம் புதைத்து கொண்டு தன் உறக்கத்தை தொடர்ந்தாள்..
ஏய் இங்க பாரு டி தூங்கு மூஞ்சி எழுந்திரு சாயுங்காலம் ஆயிடுச்சு நைட் தூங்கிக்கலாம் எழுந்திரு டி என் செல்ல குட்டி எழுந்திரு என்று அவளை தூக்கி அமர வைத்து அவள் உதட்டருகே காபி அடங்கிய கோப்பையை எடுத்து சென்றான்..
தூக்க கலக்கத்தில் நிலையில்லாமல் ஆடிக்கொண்டு இருந்தவள் அதன் வாசம் நாசியை தீண்டவும் கண் விழித்தாள்.. குடி டி இதை குடிச்சுட்டு பிரெஷா குளிச்சுட்டு மாமனுக்காக வெய்ட் பண்ணு.. வெளிய கொஞ்சம் வேலை இருக்கு நான் போய் முடிச்சுட்டு வரேன் என்கவும் அப்படி என்ன வேலை என்று கேட்கவும் ரகசியம் என்று முத்தமிட்டு விட்டு குளிக்க ஓடிவிட்டான்…
இவள் ஆற அமர நன்றாக காபியை ருசித்து விட்டு எழுந்து குளியலறை சென்றாள்.. கதிர் கிணற்றடியில் குளிக்க அவனை பார்த்து முத்தமிடுவது போல் சைகை செய்து உள்ளே சென்று கதவை சாற்றி கொண்டாள்..
கதிர் குளித்து விட்டு வந்தவன் வெளியே கிளம்பி கொண்டிருக்கும் போது தான் குளித்து விட்டு வந்தவள் அவன் அருகே நெருங்கி அவன் கால் மேல் ஏறி நிற்கவும் ஏதோ லம்பா கிடைக்கும்னு இவனும் ஆசையா குனிந்தபடி நிற்க அவன் எதிர்பாரா நேரம் அவன் காதை பிடித்து திருகவும் வலியில் ஆஹ் ஆஹ் விடு டி வலிக்குது என்று கத்தினான்..
அவன் கத்துவதை கேட்டு வெளியில் அமர்ந்தவனுக்கு ஜெர்க்கானது.. ஐயோ இவ பெரிய பஜாரியா இருப்பா போலையே.. புருஷனையே இப்படி அலற விடுறா இவ நமக்கு ஒத்து வர மாட்டா.. நாம நடையை கட்டுவோம்.. யாராலா அடி வாங்க முடியும் சத்தியமா என்னால முடியாதுபா…
நம்ம அம்மா பாத்து கட்டி வைக்கிற பெண்ணையே கட்டிக்குவோம் எதுக்கு தேவை இல்லாம தர்மடி வாங்கிக்கிட்டு.. நம்ம உடம்பு கண்டிப்பா தாங்காது…இவன் ஏதோ கொஞ்சம் பல்கா இருக்குறாதால தாங்கிக்குறான் ஐயோ நான் என் வீட்டுக்கு போறேன் என்று அவன் புலம்பி கொண்டே தன் வீட்டை நோக்கி ஓடி விட்டான்..
(ஐயே நீ வில்லனுக்கு லாய்க்கில்லை போலவே அப்படியே ஓடிடு..)
இங்கு உள்ளே ஹே தமிழ் விடு டி வலிக்குது எதுக்கு டி இப்படி திருகுற நான் தான் எதும் பண்ணலையே நல்ல பிள்ளையா சமத்தா இருக்கேன் என்று கூறியவனின் கை அவள் இடையில் தவழ்ந்து மேலேறியது..
அவன் கையை தட்டி விட்டவள் ஆமா நான் கேட்குறதுக்கு பதில் சொல்லுங்க எதுக்கு நான் போன் பேசும் போது ஆஹ் ன்னு சத்தம் போட்டிங்க அது என்ன ஸ்ஸ் ஹான்னு சத்தம் ஹிம்ம் என்று அவனை அதட்டினாள்..
ஹே அது சும்மா டி நான் பைக்கை எடுத்துட்டு வரல பஸ்ல வந்தேன் அப்போ பஸ்ல இருந்து இறங்கும் போது காலை அழுத்தி கீழ வச்சதும் வலிச்சுது அதான் கத்தினேன் என்று கூறவும் இதை என்ன நம்ப சொல்றீங்களா..
முடியாது முடியாது நான் நம்பமாட்டேன்.. நீங்க பொய் சொல்லறீங்க என்று உதட்டை பிதுக்கி அழ தயாராகவும் ஏய் இப்போ என்ன தான் டி உன் ப்ரெச்சனை.. நீ நெனைக்குற அளவுக்கெல்லாம் நான் ஒர்த் இல்லடி நம்புடி..
(அதானே நம்பிக்கை தானே எல்லாம்..)
ஹிம்ம் நீங்க போங்க நீங்க ஏதோ எனக்கு தெரியாம பண்றீங்க இப்போ கூட பாருங்க எனக்கு தெரியாம எங்கயோ போறீங்க என்கவும் அடியேய் ஏன் டி இப்படி படுத்துற நான் எங்கையும் போகலை.. இங்க சும்மா வெளியே போயிட்டு வரலாம்னு தான் கிளம்புனேன்..
சரி விடு நான் எங்கையும் போகலை போதுமா என்று அப்படியே அமர ஐயோ காரியம் கெட்டுச்சு என்று நினைத்தவள் சரி சரி நீங்க போங்க போயிட்டு நான் சும்மா விளையாண்டேன் என்று அவனுக்கு ஒரு உம்மா கொடுத்து வெளியே அனுப்பி வைத்தாள்..
சரி நான் போய்ட்டு வர வரைக்கும் பத்திரமா இங்கேயே இரு.. வேலையை முடிச்சுட்டு நான் சீக்கிரம் வந்துடுறேன் கதவை பூட்டிக்கோ பாத்து இரு.. நான் வரும்போது கால் பண்றேன் அப்போ வந்து கதவை திற சரியா..யாரு வந்து கதவை தட்டினாலும் திறக்க கூடாது என்று விட்டு சென்றான்..
தமிழ் உள்ளே செல்வதை பார்த்து சொர்ணம் வீட்டிற்கு தன் நடையை எட்டி போட்டான்..இங்கு தமிழின் அடி சத்தம் கேட்டே பயந்து வீடு வந்திருந்தவன் சோபாவில் அமர்ந்து மூஞ்சி புக்கில் யாரு கூடையோ கடலை போட்டு கொண்டிருக்க கதிர் தன்னருகில் வந்து நிற்கவும் அவனை கண்டு எழுந்து நின்றான்..
ஆமா என்ன நான் வரும் போது என் பொண்டாட்டிகிட்ட ஏதோ பேச வந்தது போல தெரிஞ்சுது என்று தாடையை தடவியவாறு கேட்கவும் இவனுக்கு கொலையே நடுங்கியது.. அது அது என்று என்ன சொல்வதென்று தெரியாமல் திக்கி திணற என்ன என்று தன் குரல் உயர்த்தி கர்ஜிக்க அண்ணா ஒன்னும் இல்லை என்று பம்மினான்..
இப்படியே கடைசி வரைக்கும் பம்மிகிட்டு எங்க பக்கம் வராம இருந்தா நீங்க பொழைச்சுப்பீங்க.. நாங்க அப்படியெல்லாம் இருக்க மாட்டோம் எங்களுக்கு சொத்து வேணும் பொண்ணு வேணும்னு இப்போ வந்தது போல அங்க வந்தீங்க.. என் கையால அடி வாங்கியே செத்துடுவீங்க..
என்ன புரியுதா.. என்கவும் கொஞ்சம் தைரியம் வந்ததுவோ.. ஏன் என் அத்தை பொண்ணை அவங்க அம்மா சாக கிடந்தது வச்சு அப்படியே கல்யாணம் பண்ணிக்கிடீங்க இல்லனா அவ எப்படி உங்களை கல்யாணம் பண்ணுவா.. என்று இவன் பாட்டுக்கு பேசிக்கொண்டே செல்ல அடி செருப்பால நாயே என் புருஷனை நான் எப்படி வேணா கட்டுவேன்.. உனக்கெங்க டா வலிக்குது.. என்று குரல் வந்தது..
(தோ வந்துட்டால்ல எங்க சண்டிரானி.. என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்னுட்டு..)
ஏன் டா நாயே நான் வந்து உன்கிட்ட சொன்னேனா எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கல என் புருஷனை பிடிக்கலன்னு வந்துட்டான் பேச மூஞ்ச பாரு என்று அவனை அடிக்க கையை ஓங்கி கொண்டு போக கதிர் அவளை இழுத்து பிடித்து தன் கைக்குள் வைத்து கொண்டான்..
ஏய் உன்னை யாரு டி இங்க வர சொன்னது.. என்று கேட்கவும் முறைத்தாள்.. அவள் முறைக்கவும் வாயை கப்பென்று மூடி கொண்டான்.. ஏன் அவன் கேட்கும் போது வாயில் என்ன வச்சுருந்தீங்க என்று கத்தியவள் ராக்கேஷிடம் திரும்பி ஏய் சொல்லு டா நான் உன்கிட்ட சொன்னேனா..
ஆமா நீ எனக்கு யாரு..எங்க அப்பா செத்து போனப்போ வெறும் சொத்துக்காக எங்களை டார்ச்சர் பண்ண கழிசடைங்க தானே நீங்க.. வந்துட்டான் இப்போ.. அப்போ வராதவன் எதுக்கு இப்போ வந்த..ஹிம்ம் சொல்லு டா நாயே..என்று எகிற கதிருக்கு அவளை இழுத்து பிடிப்பதே வேலையாகி போயிற்று..
அவன் தமிழை அதிர்ந்து பார்க்கவும் நீங்க பாசமா வந்து பேசினா நான் வந்துடுவேன்னு நினைச்சீங்களா.. நான் வந்ததே உங்க கணக்கையெல்லாம் முடிக்கணும்னு தான் இப்போ வந்த மாதிரி என் வீட்டு பக்கம் எவனும் வர கூடாது..
எங்க அம்மா இருந்த வரைக்கும் எவனும் வந்து எட்டி பார்க்கலைல அது போலவே இப்போவும் இருக்கணும்.. அந்த வீடு எனக்காக எங்க அப்பா அம்மா விட்டுட்டு போனது..
அதை பறிச்சுக்கணும்னு கனவுல கூட நினைக்காதீங்க.. அது எங்க அம்மா அப்பா வாழ்ந்த வீடு..இனி என் வீட்டு பக்கம் வர வேலை வச்சுக்க கூடாது.. அப்படி மீறி வந்தீங்க என் புருஷன் சும்மா இருக்க மாட்டான்..
ஆமா இரு இரு என் புருஷனை பத்தி பேசுறதுக்கு உனக்கென்ன தகுதி இருக்கு.. நான் உங்க கூட தனியா வந்துட்டேன்னு எப்படி பதறி அடிச்சு ஓடி வந்தான் பாத்தள்ள..அதெல்லாம் உனக்கெங்க தெரிய போகுது..நிமிஷத்துக்கு நிமிஷம் பொண்ணு மாத்திட்டே போற நீ என் புருஷனை பத்தி பேசுறியா..
என்னை தவிர என் புருஷன் எவளையும் பாக்க கூட மாட்டான்..ஆனா நீ த்தூ நாயே அடுத்தவன் பொண்டாட்டின்னு தெரிஞ்சும் மடக்கலாம்னு பிளான் போட்டு தானே அழைச்சிட்டு வந்தீங்க..
உங்களை பத்தி ஏதும் தெரியாதுன்னு நெனச்சுடீங்களா..உன்னை உன் அப்பன் ஆத்தா பத்தி எல்லாம் தெரியும்..
ஹிம்ம் அப்பறம் ஏதோ சொன்னியே அது என்ன ஆஹ்ன் அம்மா சாக கிடந்தப்போ கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு தானே.. ஆமா எங்க அம்மா தான் சொன்னாங்க இவரை கல்யாணம் பண்ணிக்க சொல்லி..இவங்களா ஒன்னும் என்னை கட்டாய படுத்தி தாலி கட்டுல..
எங்க அம்மா முன்னாடியே தான் தாலி கட்டினாரு.. இன்னும் ஒரு விஷயம் சொல்றேன் நல்லா கேட்டுக்கோ.. என் புருஷனை நான் கல்யாணம் கட்டுறதுக்கு முன்னாடி இருந்தே எனக்கு பிடிக்கும்..உனக்கு இப்படி சொன்னாதானே புரியும் இல்ல.. நான் வயசுக்கு வந்ததுல இருந்தே அவரை லவ் பண்ணினேன்.. இதுவரைக்கும் இந்த விஷயம் யாருக்கும் தெரியாது.. ஏன் என் புருஷனுக்கே இந்த விஷயம் தெரியாது..
கடைசியா ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கோ.. இனி இந்த மாதிரி ஏதாவது பிராடுதனம் பண்ணீங்கன்னு தெரிஞ்சுது.. என் புருஷனை விட்டே அடிப்பேன்.. உன் அப்பன் ஆத்தாட்டையும் சொல்லிடு என்ன வர்ட்டா ஆனால் நீ வந்துடாத நாக்கை மடக்கி பத்திரம் காட்டி விட்டு வாங்க அத்தான் நம்ம போலாம்.. என்று அழைக்க ராக்கேஷை முறைத்து விட்டு இது என் பொண்டாட்டியை சைட் அடுச்சதுக்கு என்று அவன் தலையில் நங்கென்று கொட்ட அத்தான் என்று அவன் கையை சுரண்டியவள் என் பங்குக்கு சேர்த்து ரெண்டு கொட்டு வைங்க என்கவும் தன் பொண்டாட்டி பேச்சை மீராதவன் வைத்தான் இன்னும் ரெண்டு கொட்டு கொட்டினான்..
வயசுக்கு ஏத்த மாதிரி அடக்க ஒடுக்கமா ஆம்பள பிள்ளையா வீட்டுல இரு என்ன வெளிய வந்து காலு கையை ஒடச்சுக்காத என்று அவன் கன்னத்தில் வலிக்க பட் பட்டென்று தட்டி விட்டு தமிழை அழைத்து கொண்டு வீடு வந்தான்..
(ஜாடிக்கேத்த மூடி தா
ன் ரெண்டும்..)
மோகம் மையம் கொள்ளும்…
0 Comments